news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (07.12.2025)

செயற்கை நுண்ணறிவால் மருத்துவ நன்மைகள் இருந்தாலும், மனித மாண்பைக் காக்க பொறுப்புடன் அவற்றைப் பயன்படுத்தி, இரக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை முன்னிறுத்த வேண்டும்.”

நவ. 10, ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்மாநாடு செய்தி

திரு அவை ஆன்மிக-கல்வி மையமாக, மனிதமும் தெய்வீகமும் இணைந்த சேவையாகக் கிறிஸ்துவில் மையமாக வேண்டும்.”

நவ. 11, உரோமையின் புனித ஆன்செல்ம் கோவில் நேர்ந்தளிப்பின் 125-வது ஆண்டு நிறைவுச் சிறப்புத் திருப்பலி

சகோதரத்துவம் மற்றும் உடன்பிறந்த உறவை இயேசு, அன்பின் அடிப்படையில் உலகளாவிய மனிதநேயமாக்கினார்.”

நவ. 12, புதன் மறைக்கல்வி உரை

மறையுண்மை, கடவுளுடன் ஆழமான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் ஆன்மிகக் கொடை!”

நவ. 13, இறை ஒன்றிப்பு நெறி மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு உரை

அமைதி, நீதி, மனித மரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் கல்விச்சிறப்பைத் தொடரவேண்டும்.”

நவ. 14, பாப்பிறை இலாத்தரன் பல்கலைக்கழகத்தின் 253-வது கல்வியாண்டு துவக்க உரை

திரைப்படம் அழகு மற்றும் உண்மையை வெளிப்படுத்தி, சமூக மனிதநேயத்தை உயர்த்தும் ஆன்மிகக் கலையாக உலகச் சவால்களைப் பிரதிபலிக்கவேண்டும்.”

நவ. 15, உலகத் திரைப்படத் துறையின் நிபுணர்கள் குழுச் சந்திப்பு

வறுமை தார்மீகச் சவாலாகும்; ஏழைகளுக்கு நீதி, கருணை, சேவை வழங்கி இறையாட்சியை வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்.”

நவ. 16, உலக வறியோர் நாள் திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (30.11.2025)

மரணம் நிலைவாழ்வின் நம்பிக்கைப் பயணம், இறைப்பணியாளர்கள் விண்மீன் என ஒளிர, பாஸ்கா நம்பிக்கையில் நிலைத்திருக்கவேண்டும்.”

நவ. 3, இறைப்பதமடைந்த இறைப்பணியாளர்கள் நிறையமைதி அடைய திருப்பலி

துன்பமும் விரக்தியும் அனுபவிப்போருக்கு இரக்கமும் ஆதரவும் அளிக்கும் சமூகத்தை உருவாக்கி, வாழ்வின் நம்பிக்கை அர்த்தத்தை மீட்டெடுப்போம்.”

நவ. 4, இம்மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல்

பாஸ்கா மறைபொருள் வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையின் அடித்தளம்; எல்லையற்ற அர்த்தத்தையும் புது வாழ்வையும் நோக்கிய அழைப்பு.”

நவ. 5, புதன் மறைக்கல்வி உரை

மதச்சார்பின்மைச் சவால்களின் மத்தியில் கிறித்தவர்கள் ஒன்றிப்பில் நற்செய்திப் பணிக்குத் திறம்பட ஈடுபடவேண்டும்.”

நவ, 6, ஐரோப்பா திரு அவையின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

நற்செய்தி அறிவிப்பில் ஒன்றிப்பும், மறைப்பணிக்கான பன்னாட்டு ஒத்துழைப்பில் ஆதரவும் துணிவும் அன்பும் அவசியம்.”

நவ. 7, அனைத்துலக மதங்கள் அமைப்பு மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு

இயேசுவே உண்மையான கோவில், நம்பிக்கையாளர்களே உயிருள்ள கற்கள் என்பதை உணர்ந்து, அருளில் நிலைத்து இரக்கம் மற்றும் அமைதியின் நற்செய்தியைப் பரப்பவேண்டும்.”

நவ. 9, மூவேளை இறைவேண்டல் உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (23.11.2025)

கிறித்தவ ஒற்றுமைக்கான புதிய தொடக்கம்: கத்தோலிக்கமும் கிழக்கின் அசீரியத் திரு அவையும் ஒருமைப்பாதையில் முன்னேறுகின்றன.”

அக். 27, அசீரியத் திரு அவையின் முதுபெரும் தந்தை மூன்றாம் David Royel சந்திப்பு

மனமாற்றம், விடுதலை, புதிய பார்வையின் அருளில் இயேசுவைப் பின்தொடர்வதே நமது உண்மையான பயணம்.”

அக். 28, திருப்பீடப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் திருப்பலி  மறையுரை

மதங்களுக்கிடையேயான உரையாடலில் அன்பையும் உண்மையையும் வேராகக் கொண்டு, மனிதகுலத்தின் ஒற்றுமை, அமைதி மற்றும் நீதி நோக்கி நாம் ஒன்றிணைவோம்.”

அக். 29, புதன் மறைக்கல்வி உரை

“இளைஞர்கள் உண்மை, நம்பிக்கை, ஆன்மிகம், கல்வி மூலம் உயர்ந்து, சமூகமாற்றம் மற்றும் அமைதியை உருவாக்கவேண்டும்.”

அக். 30, கல்வி உலகின் விழா சிறப்புரை

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களை நம்பிக்கை, பகுத்தறிவு, படைப்பாற்றல் மற்றும் சமூக நன்மைக்கான மையமாகவும் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் ஊக்குவிக்கவேண்டும்.”

