செபா,
சிவா, அப்துல் மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். கல்லூரி விடுதியிலும் ஒரே அறையில்தான் தங்கியிருக்கிறார்கள். வெவ்வேறு குடும்பச் சூழலில் வளர்ந்தவர்களாயினும், மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அவர்களிடமிருந்த கருத்தொருமிப்பு அவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்தது.
மூவரும்
படிப்பில் அக்கறை செலுத்தினார்கள். படிப்பில் சில வேளைகளில் அவர்களுக்குள் போட்டி இருந்தது; ஆனால், பொறாமை இல்லை. பாடப் பகுதியிலோ அல்லது செயல்முறை விளக்கத்திலோ புரியாத பகுதி இருந்தால், மனமுவந்து ஒருவர் ஒருவருக்குப் புரியும்படி விளக்கி இன்பமாகக் கற்பதில் மகிழ்ச்சி கொண்டனர்.
ஒருநாள்
ஒரு பெரிய தோள் பையுடன் கல்லூரி வளாகத்திற்குள் புதிதாக ஒருவன் வந்தான். அவன் தனியாக நின்ற மாணவன் ஒருவனிடம் சென்று நயந்து பேசி, நட்பு கொண்டாடி, தான் கொண்டு வந்திருந்த ஏதேதோ பொருள்களை அவனிடம் கொடுத்துப் பார்க்கும்படி சொல்லி விளக்கம் கூறிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த மற்ற மாணவர்களும் ஒருவர் ஒருவராக வந்துசேர அங்கு ஒரு கூட்டமே கூடிவிட்டது.
நண்பர்களுள்
ஒருவனான அப்துல் கூட்டத்திற்குள் சென்று என்னவென்று பார்த்தான். விற்பனையாள், தான் கொண்டு வந்த பொருள்களை எப்படியாவது மாணவர்களிடம் விற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இனிமையான கதைகளைப் பேசி வாங்க வைத்தான். பணம் இல்லாதவர்களிடமும், “அடுத்த வாரம் நான் வரும்போது தந்தால் போதும்; அவசரம் ஒன்றுமில்லை; இந்தப் பொருள்களின் சுவையை நீங்கள் அறியவேண்டும்” என்று
கூறி ஒருசில மாணவர்களின் கைகளில் திணித்தான்.
வாங்க
மனமில்லாமல் இருந்தவர்களும் அவனது கவர்ச்சியான பேச்சில் மயங்கி, மது உண்ட வண்டுகளைப்போலப் பொருள்களை வாங்கிச் சென்றனர். அப்துலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டான். ஆனாலும், அவன் மனத்தில் ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டதுபோல ஒரு குற்ற உணர்வுடன் வாங்கிய பொருள்களை நண்பர்களிடம் காட்டலாமா? காட்ட வேண்டாமா? என்ற போராட்டத்தில் அவற்றை மறைத்து வைத்துக் கொண்டான்.
விடுதி
அறைக்குச் சென்றதும் சிவா, “நண்பா, ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? என்ன விசயம் நடந்தது? சொல்” என்றான்.
உண்மையை
மறைக்க விரும்பாத அப்துல், தான் வாங்கிய பொருள்களை நண்பர்களிடம் காட்டினான். சிறிய சிறிய பொட்டலங்களாக இருந்த அப்பொருள்களைப் பார்த்த நண்பர்கள் வியந்து, “டேய் மச்சான், உனக்கு இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள்.
நடந்த
நிகழ்வுகளை ஒன்றும் விடாமல் அப்துல் கூறினான். “நண்பா, இவை எல்லாம் உண்மையிலேயே மிகவும் மோசமான போதைப் பொருள்கள். இவற்றைப் பயன்படுத்துவோரைக் கொஞ்சம் கொஞ்சமாக இது அடிமைப்படுத்தி அடியோடு அழித்துவிடும். எனவே, இவற்றை நாம் யாருமே பயன்படுத்தக்கூடாது. குழிதோண்டி புதைத்துவிட வேண்டும்”
என்றான் சிவா.
