news
இந்திய செய்திகள்
வரலாற்றில் ஒளிரும் முகம்!

அண்மையில், நவம்பர் 17 தொடங்கி  21-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் பங்கேற்ற இந்தியாவின் உள்தயாரிப்பானதி தேஜாஸ்போர் விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில் இமாச்சலபிரதேசம் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி விங்கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார்.

2011-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர், பல்வேறு கடமைப்பணிகளில் தைரியமாகச் செயல்பட்டு, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமான சாகசப் பிரிவில் பணியாற்றினார். விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இந்திய விமானப் படையில் சிறந்த வீரராகவும் திறமையான விமானியாகவும் கருதப்பட்டவர். இவர் கோவை சூலூர்  விமானப்படை தளத்தில் எண். 45-ஸ்குவாட்ரன் (பிளையிங் டாகர்ஸ்) பிரிவைச் சேர்ந்தவர். மேலும், அவர் ஏரோ இந்தியா மற்றும் பல ஏர் ஷோக்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். இவரது மனைவியும் தற்போது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. நமன்ஷ் சியாலின் தந்தை ஜெகநாத் சியால், இராணுவ மருத்துவப் பிரிவில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் கல்வித்துறையில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

துபாயில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல், துபாயிலிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை மாவட்ட கலெக்டரும், போலீசார் மற்றும் விமானப் படையின் உயர்ந்த அதிகாரிகளும் திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டு முதல்வர் மு.. ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதி மரியாதை நிகழ்ச்சியில் மனைவி மற்றும் மகளுடன் அவரது குடும்பத்தினர், இராணுவப் பணியாளர்கள் கலந்துகொண்டு அவரது மீதான மரியாதையைச் செலுத்தினர். மிகவும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், இந்திய விமானப் படையின் வரலாற்றில் என்றும் ஒளிரும் முகமாகத் திகழ்வார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தற்போது பள்ளி மாணவர்களே கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையாகி  உள்ளனர். போதைப்பொருள்கள் தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். போதைப்பொருள்கள் வைத்திருப்போருக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதைப் பயன்படுத்துவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கும் வகையில் புதிய சட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். கல்லூரிகளில் சாதி அடிப்படையில் சங்கங்கள் அமைப்பதையும், சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.”

திரு. வைகோ (.தி.மு.. தலைவர்)

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 90,000- கடந்துள்ளது. வழக்குகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன். உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க முயற்சிப்பேன். இது தொடர்பாக அறிக்கை கேட்பேன்மத்தியஸ்தத்திற்கு முன்னுரிமை, தீர்வு காண்பதில் இது எளிமையான வழி. பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். முடிவெடுக்க முடியாத சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் அரசமைப்பு அமர்வுகளை அமைப்பேன். நீதித்துறை செயல்பாட்டில் நமக்கு எந்தளவிற்குச் செயற்கை நுண்ணறிவு அவசியம் என்பதற்கான எல்லைகளைப் பார்க்கவேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஒரு முழுமையான மற்றும் விரிவான பார்வையுடன் வழக்குரைஞர்களுடன் கலந்து பேசுவோம்.”                 

உயர்திரு. சூர்யகாந்த், (புதிய தலைமை நீதிபதி)

எஸ்..ஆர். என்பது மறைமுகமாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சி. பா... உள்நோக்கத்துடன்தான் எஸ்..ஆரைக் கையாள்கிறது. பா... அரசு அரசியல்  கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனங்களைச் செய்துகொண்டே எதிர்க்கட்சிகள் இதை நடைமுறைப்படுத்திதான் ஆகவேண்டும் என்கிற நெருக்கடியைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். ‘முதலில் நீ இந்தியக் குடிமகனாக உறுதி செய்; பிறகு நீ வாக்காளரா என்று நாங்கள் உறுதி செய்கிறோம்என்பதுதான் எஸ்..ஆர். நடவடிக்கை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்தது. எனவே, மறைமுகமாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தேசியக் குடிமக்கள் பெயரேட்டை உருவாக்கவே எஸ்..ஆர். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தில்லுமுல்லுகளைத் தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்து காண்பிக்கிறது. தேர்தல் ஆணையமும், பா...வும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளன.”

