news
சிறுகதை
எதிர்பாராத விபத்து! (காவல் அன்னை - தொடர் கதை 18)

சார், உங்களை அந்த அல்சர் பேஷண்ட் பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க சார்என்று கூறினாள் நர்ஸ்.

இந்தா வாரேன்  என்றபடி அந்தப் பேஷண்டிடம் போய் நின்றார் டாக்டர் சேவியர்.

என்னம்மா, என்ன பிரச்சினை?” என்றார் சேவியர்.

இந்த வயித்துவலி இன்னும் போகல சார். நானும் மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கிட்டேதான் இருக்கேன். இதுக்கு ஒரு வழிசெய்யுங்க. டாக்டர். உங்களுக்குக் கோடி புண்ணியம்என்றார் அந்தப் பேஷண்ட்.

அல்சரை நீங்க சாப்பாட்டிலே கண்ட்ரோலாய் இருந்துதான் சரிபண்ண முடியும்; உடனே போற நோயில்லை இதுஎன்றார் சேவியர்.

சொல்லுங்க  சார், எப்பவும் வாய்க்கு ருசியாச் சாப்பிட ஆசைப்பட்றாங்கஎன்றான் அருகில் நின்ற மகன்.

சாப்பிடலாம்; ஆனால், உறைப்பு இருக்கக்கூடாது. புளிப்பும் அதிகம் கூடாது. காபி, டீன்னு அடிக்கடி நீங்க குடிக்கக்கூடாதுஎன்றார் சேவியர்.

சார், இவங்க பத்து டீ குடிப்பாங்க சார். சொன்னாக்கா, உன் வேலையைப் பார்டாம்பாங்கஎன்றான் மகன்.

நீங்க இளநீர், மோர் சாப்பிடலாம். மணத்தக்காளி கீரை சாப்பிடலாம். மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இப்படித்தான் அல்சரைக் கண்ட்ரோல் பண்ணனும். வயிறு வெறுமனே இல்லாமல் ஏதாவது பிஸ்கட் சாப்பிட்டுக்கலாம்என்றார் டாக்டர்.

உங்க கிளினிக் வந்து பார்த்திட்டுத்தான் இங்கே வந்து சேர்ந்தோம் டாக்டர். வலி இன்னும் இருக்கே டாக்டர்என்றார் பேஷண்ட்.

ஒரு ட்ரிப் ஏத்தி, அதில் மருந்தும் போடுவோம், சரியாயிரும். சாப்பாட்டில் ரொம்ப ஜாக்கிரதையாய், நீங்க கண்ட்ரோலாய் இருந்துக்கணும். அப்பதான் இந்த வலி நிற்கும். மருந்து மாத்திரை அப்பப்ப சரி பண்ணும். நிரந்தரமாய் நோயைப் போக்காது. பார்த்துச் சாப்பிடுங்க. உங்க பையன் சொல்றதைக் கேளுங்கஎன்றார் டாக்டர் சேவியர்.

டாக்டர் உங்களைப் பெரிய டாக்டர் வரச் சொன்னார்என்று வந்து கூறினாள் நர்ஸ். டாக்டர் இஸ்மாயில் அறைக்குள் நுழைந்தார் சேவியர்.

என்ன சேவியர், எப்பவும் பேஷண்ட்டோட இருந்தால் போதுமா? நம்ப சொந்தப் பிரச்சினையையும் சற்றுப் பாக்கணும்லஎன்றார் இஸ்மாயில்.

எந்தச் சொந்தப் பிரச்சினை இஸ்மாயில்..?” என்றார் சேவியர்.

வேற ஒண்ணுமில்லே, உங்க தங்கச்சி கல்யாணம் பத்திதான்என்று சிரித்தார் இஸ்மாயில்.

பையனைத் தேடிக்கிட்டிருக்கோம்என்று சிரித்தார் சேவியர்.

எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்லே ஒரு பப்ளிஷர் இருக்கார். அவர் கோயம்புத்தூர்க்காரர். அவருக்கு ஒரு பையன், ஆசிரியர் வேலை பார்க்கிறான். பெண் தேடிக்கிட்டிருக்கிறதாச் சொன்னார். அந்தப் பையனைப் பார்க்கலாமா?” என்று சிரித்தபடி கேட்டார் இஸ்மாயில்.

