news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (19.10.2025)

தகவல் தொடர்பில் மனிதக்குரலும் திறனும் முக்கியம்; செயற்கை நுண்ணறிவால் நெறிமுறையையும் பொறுப்பையும் மாற்ற முடியாது.”

- செப் 30, 60-வது உலகத் தகவல் சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி

உயிர்த்தெழுந்த இயேசுவின் அமைதி, அன்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனிதர்கள் நல்லிணக்கத்தின் சாட்சிகளாக அழைக்கப்படுகின்றனர்.”

- அக் 1, புதன் மறைக்கல்வி உரை

மதங்கள் இடைவெளிகளை நீக்கும் பாலங்களாக மாறி, மனித ஒற்றுமை, அமைதி மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கு உறுதி செய்யட்டும்.”

- அக் 2, பல்வேறு மத மரபுகளுக்கு இடையிலான ஒருமைப்பாட்டு செப உரை

இரக்கம், நேர்மை, ஒற்றுமை, மரியாதை ஆகியவை ஒருமித்த அன்பு வாழ்க்கையின் அடித்தளங்கள் ஆகும்.”

- அக் 3, புதிய சுவிஸ் காவலர்கள் பணியேற்பு

யூபிலி - நம் இதயங்களை மாறச் செய்து, மன்னிப்பில் புதிய தொடக்கத்திற்கு நம்பிக்கையை வழங்கும் காலமாகும்.”

- அக் 4, யூபிலி சிறப்பு மறைக்கல்வி உரை

நம்பிக்கை, இரக்கம், ஒன்றிப்பு மூலம் கிறிஸ்துவின் மீட்பில் நாம் ஒவ்வொருவரும் பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம்.”

- அக் 5, புலம்பெயர்ந்தோருக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (12.10.2025)

மறைக்கல்வி என்பது தனித்துவம் மற்றும் முரண்பாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் பயண வழிகாட்டிப் புத்தகம். இது முழு கத்தோலிக்கத்  திரு அவையின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.”

செப்டம்பர் 28, மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி திருப்பலி

கடவுளின் வார்த்தையைக் கேட்பதிலும் குழு செபத்திலும் வேரூன்ற முயற்சி செய்யுங்கள்; இதன் வழியாக, கிறித்தவச் சான்று வாழ்வின் ஆற்றலையும் ஒளியையும் காண்பீர்கள்.”

செப்டம்பர் 27. யூபிலி மறைக்கல்வி உரை

படைப்பின் மீதான நமது அக்கறையானது நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் வெளிப்பாடாக அமைகின்றது.”

செப்டம்பர் 25. வலைதளப் பதிவு

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் எளியவர்களின் குரலாக இருப்பது ஒவ்வொரு கிறித்தவரின் வாழ்க்கை மற்றும் பணியின் அடிப்படை அம்சம்.”

செப்டம்பர் 25 திருப்பீடச் சார்பு இதழின் 175-ஆம் ஆண்டு  வாழ்த்துச் செய்தி

இயேசுவுடனான நட்புறவு மகிழ்ச்சியின் அடிப்படையாகவும், துன்பம் மற்றும் சோதனை காலங்களில் ஆறுதலாகவும் இருக்கட்டும்.”

செப்டம்பர் 24, மறைக்கல்வி உரை

உரையாடல் மற்றும் நட்புறவின் பாதை சவாலானதாக இருக்கலாம்; ஆனால், அது அமைதியின் விலைமதிப்பற்ற பலனைத் தருகிறது.”

செப்டம்பர் 22, இந்தோனேஷியா மக்களுடன் சந்திப்பு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (05.10.2025)

உள்ளார்ந்த ஆன்மிகம், அழைத்தல் மற்றும் அன்பின் வழியாய் மறைப்பணி, சமூகத்துடனான வாழ்வை ஆழப்படுத்துகிறது.”

