slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
ஆயர்களும் திருத்தந்தையும் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 11)
ஆன்மிகம்
ஆயர்களும் திருத்தந்தையும் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 11)

(சென்ற வார தொடர்ச்சி)

திருத்தந்தையும் உரோமைத் தலைமைச் செயலகமும்

அனைத்து நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம், ஆயர்களின் குழுமப் பண்பு என்பன ஆக்கம்பெற திருத்தந்தையின் முதன்மை அவசியம். இதனால் “கூட்டியக்கம், குழுமப் பண்பு, முதன்மை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன (முஅ 13a). அனைத்துக் கிறித்தவர்களின் ஒன்றிப்பை வளர்ப்பது திருத்தந்தையின் பணியினுடைய இன்றியமையாத ஒரு கூறு. திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட ‘அவர்கள் ஒன்றாய் இருக்க எனும் சுற்றுமடலில் அவர் விடுத்த அழைப்பிற்குப் பெறப்பட்ட பதில்களும், கிறித்தவ ஒன்றிப்பு உரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளும் திருத்தந்தையின் முதன்மை, ஆயர்களின் குழுமப் பண்பு, அனைத்து நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம் என்பனவற்றையும், அவற்றிற்கு இடையே உள்ள உறவையும் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்க உதவக்கூடியவை.

உரோமைத் தலைமைச் செயலகத்தின் சீரமைப்பு, கத்தோலிக்கத் திரு அவையின் கூட்டியக்கப் பயணத்திற்கு இன்றியமையாதது. அது திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் குறுக்கே நிற்பது அல்ல; மாறாக, அது இருவரும் தங்களுக்கே உரிய பணிகளை ஆற்ற உதவுவது ஆகும். அது ஒன்றித்த வாழ்வையும், நலமான அதிகாரப் பரவலாக்கலையும் வளர்க்க வேண்டும். உரோமைப் பேராயங்கள் தலத்திரு அவைகளுடனும் தங்களுக்கு இடையிலும் உள்ள உறவை மேம்படுத்துவதும்  அவசியம்.

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. பின்வருவனவற்றின் இறையியல் அடிப்படையும் சட்ட வரையறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்; அ. ஆயர் பொறுப்பைப் பகிர்தல் மற்றும் கூட்டுப்பொறுப்பு என்பவற்றின் அளவும் வகைகளும்; ஆ. ஆயர்களது குழுமப் பண்பிற்கும் அவர்கள் தங்கள் இறையியல் மற்றும் அருள்பணிசார்ந்த மாற்றுக்கருத்துகளை வெளியிடுதல் என்பனவற்றிற்கும் இடையிலான தொடர்பு; இ. இளையோரையும் வலுவற்றோரையும் பாதுகாக்கவும், அத்தகையோர் மீதான சீண்டல்கள் பற்றி நீதிமுறையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றொரு தனிக்குழுவைத் திரு அவைச் சட்டப்படி ஏற்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

2. தணிக்கைப் பண்பாடு என்பது கூட்டுப்பொறுப்பை வளர்க்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் உதவுவது. இது கூட்டியக்கத் திரு அவைக்கு இன்றியமையாதது. இதனால் ஆயர் பணியின் செயலாக்கத்தையும் குறிப்பாக, அதிகாரத்தை அவர் கையாளும் முறை, மறைமாவட்டச் சொத்துகளைச் சார்ந்த அவரது பொருளாதார நிர்வாகம், பங்கேற்பு அமைப்புகளின் செயல்பாடு, பல்வகை முறைகேடுகளைத் தடுத்தல் என்பனவற்றையும் அவ்வப்போது மதிப்பீட்டாய்வு செய்வதற்கான அமைப்புகளும் செயல்முறைகளும் வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

3. ஆயர் பேரவை, மறைமாவட்ட அருள்பணிப் பேரவை என்பனவற்றைக் கட்டாயமாக்குவதும், மறைமாவட்டப் பங்கேற்பு அமைப்புகள் தங்களது கூட்டுப்பொறுப்பை அதிக நன்முறையில் செயல்படுத்துவதும் உறுதி செய்யப்படவேண்டும். தேவைப்படின் இது சட்டமுறையானது என ஆக்கப்படலாம்.