தாராளமாய் பார்க்கலாம் இஸ்மாயில்... அவங்க ஆர்.சி.தானா?” என்று கேட்டார் சேவியர்.

அவங்க கிறித்தவங்க. சாந்தோம் சர்ச் போவாங்கஎன்றார் இஸ்மாயில்.

அப்பன்னா பார்த்துப் பேசலாம். இஸ்மாயில் ஒருநாள் வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அமலியை நேர்ல பார்க்கட்டும்என்றார் சேவியர்.

சரி, நீங்க கிளம்புங்க டாக்டர்என்றார் இஸ்மாயில்.

மதியம் வீட்டிற்குப் புறப்பட்டார் சேவியர். டிரைவர் கார் ஓட்ட கார் கிழக்கிலிருந்து மேற்காக வந்து வள்ளுவர் கோட்டம் முன்னே உள்ள ரவுண்டானாவில் சிக்னலுக்காக நின்றது. டிரைவர் பச்சை லைட் வந்ததும், காரை வேகமாய் எடுத்தான். அப்போது தெற்கே இருந்து வந்த லாரி ஒன்று கார் மீதுடமார்என்று மோதி காரை புரட்டிப் போட்டுவிட்டு கணநேரத்தில் பறந்துவிட்டது. சுற்றி இருந்தவர்கள் வந்து காரிலிருந்த டாக்டர் சேவியரை வெளியே இழுத்துவிட்டனர். டிரைவரோ முன்பகுதி நசுங்கியதில் சிக்கிக்கொண்டார். உடனே ஒரு கால் டாக்ஸியை நிறுத்தி ட்ராபிக் போலிஸ் இருவரையும் மெரிட் மருத்துவமனைக்குக் கவனமாக அனுப்பிவைத்தார்.

டாக்டர் சேவியருக்கு இது எப்படி நடந்தது என்று புரியவில்லை.              

(தொடரும்)

news
சிறுகதை
‘நண்பேன்டா...’ (சிறுகதை)

செபா, சிவா, அப்துல் மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். கல்லூரி விடுதியிலும் ஒரே அறையில்தான் தங்கியிருக்கிறார்கள். வெவ்வேறு குடும்பச் சூழலில் வளர்ந்தவர்களாயினும், மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அவர்களிடமிருந்த கருத்தொருமிப்பு அவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்தது.

மூவரும் படிப்பில் அக்கறை செலுத்தினார்கள். படிப்பில் சில வேளைகளில் அவர்களுக்குள் போட்டி இருந்தது; ஆனால், பொறாமை இல்லை. பாடப் பகுதியிலோ அல்லது செயல்முறை விளக்கத்திலோ புரியாத பகுதி இருந்தால், மனமுவந்து ஒருவர் ஒருவருக்குப் புரியும்படி விளக்கி இன்பமாகக் கற்பதில் மகிழ்ச்சி கொண்டனர்.

ஒருநாள் ஒரு பெரிய தோள் பையுடன் கல்லூரி வளாகத்திற்குள் புதிதாக ஒருவன் வந்தான். அவன் தனியாக நின்ற மாணவன் ஒருவனிடம் சென்று நயந்து பேசி, நட்பு கொண்டாடி, தான் கொண்டு வந்திருந்த ஏதேதோ பொருள்களை அவனிடம் கொடுத்துப் பார்க்கும்படி சொல்லி விளக்கம் கூறிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த மற்ற மாணவர்களும் ஒருவர் ஒருவராக வந்துசேர அங்கு ஒரு கூட்டமே கூடிவிட்டது.

நண்பர்களுள் ஒருவனான அப்துல் கூட்டத்திற்குள் சென்று என்னவென்று பார்த்தான். விற்பனையாள், தான் கொண்டு வந்த பொருள்களை எப்படியாவது மாணவர்களிடம் விற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இனிமையான கதைகளைப் பேசி வாங்க வைத்தான். பணம் இல்லாதவர்களிடமும், “அடுத்த வாரம் நான் வரும்போது தந்தால் போதும்; அவசரம் ஒன்றுமில்லை; இந்தப் பொருள்களின் சுவையை நீங்கள் அறியவேண்டும்என்று கூறி ஒருசில மாணவர்களின் கைகளில் திணித்தான்.