- செப். 15, புனித அகுஸ்தினார் சபையின் புதிய சபைத் தலைவருக்கு வாழ்த்து

துன்பத்திலும் இருளிலும் கூட கடவுளின் ஆறுதல் நம்மை வழிநடத்தும் நம்பிக்கையின் பாலமாகிறது.”

- செப். 16, ஆறுதல் அளிப்பவர்களுக்கான யூபிலி சிறப்பு உரை

அன்பில் நிறைந்த காத்திருப்பின் மௌனத்தில், நம்பிக்கை வழியாகக் கடவுள் புதிய எதார்த்தத்தை உருவாக்குகிறார்

- செப். 17, புதன் மறைக்கல்வி உரை

துறவற வாழ்வு, காலத்தின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் தூய ஆவியாரின் சான்றாகச் சமூகத்திற்கு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.”

- செப். 18, துறவற சபையினர் சந்திப்பு

எதிர்நோக்கின் யூபிலி, குடும்பங்களை நம்பிக்கையின் வேர்களுக்குத் திருப்பி, இயேசுவில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை நோக்கி அழைக்கிறது.”

- செப். 19,  குடும்பத்தின் எதிர்காலம் குறித்து CELAM குழுவினர் சந்திப்பு

உண்மையான நீதி இல்லாமல் அரசு சாத்தியமில்லை; நீதியே மனித உரிமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளம்.”

- செப். 20,  நீதித்துறை ஊழியர்களுக்கான யூபிலி உரை 

உண்மையான செல்வம் என்பது பொருள்களில் இல்லை; உறவுகள் மற்றும் பொறுப்புடன் வாழும் வாழ்க்கையில் அர்த்தம் பெறுகிறது.”

- செப். 21, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (21.09.2025)

உதவி செய்தல், வரவேற்றல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய மூன்றும், மனிதகுலத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தள அம்சங்களாகும்.”

- செப் 1, ஏழைகளுக்கான புனித பிரான்சிஸ் பணிக் குழுவினர் சந்திப்பு

உண்மை எளிமையானது போலத் தோன்றினாலும், அதை வாழ்வது எளிதல்ல. இந்த உலகம் வெற்றிக்கே மதிப்பளிக்கிறது; உண்மையுடன் வாழ்வது ஒரு சவாலாகிறது.”

- செப் 2, புனித அகுஸ்தினார் சபையின் பொதுப்பேரவை திருப்பலி

நியாயமும் மாண்பும் மறுக்கப்பட்டு வருகிறவர்களுக்கு நீங்கள் குரலாகுங்கள். நம்பிக்கையின் சுடர் மங்கியுள்ள இடங்களில், நீங்கள் ஒளியாகவும் உப்பாகவும் இருக்கவேண்டும்.”

- செப் 3, புதன் மறைக்கல்வி உரை

இயேசுவின் வாழ்க்கை என்பது நம்பிக்கையின் புதையல். அந்த வாழ்க்கையைத் தேடும் பயணத்தில், நாம் உன்னதமான படைப்பாக மாறவேண்டும்.”

- செப் 5, மத்திய தரைக்கடல் இளைஞர் மன்றத்தினருடன் உரையாடல்

தேடுதலின் மனிதர்களாக, இயேசுவின் வாழ்க்கை என்னும் நம்பிக்கை நிறைந்த புதையலைத் தோண்டும் ஓர் உன்னதப் படைப்பாக மாறுவோம்.”

- செப் 6, யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரை

சூரியனுக்கு முன்னால் நின்று அதன் ஒளியைப் பெறும் நாம் நிறம் மாறுகின்றோம். அதுபோல, நற்கருணைக்கு முன்பாக நிற்கும் நாம் ஒரு புனிதராக மாறுகின்றோம்.”

- செப் 7, அருளாளர்களான பியர் ஜார்ஜியோ பிரசாத்தி மற்றும் கார்லோ அக்குதிஸ் புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (14.09.2025)

நற்கருணை என்பது திரு அவையின் உன்னதமான செல்வமாகும்; அதைவிட உயர்ந்ததும் மதிப்புமிக்கதுமான செல்வம் இவ்வுலகில் எதுவும் இல்லை.”

