news
சிறுகதை
மருத்துவரின் தொண்டு (காவல் அன்னை - தொடர் கதை 12)

வணக்கம்! உங்க எல்லாரையும் இக்கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கின்றேன்  என்றார் இஸ்மாயில்.  எல்லாரும்வணக்கம்கூறிவிட்டு அமர்ந்தார்கள்.

நம்ம மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று நான் நினைக்கின்றேன்என்றார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஸ்டீபன்ராஜ்

ஆமாம் டாக்டர், நம்ம உழைப்பாலே இந்த மருத்துவமனை நல்ல பேர் பெற்றுள்ளது. அத்துடன் முன்பைவிட அதிக பேஷண்ட் வந்து செல்கின்றனர். இந்த ஏரியாவில் நமது ஆஸ்பிடல் பற்றி நிறைய பேர் அறிந்து இங்கே வருகிறார்கள்என்றார் இஸ்மாயில்.

அதற்குக் காரணம் எங்களோட உழைப்புதான் டாக்டர். நாங்கள் கடமை உணர்வுடன் பேஷண்டுகளைக் கவனித்து வைத்தியம் பார்ப்பதுதான் இதற்கான முக்கியக் காரணம்என்றார் டாக்டர் சகாதேவன்.

வெரிகுட்! அனைவருடைய கடமையும் பாராட்டுதற்குரியது. இங்கே இருந்தவர்களில் வயதானவர்கள் அதிகமில்லை. ஒருசிலர் மட்டுமே வயதான டாக்டர்களாக உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் இளையவர்கள்தான்என்றார் தலைமை மருத்துவர்.

நாங்கள் பெற்ற அனுபவம் நிறைய இல்லை என்றாலும், கடமையை மனிதநேயத்துடன் செய்யும் போது நமக்கு வெற்றி கிடைக்கிறது. இதுதான்  உண்மை டாக்டர்என்றார் டாக்டர் யாழினி.

இதுதான்  உண்மை டாக்டர்! உழைப்பு என்பது கடமையில் தவறாமல் இருப்பது. நமது கடமையைச் சரியாக நிறைவேற்றுவதால்தானே தொழில் சிறப்படைகின்றதுஎன்றார் டாக்டர் மதுசூதனன்.

இதை ஏன் தொழில் என்று சொல்கிறீர்கள்? இது ஒரு தொண்டுதானே? நமது மக்களுக்கு அவர்கள் உயிர் வாழ உறுதுணைபுரிகின்றோம். இதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்என்றார் தலைமை மருத்துவர்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இப்பொழுது இந்தக் கூட்டத்தின் காரணத்தை நான் சொல்லி விடுகின்றேன். நமது மருத்துவமனைக்கு முன்பாக நிறைய இடம் உள்ளது. கார் பார்க்கிங்கிற்குப் போக மீதியுள்ள இடத்தில மேலும் ஒரு நான்கு மாடி கட்டடம் கட்டலாம் என்று முடிவெடுத்துள்ளோம்என்றார் டாக்டர் இஸ்மாயில்.

அப்படியானால் இந்த மருத்துவமனை மிகவும் நெருக்கடியாக அமைந்துவிடுமே?” என்றார் டாக்டர் மதிவதனி.

வேறு வழி இல்லையே டாக்டர் மதிவதனி. இப்ப பேஷண்ட் நிறைய வர்றாங்க. பெட் ரொம்பவும் அதிகமாய் தேவைப்படுது. டாக்டர்களுக்கும் போதுமான அறை இப்பொழுது இல்லை. இந்தத் தேவையை முன்னிட்டுதான் ஆஸ்பத்திரியில் புதிய பில்டிங் கட்ட முடிவெடுத்துள்ளோம்என்றார் டாக்டர் பாத்திமா.

ஆஸ்பத்திரியின் நிர்வாகிகள் நீங்கள்தான். டாக்டர்கள் பேஷண்டுகள் தேவையறிந்து செய்வதில் தவறில்லைஎன்றார் டாக்டர் சேவியர்.

தேவைக்காக நெருக்கடியில் கஷ்டப்பட முடியுமா?” என்றார் டாக்டர் சகாதேவன்.

சகாதேவன், போகப்போகத் தேவைகள் கூடும் போது அதற்கேற்ப நாம் செய்துதான் ஆகவேண்டும். இந்த ஆஸ்பத்திரி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. நமது மருத்துவப்பணியைத் தேடிவரும் பேஷண்டுகளுக்கான தேவையை நாம் நிறைவேற்றுவோம். அதுதான் சிறந்த சேவையாய் இருக்கும்என்றார் இஸ்மாயில்.

இத்துடன் கூட்டம் முடிந்தது. தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிஎன்றார் மருத்துவமனை சூப்பிரண்ட்.

