news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.09.2026)

மரியாவின் எளிய உடனிருப்பும், அவருக்குள் இருந்த திருமகனின் உடனிருப்பும் வரலாற்றையே மாற்றுகின்றன.”

செப்டம்பர் 07, நல்லாலோசனையின் அன்னை திருத்தலம், ஜெனாசானோ

அமைதி என்பது இறைவன் அளிக்கும் கொடை; உயிர்த்தெழுந்த ஆண்டவரின் உயிர்மூச்சு; தூய ஆவியாரின் செயல்பாடு.”

செப்டம்பர் 07, நல்லாலோசனையின் அன்னை திருத்தலம், ஜெனாசானோ

குடும்ப வாழ்வு இரு மிகப்பெரிய அற்புதங்களாக வாழ்வையும் அன்பையும் வழங்குகின்றன.”

செப்டம்பர் 05,  வத்திக்கான் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் திருத்தந்தை சந்திப்பு

ஒருவருக்கொருவர் நாம் செலுத்த வேண்டிய ஒரு கடன் உள்ளது; அது நம்மை அடிமைப்படுத்தாது.”

செப்டம்பர் 06, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரைபுனித பேதுரு பெருங்கோவில் வளாகம்

கிறிஸ்துவில் இறைமக்களை ஒன்றிணைக்கும் நற்கருணையானது, அன்பில் திரு அவை ஒன்றிப்பின் ஆன்மிக வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறது.”

செப்டம்பர் 05, தூய ஆவியார் கூட்டமைப்பின் 50-ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு  தூய நற்கருணையின் சபை சகோதரிகளைத் திருப்பீடத்தில் சந்திப்பு, இத்தாலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.09.2026)

அன்றாட வாழ்வின் வேகத்திலிருந்தும் இரைச்சலிலிருந்தும் சற்று விலகி, இறைவன் நம்மிடம் பேசுகின்ற இனிமையான படைப்பின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும்.”

செப்டம்பர் 01, லவுதாத்தோ சி கிராமத்தில் திருத்தந்தை உரை

நீரைப் பாதுகாப்பது படைப்பாளர் மீதான அன்பின் அடையாளமாகவும், ஏழைகளின் வாழ்வுக்கான அர்ப்பணிப்பாகவும் அமைய வேண்டும்.”

செப்டம்பர் மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல் கருத்து

தன்னலத்தைத் துறந்து, தங்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவைப் பின்பற்றும் அன்பின் வழி மட்டுமே வாழ்வின் வழி.”

ஆகஸ்டு 29, ஏரிகளின் அன்னை மரியா திருத்தலம் காஸ்தல் கந்தோல்போ

காயம் எதுவாக இருந்தாலும், குற்றம் எதுவாக இருந்தாலும், தீமை நமது மனிதத்தன்மையைச் சிதைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.”

ஆகஸ்டு 29, ஏரிகளின் அன்னை மரியா திருத்தலம் காஸ்தல் கந்தோல்போ

இறைவனின் செயல்களை ஒருபோதும் தீர்ப்பிடாமல், அவை நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தாலும், இறைவன் தமது செயல்களின் வழியாக நமக்கு வெளிப்படுத்துவதைத் தாழ்ச்சியுடனும் இறைவேண்டலுடனும் கேட்கவேண்டும்.” 

ஆகஸ்டு 30 அன்று நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.09.2026)

மனித இதயம் பின்தங்கிவிடாமல், தொழில்நுட்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டும்.”

ஆகஸ்டு 22, சனிக்கிழமையன்று, பியத்மாண்டில் உள்ள டோரே பெல்லிஸி

இராணுவப் பணியாளர்களே, ஆண்டவருக்குள் உறுதியாயிருங்கள்; உண்மை, நீதி மற்றும் அமைதியின் நற்செய்தியில் உறுதியாக நில்லுங்கள்.”

ஆகஸ்டு 24, திங்களன்று, போர்ச்சுகல் இராணுவ மறைமாவட்ட உறுப்பினர்களைத்  திருப்பீடத்தில் சந்தித்தார்

அதிகாரம் அல்ல; சேவையே கிறித்தவ வாழ்வின் அடையாளம்.”

ஆகஸ்டு 22, சனிக்கிழமையன்று திருத்தந்தை லியோ, சான் மரினோ மற்றும் ரிமினி 

சந்திப்பும் உரையாடலும் அமைதிக்கான பாதைகள்.” 

ரிமினியில் நடைபெற்ற 47-வது மக்களுடன் நட்புறவுக்கான சந்திப்பு

உண்மையான சுதந்திரம் என்பது தனிமனித மாண்பு, மனச்சான்றின் உரிமை, ஒன்றிப்பு மற்றும் உரையாடலில் நிறைவேறுகிறது.”

ஆகஸ்டு 22, சனிக்கிழமையன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சான் மரினோ குடியரசுக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (30.08.2026)

இசை என்பது திருவழிபாட்டை அலங்கரிக்கும் ஒன்றல்ல; மாறாக, திருவழிபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இறைவேண்டலின் வெளிப்பாடாகவும் உள்ளது.”

ஆகஸ்டு 19, புதன் பொது மறைக்கல்வி உரை, வத்திக்கான்

இன்று மரியாவில் நாம் மகிழ்ச்சியுடன் காணும் வாழ்வின் நிறைவு, காலத்தின் முடிவில் நமக்கும் காத்திருக்கிறது.”