அக். 31, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் அமைப்பின் ODUCAL உறுப்பினர்களுடன்  சந்திப்பு

கல்வியே எதிர்நோக்கின் திருப்பயணம், சமத்துவம், ஒளி, உண்மை மற்றும் புனிதத்திற்கான உலகளாவிய அழைப்பாகும்.”

நவ 1, அனைத்துப் புனிதர் பெருவிழா மற்றும் கல்வி உலகத்தின் யூபிலிக்கான திருப்பலி

புனிதர்களின் ஒற்றுமையை நினைவூட்டி, மனிதகுலம் சகோதரத்துவம், அமைதி மற்றும் கடவுளின் அன்பில் ஒன்றிணையவேண்டும்.”

நவ 2, மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (09.11.2025)

நம்பிக்கையுடன் சேவை, அன்பு, ஒற்றுமை வழியாகக் கடவுளின் அரசை மகிழ்ச்சியுடன் கட்டியெழுப்பவேண்டும்.” 

- அக். 20, புனிதர்பட்டத் திருப்பலி

உயிர்த்தெழுந்த இயேசு சோகத்தை நம்பிக்கையாக்கி, இருளை ஒளியாக மாற்றி, வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறார்.”

- அக். 22, புதன் மறைக்கல்வி உரை

உண்மை, அன்பு, மன்னிப்பு, இரக்கத்தில் நிலைத்து, கடவுளுடனான நிலையான ஒற்றுமையை நோக்கிப் பயணிக்கவேண்டும்.”

- அக். 23, எருசலேம் திருக்கல்லறைச் சபையினருடன் சந்திப்பு

உயிர்த்தெழுந்த இயேசுவில் நம்பிக்கை வைத்து, காணாததை எதிர்நோக்கி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையுடன் மனிதகுலம் பயணிக்கவேண்டும்.”

- அக். 25, யூபிலி ஆண்டிற்கான மறைக்கல்வி உரை

அன்பு, உரையாடல், அமைதியின் பாதையில் ஈராக்கில் நம்பிக்கை வளர்க்கப்படவேண்டும்.”

- அக். 26, Miroslaw Stanislaw Wachowski ஆயர் அருள்பொழிவு திருப்பலி மறையுரை

தாழ்மையுடன் மனமாறிச் செபிக்கும் இதயமே கடவுளின் இரக்கத்தையும் நீதியையும் பெறும் உண்மையான பாதை.”

- அக். 26, மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (02-11-2025)

புனிதத்துவம் என்பது ஒப்பீடல்ல; ஒன்றிப்பையும், பிறருக்கான ஊக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது.”

அக். 13, இறை ஊழியரான கர்தினால் இரஃபேல் மேரி தெல் வால் அவர்களின் 160-வது பிறந்தநாள்

கலை, நம்பிக்கை, மனிதாபிமானம் மற்றும் ஒருங்கிணைப்பின் முன்னுதாரணமாகத் திகழ்கிறது இத்தாலி.”

அக். 14, இத்தாலிய அரசுத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் சந்திப்பு

உயிர்த்தெழுந்த இயேசுவே நம் வாழ்வின் ஊற்று; அவர் நம் பயணத்தின் நோக்கமும் நம்பிக்கையும் ஆவார்.”

அக். 15, புதன் மறைக்கல்வி உரை

தவறான எண்ணங்களை மறந்து, மன்னிப்பையும் அமைதியையும் பரப்பும் இளைஞர்களை ஊக்குவிப்போம்.”

அக். 17, உரோமின் ஓஸ்தியா கடற்கரையில் மாணவர்களோடு சந்திப்பு

சுரண்டலை எதிர்த்து மனித மரியாதையை மீட்டெடுப்பதே யூபிலியின் நீதியும் நோக்கமும் ஆகும்.”

அக். 18, தேசிய வட்டி எதிர்ப்பு சங்க உறுப்பினர்கள் சந்திப்பு

நம்பிக்கை நீதியின் அடிப்படை; புதிய புனிதர்கள் அதை வாழ்ந்து காட்டிய நேர்மையான சாட்சிகள்.”

அக். 19, திருப்பயணிகளுக்கான மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (26.10.2025)

நமது ஏமாற்றத்திலும் இருளிலும் கூட, உயிர்த்தெழுந்த இயேசு நம்முடன் நடந்துகொண்டிருக்கிறார்.”

- அக். 8, புதன் மறைக்கல்வி உரை

திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திரு அவையின் ஒருமைப்பாட்டில் கேட்டுப் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.” 

- அக். 9, அருள்தந்தை தோம் மேத்தியோ ஃபெராரி (GSO) அவர்களுக்கு வாழ்த்துச்செய்தி

மக்களுடன் இணைந்து பயணிக்கும் கேட்கும் பகிரும் பரிசோதிக்கும் திரு அவையை உருவாக்குவோம்.”

- அக். 11, திருப்பயணிகளுக்கான செய்தி

இறைவனுடனான உள்ளார்ந்த உறவு மனிதகுல ஒற்றுமைக்கும் திரு அவையின் புனிதத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.”

- அக். 11, துறவறத்தாருக்கான யூபிலிச் சந்திப்பு

மரியன்னையின் மீதான ஆன்மிகம் இயேசுவை மையமாகக் கொண்டு, நம்மை உயிர்த்தெழுதலின் வழியில் புதுப்பிக்கிறது.”

- அக் 12, மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி

துன்புறுவோருடன் கடவுள் என்றும் இருக்கிறார்; மன்னிப்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மனிதகுலத்தின் தற்போதைய தேவை.”

- அக் 12, மூவேளைச் செப உரை