(தொடரும்)

news
சிறுகதை
சகாதேவனின் விருப்பம் – (காவல் அன்னை (தொடர் கதை) – 11)

ஏம்பா சகாதேவன், அந்த யாழினி ஏன் உன்னைக் கட்டிக்கமாட்டாள்னு நினைக்கிறே?” என்று கேட்டாள் தாய் சுந்தரி.

அவள் ரொம்பத் தலைக்கனம் பிடிச்சவள். நானும் அடிக்கடிப் பேசிப் பார்க்கிறேன். எங்கூட சந்தோசமாய் பேசுறதே இல்லேஎன்றான் சகாதேவன்.

அதற்கு அடிப்படையான காரணம் என்னப்பா?” என்றார் தந்தை கலையரசன்.

அதுதான் தெரியலே! நானும் அப்படி இப்படின்னு அடிக்கடிப் பேசுறதுண்டு. அவள் பிடி குடுக்காமல் போயிடுறாள். ‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, என்னை நீ கட்டிக்கிறாயா?’ன்னு டாக்டர்ட்டே கேட்க முடியாதே!” என்றான் சகாதேவன்.

அதைவிடு சகாதேவன், நிறைய பொண்ணுங்க நம்ப வீட்டுக்கு வரக் காத்துக்கிட்டிருக்கு. அதோட பணவசதி படைச்ச அரசியல்வாதிகள், அதிகாரிகள் பெண் குடுக்கநான், நீன்னு போட்டிப் போட்டுக்கிட்டிருக்காங்கஎன்றார் கலையரசன்.

அதையெல்லாம் விடுங்கப்பா. டாக்டர் யாழினியைக் கல்யாணம் பண்ற வழி என்னன்னு யோசிங்க. அதுக்காக யாரைப் பிடிக்கலாம்னு பாருங்கஎன்றான் சகாதேவன்.

இப்ப மூணு பெண்ணோட சாதகம் கைவசம் இருக்கு. ஒண்ணு, நம்ப ஆளுங்கட்சியிலே மாவட்டமாய் இருக்கிறவரோட பொண்ணு. இரண்டாவது, ரெண்டு காலேஜ் வெச்சிருக்கிறவரோட மகள். மூணு, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் பொண்ணு. மூணும் வெல்டு பார்ட்டி! நம்பக் குடும்பத்துக்கு ஏத்த சரியான பொண்ணுங்கஎன்று சிரித்தார் கலையரசன்.

அவன் சொல்றதை விட்டுட்டு, உங்க கதையையே பாடினாக்கா எப்படிங்க? அவன்தான் யாழினி டாக்டர்தான் பொருத்தமான பொண்ணுன்னு அடம்பிடிக்கிறானே! அதைப் பத்தி யோசிங்கஎன்றாள் சுந்தரி.

அதையும் யோசிப்போம். அவங்க வீட்லேயே போய் பெண் கேட்போம். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். அடுத்து மத்ததைப் பேசுவோம்என்றார் கலையரசன்.

ஏம்பா, அவங்க வீடு எங்கே இருக்கு? இந்த யாழினியோட அப்பா, அம்மா என்ன வேலை செய்றாங்க?” என்று கேட்டாள் தாய் சுந்தரி.

அவங்க வேலைபார்த்து ரிட்டயர்டு ஆனவங்கன்னு நினைக்கிறேன். சொந்த ஊர் எதுன்னு தெரியாது. வீடு டிரஸ்ட்புரத்தில் இருக்கு. இதுதான் அட்ரஸ்என்று யாழினியின் விசிட்டிங் கார்டை நீட்டினான் சகாதேவன்.

அப்புறம் என்ன, நாங்க நாளைக்கே பூ, பழத்தோடு வீட்டுக்குப் போறோம், பெண் கேட்கிறோம். என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்என்றாள் தாய் சுந்தரி.

அவங்க சம்மதிச்சாலும், யாழினி சம்மதிக்கனுமே அம்மா! அதுதான் இங்க இருக்கிற பிரச்சினை. எதுக்கும் போய் பேசிட்டு வாங்க. பிறகு அது பத்தி பேசலாம்என்றான் சகாதேவன்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்னு சொல்வாங்க. அதுக்கேத்த மாதிரி திட்டம் போட்டு யாழினியைச் சம்மதிக்க வைக்கலாம். நீ கவலைப்படாதே. அரசியல்லே இருக்கிற எனக்கு இதெல்லாம் தூசி மாதிரி. ஊதித் தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்பேன்என்று சிரித்தார் கலையரசன்.

எங்கே பார்ப்போமே உங்களோட ப்ளானை! யாழினி இந்த வீட்டு மருமகளாய் வர்றதுக்கு எப்படியாவது நீங்க ஏற்பாடு பண்ணுங்க. சகாதேவன் பாவம், அந்த யாழினி மேலே ரொம்பப் பிரியமாய் இருக்கான்என்று சிரித்தாள் சுந்தரி.

