புனித சுவக்கீன், புனித அன்னம்மாள்

news-details

சுவக்கீன் என்றால் ஆண்டவரது தயாரிப்பு என்பது பொருள். அன்னா என்றால் இறைவனது அருள் என்று பொருள். அன்னம்மாள் பெத்தலகேமில் பிறந்தார். நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கீன் என்பவரை மணந்தாள். இருவரும் தாவீது அரசை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை, பிறகு மரியாள் பிறந்தால். மரியாளுக்கு மூன்று வயது ஆனதும் தேவாலயத்திற்கு செல்லும்படி கடவுள் அவரை அழைத்தார். சுவக்கீனும் அன்னம்மாளும் தியாக குணம் படைத்தவர்கள். நெடுங்கால தவம் இருந்த கடவுளை மன்றாடி பெற்றெடுத்த அழகிய குழந்தையை கடவுளுக்கு இவர்கள் அர்ப்பணம் செய்தார்கள்.

ஆதியிலிருந்தே புனித அன்னம்மாளை விசுவாசிகள் வந்தித்து வந்திருக்கிறார்கள். இவருக்கு கோவில்கள் கட்டப்பட்டன. கிழக்கத்திய திருச்சபையின் பிதாட்பிதாக்கள் இவளது பரிசுத்தத்தை பற்றியும் இவள் பெற்ற வரங்கள் பற்றியும் அழகாக கூறியிருக்கிறார்கள். 4-ஆம் நூற்றாண்டில் புனித சுவைக்கினுக்கும் யேசுருசலேமில் ஓர் ஆலயம் அனமக்கப்பட்டது.