4. ஆயர் பணிக்கான ஆள்களைத் தேர்வு செய்யும் முறையில் திருத்தந்தையின் தூதுவரின் அதிகாரமும், ஆயர் பேரவையின் பங்கேற்பும் சமன் செய்யப்படவேண்டும். மேலும், அப்பணிக்கெனத் தேர்வு செய்யப்படுவதற்கு  ஒருவரிடம் இருக்கவேண்டிய தகுதிக் கூறுகளை மறு ஆய்வு செய்தல் அவசியம்.  அதற்கான கலந்தாய்வில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பொதுநிலையினரையும் துறவியரையும் ஈடுபடுத்தும் வகையில் அதை விரிவாக்கம் செய்யவும்வேண்டும்.

5. சகோதர உறவு, ஒன்றிற்கு ஒன்று ஆதரவு, வெளிப்படைத்தன்மை, பரந்துபட்ட கலந்துரையாடல் என்பனவற்றின் வழியாகப் பல்வேறு நிலப்பகுதிகளில் உள்ள திரு அவைகளின் குழுமப் பண்பு வெளிப்படுகிறது. அதனை உறுதிசெய்யும்  வகையில் உயர் மறைமாவட்டம் மற்றும் மாநில அளவிலான அமைப்புகளின்  செயல்பாட்டை மறு ஆய்வு செய்வது, அவற்றை வலுப்படுத்துவது அவசியம்.

6. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஆயர்களின் உரோமை வருகை (Ad Limina Visit) தலத்திரு அவைகளின் ஆயர்களுக்கும் உரோமை ஆயருக்கும் அவருடன் நெருங்கி ஒத்துழைக்கும் வத்திக்கான் தலைமைச் செயலகத்திற்கும் உள்ள உறவின் உச்ச நிகழ்வாகும். “ஒன்றிப்புறவையும் குழுமப் பண்பையும் கூட்டியக்கத்தின் உண்மையான செயலாக்கத்தையும் வளர்க்கும் வகையில் ஒருவர் ஒருவருடனான திறந்த பரிமாற்றத்திற்கு வாய்ப்பாக அது திகழும் நோக்கில், அதன் நடைமுறை மறு ஆய்வு செய்யப்படவேண்டும் (முஅ 13g).

7. உரோமைத் தலைமைச் செயலகப் பேராயங்கள் திரு அவையின் கூட்டியக்கப் பண்பைக் கருத்தில் கொண்டு ஆயர்களுடன் கலந்துரையாடலை வளர்க்கவேண்டும். சூழமைவுகளின் பன்மைநிலையைக் கவனத்தில் கொண்டு தலத்திரு அவைகளின் குரல்களை அவை இன்னும் அதிகக் கருத்துடன்  கேட்க வேண்டும் (முஅ 13h).

8. திருத்தந்தையின் பணிக்கு உதவுகின்ற வகையில் கர்தினால்களின் ஆலோசனைக் குழுவின் செயல்பாடு கூட்டியியக்க உணர்வுடன் வலுவாக்கப்படவேண்டும் (முஅ 13j).

9. ஆயர் பேரவைகளின் கோட்பாடு மற்றும் விதிமுறை சார்ந்த அதிகாரத்தைத் தெளிவாக வரையறுத்தல் அவசியம். ஒரே நம்பிக்கையின் உண்மையான படிப்பினையைத் தத்தம் சூழமைவுக்குப் பொருத்தமானதும் பண்பாட்டுக்கு ஏற்றதுமான முறையிலும் வெளிப்படுத்தும் திருவழிபாடு, மறைக்கல்வி, விதிமுறைகள், அருள்பணி இறையியல், அருள்வாழ்வு என்பனவற்றின் வடிவங்களைக் கண்டறிய அவற்றின் குழுமச் செயல்பாடு உதவ முடியும் (2-ஆம் வத். நற்செய்திப் பணி 22).

10. ஆயர் பேரவைகளால் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒவ்வோர் ஆயரும் தமது மறைமாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

(தொடரும்)

அழையா விருந்தாளி! (காவல் அன்னை – 13)
சிறுகதை
அழையா விருந்தாளி! (காவல் அன்னை – 13)

வாங்க... வாங்க... என்ன திடீர்னு வர்றீங்க?” என்று வரவேற்றாள் அருளம்மா.

