news
தமிழக செய்திகள்
வருந்துகிறோம்!

நம் வாழ்வுஇதழில் தொடர்ந்து பல உளவியல் கட்டுரைகளைப் படைத்து, வாசகர்கள் உள்ளத்தில் நீங்கா இடம்பிடித்த சேசு சபை அருள்பணியாளர் முனைவர் இம்மானுவேல் ஆரோக்கியம் எனும் எம்மா, கடந்த 07.09.2026 அன்று காலை இறைவனடி சேர்ந்தார் எனும் செய்தி எமக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. தந்தை எம்மாவின் இறுதிப் பயணமும் அடக்கத் திருப்பலியும் சென்னை - இலயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் 08.09.2006 அன்று நடைபெற்றது. ‘நம் வாழ்வுவாசகர்கள், எழுத்தாளர்கள், ‘நம் வாழ்வுநிர்வாகம் சார்பாகநம் வாழ்வுமுதன்மை ஆசிரியரும் பணியாளர்களும் அடக்கத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

இவ்வேளையில் தந்தை எம்மாவின் குடும்பத்தாருக்கும் குறிப்பாக, அவருடைய உடன் பிறந்த சகோதரர் தந்தை எம்.. ஜோ அவர்களுக்கும்நம் வாழ்வுகுடும்பம் தனது ஆழ்ந்த இரங்கலையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. தந்தை எம்மாவின் ஆன்மா இறைவனில் இளைப்பாற தொடர்ந்து செபிப்போம்.

உளவியல் ஆற்றுப்படுத்துதல் துறையில், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற தந்தை எம்மா, திருச்சி - தூய வளனார் கல்லூரியில் உளவியல் துறையை நிறுவி, அதன் முதல் துறைத் தலைவராகவும், தொடர்ந்து இறுதி வரை அங்கு உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
அவருக்குச் செவிசாய்ப்போம்’(ஆயர் இராயப்பன் அவர்களின் செயலி)

அவருக்குச் செவிசாய்ப்போம்(Let us listen to Him)  செயலி ஆன்மிக வளங்கள், ஒலிவடிவத் திருவிவிலியம், திருப்புகழ்மாலை, திருவழிபாட்டு உரைகள் மற்றும் திரு அவைச் சட்டப் போதனைகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் உங்களுக்காகக் கொண்டு வருகிறது. உங்களின் அன்றாட ஆன்மிக வாழ்க்கையை வளப்படுத்த ஒரே செயலி மூலம் எளிதாக அணுகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

தினமும் திருவிவிலியம் வாசிக்க நேரமில்லை என்று கூறலாம், ஆனால், இறைவார்த்தையைக் கேட்க நேரமில்லை என்று யாருமே கூறமுடியாது. பயணம் செய்யும்போது, சமையல் செய்யும்போது அல்லது வேலை பார்த்துக்கொண்டே மிக எளிதாகக் கேட்கலாம். அதேபோல், ‘திருப்புகழ் மாலை(Liturgy of the Hours) மற்றும்புனிதர்களின் ஆன்மிக வாசிப்புகள்(Spiritual Readings by Saints) ஆகியவை ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் எல்லாரும் திரு அவையின் அதிகாரப்பூர்வமான செபத்தை நாள்தோறும் தவறவிடாமல் செபிக்கப் பெரிதும் உதவுகின்றன.

இன்றே இந்தச் செயலியை (App) பதிவிறக்கம் (Download) செய்து (https://play.google.com/store/apps/details?id=org.bishopsalem.bishop_app), இந்த ஆன்மிக வளங்கள் அனைத்தையும் உங்கள் விரல் நுனியில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தச் செயலி பற்றிய தகவலை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பங்கு மக்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

news
தமிழக செய்திகள்
“பாராட்டத்தக்க அர்ப்பணிப்பு!”

அன்பார்ந்த நண்பர் அருள்தந்தை இராஜசேகரன் அவர்களே,

மிகுந்த ஆர்வத்துடன்நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கம் தொடங்கியநம் வாழ்வுஇணைய தினசரி இதழின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்பான வாழ்த்துகள்! ஒரு வருடமாக தமிழ் கத்தோலிக்கச் சமூகத்திற்கு உண்மை, நம்பிக்கை மற்றும் திரு அவையின் குரலை உண்மையுடன் எடுத்துச் சென்ற உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இது வெறும் ஒரு மைல்கல் மட்டுமல்ல; செய்தி, நம்பிக்கை, சத்தியம் என்ற மூன்று அடிப்படைகளின் மூலம் தமிழ் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களை இணைத்த ஒரு பணியின் தொடக்கமும் ஆகும்.