ஆகஸ்டு 15, சனிக்கிழமை, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

உண்மையான அழகு அன்பிலும் தூய்மையிலும் வெளிப்படுகிறது. மரியாவின் விண்ணேற்பு மனிதகுலத்தின் விண்ணக அழைப்பை எடுத்துக்காட்டுகிறது.”

ஆகஸ்டு 15, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா திருப்பலி,

புனித தோமா வில்லனோவா திருத்தலக் காஸ்தல் கந்தோல்போ

lex orandi, lex credendi அதாவது, நாம் எவ்வாறு செபிக்கிறோமோ, அவ்வாறே நாம் நம்புகிறோம். அதாவது, இறைவேண்டலின் சட்டமே நம்பிக்கையின் சட்டமாகவும் அமைகிறது.”

ஆகஸ்டு 19, புதன் பொது மறைக்கல்வி உரை,

புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான்

இறைவனின் அருள்விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. இறைவனின் பிள்ளைகள் எவரும் புறக்கணிக்கப்படவோ, வெறும் சிறு துணுக்குகளுடன் விடப்படவோ கூடாது என்பதையும் கற்றுத்தருகிறது கானானியப் பெண்ணின் ஆழமான நம்பிக்கை.”

ஆகஸ்டு 16, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை,

காஸ்தல் கந்தோல்போ

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (16.08.2026)

இசை மனித இதயங்களை இறைவனை நோக்கி உயர்த்தும் ஓர் அருள்கொடை. இசையின் அழகு, மனிதரை அழகின் முழுமையான ஆதாரமாகிய இறைவனைச் சந்திக்கச் செய்கின்றது.”

ஜூலை 29,  காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருத்தந்தையரின் தோட்டத்தில்  ‘அமைதியின் புகழ்ப்பாடல்என்ற செப நிகழ்வு

நற்செய்தியால் ஒளியூட்டப்பட்ட மனச்சாட்சியை எந்தச் சங்கிலியாலும் சிறைப்படுத்த முடியாது. ஆண்டவர் தம் பிள்ளைகளுக்காக ஆயத்தப்படுத்தும் விடியலை எந்த இரவும் தடுக்க முடியாது, இறைவனின் அன்பிலிருந்து எவரையும் எந்தச் சிறையும் பிரிக்க முடியாது.”

ஜூலை 31 அன்று 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற 97 வயதான கர்தினால் எர்னெஸ்ட் சிமோனி அவர்களுக்கு அனுப்பிய செய்தி

மனிதனின் உடல் பசியை மட்டுமல்ல, உண்மை மற்றும் வாழ்விற்கான ஆழ்ந்த ஆன்மிக ஏக்கத்தையும் கிறிஸ்துவே உண்மையாக நிறைவு செய்கிறார்.”

ஆகஸ்டு 2 ஞாயிறன்று  புனித பேதுரு பெருங்கோவில் வத்திக்கான் செய்தி

ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு உறுதியுடனும் துணிவுடனும் அவரைப் பின்பற்றுங்கள். இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவம் நம் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. அது அவரது அன்பிற்கும் இரக்கத்திற்கும் சாட்சிகளாக வாழும் வலிமையை நமக்குத் தருகிறது.”

ஆகஸ்டு 3,  தேசிய இளையோர் தினத்திற்கு அனுப்பிய காணொளிச் செய்தி

செபம் இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல் மற்றும் அருளடையாளங்கள் ஆகியவை ஆண்டவருடனான தனிப்பட்ட சந்திப்பிற்கு வழிவகுக்கின்றன.”

பன்னாட்டு இளையோர் விழா தொடக்க நிகழ்வை முன்னிட்டு  அனுப்பிய செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (09.08.2026)

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் எப்போதும் உண்மை, மனித மாண்பு மற்றும் பொதுநலனுக்குச் சேவை செய்யவேண்டும்.”

ஜூலை 27, சிலி நாட்டின் சாண்டியாகோவில் நடைபெற்ற திரு அவை தகவல் தொடர்பு குறித்த உலகளாவிய கருத்தரங்கு 

முதியவர்கள் சுமை அல்ல; பேணிப் பாதுகாக்கவேண்டிய இறைவனின் கொடை! முதுமை என்பது ஆன்மிக ஓய்வுக்காலம் அல்ல; அது இறைவன் அளிக்கும் ஓர் அழைப்பு.”

ஜூலை 26, வத்திக்கானில் நடைபெற்ற 6-வது உலக தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோர் நாள்  செய்தி

இளைஞர்களின் உற்சாகம் அனைவரிடமும் புதிய மறைப்பணி உணர்வைத் தூண்டுகிறது. கிறிஸ்து இல்லாத வாழ்க்கை அருளற்ற வாழ்க்கை.”

ஜூலை 25, ‘அல்லேலூயாகத்தோலிக்க இசை விழாவை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தி

கிறித்தவ ஒருமைப்பாடு கிறிஸ்துவின் மறைபொருளில் வேரூன்றி உள்ளது. அருள்சாதனங்கள், குறிப்பாக நற்கருணை மூலம் அது ஊட்டமளிக்கப்படுகிறது.”

ஜூலை 24, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டம்

அணு ஆயுதங்கள் அமைதியை உருவாக்குவதில்லை; மாறாக, ஆயுதக் குறைப்பே நிலையான அமைதியை உருவாக்கும்.”

22 ஜூலை, திருத்தந்தையின் புத்தகம்ஆயுதமற்றதும் ஆயுதங்களை அகற்றுவதுமானது: அமைதி ஒரு கொடை.’