news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மனிதச் சமூகத்திற்குப் பணியாற்றுவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குப் புதுமை வழிகாட்ட அனுமதிக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தின் மதிப்பு என்பது, மனிதர்களின் வாழ்க்கையை அது மாற்றுவதிலும், சமூகத்திற்கு அது ஆற்றும் பங்களிப்பிலும் அடங்கியுள்ளது. பல்கலைக்கழகங்கள் வெறுமனே வகுப்பறைகள் அல்ல; அவை மேன்மை, புதுமை படைத்தல், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மையங்கள் ஆகும். தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் மொழி சார்ந்த வேற்றுமையை செழுமைப்படுத்துவது ஒரு தேசியப் பொறுப்பாகும்!”

மேமிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர்

வரும் அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், கிராம சபையை மிகவும் பயனுள்ள மற்றும் வலுவான மக்களாட்சி அமைப்பாக மாற்றவேண்டும். அதன்படி, ஊராட்சிப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தைக் கணிசமாக உயர்த்தவேண்டும். கிராமங்களில் மதுக்கடைகள் அமைப்பது தொடர்பான முடிவுகளில் உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கிராம சபையின் கூட்டங்களில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்களின் பங்கேற்பை நேரலை செய்யவேண்டும். கிராம சபைத் தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கிராம சபை என்பது மக்கள் கேள்விகள் கேட்கவும் விவாதிக்கவும் உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொறுப்பேற்கச் செய்யக்கூடிய தளமாகவும் உயர்த்தவேண்டும்.”

திரு. கமலஹாசன், தலைவர், மக்கள் நீதி மையம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் மாற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுவெளிகளில் தமிழில் பெயர்ப் பலகை இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தி எதிர்ப்பு, மொழிப்போர் ஆகிய போராட்டங்களில் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் இயக்கங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்ட இந்தக் கோரிக்கையை இன்று உயர்நீதிமன்றமே காலக்கெடு விதித்து நிறைவேற்ற உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.”

திரு. சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், ‘நாம் தமிழர் கட்சி

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள ஒன்றிய பா... அரசு முயற்சித்து வருகிறது. இது தென் மாநிலங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாடாளுமன்றத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தோற்கடிக்கப்படும்.”

திருமிகு. . சிதம்பரம், மேனாள் மத்திய நிதி அமைச்சர்

தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலைப் பா... திருடிவிட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கானோர் பெயர்களைச் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.”

திருமிகு. செல்வி. மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மேனாள் முதல்வர்

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் அந்த மாநில அமைச்சர்கள் நான்கு முறை டெல்லி சென்று மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வாய்மூடி மௌனியாக உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் மற்ற கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, தனது அமைச்சர்களை அழைத்துக் கொண்டு பிரதமரையும், நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். காவிரி மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அமைதி தமிழ்நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டால் மட்டும் போதாது; அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும்.”

திருமிகு. அன்புமணி இராமதாஸ், பா... தலைவர்

மணல், தாதுப் பொருள்கள் சட்ட விரோதமாக, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குப் பல மடங்கு அதிகமாக எடுத்தது தொடர்பாக ஒன்றிய அமலாக்கத்துறை கணிசமான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சமர்ப்பித்த அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது. மதுரை உயர் நீதிமன்றம் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சி.பி.. விசாரணைக்கு உத்தரவிட்டது; பல இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒரு மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.”

திருமிகு. ஆர். நடராஜ், மேனாள் காவல்துறை தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுவில் ஒரு வழக்கின் விவரங்களை மட்டுமே நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அந்த மனுவைத் தாக்கல் செய்த நபர் ஏற்கெனவே எதை இழந்தார்? அல்லது நீதிமன்றங்களிடம் எதை எதிர்பார்த்து வந்துள்ளார்? என்பதை அந்த மனுவால் கூற முடியாது. ஆகவே, நீதிமன்றங்களில் மனுவைத் தாக்கல் செய்பவரை வெறும் மனுதாரராகப் பார்க்காமல், மனிதராகப் பார்க்கவேண்டும். வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும்போது கனிவாக நடந்துகொள்வது அவசியம்.  நீதியை மதித்து நிலைநாட்டி நீதிமன்றத்தின் முன்னிற்கும் நபர் எவ்வளவு எளியவராக, எவ்வளவு துயரமான நிலையில் இருந்தாலும் அவரின் பிரச்சினை மீது கவனம் செலுத்தி அவரின் குரலைக் கேட்பது நீதிபதியின் கடமை.”