(தொடரும்)

news
சிறுகதை
‘அப்பா என் பெருமை!’ (சிறுகதை)

காலை 5:30 மணி. ஜோசப் தான் பயணித்த புறநகர் இரயிலில் குளிர் காற்று பலமாக வீசியதால் உடலில் சற்றே நடுக்கம் ஏற்படுவதை உணர்ந்தார். 25 ஆண்டுகளாக, அதிகாலையில் வேலைக்குச்  செல்ல, பழகிப்போன காற்று என்றாலும், வயதாக, வயதாக உடம்பில் மாற்றங்கள். அவருக்கு ஓட்டுநர் வேலை. அந்த வாரம், சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு, பாயிண்ட்-டு-பாயிண்ட் பேருந்தை ஓட்டுவதற்காக வீட்டிலிருந்து பேருந்து நிலையம்வரை இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

தனது அருகில் ஒரு வாலிபப் பையன் அமர்ந்து இருந்தான். காதில் ஹெட்போன்களைச் சொருகி, தனது ஸ்மார்ட்போனில் பாடல்களைக் கேட்டு இலயித்து இருந்தான். இரயிலின் இரைச்சல் தவிர்க்கவும், மிக முக்கியமாகத் தனது தலையில் ஓடும் எண்ணங்களை அமைதிப்படுத்தவும், தனக்கும் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஜோசப்  நினைத்தாலும், அவரது மனம் அதற்கு ஒருநாளும் அனுமதி கொடுத்ததில்லை. அவர் தான் பயன்படுத்திய  தனது பழைய பொத்தான் கைப்பேசியைத் தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்தார். அது தன் வயதைப் போலவே தேய்ந்து போயிருந்தது. ‘0’ பொத்தான் கிட்டத்தட்ட தேய்ந்து கீழே விழும் நிலையில் இருப்பதைக் கவனித்தார். கடந்த பத்து  ஆண்டுகளாக அந்தத் தொலைப்பேசி தனக்கு எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறது  என்று பெருமைப்பட்டுக்  கொண்டார்.

இரயிலிலிருந்து இறங்கிய பிறகு, ஜோசப்  டிப்போவிற்கு நடந்து சென்று, தனது பேருந்தில் ஏறி, தலையிலும் முதுகிலும்  வலி நிவாரணி மருந்தைத் தடவினார். வயதாக வேலை செய்ய மனம் விரும்பினாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே! வெயில், மழை என்ஜின் வெப்பம்  என  எல்லாச் சூழலிலும்,  உழைத்துத் தேய்ந்துபோன உடம்பு அல்லவா! ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, தனது ஷிப்ட்டைத் தொடங்கினார். உடம்பில் சோர்வு; ஆனால், வீட்டில் உள்ள தனது மூன்று மகள்களைக் கரையேத்தணுமே! படிப்பு, திருமணம் எனச் செலவுகள் ஏராளம் இருக்கிறதே! தன் மூன்று மகள்களையும் நினைத்தவுடன், உடல் பலவீனம் கரைந்து, பேருந்து  நான்காம் கியரில் நிதானமாக  வேகம் எடுத்தது. அவர்கள் மேல் அவ்வளவு பாசம்.

இரவு வீட்டிற்கு வந்தபோது இரண்டாவது மகள், “அப்பா, எனக்கு IT கம்பெனியில் வேலை கிடைச்சிடுச்சு என்றாள். அதைக் கேட்டு அவர்  மகிழ்ந்தவர், “சந்தோசம்டா என்றார்.  எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர். மூத்தவள் யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்குத் தயாராகி வந்தாள். ஆனால், தன் வாழ்க்கையில்  கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ எனத் திடீரென்று அவளுக்குள் ஒரு சிந்தனை. ஆனாலும் ஒரு கணம் சகோதரியின் பயணம் இப்படி எளிதாக அமைந்துவிட்டதே என்று மகிழ்ந்தாள்.

இரவு உணவின்போது இரண்டாம் மகள்  தனது சம்பள விவரங்களைப் பகிர்ந்துகொண்டாள். ‘முதல் வேலையில் இவ்வளவு சம்பளமா?’ எனக் கேட்டு அம்மா வியந்தாள். விளையாட்டாகத் தன் தந்தையைக் கிண்டல் செய்த மகள், “ஒரு மாதத்தில் நான் சம்பாதிக்கும் அளவுக்கு, அப்பா ஐந்து மாதங்கள் வேலை செய்ய வேண்டும் என்று கூறிச் சிரித்தாள். உணர்ச்சியற்ற இந்தக் கருத்துக்கு அவளுடைய அம்மா  உடனே  அவளைக் கண்டித்தாள்; ஆனால், ஜோசப் அதை எளிதாக எடுத்துக்கொண்டு, “ஏன் அவளைத் திட்டுற?” என மனைவியிடம் கூறினார். மூத்தவள் தன் தந்தையின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்து, அவரைக் கவலையுடன் பார்த்தாள். தன் தந்தை இந்தக் குடும்பத்திற்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்பதை அவள் புரிந்து இருந்தாள்.