திரு. தொல். திருமாவளவன், (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)

news
இந்திய செய்திகள்
வாக்கைத் திருடிய SIR

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (..ஆர்) நடவடிக்கைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராட காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது

திரு. இராகுல் காந்தி (எதிர்க்கட்சித் தலைவர்)

பீகார் தேர்தல் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இது குறித்து எதிரும் புதிருமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மிகக் குறுகிய காலமே இருப்பதால் இது நடைமுறை சாத்தியம் இல்லை எனத் தெரிந்தும் உள்நோக்கத்துடன் இதனை மேற்கொண்டு வருகின்றனர். பா... எதிர்ப்பு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் வகையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.”

தொல். திருமாவளவன் (பாராளுமன்ற உறுப்பினர்)

பீகார் சட்டமன்றத் தேர்தல் எனக்கு எந்த வியப்பையும் தரவில்லை. தமிழ்நாட்டில் எஸ்..ஆர். விவகாரங்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தில் முறையிட்டதோடு, தி.மு.. கூட்டணியினர் இன்றைக்கு வீடு வீடாகச் சென்று மக்களின் வாக்குரிமையையும் உறுதிப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முதல்வரே நேரடியாக இவற்றைக் கண்காணித்தும் வருகிறார். இப்படியான கண்காணிப்பை பீகாரில்இந்தியாகூட்டணி மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.”               

ஆளூர் ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர்)

வருகிற 2026-இல் முறையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடி வாக்குரிமையைப் பாதுகாக்க தி.மு.. நடவடிக்கை எடுக்கும்.”

என்.ஆர். இளங்கோ (பாராளுமன்ற உறுப்பினர்)

 

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாகை மாவட்டத்தைச் சார்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் அண்மையில் சிறைப்பிடித்துள்ளனர். இதேபோல, மற்றொரு சம்பவத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், அவர்களது நாட்டுப் படகும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவச் சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கைது நடவடிக்கையின் போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதுடன், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வும் பாதுகாப்பற்ற நிலையும் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கைவசம் உள்ளன. எனவே, இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளவேண்டும்.”

உயர்திரு. மு.. ஸ்டாலின், முதலமைச்சர், தமிழ்நாடு

இந்திய மரபில் திருமணம் என்பது நீண்ட காலம் நீடிக்கும் புனித உறவாகும். திருமணத்தின் புனிதம் ஒருதலைப்பட்சமான அடக்குமுறை அல்லது அமைதியான துன்பத்தைத் தாங்கிக்கொள்வதில் இல்லை. திருமண உறவின் உண்மையான அர்த்தம் பரஸ்பரம் மரியாதை, நட்பு, கருணையில்தான் உள்ளது. பெண் குடும்ப மரியாதையையும், திருமண புனிதத்தையும் காக்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அவமதிப்பு, இழிவு, புறக்கணிப்பைத் தாங்குகின்றனர். சகிப்புத்தன்மை தங்களது கடமை என்ற எண்ணத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நடக்கும் துன்புறுத்தல்களை அமைதியாகச் சகித்துக்கொண்ட இந்தியப் பெண்கள் பலர் உள்ளனர். திருமணம் என்பது ஆண்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது என்ற தவறான நம்பிக்கையை விட்டு அகலவேண்டும். தனது மனைவியின் நலன், பாதுகாப்பு, தேவைகள், மரியாதை ஆகியவை திருமண உறவின் முக்கியப் பொறுப்புகள் என்பதைக் கணவர் உணர வேண்டியது அவசியம். திருமண உறவு என்ற பெயரில் அவமரியாதையை நியாயப்படுத்த முடியாது. குடும்பம் என்ற பெயரில் கணவர் தனது மனைவியைத் தனிமைப்படுத்தி, உணவையும் உடனிருப்பையும் மரியாதையையும் பறித்துவிட்டதால் அது துன்புறுத்துதல் என்ற வரம்பையும் தாண்டிவிடுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி

பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களைப் பெற்று உரிய மீதித் தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணியின்போது நடத்துநர்களுக்கு  வழங்கப்படும் முன்பணத்தைப் பயணிகளிடம் பயணச்சீட்டு வழங்கும்போது முறையாகப் பயன்படுத்தவேண்டும். பயணிகளிடம் சில்லறை தொடர்பான விவாதங்களைத் தவிர்த்து, கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும். இது தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”

மாநகரப் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

மலிவான இணையக் கட்டணங்களால் ஏழைகளும் சமூக ஊடகங்களை அணுக முடிவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், தொலைத்தொடர்பு துறையில் ஒரேயொரு நிறுவனத்தின் ஏகபோகத்தை அனுமதிப்பது குறித்துப் பதில்கூற மறுக்கிறார். ரீல்ஸ், இன்ஸ்டாகிராமுக்கு மக்கள் அடிமையாக வேண்டும் என்பதே அவரது விருப்பம். அப்படி அடிமையாகிவிட்டால், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியிருக்காது. மகாராஷ்டிரம், ஹரியானாவைப் போல பீகாரிலும் வாக்குகளைத் திருட பா... முயற்சிக்கிறது. வாக்குத் திருட்டு என்பது அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும்.”

திரு. இராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

வெனிசுலாவின் சோசலிச சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் மச்சாடோ, தனியார்மயப்படுத்தப்பட்ட சந்தை, வெளிநாட்டு முதலீடுகள், அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் நல்லுறவு ஆகியவற்றை ஆதரிக்கிறார். ஆயுதப் போராட்டங்கள் இல்லாமல், அச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உலகெங்கிலும் இருக்கிற மக்களுக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரமாக நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மச்சாடோவைப் பார்க்கலாம். சர்வாதிகாரத்தை அசைத்துப் பார்க்கும் ஜனநாயகத்தின் புன்னகையாகவே மச்சாடோவின் கரங்களில் தவிழ்கிறது இந்த நோபல் பரிசு.”

முனைவர் திரு. வைகைச்செல்வன், மேனாள் அமைச்சர்

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது. ஆனால் இப்பொழுது, மனிதநேயம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (..) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால், அது இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப்பெரிய சவாலாக அமையும்.”

திரு. எஸ்.எஸ். ஜவஹர், ..எஸ். அதிகாரி (ஓய்வு)

news
இந்திய செய்திகள்
மும்பை உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய துணை ஆயர்

இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கத் தூதரான பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி அவர்களின் செயலாளராகப் பணியாற்றி வரும் அருள்தந்தை ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்களை மும்பை உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக திருத்தந்தை நியமித்துள்ளார்.

20-09-1961 அன்று பிறந்த அருள்தந்தை பெர்னாண்டஸ், 31-03-1990 அன்று மும்பை உயர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தாதர் இரட்சணிய அன்னை மற்றும் மாதுங்கா டான்போஸ்கோ பள்ளிகளில் கல்வி கற்ற இவர், 2000-ஆம் ஆண்டில் உரோமையில் அறநெறி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். மும்பை உயர் மறைமாவட்டக் குருக்கள் அவையின் செயலாளராகவும், புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இந்திய ஆயர் பேரவையின் இறையியல் பணிக் குழுவின் நிர்வாகச் செயலாளர், F.I.A.M.C. உயிரி மருத்துவ நெறிமுறைகள் மையத்தின் இயக்குநர் பொறுப்புகளிலும் இருந்தார். இந்தியக் கத்தோலிக்கச் செவிலியர் குழுவின் தேசிய ஆலோசகராகவும், CBCI-இன் நீதி, சமாதானம், மேம்பாட்டு அலுவலகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.