மேமிகு. சஞ்சய் கரோல், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை அரசு முறையான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அடிப்படைக் கட்டமைப்புகள் எப்படி இருக்கின்றன? போதிய வகுப்பறைகள் உள்ளனவா? கழிப்பறை வசதிகள் நிலை என்ன? ஆசிரியர்கள் பற்றாக்குறையா? ஆசிரியர்களின் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? இவை உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாய பொறுப்பு.”

மேமிகு. இராமகிருஷ்ணன், தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு

கேரளம் - தமிழ்நாடு இடையேயான வனப்பகுதிகளில் இரவு நேரப் போக்குவரத்திற்கு முழுமையான தடை விதிப்பதற்குப் பதிலாக, வனவிலங்குகளின் நடமாட்டத்தை கருத்தில் கொண்டு, அறிவியல் அடிப்படையிலான குறிப்பிட்ட நேரங்களில் கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தை அனுமதிக்கவேண்டும். கேரள கடற்கரைக்கு அப்பால் கடலில் மணல் அகழ்வுக்கான கனிமவளப் பகுதிகளை ஏலம் விடுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வாதாரம் குறித்த முழுமையான அறிவியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

போதைப்பொருள் கடத்தல், மாநிலங்களுக்கு இடையேயான குற்றக்குழுக்கள், சட்ட விரோதக் குடியேற்றம், இணையவழி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையே நிகழ் உளவு தகவல் பரிமாற்றம், கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த ரோந்துப் பணிகளை அதிகரிக்கவேண்டும். எல்லைப் பிரச்சினைகள் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு மாநில அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்.”

மேமிகு. வி.டி. சதீசன், கேரள முதல்வர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய உதவித்தொகை வழங்கப்படாதது, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது .வெ.. அரசு. தி.மு.. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக இதையும் திட்டமிட்டு மறைமுகமாகச் செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா?? உடனடியாக நிலுவையில் உள்ள உதவித் தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியைத் தடையின்றித் தொடரச் செய்யவேண்டும்.”

திருமிகு. கனிமொழி, எம்.பி., தி.மு.. துணை பொதுச்செயலர்

.வெ.. அரசு 100 நாள்களைக் கடந்துள்ளது, மாற்றம்... மாற்றம் என்றார்கள். ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. கடந்த நான்கு நாள்களில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் மற்றும் கலாச்சாரச் சீரழிவே காரணம். இளைஞர்கள் ஓட்டுபோட்டு இந்த ஆட்சியைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், இன்றைக்கு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்.”

திருமிகு. பிரேமலதா, தே.மு.தி.. பொதுச்செயலாளர்

கல்லூரி மாணவர்கள் வகுப்பு முடிந்து மாலையில் தினமும் ஒரு மணி நேரம் படிக்கலாம். பத்திரிகைகளைப் படித்துப் படித்துதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது. படிக்கும்போதுதான் அதன் சுவையும் பெருமையும் நமக்குத் தெரியும். மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொதுப் புத்தகங்களையும் படிக்கவேண்டும். புத்தக வாசிப்பு மிகவும் முக்கியம். ஆழ்ந்த வாசிப்புதான் மனிதனை மனிதனாக்கும். வாசிப்பினால் நல்ல பண்புகள் வளரும். வாசிப்பு கூர்ந்துநோக்கும் ஆற்றலையும், விசாலமான பார்வையையும் தரும். ஆழ்ந்த வாசிப்புடன் மனத்தில் பதிந்த கருத்துகள் மீது ஆய்வு நடத்தவேண்டும். அப்போது, வாசிப்பு ஆரோக்கியமான மனநிலையைத் தரும். மாணவர்கள் வரலாற்றுத் தலைவர்கள், தமிழ்நாட்டு வரலாறு, பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நதிநீர் பிரச்சினை என அனைத்து விசயங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். வாசிப்பு என்பது ஆன்மாவுக்கு முக்கியம். வாசிப்பு துணிச்சலைக் கொடுக்கும்; அது நம்மை ஒருமுகப்படுத்தும்.”