வாங்க... வாங்க... உட்காருங்கஎன்றாள் அமலி.

கருணாகரனும் இந்திராதேவியும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள்.

இங்கே இராகவேந்திரா திருமண மண்டபத்திலே எங்க சொந்தக்காரப் பொண்ணுக்குக் கல்யாணம்... அதுக்கு வந்தோம். பக்கத்திலே உங்க வீடு இருக்கே, ஒரு பார்வை பாத்திட்டுப் போகலாம்னு வந்தோம்என்றாள் இந்திரா.

என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டாள் அமலி.

ஒண்ணு வேண்டாம், கல்யாணத்திலே நல்ல விருந்து, டாக்டர் சேவியர் இல்லையா?” என்று கேட்டாள் இந்திரா.

சாப்பிட்டுவிட்டு மேலே ரெஸ்ட் எடுக்கிறார்என்றாள் அருளம்மா.

உங்க சொந்த ஊர் எதுங்க?” என்று ஆரம்பித்தாள் அமலி.

அதை ஏன் கேட்கிறீங்க? எங்களுக்குத் திருநெல்வேலிதான் சொந்த ஊர். அங்கே பி.டி. ஆசிரியையாக நான் இருக்க, இவர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராய் இருந்தார்என்றாள் இந்திரா.

அப்போ எங்க ஊருக்குப் பக்கம்தான் போங்கஎன்றாள் அருளம்மா.

ஆமாங்க, என் பொண்ணுக்கு பதிமூணு வயதாகும் போது கழுத்திலே கட்டி வந்திருச்சி. ஆஸ்பத்திரியிலேஇது கேன்சர் கட்டி, நீங்க சென்னை அடையாறு போங்கஎன்று சொல்லிட்டாங்கஎன்றார் கருணாகரன்.

நாங்க அடையாறு போய் அந்தக் கட்டிக்கு ரேடியேஷன் வெச்சிட்டு ஒரு வாரம் தங்கி இருந்திட்டு வருவோம்என்றாள் இந்திரா

அப்ப ஐந்து தடவை மாதா மாதம் போய் வைத்தியம் பண்ணி யாழினியைக் காப்பாத்தினோம்என்றார் கருணாகரன்.

யாழினி நல்லா படிச்சாள், ஆனா இவளுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்கலேஎன்றாள் இந்திரா.

அடப்பாவமே, நல்லா படிச்சவளுக்கே மெடிக்கலில் இடம் தரலியா?” என்றாள் அருளம்மா.

இருந்தாலும் யாழினிநான் டாக்டருக்குப் படிப்பேன்என்று அடம் பிடித்தாள். தெரிந்தவர்கள் மூலம் சீனாவில் டாக்டருக்குப் படிக்க அனுப்பினோம்என்றார் கருணாகரன்.

சீனாவிலே போயா டாக்டருக்குப் படிச்சது?” என்று ஆச்சரியமாய் கேட்டாள் அமலி.

ஆமாங்க, அங்கே போய் நான் கேன்சருக்கு வைத்தியம் பார்க்கிறதுக்குத்தான் படிப்பேன்னு கேன்சர் டாக்டராய் படிப்பை முடித்து வந்தாள் யாழினிஎன்றாள் இந்திரா.

ஆஹா, எவ்வளவு வைராக்கியம் பாருங்க யாழினிக்கு!” என்றாள் அருளம்மா.

அப்போ எங்க வீட்டுக்காரர் சி...வாக மதுரையில் இருந்தார். அதனால் மதுரை வடமலையான் ஆஸ்பத்திரியில் யாழினியை வேலைக்குச் சேர்த்து விட்டார்என்றாள் இந்திரா.

மதுரையில்தான் முதல்லே யாழினி டாக்டராய் இருந்ததா?” என்றாள் அமலி.

ஆமாம், யாழினியோட படிச்ச பொண்ணு சென்னை ஆஸ்பத்திரிக்கு வம்பு பண்ணி வரச் சொல்லி சேர்த்துவிட்டாள். நாங்களும் ரிட்டையராகி இங்கே வந்துவிட்டோம்என்றார் கருணாகரன்.