அன்னை மரியாவும், தூய ஆவியானவரும் உங்கள் இந்தத் திருப்பணியைத் தொடர்ந்து வழிநடத்தி, வளர்ச்சியடைய அருள்பாலிக்கட்டும். இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள சேவையாற்ற இறைவன் உங்கள் குழுவினருக்கு ஆசி வழங்குவாராக! ‘நம் வாழ்வுதலைவர் ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும், ‘நம் வாழ்வுவாசகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.

முனைவர் ரபி பெர்னார்ட், நாடாளுமன்ற மாநிலங்களவை மேனாள் உறுப்பினர்

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்ட்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக பிரபல ஊடகவியலாளரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்தோலிக்கரான திரு. பெலிக்ஸ், சென்னை இலயோலோ கல்லூரியில் பயின்றவர். தமிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட ஊடகவியலாளர். ‘சன், ‘சத்தியம்தொலைக்காட்சி சேனல்களில் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், ’ரெட் பிக்ஸ்என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த துயர நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊடகத் துறையிலிருந்து விலகி .வெ.. கட்சியில் இணைந்த இவர், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கட்சியின் கருத்துகளை முன்வைத்து வந்தார்.

.வெ.. தலைவர் விஜய்யின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது சிறுபான்மையினர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட இவரது நியமனம், சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு ஒரு புதிய தீர்வைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சிறுபான்மை சமூக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் முழு கவனத்துடன் உழைப்பதாக உறுதி அளித்துள்ள இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

news
தமிழக செய்திகள்
திண்டுக்கல் மறைமாவட்டத் திருத்தூதரக நிர்வாகியாக மதுரைப் பேராயர் மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து நியமனம்!

திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு பி. தாமஸ் பால்சாமி அவர்களின் பணி ஓய்வு விண்ணப்பத்தைத் திருத்தந்தை 14-ஆம் லியோ ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்தியாவிற்கான திருத்தூதரக நிர்வாகம் திரு அவைச் சட்ட விதி 401, 1-இன்படி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகியாக (apostolic administrator) மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு முனைவர் அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களைத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். இது குறித்து ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாகப் பொறுப்பேற்கும் பேராயர் அந்தோணிசாமி அவர்களின் பணி சிறக்கத் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும், தனது ஆயர் பணியின்போது முழு ஒத்துழைப்பு நல்கிய மறைமாவட்டக் குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டுச் செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக உபயோகிக்கவேண்டும். இதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். குறிப்பாக, இத்திட்டங்களைச் செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திரச் செலவீன விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளிகளின் விவரத்தை wwwadtwdap.tn.gov.in வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள தடைகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான பரிந்துரைகளைத் தெரிவிக்கவேண்டும். அதற்கான புதிய திட்டங்களை அனைத்துத் துறைச் செயலர்கள் உருவாக்கவேண்டும்.”

மாண்புமிகு. ஜோசப் விஜய், தமிழ்நாடு முதல்வர்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளைஆன்லைன்மூலம் முன்பதிவு செய்வது நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காகத் தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன; அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். இது மது வணிகத்தையும், மதுப்பழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது அரசுக்குப் பெருமை சேர்க்காது. மதுப்பழக்கத்தை அதிகரிக்கவே செய்யும். மது முன்பதிவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும்.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

கீழடி அகழாய்வில் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் எழுதப் படிக்க அறிந்து இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குழந்தைகளைத் தினந்தோறும் புத்தகம் வாசிக்க பெற்றோர் ஊக்குவிக்கவேண்டும். புத்தக வாசிப்புடன் மாமல்லபுரம், கீழடி, பொருநை போன்ற அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகள் தமிழர்களின் கலை நுணுக்கங்களை, வாழ்வியலை அறிந்துகொள்ள முடியும். நவீன உலகத்தைக் குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் நூல்களை, கட்டுரைகளை எழுத்தாளர்கள் படைக்கவேண்டும்.”

திருமிகு. ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்