புனிதத்துவத்தில்
மரியாவைப் பாதுகாப்பதற்காக
இளம்வயதில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகையானது நம்பிக்கை மற்றும் அன்பில் அவரின் மிகப்பெரும் வளர்ச்சியைக் காட்டுகின்றது.
1. அமல
உற்பவக் கோட்பாட்டு வரையறையானது அவர் ‘முதல் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதிலிருந்து’ மரியாவின்
தொடக்கக் காலம் பற்றி மட்டுமே நேரடியான அக்கறையோடு அணுகுகின்றது. இவ்வாறு, திருத்தந்தையின் ஆசிரியமானது பல நூற்றாண்டுகளாகப் பிரச்சினைக்குள்ளாகியிருந்த முதல் பாவத்திலிருந்து மரியா பாதுகாக்கப்பட்டது பற்றிய உண்மையை
மட்டுமே வரையறுக்க விரும்பியதேயன்றி, ஆண்டவருடைய கன்னித்தாயின் என்றென்றைக்குமான புனிதத்துவம் பற்றி வரையறுப்பதில் அக்கறை கொள்ளவில்லை.
இந்த
உண்மையானது கிறித்தவ மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக இருந்தது. இது மரியா முதல் பாவத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டவராக
மட்டுமல்லாமல், சூழ்நிலை சார்ந்த பாவத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டார். மேலும், இவரின் தொடக்கப் புனிதத்துவ வாழ்வு முழுவதையுமே புனிதத்துவத்தால் நிரப்புவதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றுபகர்கிறது.
மரியாவிடம் பாவமோ, மற்ற
குறை
பாடோ
இருந்ததாகக்
கருத
முடியாது!
2. திரு
அவையானது மரியாவைப் புனிதை என்றும், பாவத்திலிருந்தும் ஒழுக்கக் குறைபாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் என்றும் தொடர்ந்து கருதி வந்துள்ளது. இந்த ஆழமான நம்பிக்கையைத் திரிதெந்து திருச்சங்கமானது, “திரு அவையானது கன்னி மரியாவின் விசயத்தில் வைத்திருக்கின்ற நிலைப்பாட்டைப் போன்று, அவர் சிறப்பானதொரு சலுகையைப் பெற்றிருந்தாலன்றி, அவரின்
வாழ்வு முழுவதும், அது மன்னிக்கத்தக்க பாவமாக இருந்தாலன்றி, எல்லா பாவத்தையும் தவிர்க்க முடியாது”
என்ற கருத்தை வலியுறுத்தி
அதையே தனது நிலைப்பாடாக வெளிப்படுத்துகின்றது (DS 1573). கடவுளின்
அருளினால் உருமாற்றப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட கிறித்தவன் கூட பாவம் செய்வதற்கான சந்தர்ப்ப சூழல்களிலிருந்து தப்பித்ததில்லை. திரிதெந்து திருச்சங்கம் கூறுகின்றவாறு, பாவத்திலிருந்து தடுக்கக்கூடிய அந்தச் சிறப்புப் பண்பு உறுதியளித்தாலன்றி, கடவுளின் அருளானது
ஒருவருடைய வாழ்வு முழுவதும் அவரின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவரைப் பாதுகாக்காது. மரியாவைப் பொறுத்தவரை இதுதான் நிகழ்ந்தது.
திரிதெந்து
திருச்சங்கமானது இந்தச் சிறப்புச் சலுகையை வரையறுக்கவில்லை. ஆனால், திரு அவையானது அதைத் தெளிவாக உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது. இதற்கு ‘Tenet’ என்ற இலத்தீன்
வார்த்தையைத் திருச்சங்கம் பயன்படுத்துகிறது. அதாவது, திருச்சங்கம் உறுதியாக இதை நம்புகிறது என்பதே இதன் பொருளாகும். இந்த உண்மையை வெறுமனே ஒரு பக்தி சார்ந்த நம்பிக்கை அல்லது கருத்து என்று புறக்கணிப்பதைத் தாண்டி, அதன் தன்மையை கடவுளுடைய மக்களின் நம்பிக்கையில் பொதிந்திருக்கின்ற ஓர் உறுதியான கோட்பாடாக உறுதிப்படுத்துகின்றது. மேலும்,
இந்த நிலைப்பாடு இயேசுவின் பிறப்பில் வானதூதரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட
அருளை அடிப்படையாகக் கொண்ட
ஒன்றாகும். “அருள் நிறைந்தவரே” (kecharitoméne)
என்று மரியாவை அழைப்பதன் வழியாக, வானதூதர் அவரை என்றைக்குமானதொரு நிறைவினாலும் புனிதத்துவத்தின் முழுமையினாலும் நிரப்பப்பட்ட, பாவத்தின் நிழலோ ஒழுக்க அல்லது ஆன்மிகக் குறைபாடோ இல்லாதவொரு பெண்ணாக அங்கீகரிக்கின்றார்.
