“நற்கருணை
என்பது திரு அவையின் உன்னதமான செல்வமாகும்; அதைவிட உயர்ந்ததும் மதிப்புமிக்கதுமான செல்வம் இவ்வுலகில் எதுவும் இல்லை.”
- ஆகஸ்டு 25, பிரான்ஸ் நாட்டின்
பீடப்பணியாளர்கள்
சந்திப்பு
“நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதிலும், வலுவற்றவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு ஆறுதலாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
- ஆகஸ்டு 26, வல்தேசா திரு
அவை
ஆயர்
மாமன்றக்
கூட்டச்
செய்தி
“அன்பிற்காக உயிரை இழப்பது என்பது தோல்வி அல்ல; மாறாக, மறு உலக வாழ்விற்கான வெற்றி!”
- ஆகஸ்டு 27, புதன் மறைக்கல்வி
உரை
“நம் அருகில் வாழ்வோர் இனி எதிரிகள் அல்லர்; மாறாக, கிறிஸ்துவினால் ஒன்றிணைக்கப்பட்ட நம் சகோதரர் மற்றும் சகோதரிகள்.”
- ஆகஸ்டு 28, பிரான்சின், கிறித்தவ
அரசியல்
பிரதிநிதிகள்
சந்திப்பு
“திருமுழுக்கினால் அழைக்கப்பட்ட நாம் அனைவரும், கிறிஸ்துவில் ஒன்றாய் வாழவேண்டியது நமது கடமையாகும்.”
- ஆகஸ்டு 29, தூய அந்திரேயா
நற்செய்தி
அறிவிப்புப்
பள்ளிகளின்
உறுப்பினர்கள்
சந்திப்பு
“அனைத்து நாடுகளுக்கிடையேயான பன்முக ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கவேண்டும்.”
- ஆகஸ்டு 30, ஜிம்பாப்வே அதிபர்
எமர்சன்
மனங்காக்வாவுடன்
சந்திப்பு
“தாழ்மை எனும் புண்ணியத்தை நமதாக்கும்போது, கடவுளுடைய அரசும் அதன் நீதியும் நம் வாழ்க்கையின் மையமாகிறது.”
- ஆகஸ்டு 31, மூவேளைச் செப
உரை