இரண்டாவது மகள் அதோடு நிற்கவில்லை. “அப்பா, நீங்க ரொம்பவே உழைச்சிருக்கீங்க, ஆனா உங்க வேலையில எந்த முன்னேற்றமும் இல்லை. வாழ்க்கையில சாதிக்கக் கஷ்டப்பட்டு உழைப்பது எவ்வளவு முக்கியம்னு உங்க வாழ்க்கை சொல்லுது. ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறது முக்கியம் இல்லைப்பா. ஸ்மார்ட்டா இருக்கணும்ப்பா. சீக்கிரம் நிறைய காசு சம்பாதிக்கணும் என மகிழ்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்.

இந்தமுறை அவரால் அவளது வார்த்தைகளைத் தாங்கிக்கவே முடியவில்லை. அவள் கூறிய வார்த்தைகள் அவரைக் கூனிக் குறுக வைத்தன.  ‘இவ்வளவு  வருஷமா இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைச்சு என்ன பயன்? காலம் முழுவதும் ஒரே வேலை என மனசுக்குள்ளயே சொல்லிக் கொண்டார். ‘இப்பவெல்லாம் கடின வேலை முக்கியம் இல்லைப்பா. ஸ்மார்ட்டா இருக்கணும்ப்பா என மகள் கூறினது அவர் காதில் ஒலித்துகொண்டே இருந்தது.  நீண்ட நேர வேலை, களைப்பு, உடல் வலி... அவரைப் படுக்கைக்கு அழைத்துச் செல்ல, அதே சிந்தனையோடு  கண்ணயர்ந்து உறங்கினார்.

மறுநாள் காலை மூத்த மகள் விழித்தெழுந்து, அப்பா வேலைக்குப் போயிட்டாரான்னு பார்க்கச் சென்றாள். ஆனால், அவர் இன்னும் படுத்திருப்பதைக்  கவனித்தாள். அவரை நோக்கி நடந்து வந்தப்போ மேஜையில மோதி தடுமாற  அவருடைய  பழைய பட்டன் போன் தரையில் விழ, போன்ல  இருந்த  ‘0’ பட்டன் கழண்டு கீழே விழுந்தது. அதைக் கையில் எடுத்துவிட்டு, “அப்பா எழுந்திரிங்கப்பா, வேலைக்கு போகணும்ல என அப்பாவை எழுப்பினாள். அவர் எழுந்திருக்கவே இல்லை.

மூத்த மகள் உறைந்துபோய் நின்றாள். இந்த முறை அவள் மீண்டும் சத்தமாக “அப்பா!” என்று கூப்பிட்டாள். ஆனால், எந்தப் பதிலும் இல்லை. சத்தம் கேட்டு அம்மாவும், மற்ற இரண்டு மகள்களும் ஓடிவர, அவர்  அசையாமல் படுத்திருப்பதைக்  கண்டு உறைந்தார்கள். அவரோடு போட்டிப் போட்டு உழைத்த அவரது மூச்சுக்காற்றும் அவரோடு சேர்ந்து நிரந்தரமாக  உறங்கிப்போயிருந்தது. குடும்பம் உடைந்து போயிருந்தது. குற்ற உணர்ச்சியில் மூழ்கியிருந்த இரண்டாவது மகளால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. முந்தைய இரவில் அவள் பேசிய வார்த்தைகள் அவள் மனத்தில் எதிரொலித்தன.

