news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம், அதிகப்படியான வெள்ள நீரைக் கொண்டுள்ள மாநிலங்களிலிருந்து பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், மேற்கு மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகள் இல்லாமல் போகும். தீபகற்ப மாநிலங்களில் வறட்சியும் பஞ்சமும் மறையும். வெள்ளம், வறட்சி இவற்றிற்கான பல்லாயிரம் கோடி செலவீனங்களும் நட்டமும் தவிர்க்கப்படும். சுமார் இரண்டரை கோடி ஹெக்டேர் நிலங்கள் கூடுதலாகப் பாசன வசதி பெறும்.”

உயர்மிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர்

தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம். தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம். அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்யவேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டு வருகிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை. ‘இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம்.”

திருமிகு. மு.. ஸ்டாலின், தி.மு.. தலைவர்

பசுமையான எதிர்காலத்தை உருவாக்க, நாடு முழுவதும் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டும். ஒவ்வொரு குடும்பமும் பிறந்தநாள், திருமண நாள் விழா, குழந்தை பிறப்பு, மறைந்த பெற்றோரின் நினைவு நாள் உள்ளிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வுகளை ஒரு மரம் நடுவதன் மூலம் கொண்டாடவேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வும், ‘மரத் திருவிழாஆக மாறவேண்டும். ஆண்டிற்குக் குறைந்தது ஒரு மரமாவது நடுவதுடன், குறைந்தது ஐந்து பேரை இந்த மரம் இயக்கத்தில் இணைக்க ஊக்குவிக்கவேண்டும்.”

திருமிகு. சிவராஜ்சிங் சௌஹான், மத்திய வேளாண்மை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தற்போது முதியோர் இல்லங்கள் சமூகத்தில் பெருகி வருவது கவலைக்குரிய செய்தியாகும். இந்தப் பிரச்சினைக்குச் சமூக அளவில் உரிய தீர்வு எட்டப்படவேண்டும். கல்வியோ, பதவியோ, பணமோ ஒருவருக்கு இருப்பதால் பயனில்லை; மாறாக, மனித நேயமும், மனிதத்தன்மையும் இருத்தல் அவசியம். அந்த அடிப்படைப் பண்பு இல்லாமல், வேறு எத்தகைய பெருமைகள் இருந்தாலும் எதற்கும் உதவாது. அரசியல்வாதியாக இருந்தாலும் சரி; மருத்துவர், ..எஸ். அதிகாரி என எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி, முதலில் நல்ல மனிதராக இருக்கவேண்டும் என்பதே அடிப்படைப் பண்பாகும். நம் இதயத்தில் சக மனிதர் மீதான அன்பு இருக்கவேண்டும்.”

மேமிகு. ஆர்.வி. ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்

தமிழ்நாட்டு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன் பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் கே. வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

தமிழ்நாட்டு அரசியல் பொருளாதார, சமூக நிலைகள் பற்றியப் புரிதலும், கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகள் குறித்த புரிதலும் இல்லாத ஒருவர், தமிழ்நாட்டு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவரது நியமனத்தைத் தமிழ்நாடு முதல்வர் மறுபரிசீலினை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்யவேண்டும்.” 

திருமிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்

.தி.மு.. எம்.எல்..-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாட்டு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல, எம்.எல்.-க்கள் எந்தப் பின்னணியில் ராஜினாமா செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதை .தி.மு..வின் உள்கட்சி விவகாரமாகவும் கடந்து செல்லமுடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்வது சனநாயகத்திற்கு உகந்தது அல்ல.”

திருமிகு. தொல்.திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சித் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தென்மேற்கு பருவமழை தொடங்கவிருக்கும் இச்சூழலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டி..பி. உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தருணத்தில் உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் யூரியா, டி..பி. போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாள்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிறைவு செய்திட 3.83 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 இலட்சம் மெட்ரிக் டன் டி..பி. மற்றும் 0.83 இலட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்குவதை ஒன்றிய அரசு உறுதி செய்யவேண்டும்.”

மாண்புமிகு. . ஜோசப் விஜய், முதல்வர், தமிழ்நாடு அரசு

இந்தியாவின் பொருளாதார அமைப்பை அம்பானி, அதானி மற்றும் அமெரிக்காவிடம் மோடி ஒப்படைத்துவிட்டார். இப்போது ஒரு பொருளாதாரப் புயல் வரவிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்திய அரசாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசமைப்பை அழித்துவிட்டார்கள். வரும் காலங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றன. முன்னெப்போதும் இல்லாத கடுமையான பணவீக்கம் நாட்டில் ஏற்படப்போகிறது. அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும். நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நின்றுபோகும்.” 

திருமிகு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

சமூக, பொருளாதார, தனிநபர் காரணங்களுக்காகப் பள்ளிக்கு வராவிட்டால் உடனே அந்த மாணவரின் வீட்டிற்கே சென்று பள்ளிக்கு வரவைக்க முயற்சி மேற்கொள்வோம். மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடரும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது. ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு நல்ல வழி பிறக்கும். பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்களில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் விதமாகக் கல்விப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.”