வாங்க மனமில்லாமல் இருந்தவர்களும் அவனது கவர்ச்சியான பேச்சில் மயங்கி, மது உண்ட வண்டுகளைப்போலப் பொருள்களை வாங்கிச் சென்றனர். அப்துலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டான். ஆனாலும், அவன் மனத்தில் ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டதுபோல ஒரு குற்ற உணர்வுடன் வாங்கிய பொருள்களை நண்பர்களிடம் காட்டலாமா? காட்ட வேண்டாமா? என்ற போராட்டத்தில் அவற்றை மறைத்து வைத்துக் கொண்டான்.

விடுதி அறைக்குச் சென்றதும் சிவா, “நண்பா, ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? என்ன விசயம் நடந்தது? சொல்என்றான்.

உண்மையை மறைக்க விரும்பாத அப்துல், தான் வாங்கிய பொருள்களை நண்பர்களிடம் காட்டினான். சிறிய சிறிய பொட்டலங்களாக இருந்த அப்பொருள்களைப் பார்த்த நண்பர்கள் வியந்து, “டேய் மச்சான், உனக்கு இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள்.

நடந்த நிகழ்வுகளை ஒன்றும் விடாமல் அப்துல் கூறினான். “நண்பா, இவை எல்லாம் உண்மையிலேயே மிகவும் மோசமான போதைப் பொருள்கள். இவற்றைப் பயன்படுத்துவோரைக் கொஞ்சம் கொஞ்சமாக இது அடிமைப்படுத்தி அடியோடு அழித்துவிடும். எனவே, இவற்றை நாம் யாருமே பயன்படுத்தக்கூடாது. குழிதோண்டி புதைத்துவிட வேண்டும்என்றான் சிவா.

ஏன் புதைக்கவேண்டும்? யாருக்காவது கொடுத்தால் என்ன?” என்று அந்தப் போதைப்பொருளின் கொடூரம் தெரியாமல் கேட்டான் அப்துல்.

இது நல்ல பொருள் என்றாலோ, இதனால் யாருக்காவது நற்பயன் கிடைக்கும் என்றாலோ இதை நாம் யாருக்காவது கொடுக்கலாம். ஆனால், தீமை விளைவிக்கக்கூடிய பொருளை இலவசமாகக் கூட யாருக்கும் கொடுக்கக்கூடாதுஎன்றான் செபா.

தோட்டத்தில் ஒதுக்குப்புறமாகக் கிடந்த ஒரு குழியில் அப்பொருள்களைப் போட்டு நண்பர்கள் அதை மண்ணால் மூடிவிட்டார்கள். அதன்பின் சமாதானத்துடன் அறைக்கு வந்தனர்.

இதுபோன்ற பொருள்களை வேறு யாராவது வாங்கினார்களா?” என்று கேட்டான் சிவா.

ஆமாம், இன்னும் சில மாணவர்கள் வாங்கினார்கள். இதை விற்றவன் அடுத்த வாரம் வருவதாகவும் கூறினான்என்றான் அப்துல்.

இப்படிப்பட்ட தீமைகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் அது இளம் தலைமுறையையே வாழவிடாமல் அழித்துவிடும்என்றான் செபா ஆதங்கத்தோடு.

இப்போது நாம் என்ன செய்வது?” என்று கேட்டான் அப்துல் கவலையோடு.

இதை வாங்கியவர்களில் ஒருசிலரின் பெயர்களாவது உனக்குத் தெரியுமா?” என்று சிவா கேட்க, ‘தெரியும்என்று தலையசைத்தான் அப்துல்.

அப்படியானால் நல்லது. நாம் நமது பேராசிரியரிடம் இதைச் சொல்ல வேண்டும். அவர் நமது பெயர் வெளிவராமல் வாங்கியவர்களிடம் விசாரித்து, விற்றவனையும் பிடித்துத் தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்வார். நாம் நமது இளம் மாணவர் சமுதாயத்தைப் பெரும் கேட்டிலிருந்து காப்பாற்றியவர்கள் ஆவோம்என்றான் செபா.

