“தமிழ்நாடு
சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதில் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற இச்சட்டம், உயர்கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதாக அமையும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதனால் எளிய குடும்பங்களைச் சார்ந்த குறிப்பாக, பட்டியல் சாதி/பழங்குடி பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்
இட ஒதுக்கீடு சதவிகிதத்திற்கும் தனியார் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டிற்கும் பெரிய இடைவெளி
உள்ளது. ஆகவே, இச்சட்டத்திருத்தம் இட ஒதுக்கீடு மீதும்,
சமூகநீதி மீதும் கடும் பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.”
திரு. ஜி.
இராமகிருஷ்ணன்,
அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர். சி.பி.ஐ.(எம்)
“கேரளத்தில்
கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க சங்கப்
பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றன. இதற்காகவே சபரிமலை உள்ளிட்ட மத
பாரம்பரியத்தில் தலையிட்டு, பிரச்சினைகளைத் தூண்டுகின்றனர். சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கும் வாவர் சுவாமிக்கும் நாம் இடமளித்துள்ளோம். இதுவே நமது பாரம்பரியம். ஆனால், முஸ்லிம் ஒருவர் அந்த இடத்தில் இருப்பதைச் சங்கப் பரிவார் விரும்பாது. ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.
முன்னிறுத்தும் கொள்கைகள் கேரளத்தில் முக்கியத்துவம் பெற்றால், அதற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் தனி அடையாளத்தையும் பெருமையையும் அழித்துவிடும்.”
திரு. பினராயி
விஜயன்,
கேரள மாநில முதல்வர்
“இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் முன்னேறி வருகிறது. இந்த ஒப்பந்தத்தால் நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்கள் விட்டுத்தரப்படாது. அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும். அமெரிக்காவின் வரிவிதிப்பால் உலக அளவில் வர்த்தக ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதேவேளையில், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகளுக்கு உலகம் முழுவதும் தேவை உள்ளது. எனவே, நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியடையும்.”
திரு. பியூஸ்
கோயல்,
மத்திய வர்த்தக துறை அமைச்சர்