“ஏன் புதைக்கவேண்டும்? யாருக்காவது கொடுத்தால் என்ன?” என்று அந்தப் போதைப்பொருளின் கொடூரம் தெரியாமல் கேட்டான் அப்துல்.
“இது நல்ல பொருள் என்றாலோ, இதனால் யாருக்காவது நற்பயன் கிடைக்கும் என்றாலோ இதை நாம் யாருக்காவது கொடுக்கலாம். ஆனால், தீமை விளைவிக்கக்கூடிய பொருளை இலவசமாகக் கூட யாருக்கும் கொடுக்கக்கூடாது” என்றான்
செபா.
தோட்டத்தில்
ஒதுக்குப்புறமாகக் கிடந்த ஒரு குழியில் அப்பொருள்களைப் போட்டு நண்பர்கள் அதை மண்ணால் மூடிவிட்டார்கள். அதன்பின் சமாதானத்துடன் அறைக்கு வந்தனர்.
“இதுபோன்ற பொருள்களை வேறு யாராவது வாங்கினார்களா?” என்று கேட்டான் சிவா.
“ஆமாம், இன்னும் சில மாணவர்கள் வாங்கினார்கள். இதை விற்றவன் அடுத்த வாரம் வருவதாகவும் கூறினான்”
என்றான் அப்துல்.
“இப்படிப்பட்ட தீமைகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் அது இளம் தலைமுறையையே வாழவிடாமல் அழித்துவிடும்” என்றான்
செபா ஆதங்கத்தோடு.
“இப்போது நாம் என்ன செய்வது?” என்று கேட்டான் அப்துல் கவலையோடு.
“இதை வாங்கியவர்களில் ஒருசிலரின் பெயர்களாவது உனக்குத் தெரியுமா?” என்று சிவா கேட்க, ‘தெரியும்’
என்று தலையசைத்தான் அப்துல்.
“அப்படியானால் நல்லது. நாம் நமது பேராசிரியரிடம் இதைச் சொல்ல வேண்டும். அவர் நமது பெயர் வெளிவராமல் வாங்கியவர்களிடம் விசாரித்து, விற்றவனையும் பிடித்துத் தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்வார். நாம் நமது இளம் மாணவர் சமுதாயத்தைப் பெரும் கேட்டிலிருந்து காப்பாற்றியவர்கள் ஆவோம்” என்றான் செபா.
மூவரும்
பேராசிரியரைப் பார்த்துப் போதைப் பொருள்கள் பற்றிய நிகழ்வுகளை விவரமாக எடுத்துரைத்தனர். பேராசிரியர் அவர்களைப் பாராட்டி,
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’
என்ற
திருவள்ளுவரின் இனிய குறளுக்கு ஏற்ற நல்ல நண்பர்களாக விளங்குகிறீர்கள். தீமையைச் சுட்டிக்காட்டி திருத்துவதுதான் நல்ல நண்பர்களுக்கு இலக்கணம். அவ்வகையில் நல்ல நண்பர்களான உங்கள் மூவராலும் இக்கல்லூரி பெருமையடைகிறது” என
மனமார வாழ்த்தினார்.
கல்லூரிக்குள்
நுழைந்த போதை அரக்கனைத் தடுக்க அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்தார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். போதைப்பொருள்களை விற்பனைக்காகக் கொண்டுவந்த ஆசாமியும் வசமாக மாட்டிக்கொண்டான்.
போதை
என்னும் படுகுழிக்குள் விழவிருந்த மாணவச் செல்வங்களும் நண்பர்களின் முன்மதியாலும், நற்குணத்தாலும் காப்பாற்றப்பட்டனர்.
கல்லூரி
ஆண்டு விழாவில் போற்றுதற்குரிய இச்செயலுக்காக செபா, சிவா, அப்துல் ஆகியோருக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.
நண்பர்கள்
மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் ‘நண்பேன்டா’
என்று கைகளைத் தட்டிக் கொண்டனர்.