மூவரும் பேராசிரியரைப் பார்த்துப் போதைப் பொருள்கள் பற்றிய நிகழ்வுகளை விவரமாக எடுத்துரைத்தனர். பேராசிரியர் அவர்களைப் பாராட்டி,

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்ற திருவள்ளுவரின் இனிய குறளுக்கு ஏற்ற நல்ல நண்பர்களாக விளங்குகிறீர்கள். தீமையைச் சுட்டிக்காட்டி திருத்துவதுதான் நல்ல நண்பர்களுக்கு இலக்கணம். அவ்வகையில் நல்ல நண்பர்களான உங்கள் மூவராலும் இக்கல்லூரி பெருமையடைகிறதுஎன மனமார வாழ்த்தினார்.

கல்லூரிக்குள் நுழைந்த போதை அரக்கனைத் தடுக்க அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்தார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். போதைப்பொருள்களை விற்பனைக்காகக் கொண்டுவந்த ஆசாமியும் வசமாக மாட்டிக்கொண்டான்.

போதை என்னும் படுகுழிக்குள் விழவிருந்த மாணவச் செல்வங்களும் நண்பர்களின் முன்மதியாலும், நற்குணத்தாலும் காப்பாற்றப்பட்டனர்.

கல்லூரி ஆண்டு விழாவில் போற்றுதற்குரிய இச்செயலுக்காக செபா, சிவா, அப்துல் ஆகியோருக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.

நண்பர்கள் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும்நண்பேன்டாஎன்று கைகளைத் தட்டிக் கொண்டனர்.

news
சிறுகதை
பிறந்த நாளுக்கு அழைப்பு - காவல் அன்னை 17 (தொடர் கதை)

டாக்டர் சேவியர், அண்ணா பூங்காவில் நடைப் பயிற்சியில் நடந்து கொண்டிருந்தார். சில நாள்கள் இப்படிக் காலையில் நடப்பதுண்டு. அப்போது டாக்டர் யாழினியின் தந்தை கருணாகரன் நடந்து வந்தார்.

வாங்க டாக்டர் வாங்க, என்ன இப்படி பார்க்கிற்கு வந்திருக்கீங்க?” என்றார் சிரித்தபடி கருணாகரன்.

வாரத்தில் ஓரிரு நாள்கள் வருவதுண்டு. மற்றபடி இப்படி வர நேரம் கிடைப்பதில்லைஎன்றார் சேவியர்.

நான் தினமும் வந்திருவேன். வயசாயிருச்சில டாக்டர். இப்படி நடந்தால் நல்லதுன்னு வந்திருவேன். உங்களைப் பார்த்ததில் ரெட்டிப்பு சந்தோசம்என்றார் கருணாகரன்.

என்ன ரெட்டிப்பு சந்தோசம்?” என்று கேட்டார் சேவியர்.

வேற ஒண்ணுமில்லே, என்னோட பையன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கான். அவனோட பேரு முத்தரசன்என்றார் கருணாகரன்.

அப்படியா! யாழினிக்குத் தம்பி இருக்கிறதாச் சொன்னதில்லையே?” என்றார் சேவியர்.

இவன் கலிபோர்னியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராய் வேலை செய்றான். வருசத்திற்கு ஒரு தடவ வந்து இருபதுநாள் இருந்திட்டுப் போவான்என்றார் கருணாகரன்.

ரொம்ப சந்தோசம். ஒரு நாளைக்குச் சந்திக்கிறேன்என்றார் சேவியர்.

அதைத்தான் இப்பச் சொல்ல வந்தேன். இவனுக்குக் கல்யாணம் முடிக்க பெண் பார்த்துக்கிட்டு இருக்கோம். இன்னும் முடிவாகலேஎன்றார் கருணாகரன்.

நல்லது. காலாகாலத்தில் கல்யாணம் முடிங்க. இல்லைன்னா அங்கேயே யாரையாவது லவ் பண்ணி கட்டிடப் போறார். அப்புறம் உங்களுக்குக் கல்யாண வேலை இல்லாமல் போய்விடும்என்று சிரித்தார் சேவியர்.

