news
உலக செய்திகள்
“போர்க்காற்று, நம்பிக்கையை அணைத்துவிடக்கூடாது”- திருத்தந்தை லியோ

உலகில் வீசும் போர்க்காற்று அமைதிக்கான நம்பிக்கையை அணைத்துவிடக்கூடாது. நாடுகள் மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பவேண்டும்என்று திருத்தந்தை லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைனில் நிலவி வரும் தீவிரப் போர்ச்சூழல் குறித்துத் தனது கவலையைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, “போர் வன்முறையையும் மரணத்தையும் விதைத்து, அப்பாவி மக்களைப் பாதிக்கிறது. இந்தச் சூழலிலும் நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நாடுகள் தங்களுக்குள் இருக்கும் மோதல்களைப் பேச்சுவார்த்தை மற்றும் நிர்வாக வழிகள் மூலமே தீர்க்க வேண்டும்; அதுவே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்என்றார். ‘கடல் ஞாயிறுதினத்தை முன்னிட்டு இராணுவப் பதற்றங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாலுமிகள், மீனவர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுக்குத் தனது ஆதரவையும் செபங்களையும் தெரிவித்தார். நிறைவாக, போலந்து நாட்டின் ஜாஸ்னா கோரா அன்னை மரியா திருத்தலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான இறைமக்களுக்குத் தனது ஆசிரையும் வாழ்த்துகளையும் திருத்தந்தை வழங்கினார்.

news
உலக செய்திகள்
திருத்தந்தை லியோவுக்கு ‘லிபர்ட்டி மெடல்’ விருது!

உலகளவில் மதச் சுதந்திரம், மனச்சாட்சி மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்திய பங்களிப்பிற்காக, அமெரிக்காவின் தேசிய அரசமைப்பு மையம் வழங்கும் 38-வது மதிப்புமிக்கலிபர்ட்டி மெடல் (Liberty Medal) விருது திருத்தந்தை லியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உருவானதன் 250-வது ஆண்டு விழாவின் முன்னிரவில், உரோம் நகரிலிருந்து பிலடெல்பியாவில் கூடியிருந்தவர்களிடம் திருத்தந்தை காணொளி வாயிலாக உரையாற்றினார்.

அமெரிக்காவில் பிறந்த முதல் திருத்தந்தையான 14-ஆம் லியோ, நாட்டின் சுதந்திர முழக்கத்தின் உன்னத விழுமியங்களான சமத்துவம் மற்றும் மனித மாண்பை நினைவுகூர்ந்தார். “ஒரு நாட்டின் தார்மீக மேன்மை என்பது, கரு உருவானது முதல் இயற்கை மரணம் வரை, விளிம்புநிலை மக்கள் உள்பட அனைத்து மனித உயிர்களையும் பாதுகாக்கும் சட்டங்களில்தான் அடங்கியுள்ளது. உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டால், எவராலும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதுஎன்று அவர் வலியுறுத்தினார். அமெரிக்க அரசமைப்பின் முதல் திருத்தம் வழங்கும் மதச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பன்முகத்தன்மை கொண்ட அமெரிக்கா, என்றும் நீதியுடனும் அமைதியுடனும் திகழவேண்டும் என வாழ்த்தி, ‘காட் பிளஸ் அமெரிக்கா (God bless America) என்று தனது உரையை நிறைவு செய்தார்.

news
உலக செய்திகள்
காசா பேரழிவு; புனித பூமியைத் தனித்து விடாதீர்கள்!

ஜெருசலேமின் இலத்தீன் மறைமுதுவர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிட்சாபாலா, இத்தாலியின் புகழ்பெற்றலைம்ஸ்இதழின் அமைதிக்கான விருதைப் பெற்றுக்கொண்ட பின் காசாவின் கொடூரமான உண்மைகளை விவரித்தார். அண்மையில் காசாவிற்கு சென்ற கர்தினால், “காசா முற்றிலும் பேரழிவைச் சந்தித்துள்ளது; மக்கள் சாக்கடைகளுக்கும் கழிவுகளுக்கும் நடுவே கூடாரங்களில் வாழ்கின்றனர். ஊடகங்கள் காட்டாத ஆகப்பெரும் கொடூரம் அங்கு வீசும் துர்நாற்றமும், பசியால் குழந்தைகளைக் கடித்துக் குதறும் எலிகளின் தொல்லையும்தான்என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும், “போர் நிறுத்தத்திற்குப் பின்னும் நிலைமை சீரடையவில்லைஎனக் குறிப்பிட்ட அவர், பள்ளி மேசைகள், பேனாக்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் கூடஇராணுவப் பயன்பாட்டுப் பொருள்கள்எனக் கூறி இஸ்ரேலால் தடை செய்யப்படுவதாகச் சாடினார். மேற்குக்கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் இல்லை. இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைகள் அநாகரிகமாக அதிகரித்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 7 அன்று நடந்தேறிய தாக்குதல் யூதர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதால் தற்போதைய சூழல் சிக்கலாக இருக்கிறது. ஆனாலும், அமைதிக்கான உரையாடல்களும் பரஸ்பர புரிதலும் அவசியம். புனித பூமியைத் தனித்துவிடாமல், விளிம்புநிலை மக்களின் வாழ்வுரிமையைக் காக்க உலக நாடுகளும் ஊடகங்களும் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும்என்று கர்தினால் பிட்சாபாலா உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