- ஆகஸ்டு 25, பிரான்ஸ் நாட்டின் பீடப்பணியாளர்கள் சந்திப்பு

நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதிலும், வலுவற்றவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு ஆறுதலாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

- ஆகஸ்டு 26, வல்தேசா திரு அவை ஆயர் மாமன்றக் கூட்டச் செய்தி

அன்பிற்காக உயிரை இழப்பது என்பது தோல்வி அல்ல; மாறாக, மறு உலக வாழ்விற்கான வெற்றி!”

- ஆகஸ்டு 27, புதன் மறைக்கல்வி உரை

நம் அருகில் வாழ்வோர் இனி எதிரிகள் அல்லர்; மாறாக, கிறிஸ்துவினால் ஒன்றிணைக்கப்பட்ட நம் சகோதரர் மற்றும் சகோதரிகள்.”

- ஆகஸ்டு 28, பிரான்சின், கிறித்தவ அரசியல் பிரதிநிதிகள் சந்திப்பு

திருமுழுக்கினால் அழைக்கப்பட்ட நாம் அனைவரும், கிறிஸ்துவில் ஒன்றாய் வாழவேண்டியது நமது கடமையாகும்.”

- ஆகஸ்டு 29, தூய அந்திரேயா நற்செய்தி அறிவிப்புப் பள்ளிகளின் உறுப்பினர்கள் சந்திப்பு

அனைத்து நாடுகளுக்கிடையேயான பன்முக ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கவேண்டும்.”

- ஆகஸ்டு 30, ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் மனங்காக்வாவுடன் சந்திப்பு

தாழ்மை எனும் புண்ணியத்தை நமதாக்கும்போது, கடவுளுடைய அரசும் அதன் நீதியும் நம் வாழ்க்கையின் மையமாகிறது.”     

- ஆகஸ்டு 31, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (07.09.2025)

நம் வாழ்வின் அனைத்துச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள, நம் அன்னை மரியாவை எடுத்துக்காட்டாக, அடையாளமாகக் கொண்டு வாழ்கிறோம்.”

- ஆகஸ்டு 18, பியாட்சா சன் பியெத்ரோ என்னும் பத்திரிகை

அன்பை விட்டுக்கொடுக்காமல் மன்னித்து மாண்புடன் முன்னேறிச் செல்வதே கிறித்தவ வாழ்க்கை

- ஆகஸ்டு 20, புதன் மறைக்கல்வி உரை

இறைச்சட்டத்தின் தேவைகள், மனிதனின் மனசாட்சி, சுதந்திர இயக்கவியல் ஆகியவற்றிற்கு இடையில் சமநிலையைப் பேணிய புனிதர்களின் ஞானமிக்க முன்மாதிரியைப் பின்பற்றுவதே உலகின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி.”

- ஆகஸ்டு 21, 17-வது பன்னாட்டு அறநெறி, இறையியல் மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி

இன்றைய உலகின் மோதல்கள், சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆன்மிக வெற்றிடம் ஆகிய சவால்களில் அமைதி என்பது மனித சாதனை அல்ல; கடவுள் நம்முடன் இருப்பதன் அடையாளம்.”

- ஆகஸ்டு 22 , கிறித்தவ ஒன்றிப்பு வாரத்தில் பங்கேற்பாளர்களுக்கான செய்தி

நாசரேத் ஊரின் திருகுடும்பத்தைப் பார்ப்பதன் வழியாக, நமது குடும்பத்தின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.”

- ஆகஸ்டு 23, பொதுப்பேரவையில் பங்கேற்கும் அருள்சகோதரிகள் சந்திப்பு

இயேசுவே நமது நம்பிக்கையின் அளவுகோல், நாம் மீட்கப்படுவதற்கான பாதையும் அவரே; அவருடைய அன்பு, நீதி, அமைதிக்காக உழைப்பவர்களாவோம்.      

- ஆகஸ்டு 24, மூவேளைச் செபவுரை