இப்ப நான் சொல்ல வந்தது, நாளைக்கு யாழினிக்கு பிறந்த நாள். இதைகிரீன் பார்க்ஹோட்டலில் நடத்தலாம்னு இருக்கோம். வேற ஒண்ணுமில்லே. மதியம் ஒரு விருந்துதான். நீங்க உங்க அம்மா, தங்கச்சியோட கட்டாயம் வரணும்என்றார் சேவியர்.

கட்டாயம்  வர்ரோம். நாளை லீவ் நாள்தானேஎன்றார் சேவியர்.

டாக்டர் இஸ்மாயில் குடும்பத்தையும் யாழினிட்டே கூப்பிடச் சொன்னேன். அவங்களும் வருவாங்கஎன்றார் கருணாகரன்.

சரி, நான் பாத்திமா சர்ச் பாதரைப் பார்க்கப் போகணும், வரட்டுமா?” என்று விடைபெற்றார் சேவியர்.

வாங்க டாக்டர், என்ன விசேசம்? எப்படி இருக்கீங்க?” என்றார் பாதர் அந்தோணிசாமி.

பாதர், இந்தச் செக்கை வெச்சுக்கோங்க. சர்ச் காரியத்திற்குப் பயன்படுத்திக்கோங்கஎன்று ஒரு செக்கை நீட்டினார் சேவியர்.

பரவாயில்லை டாக்டர். மாதா மாதம் பதிமூன்றாம் தேதி மாதாவுக்குச் சிறப்பு நவநாள் நடத்தி மக்க ளுக்கு மதிய விருந்து தருவோம். அதற்கு இதைப் பயன்படுத்துறேன்என்று சிரித்தார் அந்தோணிசாமி.

அப்போது அருகிலுள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளி தலைமைச் சகோதரி ப்ளோரா வந்தார்.

வணக்கம் டாக்டர்! எங்களோட பள்ளியிலே ஒரு நாள் மருத்துவக் கேம்ப் நடத்தணும். எங்க மாணவிகளைச் செக்கப் பண்ணி மருந்து மாத்திரை குடுக்கணும்என்றார்.

ஒருநாள் எங்க ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் இஸ்மாயிலைப் பார்த்துச் சொல்லுங்க. கட்டாயம் ஏற்பாடு செய்வார்என்றார் சேவியர்.

நீங்க தூத்துக்குடியாமே! நானும் தூத்துக்குடி அருள்தாஸ்புரம்தான்என்றார் சிஸ்டர் புளோரா.

ரொம்ப சந்தோசம் சிஸ்டர்என்றார் சேவியர்.

நான் சிவகங்கை பகுதிக்காரன். காளையார் கோவில் அருகே உள்ள சூசையப்பர் பட்டணம் என் ஊர். நான் பூந்தமல்லியில் படித்தபோது சென்னை டையசிஸ்க்கு வந்துவிட்டேன்என்று சிரித்தார் அந்தோணி.

ரொம்ப நன்றி பாதர். நான் கிளம்புறேன்என்று புறப்பட்டார் டாக்டர் சேவியர்.        

(தொடரும்)

news
சிறுகதை
சந்தித்து விளக்கம் (காவல் அன்னை – 16) - தொடர் கதை

டாக்டர் சார், உட்காரலாமா?” என்று கேட்டபடி டாக்டர் சகாதேவன் அறைக்குள் நுழைந்தாள் யாழினி.

தாராளமாய் உட்காருங்க யாழினி, என்ன விசயமாய் வந்தீங்க?” என்று கேட்டான் சகாதேவன்.

வேற ஒண்ணுமில்லே. உங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்குப் போயிருக்காங்கஎன்று ஆரம்பித்தாள் யாழினி.

ஆமா யாழினி போனாங்க. உங்க வீட்லே போய் உங்களைப் பெண் கேட்டிருக்காங்கஎன்றான் சகாதேவன் சிரித்தபடி.

பெண் கேட்டதில எந்தத் தப்பும் இல்லே! எங்க வீட்லே ரெண்டு நாள்லே பதில் சொல்றதாச் சொன்னாங்களாம்என்றாள் யாழினி.

ஆமாம். அப்படித்தான் உங்க வீட்லே பதில் சொன்னாங்களாம். அதுக்கென்ன யாழினி?” என்றான் சகாதேவன்.

