news
உலக செய்திகள்
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் 80,000 குழந்தைகளுக்குக் காலரா அச்சுறுத்தல்!

மழைக்காலத்தால் மோசமடைந்து வரும் தொடர்ச்சியான தொற்று நோய்கள் காரணமாக, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஏறத்தாழ 80,000 குழந்தைகள் காலரா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆயிரக்கணக்கான காலரா நோயாளிகளையும், நூற்றுக்கணக்கான இறப்புகளையும் காங்கோ சனநாயகக் குடியரசும் நைஜீரியாவும்  பதிவு செய்துள்ளன என்றும், அவை இப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நலவாழ்வுக்கான உதவிகளைத் தீவிரமாக வழங்கி வருகிறது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு காலரா மீட்பு முயற்சிகளை வலுப்படுத்த, 166 கோடி ரூபாய் அளவிற்கு அவசர நிதியைக் கோரியுள்ளது.

news
உலக செய்திகள்
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகள்!

காசாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 80 குழந்தைகள் இறந்துள்ளதாக யூனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 52 விழுக்காடாக இருந்த இந்த இறப்பு விகிதம் மூன்று மாதங்களுக்குள் 54 விழுக்காடாக அதிகரித்துள்ளது, 100-க்கும் மேற்பட்டோர் பசியால் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 3,20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் மிகக் கடுமையான துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 5,00,000-க்கும் மேற்பட்ட மக்கள்  வறுமையின் பிடியிலும், 39 விழுக்காட்டு மக்கள் முழு நாள்களும் உணவு இல்லாமல் தவிக்கின்றனர் என்றும் தனது பெரும் கவலையை .நா. அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

news
உலக செய்திகள்
காசா மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட அழைப்பு

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் தாக்குதல்களால் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 11,000 பேர் காணாமல் போய் உள்ள நிலையில், எண்ணற்ற குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனக் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஏழைகளின் பக்கம் நின்று,  பிறரன்பு மற்றும் நீதிக் காக உழைத்து வரும் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு, ஒழுக்க ரீதியுடன் கூடிய பன்னாட்டு தலைவர்களின் அவசர நடவடிக்கையைச் சார்ந்தே காசா மக்களின் வருங்காலம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

news
உலக செய்திகள்
இலங்கையில் குழந்தைகளின் நலன் காக்கும் தடைகள் அமல்

வறுமையில் வாடி வயிற்றுப் பசி போக்க குழந்தைகளும் பள்ளி செல்லாமல் பயணம் செய்பவர்களிடம் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் மற்றும் வீட்டு வேலைக்குச் செல்வதும் பெருகிவரும் இக்காலச் சூழலில் இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இவ்வேளைகளில் ஈடுபடுவதும் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

news
உலக செய்திகள்
தமஸ்கஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் மனிதக் குண்டு வெடிப்பு

ஜூன் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரியாவில் உள்ள தமஸ்கஸ் நகரிலுள்ள தூய எலியா கிரேக்க ஆலயத்தில் வழிபாட்டில் கலந்துகொண்ட ஒருவர், மனித வெடிகுண்டுகளால் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 52 பேர் காயமடைந்ததாகவும், இந்தப் பயங்கரவாத செயலைச் சிரியா நாட்டின்  இடைக்கால அதிகாரிகள் பொறுப்பேற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கிறித்தவச் சமூகங்கள் மற்றும் அனைத்து மதச் சமூகங்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் நடவடிக்கைகள் செலுத்தப்பட வேண்டும் என்றும் கிரேக்க வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

news
உலக செய்திகள்
மழைக்காடுகளைப் பாதுகாப்பதில் உலகை வலுப்படுத்துவோம்!

உலக மழைக்காடுகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில் இந்த ஆண்டு மழைக்காடுகளைப் பாதுகாப்பதில் உலகை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலகில் ஆக்ஸிஜன் 20 விழுக்காடும், மருந்துகள் 25 விழுக்காடும் காடுகளிலிருந்து பெறப்படும் நிலையில் காடுகள் எரிந்தும் அழிந்தும் கொண்டிருப்பது மனித வாழ்வாதாரத்திற்குக் கேள்விக்குறியாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.