3. மரியாவின்
முழுமையான புனிதத்துவம் பற்றி நிறைவில்லாத எண்ணங்களைக் கொண்ட அநேக ஆரம்பகாலத் திரு அவைத் தந்தையர்கள் (Fathers of the Church) முழுமையற்றத்தன்மையையும்
ஒழுக்கக் குறைபாடுகளையும் அவர் கொண்டிருந்ததாகக் கற்பித்தார்கள். இதே நிலைப்பாட்டை ஒருசில அண்மைக்காலத்து ஆசிரியர்களும் கொண்டிருந்தனர். இருப்பினும், மீட்பரின் தாய்க்குப் பாவத்தையோ அல்லது ஒழுக்கக் குறையையோ சுட்டிக்காட்டுவதற்கு அவர்கள் மேற்கோள்காட்டிய திருவிவிலிய வாசகங்கள் அவர்களின் கருத்துகளை நியாயப்படுத்துவதற்கான எந்தவோர் அடிப்படைக் காரணத்தையும் கொடுக்கவில்லை.
பன்னிரண்டு
வயதில் தமது தாய்க்கான இயேசுவின் பதில்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49). இயேசுவின் இக்கேள்வியானது சில வேளைகளில் மறைமுகமானதொரு கண்டனமாகவே விளக்கப்பட்டது. இருப்பினும்,
இந்த நிகழ்வு பற்றிய கவனமானதொரு வாசிப்பானது, இயேசுவின் தாயும் அவரின் வளர்ப்புத் தந்தையான யோசேப்புவும் அவரைத் தேடுவதற்கான கடமை அவர்களுக்கு இருந்ததால் அச்செயலுக்காக அவர் அவர்களைக் கண்டிக்கவில்லை.
கவலையோடு
கூடிய ஒரு தேடலுக்குப் பிறகு இயேசுவிடம் வந்த மரியா, அவரின் செயலைப்பற்றி ‘ஏன்?’ என்ற ஒரு கேள்வியை மட்டுமே கேட்கின்றார்: “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?” (லூக் 2:48). இந்தக் கேள்விக்கு இயேசு தமது எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்காமல், இறைமகன் என்பதன் மறைபொருளைச் சுட்டிக்காட்டி, ‘ஏன்?’ என்ற மற்றோர் எதிர் கேள்வியைத்தான் கேட்கின்றார்.
கானாவூர்
திருமண நிகழ்வில் அவர் பேசிய, “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே!” (யோவா
2:4) என்கின்ற அவரின் வார்த்தைகளும் கண்டனத்திற்குரியவைகளாக விளக்கமளிக்கப்பட முடியாது. திராட்சை இரசம் தீர்ந்ததினால் மணமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கண்டு மரியா எளிய உள்ளத்தோடும், அந்தப் பிரச்சினையை அவரிடம் ஒப்படைத்தும் இயேசுவிடம் பேசுகின்றார். ஒரு மீட்பர் என்கிற வகையில் தமது தந்தையின் விருப்பத்திற்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிந்திருந்தும், அவருடைய தாயின் உள்ளார்ந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றுகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, கன்னி மரியாவின் நம்பிக்கையை அவர் நிறைவேற்றுகின்றார். இவ்வகையில் அவரின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாக, தமது முதல் புதுமையைச் செய்கின்றார்.