எல்லாக் காரியங்களும் முடிந்தன. இரண்டாவது  மகள் குற்ற உணர்வோடு தன் அப்பாவின் அறைக்குச் சென்று, அவரது படுக்கையைக் கைகளால் மென்மையாகத் தடவி, அப்பா இருப்பதைப் போல நினைத்து “அப்பா என்று அழைத்தாள். ஒரு  பழைய டைரி  அவர் தலையணைக்கு அடியில் இருப்பதைக் கண்டாள். அதைத் திறந்தாள். அதில் பில்கள், குடும்பக் கணக்குகள் மற்றும் மூன்று மகள்களுக்கும் திருமணச் செலவுக்காக அவர் முன்பே திட்டமிட்டுப் போடப்பட்ட சிட் ஃபண்ட் விவரங்கள், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வாங்கி வைத்திருக்கும் தங்க பத்திரங்களின் விவரங்கள், தனது தாய்க்கு மருத்துவக் காப்பீடு, வைப்பு நிதியின் வட்டியில்  மாதாந்திர தனிப்பட்ட உதவித்தொகை போன்ற பல விவரங்கள். படித்த அவள் முகத்தில் இருந்து வழிந்த  கண்ணீர் டைரியின் பக்கங்களை நனைத்தது. அதை தன் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. அறையை விட்டு வெளியே வந்தாள். அலுவலகத்திலிருந்து அப்பாவுடைய நண்பர் வந்திருந்தார். அம்மாவிடம்  காசோலை ஒன்றைக் கொடுத்து, “இது ஜோசப்  போட்டிருந்த அவரது உயிர் காப்பீட்டிலிருந்து பெற்ற பணம். நான் இறந்த பிறகு இந்தப் பணத்தை வாங்கி வீட்டில் கொடுத்துடு நண்பா  என  என்னிடம் கூறியிருந்தார். தங்கமான மனுஷன்மா! குடும்பம்தான் எப்போதுமே அவரது சிந்தனைம்மா. அனாவசியமான செலவு எதையும் செய்ய மாட்டார். தன் குடும்பத்துக்காகச் சேமிப்பு, சேமிப்பு. அதுதான் எப்போதுமே அவரது சிந்தனை. உங்களுக்காக  ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தார். அவரு இறக்கலம்மா. நீங்க சிரமப்படக்கூடாதுன்னு  எல்லாத்தையும் உங்களுக்காகச் செய்து வைத்திருக்கிறார்.  அவரது நினைவுகள் உங்களோடு எப்போதும்  இருக்கும்படி செய்துவிட்டு போயிருக்கிறார் எனக் கூறிவிட்டு சென்றார்.

இதைக் கேட்ட இரண்டாவது மகள் தன் கையில் வைத்திருந்த அழுக்கடைந்து, ஆங்காங்கே கிழிந்து   போயிருந்த  அந்த அப்பாவின்  டைரியைக் கட்டி அணைத்துக்கொண்டு ஓடி  அப்பாவின் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டு ‘ஓவெனக் கதறி அழுதாள். “அப்பா, என்னை மன்னிச்சுடுங்க அப்பா. நீங்கதாப்பா ஸ்மார்ட்! எப்போதும் சூப்பர் ஸ்மார்ட்பா! திரும்பி உயிரோட வாங்கப்பா. நான் உங்களைக் கட்டி பிடிச்சு ‘நீங்க ஸ்மார்ட்னு சொல்லணும்பா என்று  கதறிய அவள் கூக்குரல் விண்ணை எட்டியது.

தேய்ந்து போன, அந்தப் பழைய பொத்தான் போன் அவரது அறையின் மேசையில் ஓர் அழகான கதாபாத்திரமாய், அவர்  பெருமை சொல்லும் காட்சிப் பொருளாய் அலங்கரித்துக் கொண்டிருந்தது.

news
சிறுகதை
பெற்றோரின் கண்டிப்பு – (காவல் அன்னை - 10)

என்ன யாழினி, இவ்வளவு லேட்டா வாரே, எங்கே நீ போயிட்டு வாரே?” என்றார் தந்தை கருணாகரன்.

ஆமா யாழினி, நீ பாட்டுக்கு ஊர் சுத்திட்டு வாறியா?” என்றாள் தாய் இந்திரா.

ஏன், நான் டாக்டர், பல கிளினிக் போவேன்என்றாள் யாழினி.

இப்ப எங்கே போயிட்டு வாரே?” என்றார் தந்தை.

டாக்டர் சேவியரோட கிளினிக் போயிட்டு வாரேன்.”

சேவியரோட கிளினிக் போனியா? அவரோட வீட்டிற்குப் போனியா? அதை இப்பச் சொல்லு!” என்றார் தந்தை.

அவரோட கிளினிக் போயிட்டு, அப்படியே மாடியிலே அவங்க வீட்டிற்கும் போயிட்டுத்தான் வரேன்என்றாள் சிரித்தபடி யாழினி.

ஏன் அவங்க வீட்டிற்குப் போறே? சேவியர் மனைவியைப் பறிகொடுத்த டாக்டர். அவரை ஆஸ்பத்திரியில் பார்த்த! அப்புறம் எதுக்காக வீட்டிற்குப் போகணும்?” என்றார் தந்தை.

அவரோட கிளினிக்கில் இரண்டு கேன்சர் பேசண்ட் வந்திருக்கிறதாகக் கிளினிக் ரிஷப்சனிஸ்ட் போன் பண்ணினாள். அதனால் அங்கே போய் பார்த்து பேஷண்டுகளைச் செக் அப் பண்ணி மாத்திரை மருந்து எழுதிக் குடுத்துட்டு வாரேன்என்றாள் யாழினி.

ஏன் அவங்களை உங்க ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்ல வேண்டியதுதானே?” என்றார் தந்தை.