நீங்க போய் டிவியைப் பாருங்க, இவங்கட்டே பேசிட்டு நாம கிளம்பலாம்என்றார் இந்திரா.

என் கணவர் பெரிய வேலையில் இருந்ததால் பலரோடு சேர்ந்து குடிக்கப் பழகிட்டார்என்றாள் இந்திரா.

இப்படித்தான் நிறையப்பேர் கெட்டுப் போறாங்கம்மாஎன்றாள் அருளம்மா.

இவர் வேலையிலே கரெக்ட்தான். ஆனால், ராத்திரின்னா தண்ணி போடணும்... என்ன செய்ய? நான் சமாளிச்சு ஓட்டிக் கிட்டிருக்கேன்என்றாள் இந்திரா.

ஆமாங்க, நிறைய வேலைக்குப் போறவங்க பார்லே நிக்கிறதைப் பார்க்கிறோம். குடி குடும்பத்தைக் கெடுக்கும்னு உணராமல் அழிஞ்சு போறாங்கஎன்றாள் அமலி.

அரசியலில்  A.I.-யின் தந்திரங்கள் (உலகம் உன் கையில் – 14)
சிறப்புக்கட்டுரை
அரசியலில் A.I.-யின் தந்திரங்கள் (உலகம் உன் கையில் – 14)

மனிதத் தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகும் போக்கில், விஞ்ஞானம் (Science) மனிதனைத் தன் திசைக்கே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

விஞ்ஞானம் ஆட்சியாளர்களுக்குத் தேவையான தகவல்களையும் கருவிகளையும் புதிய அணுகுமுறைகளையும் வழங்கி ஆட்சி அமைப்பிற்கு உதவுவது மட்டுமன்றி, ஆட்சியாளர்கள் தகுந்த கொள்கைகளை உருவாக்கவும் முடிவுகளை எடுக்கவும் முக்கியக் கருவியாக விளங்குகிறது.

புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன. சமுதாயமும் சுற்றுச்சூழலும் (Society and environment) ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து செயல்படுவதையும், விஞ்ஞானம் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதையும், இம்மாற்றங்கள் பொருளாதாரத்தில் பிரதிபலிப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இன்று உலக மக்கள் அனைவரும் ஒரே தரமான வாழ்க்கையைப் பெறாவிட்டாலும், பெரும்பாலானோர் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை அனுபவித்து வருகின்றனர் என்பது உண்மை. விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தானாக  வளரவில்லை. நாம் வாழும் பூமியின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் முதலீடாக வைத்து அல்லது சில சமயங்களில் அவற்றைச் சிதைத்தும்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. இதற்கு நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் காலநிலைமாற்றமே ஒரு சிறந்த சான்று. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகவும், அதிகாரத்தில் இருந்தோர் அறிந்தோ அறியாமலோ பின்பற்றிய முறையின் விளைவுகள் என்பதை மறுக்கமுடியுமா?

ஒரு காலத்திலிருந்த மன்னராட்சி (Monarchy) முடிந்து, இப்போது பெரும்பாலும் உலகளவில் குடியரசு (Democracy) முறையே நடைமுறையில் உள்ளது. இதனை எவ்வகையில் நாடுகள் செயல்படுத்தி வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞான வளர்ச்சி அரசியலை மாற்றி வருகின்றதைக் காணமுடிகிறது.

நாம் வாழும் உலகம் கடந்த 100 ஆண்டுகளில் மிகச் சிறியதாகிவிட்டதுபோல் தெரிவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்ட தொலைத்தொடர்பு (Communication), ஊடகம் (Media), வான்வழிப் பயணம் (Air travel) எனலாம்.