அதைப் பத்தி ஒண்ணுமில்லே. நல்ல பதிலாய் சொல்லணும்னாங்களாம். அதுதான் யோசிக்க வைக்குது டாக்டர்என்றாள் யாழினி.

உங்க சம்மதத்தை அவர்கள் எதிர்பார்த்து அப்படிச் சொல்லியிருக்கலாம்னு நினைக்கிறேன் யாழினி. இதில் ஒன்றும் தப்பில்லேஎன்றான் சகாதேவன்.

இந்த ஆஸ்பிட்டலில் நான் வந்ததிலிருந்து நீங்க என்னை விரும்புறீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால், அதற்கு எனக்கு விருப்பம் இருக்கணும்லேஎன்றாள் யாழினி.

ஏன், நான் உங்களுக்கு ஏற்றவனாய் இல்லையா? அதனால் கல்யாணம் பண்ணமுடியாதுன்னு நினைக்கிறீங்களா? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கஎன்றான் சகாதேவன்.

என்னோட குணமும் உங்களோட குணமும் ஒத்துப்போக வாய்ப்பில்லே டாக்டர்என்றாள் யாழினி.

ஏன் சாதி வேறு வேறுன்னு நினைக்கிறீங்களா?” என்றான் சகாதேவன்.

அதைப்பத்தி கவலை இல்லே டாக்டர். நான் வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதனால்தான் இப்படிச் சொன்னேன்என்றாள் யாழினி.

அது யார்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான் சகாதேவன்.

அதை இப்ப சொல்லமுடியாது. ஆனால், விரைவில் தெரியத்தான் போகுது. எனவே, நீங்க வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணுங்கஎன்றாள் யாழினி.

இது உங்க முடிவாய் இருக்கலாம் யாழினி. ஆனால், உங்க வீட்ல வேற முடிவெடுத்தால் என்ன பண்ணுவீங்க?” என்றான் சகாதேவன்.

பெற்றோர் முடிவெடுத்தாலும் நான் சம்மதிக்கணும் டாக்டர். என் சம்மதம் இல்லாமல் எனக்கு எப்படிக் கல்யாணம் நடக்கும்?” என்று சிரித்தாள் யாழினி.

அப்படி நீங்க கண்டுபிடிச்சவர் யார்னு சொல்ல வேண்டியதுதானே? அவர் இங்கே உள்ளவரா?” என்று கேட்டான் சகாதேவன்.

அது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம். நான் உங்களைத் திருமணம் செய்ய வாய்ப்பில்லைஎன்று சிரித்தாள் யாழினி.

சிரிக்காதீங்க யாழினி. இது சீரியசான விசயம். எப்படியும் நாம் கல்யாணம் பண்றதுதான் நம்ப குடும்பத்துக்கு விருப்பம். உங்களுக்கும் நல்லதாய் இருக்கும்என்றான் எரிச்சலுடன் சகாதேவன்.

பார்ப்போம், பார்ப்போம் டாக்டர்என்று கூறிவிட்டு வெளியேறினாள் டாக்டர் யாழினி.

news
சிறுகதை
பாத்திமா மாதா திருவிழா (காவல் அன்னை - 15) - தொடர் கதை

கோடம்பாக்கம் பாத்திமா ஆலயத்தில் பாத்திமா மாதா திருவிழாச் சிறப்பாக நடக்கும். தேர் கிளம்பி வந்து சேர்வதற்கு இரவு 12 மணியாகிவிடும். அருளம்மாவும் அமலியும் தேரோடு நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் வந்து கையைப் பிடித்தாள்.

என்னம்மா, நீங்க யாரு?” என்று கேட்டாள் அருளம்மா.

என்னைத் தெரியலையா? இராத்திரிங்கிறதாலே தெரியலை போலஎன்றாள் அந்தம்மா.

சரி, சொல்லுங்கஎன்றாள் அமலி.

நான்தான் சந்தனமேரியோட அம்மா. சொந்த ஊர் தூத்துக்குடி. உங்க தெருதான்... மறந்திட்டீங்கலேஎன்றாள் அந்தம்மா.

ஆமாங்க, வயசாயிருச்சிலே... அதுதான் தெரியலேஎன்றாள் அருளம்மா.