அப்படியெல்லாம் பேஷண்டை அலைய வைக்க முடியாதுப்பா. உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? அதை வெளிப்படையாப் பேசுங்கஎன்றாள் யாழினி.

ஏங்க, டாக்டர்னா பல கிளினிக் போயிட்டு வருவாங்க. இதைப் போய் பெரிசா கிண்டி கிழங்கெடுக்குறீங்களே? பாவம் மகள் வேலை முடிஞ்சு களைப்பாய் வந்திருக்காள். நீ போய் ரெஸ்ட் எடும்மா யாழினி, இந்த மனுஷன் எதையாவது குழப்புவார், அதைப் பற்றிக் கவலைப்படாதேஎன்றாள் தாய் இந்திரா.

யாழினி வீட்டின் உள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ஏய் அறிவில்லாதவளே, யாழினி அந்த டாக்டர் வீட்டுக்கு அடிக்கடிப் போவாள் போலத் தெரியுது. நாம் சொல்ற பையனை விட்டுட்டு யாழினி பாதை மாறி போயிறக் கூடாதுன்னுதான் நான் இப்படிப் பேசினேன்என்றார் கருணாகரன்.

பாதை மாறிப்போனால் நாம் திசை திருப்பி கொண்டாருவோம். இதுக்கெதுக்கு வீண் வாதம்? சும்மா உங்க வேலையைப் பாருங்க, போய் ஒரு டம்ளரில் விஸ்கியை ஊத்தி உள்ளே தள்ளிட்டு சாப்பிட்டுப் படுங்கஎன்று சிரித்தாள் இந்திரா.

இப்படி என்னைப் படுக்கப்போட்டே உன்னோட காரியத்தை முடிச்சிருவியே. எப்படியும் யாழினி என்னோட தங்கை மகனைக் கட்டித்தான் தீரனும். நான் இதிலே பின்வாங்க மாட்டேன் இந்திராஎன்று பேசினார் கருணாகரன்.

காலம் போகப் போக எது நடக்கும்னு நாம் சொல்ல முடியாது. யாழினிக்கு யார்னு அந்தப் படைச்சவன் எழுதி இருப்பான். அதுதான் நடக்கும். வீணாய் வம்பு பண்ணாதே, போய் பேசாமல் படுஎன்றாள் இந்திரா.

ஒரு முடிவுக்கும் நீ ஒத்துவர மாட்டியே இந்திரா. என்னோட தங்கை மகனைக் கட்டலைன்னா, உன் அண்ணன் பையனைக் கட்டிவை. அவனும் நிறைய படிச்சு பெரிய வேலையில் இருக்கான்லஎன்றார் கருணாகரன்.

அதெல்லாம் யாழினிட்டே எடுபடாது. அவன் காலேஜ்லே வேலை செய்றான். ஏதோ புரபசர் வேலை பார்க்கிறதாச் சொல்றாங்க. டாக்டர் போயி அவனைக் கட்டுவாளா? கொஞ்சமாய் மூளையைப் பயன்படுத்தி யோசிய்யா. சும்மா கண்டதைப் போட்டு குழப்பி, என்னையும் குழப்பிவிடாதேஎன்றாள் இந்திரா.

எக்கேடும் கெட்டுப் போங்க, நான் போய் படுக்கிறேன்என்று கோபமாய் போனார் கருணாகரன்.

news
சிறுகதை
பனிமய மாதா திருவிழா (காவல் அன்னை (9) - தொடர் கதை)

வாங்க வாங்க... எல்லாரும் வாங்கஎன்று அன்போடு வரவேற்றார் ஆல்பர்ட்.

பரவாயில்லே தம்பி, எங்க வீட்டை நல்லா சுத்தம் பண்ணி வெச்சிருக்கீங்கஎன்றாள் அருளம்மா.

மாமா, நீங்க செய்த உதவி பெரிசு! வீடு ஆளில்லாமல் மோசமாய்க் கிடந்திருக்கும். நீங்களும் அத்தையும் இந்த வீட்டை ஒழுங்குபடுத்தி, நாங்க வந்து தங்குவதற்கு ஏற்றதாய் சரிபண்ணிட்டீங்கஎன்றாள் அமலி.

ரொம்ப தேங்க்ஸ் மாமா, அத்தைஎன்றார் சேவியர். ஆல்பர்ட்டின் மகளும் மகனும் மிகவும் பணிவோடு தோஸ்திரம் சொல்லிக்கொண்டனர்.

அக்கா, நீங்க இருக்கிற நாளிலே எங்க வீட்லே தான் நீங்க சாப்பிடணும்என்றார் ஆல்பர்ட்.

எதுக்குத் தம்பி கஷ்டம். ஏதாவது சாப்பிட சமைச்சுக்கிறோம்என்று சிரித்தாள் அருளம்மா.