திருமிகு. கே.எஸ். இராதாகிருஷ்ணன், அரசியலாளர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாட்டின் கல்வி முறையை மறுகட்டமைப்பு செய்வதற்கான மிகப்பெரிய நடவடிக்கையாக தர்மேந்திர பிரதான் இராஜிநாமா அமைந்துள்ளது. இதைச் சாத்தியமாக்கிய மாணவர்களுக்குப் பாராட்டுகள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது போலிசார் வன்முறைத் தாக்குதலை நடத்தியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கவேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழையர் என மத்திய அரசால் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படும் மற்ற பிரிவினரும் தங்களின் கண்ணியத்திற்காக இதுபோல உறுதியுடன் போராடவேண்டும். இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.”

திருமிகு. இராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்

மாணவி அனிதாவில் தொடங்கியநீட்எதிர்ப்பு இப்போது நாடு முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ்நாடுநீட்தேர்வைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. தி.மு.. ஆட்சியில் சட்டப்பேரவையில்நீட்விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் ஒன்றிய அரசிடம் அனுப்பப்பட்ட நிலையில், அது இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளும் தொடர்கின்றன. அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிராக வன்முறை அல்லது அச்சுறுத்தல் நடக்கக்கூடாது. நீட் விவகாரத்தில் மாநில அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.”

திருமிகு. கனிமொழி, தி.மு.. துணைப் பொதுச்செயலர்

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை, பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல்நலன், மனநலன் சார்ந்து பார்க்கும்போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்குக் குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்கவேண்டும். கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. எனவே, உடல்நலன், மனநலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உடனே கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும்.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்ற திருத்தத் தீர்மானம் போதுமான விவாதத்திற்கு வாய்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. காவிரி நதிநீர் உரிமை தொடர்பாகக் கருத்தொற்றுமை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜோசப் விஜய், உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.”

திருமிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம், அதிகப்படியான வெள்ள நீரைக் கொண்டுள்ள மாநிலங்களிலிருந்து பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், மேற்கு மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகள் இல்லாமல் போகும். தீபகற்ப மாநிலங்களில் வறட்சியும் பஞ்சமும் மறையும். வெள்ளம், வறட்சி இவற்றிற்கான பல்லாயிரம் கோடி செலவீனங்களும் நட்டமும் தவிர்க்கப்படும். சுமார் இரண்டரை கோடி ஹெக்டேர் நிலங்கள் கூடுதலாகப் பாசன வசதி பெறும்.”

உயர்மிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர்

தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம். தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம். அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்யவேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டு வருகிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை. ‘இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம்.”

திருமிகு. மு.. ஸ்டாலின், தி.மு.. தலைவர்

பசுமையான எதிர்காலத்தை உருவாக்க, நாடு முழுவதும் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டும். ஒவ்வொரு குடும்பமும் பிறந்தநாள், திருமண நாள் விழா, குழந்தை பிறப்பு, மறைந்த பெற்றோரின் நினைவு நாள் உள்ளிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வுகளை ஒரு மரம் நடுவதன் மூலம் கொண்டாடவேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வும், ‘மரத் திருவிழாஆக மாறவேண்டும். ஆண்டிற்குக் குறைந்தது ஒரு மரமாவது நடுவதுடன், குறைந்தது ஐந்து பேரை இந்த மரம் இயக்கத்தில் இணைக்க ஊக்குவிக்கவேண்டும்.”

திருமிகு. சிவராஜ்சிங் சௌஹான், மத்திய வேளாண்மை அமைச்சர்