news
உலக செய்திகள்
“அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கூட்டு நம்பிக்கையை வளர்க்கும்” - திருத்தந்தை லியோ

அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்திற்குத் திருத்தந்தை 14-ஆம் லியோ தனது மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புப் பாதையில் பயணிக்கவேண்டும். சுமார் நான்கு மாத காலப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளன. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் அணு ஆயுத மையங்களை இலக்கு வைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதுடன், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தையும் முடக்கியது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கில் பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவும். உக்ரைன் மீதான இரஷ்யாவின் தீவிரத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அப்பாவி மக்களின் மரணங்கள் குறித்து நான் மிகுந்த வேதனைப்படுகிறேன். போரினால் ஏற்பட்டுள்ள இந்த வன்முறைகளைத் துறந்து நீதியான மற்றும் நிலையான அமைதி ஏற்பட அனைவரும் செபிப்போம் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

news
உலக செய்திகள்
“மனித மாண்பைப் பாதுகாத்திடுங்கள்”- ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் திருத்தந்தை லியோ

ஸ்பெயின் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை லியோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். நாடாளுமன்றத்தில் திருத்தந்தை ஒருவர் உரையாற்றியது இதுவே முதல்முறையாகும். திருத்தந்தை தனது உரையில், “ஓர் உண்மையான சனநாயகச் சமூகம் என்பது சிந்தனை, மனச்சான்று மற்றும் மதச் சுதந்திரத்தை மதிக்கவேண்டும். மனித மாண்பு என்பது தற்காலிக அரசியல் பெரும்பான்மைகளுக்கு உட்பட்டது அல்லஎன்று அழுத்தமாகப் பதிவு செய்தார். மேலும், கருத்தரிப்பு முதல் இயற்கை மரணம் வரை அனைத்து மனித உயிர்களும்தூக்கி எறியும் கலாச்சாரத்திலிருந்துபாதுகாக்கப்படவேண்டும் என்றும், விளிம்புநிலை மக்களை அரவணைப்பதில்தான் ஒரு தேசத்தின் பெருமை அடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர்வோரின் துயரங்கள் குறித்துப் பேசிய அவர், எந்தவொரு நாடும் இந்தச் சவாலைத் தனித்து எதிர்கொள்ள முடியாது என்பதால், உலகளவில் ஒருங்கிணைந்த மனிதநேய நடவடிக்கை அவசியம் என்றார். தொடர்ந்து, குடும்பங்களின் சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், போர் என்பது மனிதகுலத்தின் கூட்டுத் தோல்வி என்பதையும் சுட்டிக்காட்டினார்.

news
உலக செய்திகள்
“ஒன்றிப்பின் சாட்சிகளாகத் திகழுங்கள்”- பார்சிலோனா பேராலயத்தில் திருத்தந்தை லியோ

ஸ்பெயின் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை லியோ, தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாகப் பார்சிலோனா நகரை வந்தடைந்தார். அங்குள்ள புகழ்பெற்றதிருச்சிலுவை மற்றும் புனித யுலாலியாபேராலயத்தில் நடைபெற்ற நண்பகல் வழிபாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். அங்குக் கூடியிருந்த ஆயர்கள், துறவியர் மற்றும் ஏராளமான இளைஞரிடையே உரையாற்றிய திருத்தந்தை திரு அவையைமணமகள்மற்றும்கிறிஸ்துவின் உடல்ஆகிய இரு திருவிவிலிய உருவகங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். மேலும், “திரு அவை என்பது இறைவனின் அன்பால் உருவானது. ஓர் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளைப் போல நாம் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருந்தாலும், தூய ஆவியானவரால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம். போர்களாலும் பிரிவினைகளாலும் சிதைந்து போயிருக்கும் இவ்வுலகிலும், தனி மனிதவாதம் பெருகிவரும் தற்காலச் சமூகத்திலும், கிறித்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைவு, வரவேற்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதியின் இறைவாக்கினர்களாகவும் சாட்சிகளாகவும் திகழவேண்டும். தியாகங்களைச் செய்வதன் வாயிலாக இந்த ஒன்றிப்பைக் கட்டியெழுப்பவேண்டும்என்று வேண்டுகோள் விடுத்தார்.