news
வத்திக்கான் செய்திகள்
“புனிதம் ஒருசிலருக்கான சலுகையல்ல; அது அனைவருக்கும் பொதுவானது” - திருத்தந்தை

புனிதத்தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட தனிச்சலுகை அல்ல; மாறாக, அது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும் வழங்கப்பட்ட அழைப்புஎன்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற பொதுமறை உரையின்போது, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்உலகின் ஒளி (Lumen Gentium) ஆவணம் குறித்து அவர் உரையாற்றினார். “கடவுளிடமும், நம் அண்டை வீட்டாரிடமும் நாம் காட்டும் முழுமையான அன்பே புனிதத்தின் அடையாளம். தொடக்ககாலத் திரு அவையைப் போலவே இன்றும் கிறிஸ்துவுக்காக உயிர் துறக்கும் மறைச்சாட்சியமே புனிதத்தின் உயர்ந்த நிலைஎன்றார். மேலும், “அனைத்து அருளடையாளங்களும், குறிப்பாக நற்கருணையும் புனித வாழ்விற்கான ஊட்டம் அளிக்கின்றனஎன்றும், “புனிதம் என்பது நமது அன்றாட வாழ்வில் இறைவனின் அழைப்பிற்கு நாம் காட்டும் அர்ப்பணிப்பில் வெளிப்படுகிறதுஎன்றும் அவர் விளக்கினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“உயிர்ப்புப் பெருவிழா வெறுப்பை விரட்டி, ஆதிக்கத்தை வீழ்த்துகிறது” - திருத்தந்தை

வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலியின்போது, “ஈஸ்டர் பெருவிழா வெறுப்பை அகற்றி, நல்லிணக்கத்தை வளர்ப்பதோடு, ஆதிக்கச் சக்திகளை வீழ்த்துகிறதுஎன்ற கருத்தைத் திருத்தந்தை லியோ பதிவு செய்தார்.

படைப்பு முதல் மீட்பு வரையிலான புனித வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், மனிதர்களைப் பிரித்து அழிக்கும் பாவத்தின் கடினத்தன்மைக்கு அனைவரையும் ஒன்றிணைத்து வாழ்வளிக்கும்அன்பின் வல்லமைமூலமே கடவுள் பதிலளிக்கிறார் என்றார். மத்தேயு நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் உயிர்ப்பைக் குறிப்பிட்ட திருத்தந்தை, “மனிதர்களால் உடலைக் கொல்ல முடியும், ஆனால் அன்பின் கடவுள் தரும் நித்திய வாழ்வை எந்தக் கல்லறையாலும் சிறைபிடிக்க முடியாதுஎன்று குறிப்பிட்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
“ஒன்றிணைந்த திரு அவையைக் காண கிறிஸ்து அழைக்கிறார்”

திருத்தந்தை லியோ தனது மொனாக்கோ பயணத்தில் அங்குள்ள கத்தோலிக்கச் சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றினார். தூய கன்னி மரியாவின் அமல உற்பவப் பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின்போது கிறிஸ்துவைநம் பரிந்துரையாளர்என்று குறிப்பிட்டார். இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் திரு அவை அதிகாரிகளை வாழ்த்திப் பேசிய திருத்தந்தை, “கடவுளின் இரக்கம் பலவீனமான மனிதகுலத்தை மீட்டெடுக்கிறது. திரு அவை  இறைவனின் அன்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அங்குச் சமூகக் கட்டமைப்புகளால் பிரிவினைகள் ஏற்படக்கூடாது. கிறிஸ்துவுடனான உறவே வாழ்விற்கு நிலையான தன்மையை அளிக்கிறது; இறைவனின் அன்பே அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. ஏமாற்றும் நம்பிக்கை என்பது திடீரென உருவாவதல்ல; அது இறைவனுடனான ஆழமான உறவின் கனிஎன்று விளக்கினார் திருத்தந்தை.

news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் நிர்வாகத்தில் மாற்றங்கள்! மூன்று முக்கியப் பொறுப்புகளில் புதியவர்கள்!

