news
தமிழக செய்திகள்
தமிழுக்கு மூன்றாமிடம்: முதல்வர் பதவியேற்பும் மீறப்பட்ட ‘தமிழ்’ மரபும்

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சு கொதிக்கிறது. இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க, முதல்வர் வழிவகை காணவேண்டும்.”

திரு. கி. வீரமணி, தி..தலைவர்

மாற்றம் என்று கூறிக்கொண்டு தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும். மேனாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செயலலிதா, கருணாநிதி காலத்திலும்கூட இவ்வாறான செயல் நடைபெறவில்லை. தற்போதைய ஆட்சியின் மூலம் தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து போன்று தமிழ்நாடும் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும்.”

திரு. R.S. பாரதி, தி.மு.. அமைப்புச் செயலாளர்

பதவியேற்பு விழாவில் நீண்டகால மரபு மீறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ‘வந்தே மாதரம்பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் கவனக் குறைவா அல்லது ஆளுநரை மகிழ்விக்கச் செய்யப்பட்டதா என்பதற்கு முதல்வர் விளக்கமளிக்கவேண்டும்.”

திருதொல். திருமாவளவன் வி.சி.. தலைவர்

முதல்வர் பதவியேற்பு நிகழ்வில்வந்தே மாதரம்பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது.”

திரு. இராமதாஸ், பா... நிறுவனர்

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டதில் .வெ.. தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசிற்கும் உடன்பாடு இல்லை. தாய்த் தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடுவது என்பது நீண்டகால மரபு. நாங்கள் இது தொடர்பாக ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கைப்படி செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது.”

திரு. ஆதவ் அர்ஜூனா, அமைச்சர்

news
தமிழக செய்திகள்
“முதல்வர் பொறுப்பில் முத்திரை பதிக்க வாழ்த்துகிறோம்!”

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் மாண்புமிகு . ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவருடைய தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திருமிகு . ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவர் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவை தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் ஒருங்கிணைந்த நலன், சமூகநீதி, கல்வி முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய இலக்குகளை முன்னிறுத்தி தாங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பொறுப்பேற்று ஒருசில நாள்களில் தாங்கள் முன்னெடுத்துள்ள புதிய அரசியல் நாகரிகம், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூடுதல், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியவை. இதுபோன்று தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நல்லாட்சி வழங்க இறைவன் தங்களுக்கு ஞானத்தையும் உடல் நலன்களையும் அருள இறைவனை வேண்டுகிறோம்.

வெறுப்பு அரசியல் வளர்ப்பவர்களை ஒடுக்கி. சமயத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பவர்களைப் புறந்தள்ளி, மதநல்லிணக்கம், மனிதநேயம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சனநாயகப் பண்புகளைப் பாதுகாத்து, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் தலைமையினைத் தாங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறோம். உலகின் மூத்தமொழி தமிழால் பெருமையுறும் பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் இளைய முதலமைச்சர் என்னும் புதிய பொறுப்பில், எல்லா நிலைகளிலும் தாங்கள் சிறப்பான முத்திரை பதிக்க, தமிழ்நாடு ஆயர் பேரவை தனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது.

இறைவனின் அருளும் ஆசியும் உங்களோடு என்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை உளமாற வேண்டுகிறோம்.

+ பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
நன்றி உணர்வோடு வழியனுப்புகிறது ‘நம் வாழ்வு’!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமானநம் வாழ்வுஇதழின் துணை ஆசிரியராக, கடந்த ஓராண்டு காலம் சிறப்புடன் பணியாற்றிய அருள்பணி. ஜேக்கப் குருசங்கர் அவர்கள், தற்போது தனது சொந்த மறைமாவட்டப் பணிக்குத் திரும்புகிறார். ‘நம் வாழ்வுகுடும்பம் மனதார வாழ்த்தி வழியனுப்புகிறது. திருத்தந்தையின் ஆழமான செய்திகளைச் சாமானிய வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ‘திருத்தந்தையின் திருவாக்குமற்றும்சதுக்கத்தின் சப்தம்ஆகிய பகுதிகள் வழியாகத் தொடர்ந்து வழங்கி, ஆன்மிகத் தேடல் கொண்ட வாசகர்களுக்கு ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்கு இவரைத் தந்து உதவிய ஊட்டி மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்களுக்கு, ‘நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர், மற்றும் ஆசிரியர் குழு சார்பாக எமது நன்றியினை உரித்தாக்குகிறோம்.