நாங்க என்ன நாத்தனாரே, உங்களுக்கு வேண்டாதவங்களா? அதெல்லாம் சொல்லப்படாது. வேளா வேளக்கி எங்க வீட்லேதான் நீங்க சாப்பிடணும்என்றாள் ஆல்பர்ட் மனைவி விக்டோரியா.

சேவியருக்கு மட்டும் சாப்பாட்டை இங்கே கொண்டு வந்து தாரோம். நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்லே வந்து சாப்பிட்டுக்கங்கஎன்றார் ஆல்பர்ட்.

சரி தம்பி, உங்க ஆசையை நான் கெடுக்க விரும்பலை. சேவியருக்கு மட்டும் இங்க கொண்டு வந்து வச்சுருங்க, நாங்க ரெண்டு பேரும் உங்க வீட்ல சாப்பிட்டு இருக்கோம். சரிதானே நாத்தனாரே...” என்றாள் அருளம்மா

நாளைக்குப் பனிமய மாதா தங்கத்தேர் சுத்தி வரும், எல்லாரும் கோவிலுக்குப் போவோம், பூசைப் பார்ப்போம். இதுதானே நம்முடைய கடமைஎன்றார் ஆல்பர்ட்

பனிமய மாதானா சேவியருக்கு உசுரு! சின்னப் பிள்ளையிலிருந்து பீடச்சிறுவனாக இருந்தார்லேஎன்றாள் அருளம்மா.

ரொம்ப சரியா சொன்னீங்க அக்கா! அதோட இன்னைக்குச் சாயந்தரம் நம்ப தெருவிலே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க. அந்தப் பெண்ணை நீங்க வந்து ஓர் எட்டு பார்த்துவிட்டால் நல்லதுஎன்றார் ஆல்பர்ட்.

உங்க விருப்பப்படி போவோம்என்றார் அருளம்மா.

ஏன்மா, நம்ம வந்திருக்கிறது பனிமய மாதாவோட தேர்த் திருவிழாவுக்குத்தானே? இப்ப போய் பெண்ணைப் பார்க்கிறோம். அது என்ன, எனக்குச் சரியா படலைஎன்றார் டாக்டர் சேவியர்.

இதனால என்ன இருக்கு டாக்டர்! நான் உங்களைப் பத்திச் சொல்லி வச்சிருக்கேன். எல்லா விவரத்தையும் கேட்டவங்க, ரொம்ப எதிர்பார்த்து காத்து இருக்காங்க. இப்பப் பாக்குறது தப்பில்ல, பிடிச்சா சொல்லுங்க... முடிப்போம். இல்லனா விட்ரலாம்என்றாள் மாமா.

பெண் என்ன படிச்சிருக்குத் தம்பி?” என்றாள் அருளம்மா.

எம்.எஸ்.சி., பி.எட். படிச்சிட்டு நம்ம செயிண்ட் மேரிஸ் காலேஜ்ல வேலை செய்யுது, உங்க குடும்பத்தைப் பத்தி அவங்களுக்கு நல்லாவே தெரியும் அக்காஎன்றான் ஆல்பர்ட்

நான் வரலை அம்மா, தங்கச்சியைப் பார்க்கச் சொல்லுங்கஎன்றார் டாக்டர் சேவியர்.

தங்கத் தேர தரிசித்த பிறகு பெண்ணைப் பார்க்கலாம்ல? இதுல என்ன இருக்குஎன்றாள் தாய்.

சரிம்மா... உங்க விருப்பப்படி பார்ப்போம்... சரி தானே!” என்றார் அமைதியாய் சேவியர்.

மறுநாள்  மாதா கோவில் திருப்பலியைக் கண்ட பிறகு, அவர்கள் தங்கத்தேர் வலம் வந்ததைத் தரிசித்தார்கள். பிறகு ஆல்பர்ட் சென்னை வீட்டில் போய் பேராசிரியரான பெண்ணைப் பார்த்தார்கள். பெண்ணின் பெயர் சந்திரமேரி. அவள் அழகாக இருந்தாள். அருளம்மாவுக்கும் அமலிக்கும் பிடித்துப் போய்விட்டது.

சென்னைக்குப்போன பிறகு நாங்கள் தம்பிக்கு விவரத்தைத் தெரிவிக்கிறோம்என்றாள் அருளம்மா!        

(தொடரும்)

news
சிறுகதை
அக்கறை ஏற்பட்டது! (காவல் அன்னை தொடர் கதை – 07)

என்ன மிஸ் யாழினி, அந்தக் கேன்சர் பேஷண்ட் விசயமாய் எங்கிட்டேயே சொல்லி இருக்கலாமே?” என்றார் சகாதேவன்.