வத்திக்கான் நிர்வாகத்தின் மிக முக்கியமான மூன்று உயர் பதவிகளுக்கான புதிய நியமனங்களை, திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். வத்திக்கான் செயலகத்தின் பொது விவகாரங்களுக்கானபதிலாளர்என்ற பொறுப்புமிக்கத் துறைக்குப் பேராயர் பாலோருடெல்லி நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான இவர், இதற்கு முன் கொலம்பியாவிற்கான வத்திக்கான் தூதராகப் பணியாற்றியவர்.  இதற்கு முன் இப்பணியில் இருந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பேராயர் எட்கர் பென்யா பார்ரா தற்போது இத்தாலிக்கான வத்திக்கான் தூதராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், நீண்ட காலமாகக் காலியாக இருந்ததிருத்தந்தை இல்லத்தின் தலைவர்என்ற பொறுப்பிற்குப் பேராயர் பீட்டர் ராஜிச் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருத்தந்தையின் தினசரி நிகழ்வுகள் மற்றும் மாளிகை நிர்வாகத்தைக் கவனிப்பார்.

news
வத்திக்கான் செய்திகள்
“குழந்தைகளின் கண்கள் போர் வெறியை மாற்றட்டும்” - திருத்தந்தை

இத்தாலியக் குழந்தைகளின் வார இதழானபொப்போட்டஸ் (Popotus) தனது 30-வது ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அதன் வாசகர்களுக்குத் திருத்தந்தை லியோ மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

போர் மேகங்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் இக்காலத்தில், போரின் கொடூரங்களைக் கண்டு திகைத்து நிற்கும் குழந்தைகளின் கண்களை நாம் உற்றுநோக்க வேண்டும். அந்தத் தொலைந்துபோன கண்கள் நம்மிடம் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எண்ணிம (டிஜிட்டல்) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் குழந்தைகள் தங்களின் சிந்திக்கும் ஆற்றலையும் உறவுகளையும் வளர்க்கும் திறனையும் இழந்துவிடாமல் பாதுகாக்கவேண்டியது பெற்றோரின் கடமை. செயற்கை நுண்ணறிவைச் சிறந்த நண்பனாகவோ அல்லது அறிவின் ஊற்றாகவோ குழந்தைகள் கருதுவது அவர்களின் படைப்பாற்றலை முடக்கிவிடும்; மாறாக, குழந்தைகளின்தூய கண்கள்உலகைப் பார்க்கப் பெரியவர்களுக்கு உதவவேண்டும். மன்னிப்புக் கேட்கும் துணிவு, புன்னகையின் ஆற்றல் மற்றும் சமாதானம் செய்யும் அழகு ஆகியவற்றை ஒருபோதும் கைவிடாதீர்கள்எனத் திருத்தந்தை அறிவுறுத்தினார். குழந்தைகளின் தனித்துவத்தைப் போற்றி, அவர்களைப் புதிய உலகின் நாயகர்களாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் எனத் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“போர் வெறிக்கு நடுவே வாழ்வைப் பாதுகாப்போம்” - திருத்தந்தை லியோ

போர் எனும் மூடத்தனம் உலகைச் சூழ்ந்துள்ள இக்காலத்தில், கரு உருவானது முதல் அதன் இயற்கையான முடிவுவரை மனித வாழ்வைப் பாதுகாப்பது மிக அவசியமானதுஎன்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற பொதுமறை உரையின்போது போலந்து நாட்டின்வாழ்வின் புனித நாள் (Day for the Sanctity of Life) மற்றும் மங்கள வார்த்தைத் திருவிழாவை முன்னிட்டு உரையாற்றிய அவர், “வன்முறையும் இறப்பும் மலிந்துவிட்ட தற்போதைய சூழலில், ஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது என்பதை உலகம் உணரவேண்டும்என்று கேட்டுக்கொண்டார். பிரெஞ்சு மற்றும் அரபு மொழி பேசும் நம்பிக்கையாளர்களிடம் பேசுகையில், “அமைதியான உலகைக் கட்டியெழுப்பக் கிறித்தவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும்; நற்செய்தியின் துணிச்சலான தூதுவர்களாக மாறி அன்பைப் பரப்பவேண்டும்என்று அழைப்பு விடுத்தார்.