“நாட்டின்
பல்கலைக்கழகங்களும் கல்வி நிலையங்களும் மாணவர்களுக்கு நவீனத்துடன் கலாச்சாரம், பாரம்பரிய உணர்வையும் புகட்டவேண்டும். நவீனத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும்போதுதான் சமநிலையான வளர்ச்சியைப் பேணமுடியும். நாட்டின் மக்கள்தொகையில் 65% இளையோர் உள்ளனர்.
எனவே, இந்தியாவை ‘இளைஞர்கள் நாடு’ என்றே கூறலாம். வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதும் பிரதான அமைப்பு முறையில் அவர்களை இணைப்பதும் முக்கியமானது. நவீன வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்க நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். எதையும் சாதிக்கக்கூடிய, அசைக்க முடியாத துணிச்சல் கொண்ட நமது இளைஞர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமுள்ளன.”
உயர்மிகு. திரௌபதி
முர்மு,
குடியரசுத்
தலைவர்
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் அவர்களைப் பணியமர்த்துவது சமூகநீதிக் கொள்கைக்கு முரணானதாகும். முந்தைய ஆட்சியாளர்கள் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்கக்கூடாது என்ற கோரிக்கையைப் புறக்கணித்தனர். இச்சூழலில் புதிய அரசு தனியார்மயமாக்கலுக்கு முடிவு கட்டவேண்டும். மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்கும் முயற்சியை உடனடியாக அரசு கைவிடவேண்டும். மேலும், தற்காலிக முறை, ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்கவேண்டும்.”
உயர்மிகு. மு.
வீரபாண்டியன்,
இந்தியக்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
மாநிலச்
செயலர்
“விவசாயிகள் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் என எல்லா இடங்களிலும்
கடன் வாங்கி விவசாயம் செய்கிறார்கள். 2021 முதல் 2023 - ஆம் ஆண்டு வரை, 1,968 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு இரு விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டிலும் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.”
திருமதி. சௌமியா
அன்புமணி,
பா.ம.க.
சட்டமன்ற
உறுப்பினர்