திருமிகு. ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நிகழாண்டும்நீட்’ வினாத்தாள் முறைகேடுகள் வெளிவந்து தேர்வு இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவேநீட்தேர்வு இருக்கிறது. ‘நீட்தேர்வில் மோசடி இல்லை; ‘நீட்தேர்வே ஒரு மோசடிதான். மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும்நீட்தேர்வு முறை ஒழிக்கப்படவேண்டும்.”

திருமிகு. மு.. ஸ்டாலின், தி.மு.. தலைவர்

தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோலைக் குறைவாகப் பயன்படுத்துங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோவைப் பயன்படுத்துங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இவை வெறும் போதனைகள் அல்ல; ஒன்றிய அரசின் தோல்விக்கான சான்றுகள்.” –

திருமிகு. இராகுல்காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வளரும் நாடுகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும். உலகம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு நிலைநாட்டப்படவேண்டும். உலகளாவிய சட்டவிதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படவேண்டும். பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்கவேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி, செங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். போர் காரணமாகப் பல்வேறு நாடுகளில் எரிபொருள், உணவு தானியங்கள், உரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடுகளின் நிதிச்சுமை அதிகரித்திருக்கிறது. சுகாதாரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குபிரிக்ஸ்கூட்டமைப்பு உதவவேண்டும்.”

திருமிகு. ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
தொகுப்பு: ஸ்ரீநிதி

அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றி இளையோருக்கு ஆழமாகக் கற்பிக்கப்படவில்லை. அவரைச் சாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அவர் முழு தேசத்திற்கும் சொந்தமானவர். அவரைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடத்தில், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் ஆற்றிய பங்கு, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசமைப்புத் தொலைநோக்குப் பார்வைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் சனநாயக தேசத்தைக் கட்டமைப்பதிலும் அவர் ஆற்றிய பங்கு, பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக சிந்தனை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய கல்விசார் சாதனைகள் ஆகிய தலைப்புகளில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும். இந்தப் பாடத்திட்டத்தை 2027-2028 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும்.”

நீதிபதி. எல். விக்டோரியா கௌரி, உயர் நீதிமன்றம்

“2014-ஆம் ஆண்டு முதல் உலகப் பத்திரிகை சுதந்திரப் பட்டியலில் இந்தியா பின்தங்கி வருகிறது. பா... ஆட்சியில் இந்தியா 157-வது இடத்திற்குச் சென்றுவிட்டது. சுதந்திரமான பத்திரிகையாளர்கள் என்பது அரசு சொல்வதை அப்படியே கேட்பதோ அல்லது அரசின் தோல்விகளை மூடி மறைப்பதோ கிடையாது. அரசு அதிகாரிகளைக் கேள்வி கேட்பதும், அரசின் அதிகாரங்களை ஆய்வு செய்வதும், தோல்விக்கு அரசு அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்வதுமே பத்திரிகை சுதந்திரமாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும், மக்களுக்கும் இடையேயான சனநாயகத்தை ஊடகம் காக்கவேண்டும். பொதுமக்களின் நலனைச் செய்தியாளர்கள் காக்கவேண்டும். செய்தியாளர்களைச் சட்டரீதியில் மௌனமாக்கும் வேலைகளைச் சங்க் பரிவார் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. அவதூறு சட்டங்கள், தேசப் பாதுகாப்புச் சட்டப்பிரிவுகள் உள்ளிட்டவை நீதிக்கான கருவியாக மட்டும் பயன்படுத்தப்படாமல், மிரட்டுவதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.”

திருமிகு. மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சித் தலைவர்

.. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான சவால் உருவாகியுள்ளது. ஆதலால் .. தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றப்படுவதையும், ..யிடம் வேலைவாய்ப்புகளை இழக்காததையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளும், பிற சேவைத் துறைகளிலும் ..யைப் பயன்படுத்தும் வகையில் நாம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.”

திருமிகு. அனந்த நாகேஸ்வரன், தலைமைப் பொருளாதார ஆலோசகர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வளர்ந்த நாடுகளில் பெண்களுக்குச் சமவாய்ப்பு, மதிப்பு, தலைமைப் பதவிகளை மறுக்க முடியாது. ஏனெனில், பெண்களுக்குச் சமவாய்ப்புகளும் தலைமைப் பதவிகளும் கிடைத்தால்தான் நாட்டில் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். பெண்களின் பங்களிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் உத்வேகமாக இருக்கும்.”

உயர்திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவர்

ஒரு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க விரும்பினால், அது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை.”  

உச்ச நீதிமன்றம்

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் உள்ளன. அவற்றில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிமன்றக் கட்டடக் கட்டமைப்பு அவசியம். இதில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.50 கோடி. சமுதாயம் சரியாக இருக்கவேண்டுமானால் குற்றவியல் வழக்குகள் குறையவேண்டும். விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் உள்ளன. தேங்கிக்கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும்.”

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்