சென்ற நூற்றாண்டின் கடைசியில் (1980), .. உருவெடுத்தாலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இறங்குமுகத்தைக் கண்டது. ஆனால், இந்த நூற்றாண்டின் (2000) தொடக்கத்தில் புதிய திறனுடன் .. தொழில்நுட்பம் இன்று உலகளவிலும், நாடுகளின் ஆட்சி அமைப்பிலும், அரசியல் தேவைகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆட்சிப்பீடத்தைப் பிடிக்க அரசமைப்புகள் எவ்வித உத்திகளையும் கையாளத் தயாராகிவிட்ட நிலையில், இன்றைய வியத்தகு விஞ்ஞான சாதனங்களும் அமைப்புகளும் பழம் நழுவி பாலில் விழுந்தாற்போலக் கிடைத்திருக்கின்றன.

சமூக ஊடகங்கள் (Social media)

பொதுவாக ஊடகங்களும், .. தொழில்நுட்பமும் இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம். இன்ஸ்டாகிராம், டுவிட்டர், முகநூல், ரெடிட், டிக்டாக் (Instagram, Twitter, Facebook, Reddit, Tik Tok, YouTube, Linked in) என்று பல சமூக வலையமைப்புகள்! தவிர அரசு, தனியார் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தித்தளங்கள் இவையனைத்தும் செய்தியைப் பகிர்வதும், ஒளிபரப்புவதும் நடைமுறையில் உள்ளன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சமூக ஊடக வலையமைப்புகள், தளங்களைத் தங்கள் அரசியல் தேவைக்குப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதன் மூலம் குடிமக்கள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும், குறுகிய காலத்தில் ஏராளமான மக்களைத் தொடர்பு கொள்ளவும், மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், பொது கருத்துகளை உருவாக்கவும் முடிகிறது.

 இவ்வாறு ஊடகங்கள் ஆட்சியமைப்பில் முக்கியப் பங்காற்றும் (Participationபெரும் சக்திகளாக உருவெடுத்துவிட்டன. சில தொலைக்காட்சிச் சேனல்களை (Channels), அரசியல் கட்சிகளும், தனிமனிதரும் தங்களுக்கென்று சொந்தமாக வைத்திருப்பது நடைமுறையாகிவிட்டது. அரசியல் தேவைக்காகச் செய்திகளை அவர்களாகவே தயாரித்து ஒளிபரப்புவதும், அதில் பிறர் தலையிடமுடியாத நிலையும் இன்றுள்ளது.

வலிமையான சில அரசியல் கட்சிகள், பல தொலைக்காட்சிச் சேனல்களை வசப்படுத்தி அரசியல் செய்திகளைத் தங்கள் கட்சிக்குச் சாதகமாக ஒளிபரப்புவதை மக்களும் பார்த்துப் பழகிக்கொண்டனர்.

தேர்தல் யூகங்கள், முன்கணிப்புகள் என்று கூறி சில ஊடகங்கள் கட்சிகளுக்குச் சாதகமாகப் புள்ளி விவரங்களைச் செய்திகளாக ஒளிபரப்புவது அன்றாட நிகழ்வாகிவிட்டதற்குக் காரணம் தொழில்நுட்பமா? கட்சிகளா? அல்லது கண்டும் காணாமலிருக்கும் பொதுமக்களா? என்ற வினாவிற்குப் பதில் இல்லாத நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்றைய சமூக ஊடகங்கள்போலியில் போலி (Deep Fake) என்னும் கடலில் மூழ்கிவிடும் சூழலில், அரசியல் களத்தில் இத்தொழில்நுட்பம் ஒருபுறம் கவரும்படியான செய்திகள்; மறுபுறம் ஜோடித்த உண்மையற்றவைகளைப் (Misinformationபரப்ப உதவுகின்றன. இதன் விளைவாக, குடியரசுக் கட்டமைப்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஓர் ஆராய்ச்சியாளர், இன்றைய .தொழில்நுட்ப சமூக ஊடகத்தை அணு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகிறார். எவ்வாறு அணு தொழில்நுட்பம் மின்சக்தி உற்பத்திக்கு நன்மைபயக்கும் அதே வேளையில், அணு ஆயுத உற்பத்தியால் மனிதகுலத்திற்கே ஆபத்தாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோன்று ..-க்கும் இரட்டை வேடம் தரித்து அதில் ஆதாயம் தேடப்படுகிறதோ? என்ற கேள்வி எழுவதாகக் கூறுகிறார்.

(தொடரும்)

ஞாயிறு மறையுரை