4. பின்பு
மரியாவும், அவரின் உறவினர்களும் இயேசுவினுடைய பொதுவாழ்வின் தொடக்கத்தில் அவர் கூறிய வார்த்தைகளுக்குச் சிலர் எதிர்மறை விளக்கங்களைக் கொடுத்தனர். அவரிடம், “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று
ஒருவர் கூறியபோது, இயேசுவின் பதிலைத் தொடர்புபடுத்தி,
தூய லூக்கா நற்செய்தியாளர் நமக்கு அதற்கான விளக்கத்தை அறிந்துகொள்வதற்கான திறவுகோலைத்
தருகின்றார். அதாவது, இது அவரின் சகோதரர்களைக் குறிக்கும் ஒரு தொடர் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மரியாவின் உள்மன உணர்வுகளை அடிப்படையாக வைத்து நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் (ஒப்பிடுக. யோவா 7:5). அவர்களுக்கு இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்” (லூக்
8:21) என்று பதிலளித்தார். இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் லூக்கா நற்செய்தியாளர் மரியா எவ்வாறு உண்மையில் கடவுளின் வார்த்தையைக் கேட்பதிலும் தாராள
மனத்திலும் முன்மாதிரியாக இருந்தார் என்பதைக் காட்டுகின்றார். இத்தகைய
விளக்கமளிக்கையில், அந்நிகழ்வில் தன்னுடைய சொந்தவாழ்வில் கடவுளின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய மரியாவுக்கு ஒரு மிகப்பெரும் புகழ்ச்சியைத் தருகின்றது. இயேசுவின்
வார்த்தைகளானது சகோதரர்களைக் குறிப்பதற்கு எதிரானதாக இருந்தாலும், அவை உடலளவில் மட்டுமல்லாமல், ஆன்மிக அளவிலும் வாழ்ந்த மரியாவினுடைய தாய்மையின் மாண்பு மற்றும் கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில் அவரிடமிருந்த
நம்பகத்தன்மையையும் புகழ்ந்து பேசுகின்றன.
மறைமுகமான
இந்தப் புகழ்ச்சியின் வழியாக, இயேசு ஒரு தனிப்பட்ட விளக்கமளிக்கும் முறையைப் (Particular method) பயன்படுத்துகிறார்:
இயேசு மரியாவின் நடத்தையில் உள்ளதொரு பெருந்தன்மை பற்றிப் பொதுவானதொரு விளக்கமளிக்கிறார். மேலும், புனிதத்திற்கான வழிமுறையில் மனுக்குலத்தோடு மரியாவுக்குள்ள நெருக்கத்தையும் உடனிருப்பையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
இறுதியாக,
இயேசுவின் தாயைப் ‘பேறுபெற்றவர்’ என்று
அழைத்த அந்தப் பெண்ணுக்கான தமது பதிலாக அமைந்த “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறு பெற்றோர்” (லூக்
11:28) என்ற வார்த்தைகள் மரியாவின் தனித்தன்மையைச் சந்தேகிக்காமல், கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில் அவரிடமிருந்த நம்பத்தன்மையைக் காட்டுகின்றது: திரு அவையும் இதை நன்கு புரிந்துகொண்டு, மரியாவைப் பெருமைப்படுத்தும்
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இந்த இறைவார்த்தையை வைத்திருக்கின்றது. உண்மையில் அந்த நற்செய்தி வாசகமானது அவரின் தாயினுடைய ஆசிர்வதிக்கபட்ட நிலையானது கடவுளோடு அவருக்கிருந்த நெருக்கமான உறவு மற்றும் கடவுளின் வார்த்தைக்கான அவரின் முழுமையான அர்ப்பணத்தில் இருப்பதை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது.
மரியா முற்றிலும்
கடவுளுக்குரியவராக
இருந்தார்!
5. ‘முற்றிலும் புனிதமான’ மரியாவுக்கு
கடவுள் வழங்கிய சிறப்புச் சலுகையானது அவர் வாழ்வில், அருளால் நிகழ்த்தப்பட்ட மாட்சியைப் போற்றுவதற்கு நம்மை வழிநடத்துகிறது. மேலும், இது மரியா எப்பொழுதும் முற்றிலும் கடவுளுக்குரியவர் என்றும், அந்த நிலையானது எந்தவொரு குறையும் இல்லாத நிலையில் கடவுளுடனான முழுமையான இணக்க நிலையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றது.
ஆகவே,
அவரின் பூவுலக வாழ்வானது நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பில் நீடித்த மற்றும் உயர்ந்ததொரு வளர்ச்சியால் குறிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, இறை இரக்கத்தின் பிரதிபலிப்பாக, புனிதத்துவத்தின் மற்றும் நற்செய்தியின் முழுமையினுடைய உயர்ந்த மற்றும் உறுதியான வழிகாட்டியாக மரியா இருந்தார்.
மூலம்:
John Paul II, Mary was free from all personal sin, in
L’Osservatore Romaoo, Weekly Edition in English, 26
Jube 1996, p. 11.