என்னோட பையன் இங்கேதான் குடியிருக்கான். அவனும் மருமகளும் சாப்ட்வேர்லே வேலை செய்றாங்க. வீடு யுனைடெட் காலனி முதல் தெருஎன்றாள் அந்தப் பெண்மணி.

அப்படிங்களா, எப்ப இங்கே வந்தீங்க?” என்று கேட்டாள் அமலி.

நாங்க வந்து ரெண்டு நாளாயிருச்சு. பெசன்ட் நகர் கோவில், தோமையார் மலை, சைதாப்பேட்டை தோமையார் ஒளிந்த இடம், அருவி இதெல்லாம் பார்த்தோம்என்றாள் அந்தப் பெண்.

ஏம்மா, நம்ம சாந்தோம் தோமையார் சர்ச், பிராட்வே அந்தோணியார் சர்ச் பார்த்ததையும் சொல்லுஎன்று நினைவுபடுத்தினாள் மகள் சந்தனமேரி.

அதைத்தான் நீ சொல்லிட்டியேஎன்றாள் தாய்.

நாளைக்கு இருந்தால் எங்க வீட்டுக்குக் கட்டாயம் வாங்க. இராகவேந்திரா மண்டபத்திற்கு அடுத்த தெருவில் முதல் வீடுதான் அடையாளம். மறக்காமல் வாங்க, ரொம்ப சந்தோசம்என்றாள் அருளம்மா.

இந்தப் பங்கிலே நம்ம தூத்துக்குடிக்காரங்க நிறைய இருக்காங்க; பலரைப் பார்த்து சந்தோசப்பட்டோம்என்றாள் அந்தப் பெண்மணி.

மறுநாள் காலையில் சொன்னபடியே சந்தனமேரி அப்பா, அம்மாவுடன் சேவியர் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

கீழே கிளினிக் இருக்காங்க?” என்றாள் சந்தனமேரி.

ஆமாங்க, அண்ணன் பேஷண்ட்டை இங்கே பார்ப்பார். அதன்பிறகு ஆஸ்பத்திரிக்குப் போவார்என்றாள் அமலி.

பரவாயில்லை, நல்ல பெரிய வீடுதான். தூத்துக்குடியிலிருந்து இங்கே வந்து செட்டில் ஆயிட்டீங்க. எல்லாம் வேலையை வெச்சுத்தானே?” என்றாள் வந்தவள்.

என்ன செய்றது? தூத்துக்குடியில் பனிமய மாதாதான் எங்களுக்குக் காவல் அன்னை. இங்கே பாத்திமா மாதாதான் காவல் அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள். தினமும் சர்ச்சிலே மாதாவைச் சந்திச்சிட்டுத்தான் டாக்டர் வேலையைத் தொடங்குவார்என்றாள் அருளம்மா.

ரொம்ப நல்லதுங்க. நாங்க இன்னைக்கி இராத்திரி கிளம்புறோம். கல்யாணம் பத்தி பிறகு விரிவாய் பேசலாம்என்று வந்தவர்கள் போய்விட்டார்கள்.

அருளம்மாவும் அமலியும் என்ன செய்வதென்று முழித்தார்கள்.

(தொடரும்)

news
சிறுகதை
வெற்றிலை, பாக்கு, பீடி (காவல் அன்னை 14 - தொடர் கதை)

வீட்டிற்குள் பழம், பூந்தட்டுகளுடன் நுழைந்தவர்களைப் பார்த்ததும் கருணாகரனுக்கும் இந்திராதேவிக்கும் ஒன்றும் புரியவில்லை.

வணக்கம், வணக்கம்...” என்றபடி உள்ளே வந்தார்கள் கலையரசனும் சுந்தரியும்.

வாங்க, நீங்க யாரு? என்ன விசயமாய் வந்திருக்கீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் கருணாகரன்.

என் பேரு கலையரசன். சிட்டியில் பெரிய ரியல் எஸ்டேட் ஓனர். இவளோட பேரு சுந்தரி, என் மனைவி. நாங்க டாக்டர் சகாதேவனுடைய பெற்றோர். இப்ப உங்க மகள் டாக்டர் யாழினியை சகாதேவனுக்குப் பெண் கேட்கத்தான் வந்திருக்கோம்என்றார் கலையரசன்.