அருள்பணி. ஜேக்கப் குருசங்கர் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இறைப்பணி சிறக்கவும், அவருக்குத் தேவையான உடல், உள்ள மற்றும் ஆன்ம நலன்களை இறைவன் நிறைவாகத் தந்து வழிநடத்தவும்நம் வாழ்வுஇதழ் அன்புடன் வாழ்த்தி வழியனுப்புகிறது.                                                        

முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைத் தங்களுடைய பலத்தினால் பல்வேறு யுக்திகளினாலே ஆக்கிரமித்த பாரதிய சனதா கட்சி தமிழ்நாட்டிலும் கால்வைக்க முயற்சி செய்கிறது. அதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமூச்சுடன் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இது அதீதமான நம்பிக்கை அல்ல, தன்னம்பிக்கை!”

திருமிகு. திருச்சி சிவா, தி.மு.. துணைப் பொதுச் செயலாளர்

தொகுதி மறு வரையறையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. ஆனால், இது தொடர்பாக ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார். தி.மு.. அரசின் தோல்விகளை மறைக்க தொகுதி மறு வரையறையால் ஆபத்து என்கிறார். தமிழகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் ஸ்டாலின்.”

திருமிகு. எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.. தலைவர்

நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் போனதுக்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்ஷன். எனக்கு ஒரு எமோஷன், எனக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும் எனக்கும் கண் கலங்கும். கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால் சனநாயகனை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் எடுபடவில்லை. நான் வெளியே வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளேன். தி.மு.-வினராலேயோ, பா...வினராலேயோ மற்றும் பலராலேயோ என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது.”

திருமிகு. விஜய், .வெ.. தலைவர்

செல்லும் இடமெல்லாம் தி.மு.. கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். தமிழ்நாட்டு முதல்வர் முன்மொழியும் அரசியல், ஒன்றிய அரசின் அதிகாரக் குவியலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர். பா...வுக்கு வாக்களித்தால்தான் மதுரை மெட்ரோ இரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் மிரட்டுகிறார். இந்தப் பிளாக்மெயில் எல்லாம் எடுபடாது. பிரதமர், உள்துறை அமைச்சர் என ஒன்றிய அமைச்சர்களின் முகாமே சென்னையில் அமைந்தாலும் சரி, பா... தோல்வி அடைவது உறுதி.”

திருமிகு. மு. வீரபாண்டியன், சி.பி.. தலைவர்

news
தமிழக செய்திகள்
தேர்தல் எதிரொலி...

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துகள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற ECI-net என்ற தளம் மூலம் அறியலாம். பயனர்கள் ECI-net தேர்தல் நடத்தை (Conduct of Election) பகுதியின் கீழ் KYC தொகுதியை அணுகலாம். வேட்பாளர்கள் சமர்ப்பித்த முழுமையான உறுதிமொழி பத்திரத்தையும் (படிவம் 26) அவர்கள் ECI-net மூலம் பதிவிறக்கம் செய்யலாம். ECI-net என்பது உலகின் மிகப்பெரிய சனநாயகத்தின் அனைத்துத் தேர்தல் சேவைகளையும் தடையற்ற ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணைய தளங்களை இது ஒருங்கிணைக்கிறது. ECI-net வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல், தேடல், உங்கள் விண்ணப்பங்களைக் கண்காணித்தல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல், வாக்குச்சாவடி நிலை, அலுவலருடன் அழைப்பை முன்பதிவு செய்தல், பதிவிறக்கம், வாக்குப்பதிவு போக்குகள் மற்றும் குறைகளைத் தீர்ப்பது போன்ற சேவைகளைப் பாதுகாப்பான ஒரே தளத்தில் வழங்குகிறது.”                   

இந்தியத் தேர்தல் ஆணையம்

news
தமிழக செய்திகள்
ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைக் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி..) தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேலான தனியார் பள்ளிகளில் ஓர் இலட்சம் இடங்கள் உள்ளன

இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம்.

தமிழ்நாட்டில் 2013-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஆர்.டி.. திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 5.7 இலட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வியாண்டு (2026-2027) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

தனியார் பள்ளிகள் இயக்ககம், தமிழ்நாடு