இல்லை டாக்டர், நீங்க நேரில் சொன்னால் வருத்தப்படுவீங்க. நீங்க இங்கே என்னைவிட சீனியர் டாக்டர். அது மட்டுமில்லே... டாக்டர் இஸ்மாயிலுக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால்தான், நான் டாக்டர் சேவியரிடம் டிஸ்கஸ் பண்ணினேன்என்றாள் யாழினி.

சேவியர் என்னைக் கூப்பிட்டு இதுபற்றி பேசினார். நானும் நீங்க இப்ப சொன்னதைத்தான் அவர்ட்டே சொன்னேன்என்றார் சகாதேவன்.

நீங்க நரம்பியல் மருத்துவர், நான் கேன்சர் ஸ்பெசலிஸ்ட். அப்ப கேன்சர் பேஷண்ட் பற்றி இந்த மருத்துவமனையில் நான்தானே முடிவெடுக்கணும். இதுதானே நார்மல் டூட்டிஎன்றாள் யாழினி.

அதனால்தான் நீங்க ஹீமோதெரபி கொடுத்தபோது நான் அப்படியே விட்டுட்டேன். நமக்குள்ளே ஒத்துப்போறதுதானே எதிர்காலத்துக்கு நல்லதுஎன்று சிரித்தார் டாக்டர் சகாதேவன்.

இதிலே எந்த மாறுபாடும் கிடையாது டாக்டர். நான் என் கடமையைச் செய்றேன், அவ்வளவுதான்என்று சிரித்தாள் யாழினி.

அதை விடுங்க, இந்த பிரபாகரன் பேஷண்டுக்கு நெற்றியிலே நரம்பு விட்ருச்சு; அதை நீங்க பார்க்கிறதாச் சொன்னாங்க. அவருக்கு என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் குடுக்குறீங்க?” என்றார் சிரித்தபடி.

டாக்டர் இஸ்மாயில்தான் அதைக் கவனமாய்ப் பார்க்கச் சொன்னார். நெற்றியிலே இருக்கிற பிரிஞ்ச நரம்பைச் சேர்க்கிறதுக்கான மருந்தைக் குளுக்கோசில் ஏத்துறோம். அதற்கான மெடிசனைச் சாப்பிடச் சொல்றோம்என்றாள் யாழினி.

கரெக்ட் யாழினி. வெரிகுட்! நீங்க சரியா அந்தப் பேஷண்டைப் பார்க்குறீங்க. இதிலே நரம்பு ரெண்டும் சேருவதற்கான டெவலப்மெண்ட் இருக்கா?” என்றார் சகாதேவன்.

நிச்சயம் இருக்கு டாக்டர்! முன்பைவிட இப்ப ரெண்டு நரம்பும் நெருங்கி வருது. ஒன் வீக்ல கட்டாயம் சேருவதற்கான நல்ல சான்ஸ் இருக்குஎன்றாள் யாழினி.

உங்களுடைய அணுகுமுறை எனக்குப் பிடிச்சிருக்கு. நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு செயல்பட்டால் பேஷண்ட்களுக்கு நல்ல குணம் கிடைக்கும், இல்லையா யாழினிஎன்று சிரித்தார் சகாதேவன்.

எங்கே சார், நமக்கு ஓய்வு இருக்கு? தொடர்ந்து பேஷண்ட்களைப் பார்த்துக்கிட்டே இருக்கோம்! இதிலே ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் சுகுமார் அடிக்கடி பெங்களூரு போயிட்றார். அவங்களையும், இஸ்மாயில் என்னைப் பார்க்கச் சொல்லி விடுகிறார். எப்படியோ நாள்கள் பரபரப்பாய் போகிறதுஎன்று சிரித்தாள் யாழினி.

ஒருநாள் எங்க வீட்டுக்கு நீங்க வரணும். எங்க அம்மா, அப்பா உங்களைப் பார்த்துப் பேச விரும்புறாங்கஎன்றார் சகாதேவன்.

உங்க வீடு எங்கே டாக்டர்? என்றாள் யாழினி.

நான் சாந்தோமில் இருக்கேன்என்றார் சகாதேவன்.

என்னோட வீடு ட்ரஸ்ட்புரத்தில் இருக்கு. இங்கே இருந்து அவ்வளவு தூரம் வர வாய்ப்பில்லை டாக்டர்என்றாள் யாழினி.

உங்க வீட்டு முகவரி சொல்லுங்க. அவங்களை உங்க வீட்டுக்கு வந்து பார்க்கச் சொல்றேன். ஒரு சண்டேயில வருவாங்கஎன்று புன்னகைத்தார் சகாதேவன்.

எதற்கு வரச்சொல்கிறார்? இவரின் பெற்றோர்கள் ஏன் வீட்டிற்கு வரவேண்டும்?’ யாழினி மனதிற்குள் சரியான பதில் கிடைத்துவிட்டது.