அப்படி விளக்கமாகச் சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்! டாக்டர் சகாதேவன் யாழினியோட வேலை செய்ற டாக்டர். அது எங்களுக்கு யாழினி சொல்லியிருக்காள்என்றாள் இந்திராதேவி.

நான் ஆளுங்கட்சியிலே முக்கியப் பதவியிலே இருக்கேன். எங்கிட்டே ஏகப்பட்டோர் வேலை செய்றாங்க. உங்க மகளை என்னோட பையனுக்கு கல்யாணம் முடிக்க விரும்புறோம். அதுதான் இங்கே இப்ப பெண் கேட்டு வந்திருக்கோம்என்றார் கலையரசன்.

நீங்க பெண் கேட்டு வருவது சரிதான். இதை முன்னாடியே சொல்லி இருந்தால் நாங்களும் தயாராய் இருந்திருப்போம். வேற ஒன்றுமில்லேஎன்றாள் இந்திரா.

அதனாலென்ன, அவங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை செய்றவங்க. ஒருத்தரை ஒருத்தர் நல்லாத் தெரிஞ்சவங்க. இதிலே புதுசா ஒண்ணும் அவங்க அறிமுகம் தேவையில்லே! அதுதான் கிளம்பி வந்திட்டோம்என்றாள் சுந்தரி.

அதெல்லாம் சரிதான். பெண்ணுக்குப் பலர் கேட்டு வரத்தான் செய்வாங்க. அது வழக்கமானதுதான். சரி, உங்களோட விவரத்தைப் பேசுங்கஎன்றார் கருணாகரன்.

விவரம் ஒண்ணும் விரிவாச் சொல்ல வேண்டியதில்லே. அதோ உங்க பெண் படத்தைப் பார்த்திட்டோம். நல்ல அழகான டாக்டர்தான். உங்க சம்மதம் தேவைதான். சரின்னா அடுத்த வாரம் நிச்சயம், அடுத்த மாதம் உடனே கல்யாணம் நடந்திடும்என்றார் கலையரசன்.

எங்க யாழினிக்கிட்டே பேசி, நாங்க அவளோட எண்ணத்தைத் தெரிஞ்சுக்க வேண்டாமா? உடனே எப்படிப் பதில் சொல்ல முடியும்?” என்றாள் இந்திரா.

நல்லா கேளுங்க. நாங்க இருக்கும்போதே வரச் சொல்லுங்க. போனில் யாழினியோட கருத்தைத் தெரிஞ்சு சொல்லுங்கஎன்றார் கலையரசன்.

அது சரியானதில்லே. நாங்க மகளோட உட்கார்ந்து பேசணும். அவளோட கருத்தைத் தெரிஞ்சு, பதில் சொல்றோம்என்றார் கருணாகரன்.

அதுவும் சரிதான். எதையும் அவசர அவசரமாய் பேசி முடிவெடுக்கக்கூடாது. நீங்க நல்லா பேசி, கலந்துரையாடி மகளோட விருப்பம் தெரிஞ்சு சொல்லுங்க. நாங்க போயிட்டு வாரோம். நீங்க நல்ல பதிலாய் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறோம்என்று சிரித்தபடி எழுந்தார் கலையரசன்.

நல்ல பதில்னா எப்படிங்க?” என்றார் கருணாகரன்.

அவங்க நாம் சம்மதம் சொல்வோம்னு சொல்றாங்க, அதைத்தான் எதிர்பார்க்கிறாங்க. நான் சொல்றது கரெக்ட்தானேஎன்று சிரித்தாள் இந்திரா.

அதேதான்! சம்மதிச்சா எதிர்காலம் அவங்களுக்கு நல்லா இருக்கும். ரெண்டு பேரும் டாக்டர் இல்லையா? அதைத்தான் நாங்க ஆவலாய் எதிர்பார்க்கிறோம்என்றாள் சுந்தரி.

யாழினிட்டே பேசிட்டு, கட்டாயம் முடிவு சொல்லிட்றோம்என்றாள் இந்திரா. வந்தவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள்.

(தொடரும்)