காசாவில்
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 80 குழந்தைகள் இறந்துள்ளதாக யூனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 52 விழுக்காடாக இருந்த இந்த இறப்பு விகிதம் மூன்று மாதங்களுக்குள் 54 விழுக்காடாக அதிகரித்துள்ளது, 100-க்கும் மேற்பட்டோர் பசியால் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 3,20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் மிகக் கடுமையான துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 5,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் வறுமையின்
பிடியிலும், 39 விழுக்காட்டு மக்கள் முழு நாள்களும் உணவு இல்லாமல் தவிக்கின்றனர் என்றும் தனது பெரும் கவலையை ஐ.நா. அமைப்புகள்
வெளிப்படுத்தியுள்ளன.