news
தமிழக செய்திகள்
நன்றி உணர்வோடு வழியனுப்புகிறது ‘நம் வாழ்வு’!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமானநம் வாழ்வுஇதழின் துணை ஆசிரியராக, கடந்த ஓராண்டு காலம் சிறப்புடன் பணியாற்றிய அருள்பணி. ஜேக்கப் குருசங்கர் அவர்கள், தற்போது தனது சொந்த மறைமாவட்டப் பணிக்குத் திரும்புகிறார். ‘நம் வாழ்வுகுடும்பம் மனதார வாழ்த்தி வழியனுப்புகிறது. திருத்தந்தையின் ஆழமான செய்திகளைச் சாமானிய வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ‘திருத்தந்தையின் திருவாக்குமற்றும்சதுக்கத்தின் சப்தம்ஆகிய பகுதிகள் வழியாகத் தொடர்ந்து வழங்கி, ஆன்மிகத் தேடல் கொண்ட வாசகர்களுக்கு ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்கு இவரைத் தந்து உதவிய ஊட்டி மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்களுக்கு, ‘நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர், மற்றும் ஆசிரியர் குழு சார்பாக எமது நன்றியினை உரித்தாக்குகிறோம்.

அருள்பணி. ஜேக்கப் குருசங்கர் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இறைப்பணி சிறக்கவும், அவருக்குத் தேவையான உடல், உள்ள மற்றும் ஆன்ம நலன்களை இறைவன் நிறைவாகத் தந்து வழிநடத்தவும்நம் வாழ்வுஇதழ் அன்புடன் வாழ்த்தி வழியனுப்புகிறது.                                                        

முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைத் தங்களுடைய பலத்தினால் பல்வேறு யுக்திகளினாலே ஆக்கிரமித்த பாரதிய சனதா கட்சி தமிழ்நாட்டிலும் கால்வைக்க முயற்சி செய்கிறது. அதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமூச்சுடன் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இது அதீதமான நம்பிக்கை அல்ல, தன்னம்பிக்கை!”

திருமிகு. திருச்சி சிவா, தி.மு.. துணைப் பொதுச் செயலாளர்

தொகுதி மறு வரையறையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. ஆனால், இது தொடர்பாக ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார். தி.மு.. அரசின் தோல்விகளை மறைக்க தொகுதி மறு வரையறையால் ஆபத்து என்கிறார். தமிழகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் ஸ்டாலின்.”

திருமிகு. எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.. தலைவர்

நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் போனதுக்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்ஷன். எனக்கு ஒரு எமோஷன், எனக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும் எனக்கும் கண் கலங்கும். கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால் சனநாயகனை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் எடுபடவில்லை. நான் வெளியே வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளேன். தி.மு.-வினராலேயோ, பா...வினராலேயோ மற்றும் பலராலேயோ என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது.”

திருமிகு. விஜய், .வெ.. தலைவர்

செல்லும் இடமெல்லாம் தி.மு.. கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். தமிழ்நாட்டு முதல்வர் முன்மொழியும் அரசியல், ஒன்றிய அரசின் அதிகாரக் குவியலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர். பா...வுக்கு வாக்களித்தால்தான் மதுரை மெட்ரோ இரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் மிரட்டுகிறார். இந்தப் பிளாக்மெயில் எல்லாம் எடுபடாது. பிரதமர், உள்துறை அமைச்சர் என ஒன்றிய அமைச்சர்களின் முகாமே சென்னையில் அமைந்தாலும் சரி, பா... தோல்வி அடைவது உறுதி.”

திருமிகு. மு. வீரபாண்டியன், சி.பி.. தலைவர்

news
தமிழக செய்திகள்
தேர்தல் எதிரொலி...

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துகள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற ECI-net என்ற தளம் மூலம் அறியலாம். பயனர்கள் ECI-net தேர்தல் நடத்தை (Conduct of Election) பகுதியின் கீழ் KYC தொகுதியை அணுகலாம். வேட்பாளர்கள் சமர்ப்பித்த முழுமையான உறுதிமொழி பத்திரத்தையும் (படிவம் 26) அவர்கள் ECI-net மூலம் பதிவிறக்கம் செய்யலாம். ECI-net என்பது உலகின் மிகப்பெரிய சனநாயகத்தின் அனைத்துத் தேர்தல் சேவைகளையும் தடையற்ற ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணைய தளங்களை இது ஒருங்கிணைக்கிறது. ECI-net வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல், தேடல், உங்கள் விண்ணப்பங்களைக் கண்காணித்தல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல், வாக்குச்சாவடி நிலை, அலுவலருடன் அழைப்பை முன்பதிவு செய்தல், பதிவிறக்கம், வாக்குப்பதிவு போக்குகள் மற்றும் குறைகளைத் தீர்ப்பது போன்ற சேவைகளைப் பாதுகாப்பான ஒரே தளத்தில் வழங்குகிறது.”                   

இந்தியத் தேர்தல் ஆணையம்

news
தமிழக செய்திகள்
ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைக் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி..) தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேலான தனியார் பள்ளிகளில் ஓர் இலட்சம் இடங்கள் உள்ளன

இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம்.

தமிழ்நாட்டில் 2013-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஆர்.டி.. திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 5.7 இலட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வியாண்டு (2026-2027) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

தனியார் பள்ளிகள் இயக்ககம், தமிழ்நாடு

news
தமிழக செய்திகள்
‘டெட்’ தேர்வு கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க முடிவு!

தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும். பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தேர்வெழுதி தேர்ச்சி பெறவேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 4-இல் முதல் தாளுக்கான தேர்வும், ஜூலை 5-இல் இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 18 முதல் இணைய வழியில் (https://www.trb.tn.gov.in) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாளாகும். இந்த நிலையில் டெட் தேர்வில் ஆசிரியர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான செயல்பாடுகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்துப் பாடங்களுக்குமான வினா வங்கிகள் மற்றும் பயிற்சிக் கையேடுகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நேரடிப் பயிற்சிகள் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட உள்ளது.                                                        

பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
தேர்தல் எதிரொலி...

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படுவதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்டப் பயிற்சி கடந்த 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் 3,32,231 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருள் மற்றும் இதர இலவசப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் பணிகளைத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை ரூ.296.40 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

திருமிகு. அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி