news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தென்மேற்கு பருவமழை தொடங்கவிருக்கும் இச்சூழலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டி..பி. உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தருணத்தில் உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் யூரியா, டி..பி. போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாள்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிறைவு செய்திட 3.83 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 இலட்சம் மெட்ரிக் டன் டி..பி. மற்றும் 0.83 இலட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்குவதை ஒன்றிய அரசு உறுதி செய்யவேண்டும்.”

மாண்புமிகு. . ஜோசப் விஜய், முதல்வர், தமிழ்நாடு அரசு

இந்தியாவின் பொருளாதார அமைப்பை அம்பானி, அதானி மற்றும் அமெரிக்காவிடம் மோடி ஒப்படைத்துவிட்டார். இப்போது ஒரு பொருளாதாரப் புயல் வரவிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்திய அரசாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசமைப்பை அழித்துவிட்டார்கள். வரும் காலங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றன. முன்னெப்போதும் இல்லாத கடுமையான பணவீக்கம் நாட்டில் ஏற்படப்போகிறது. அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும். நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நின்றுபோகும்.” 

திருமிகு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

சமூக, பொருளாதார, தனிநபர் காரணங்களுக்காகப் பள்ளிக்கு வராவிட்டால் உடனே அந்த மாணவரின் வீட்டிற்கே சென்று பள்ளிக்கு வரவைக்க முயற்சி மேற்கொள்வோம். மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடரும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது. ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு நல்ல வழி பிறக்கும். பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்களில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் விதமாகக் கல்விப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.”

திருமிகு. ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நிகழாண்டும்நீட்’ வினாத்தாள் முறைகேடுகள் வெளிவந்து தேர்வு இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவேநீட்தேர்வு இருக்கிறது. ‘நீட்தேர்வில் மோசடி இல்லை; ‘நீட்தேர்வே ஒரு மோசடிதான். மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும்நீட்தேர்வு முறை ஒழிக்கப்படவேண்டும்.”

திருமிகு. மு.. ஸ்டாலின், தி.மு.. தலைவர்

தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோலைக் குறைவாகப் பயன்படுத்துங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோவைப் பயன்படுத்துங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இவை வெறும் போதனைகள் அல்ல; ஒன்றிய அரசின் தோல்விக்கான சான்றுகள்.” –

திருமிகு. இராகுல்காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வளரும் நாடுகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும். உலகம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு நிலைநாட்டப்படவேண்டும். உலகளாவிய சட்டவிதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படவேண்டும். பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்கவேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி, செங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். போர் காரணமாகப் பல்வேறு நாடுகளில் எரிபொருள், உணவு தானியங்கள், உரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடுகளின் நிதிச்சுமை அதிகரித்திருக்கிறது. சுகாதாரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குபிரிக்ஸ்கூட்டமைப்பு உதவவேண்டும்.”

திருமிகு. ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
தொகுப்பு: ஸ்ரீநிதி

அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றி இளையோருக்கு ஆழமாகக் கற்பிக்கப்படவில்லை. அவரைச் சாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அவர் முழு தேசத்திற்கும் சொந்தமானவர். அவரைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடத்தில், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் ஆற்றிய பங்கு, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசமைப்புத் தொலைநோக்குப் பார்வைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் சனநாயக தேசத்தைக் கட்டமைப்பதிலும் அவர் ஆற்றிய பங்கு, பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக சிந்தனை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய கல்விசார் சாதனைகள் ஆகிய தலைப்புகளில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும். இந்தப் பாடத்திட்டத்தை 2027-2028 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும்.”

நீதிபதி. எல். விக்டோரியா கௌரி, உயர் நீதிமன்றம்

“2014-ஆம் ஆண்டு முதல் உலகப் பத்திரிகை சுதந்திரப் பட்டியலில் இந்தியா பின்தங்கி வருகிறது. பா... ஆட்சியில் இந்தியா 157-வது இடத்திற்குச் சென்றுவிட்டது. சுதந்திரமான பத்திரிகையாளர்கள் என்பது அரசு சொல்வதை அப்படியே கேட்பதோ அல்லது அரசின் தோல்விகளை மூடி மறைப்பதோ கிடையாது. அரசு அதிகாரிகளைக் கேள்வி கேட்பதும், அரசின் அதிகாரங்களை ஆய்வு செய்வதும், தோல்விக்கு அரசு அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்வதுமே பத்திரிகை சுதந்திரமாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும், மக்களுக்கும் இடையேயான சனநாயகத்தை ஊடகம் காக்கவேண்டும். பொதுமக்களின் நலனைச் செய்தியாளர்கள் காக்கவேண்டும். செய்தியாளர்களைச் சட்டரீதியில் மௌனமாக்கும் வேலைகளைச் சங்க் பரிவார் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. அவதூறு சட்டங்கள், தேசப் பாதுகாப்புச் சட்டப்பிரிவுகள் உள்ளிட்டவை நீதிக்கான கருவியாக மட்டும் பயன்படுத்தப்படாமல், மிரட்டுவதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.”

திருமிகு. மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சித் தலைவர்

.. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான சவால் உருவாகியுள்ளது. ஆதலால் .. தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றப்படுவதையும், ..யிடம் வேலைவாய்ப்புகளை இழக்காததையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளும், பிற சேவைத் துறைகளிலும் ..யைப் பயன்படுத்தும் வகையில் நாம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.”

திருமிகு. அனந்த நாகேஸ்வரன், தலைமைப் பொருளாதார ஆலோசகர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வளர்ந்த நாடுகளில் பெண்களுக்குச் சமவாய்ப்பு, மதிப்பு, தலைமைப் பதவிகளை மறுக்க முடியாது. ஏனெனில், பெண்களுக்குச் சமவாய்ப்புகளும் தலைமைப் பதவிகளும் கிடைத்தால்தான் நாட்டில் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். பெண்களின் பங்களிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் உத்வேகமாக இருக்கும்.”

உயர்திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவர்

ஒரு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க விரும்பினால், அது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை.”  

உச்ச நீதிமன்றம்

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் உள்ளன. அவற்றில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிமன்றக் கட்டடக் கட்டமைப்பு அவசியம். இதில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.50 கோடி. சமுதாயம் சரியாக இருக்கவேண்டுமானால் குற்றவியல் வழக்குகள் குறையவேண்டும். விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் உள்ளன. தேங்கிக்கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும்.”

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

டெல்லியில் பா... ஆட்சிக்கு வந்தபிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். மத்தியில் இருக்கும் பா... அரசு, மாநில அரசுகளை ஒடுக்குவதற்கும், எல்லா இடங்களிலும் சனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கும் முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நிற்கும் ஒருசில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஸ்டாலின், ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) என்பது சனநாயகத்தின்மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். அது இப்போது தோற்கடிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மத்தியில் உள்ள மோடி அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. மோடி அரசின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.”

திருமிகு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மேனாள் முதல்வர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்

நம்முடையஇந்தியாகூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்குச் சென்று இந்த மசோதாவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இதனால் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடித்துத் தந்த அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது. இந்த அரசியல் சாசனத் திருத்தம் மட்டும் நிறைவேறி இருந்தால், மேலும் மேலும் அரசியல் சாசனங்களைத் திருத்தியிருப்பார்கள். சிறுபான்மை உரிமைகளைப் பறித்திருப்பார்கள். இசுலாமியர்கள் வக்ஃபு சட்டத்தைச் சட்டமாக்கி இருப்பார்கள். எஃப்.சி.ஆர்.. திட்டத்தைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியிருப்பார்கள். பேச்சுரிமையைக் குறைத்திருப்பார்கள், எழுத்துரிமையைக் குறைத்திருப்பார்கள், அரசியல் சாசனத்தைத் திருத்தாமல் இதையெல்லாம் செய்ய முடியாது. இந்த அரசியல் சாசனத் திருத்தத்தை அனுமதித்திருந்தால், அடுத்தடுத்து அரசியல் சாசனங்கள் திருத்தப்படும். அதைத் தடுத்தது நாடாளுமன்ற உறுப்பினர்கள். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள்.”

திருமிகு. .சிதம்பரம், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாட்டில் பல இடங்களில் மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மத அடிப்படையில் பிரித்து, சமூகத்தைச் சிதைக்கும் முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை. இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் இந்துகள், முசுலிம்கள், கிறித்தவர்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினைகளை நிர்மூலமாக்கி உள்ளனர். நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். வெறுப்பு அரசியலை எப்படிக் கையாளப் போகிறோம்? என்ன வீச்சில் விரட்டி அடிக்கப் போகின்றோம்? என்பதே! மதம் என்னும் கோடாரி கொண்டு மனித இதயங்களைப் பிளக்கும் சக்திகளை முழு மூச்சில் முழுவதும் விரட்டி அடிக்கவேண் டும்.”

திருமிகு. நா. மணி பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் - வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்யவேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் - இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும். அத்தகையதொரு நிலையென்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாகவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டிற்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் உங்களை அழைக்கிறேன்.”

மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

நாளை நமக்கு எதிராக நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாகவும், எழுச்சி குரலாகவும் இருக்கவேண்டும். 33 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை நாங்கள் என்றோ சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் எனும்போது ஒரு திராவிட கட்சி அல்ல, அத்தனை கட்சிகளும் சொல்லிக் கொண்டு இருக்கும் செய்தியை இன்றுதான் புதிய கண்டுபிடிப்பு போல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் (மத்திய அரசு) இப்போது சொல்லும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது தூண்டில் முள்ளின் நுனியில் வைத்திருக்கும் சின்ன மீன். அதைக் கவ்வமாட்டோம். விவாதிப்போம்.”

திருமிகு. கமல்ஹாசன், தலைவர் மக்கள்நீதி மய்யம்

மக்களவையில் மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கைக் கணக்கில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தொடர மத்திய அரசு முனைப்புடன் இருப்பது, தொகுதி மறுவரையறை மசோதா 2026-இன் வரைவு அறிக்கையைப் பார்க்கும் போது தெரிகிறது. இத்தகைய நடவடிக்கை மிகுந்த அநீதியானது. ஏனெனில், 1976-ஆம் ஆண்டின் தேசிய மக்கள்தொகைக் கொள்கையை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்திய கேரளா உள்ளிட்ட மாநிலங்களை இது தண்டிப்பதாக அமையும். மறுபுறம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பின்தங்கிய மாநிலங்கள், தங்கள் மெத்தனமான செயல்பாட்டிற்காக (கூடுதல் தொகுதிகள் மூலம்) வெகுமதி பெறுவது போல இது அமையும். கூட்டாட்சி தத்துவம் நமது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு. மக்களாட்சியில், பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை நோக்கம் வெறும் மக்கள்தொகை எண்ணிக்கையாக மட்டும் இருக்கமுடியாது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் உணர்வுகளையும் குறிப்பாக, மாநிலங்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அணுகுமுறையைக் கையாள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடனான அணுகுமுறை என்பது மிகவும் அவசியமானது. அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட உள்ள ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சியானது, நமது அரசமைப்பு உருவாக்கத்தின் அடிப்படையாக இருந்தஒருமித்த கருத்துஎன்னும் உணர்வைச் சந்தேகத்திற்கு இடமின்றி சிதைத்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா இது?” 

மாண்புமிகு. பினராயி விஜயன், கேரள முதல்வர்