news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

டெல்லியில் பா... ஆட்சிக்கு வந்தபிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். மத்தியில் இருக்கும் பா... அரசு, மாநில அரசுகளை ஒடுக்குவதற்கும், எல்லா இடங்களிலும் சனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கும் முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நிற்கும் ஒருசில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஸ்டாலின், ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) என்பது சனநாயகத்தின்மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். அது இப்போது தோற்கடிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மத்தியில் உள்ள மோடி அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. மோடி அரசின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.”

திருமிகு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மேனாள் முதல்வர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்

நம்முடையஇந்தியாகூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்குச் சென்று இந்த மசோதாவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இதனால் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடித்துத் தந்த அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது. இந்த அரசியல் சாசனத் திருத்தம் மட்டும் நிறைவேறி இருந்தால், மேலும் மேலும் அரசியல் சாசனங்களைத் திருத்தியிருப்பார்கள். சிறுபான்மை உரிமைகளைப் பறித்திருப்பார்கள். இசுலாமியர்கள் வக்ஃபு சட்டத்தைச் சட்டமாக்கி இருப்பார்கள். எஃப்.சி.ஆர்.. திட்டத்தைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியிருப்பார்கள். பேச்சுரிமையைக் குறைத்திருப்பார்கள், எழுத்துரிமையைக் குறைத்திருப்பார்கள், அரசியல் சாசனத்தைத் திருத்தாமல் இதையெல்லாம் செய்ய முடியாது. இந்த அரசியல் சாசனத் திருத்தத்தை அனுமதித்திருந்தால், அடுத்தடுத்து அரசியல் சாசனங்கள் திருத்தப்படும். அதைத் தடுத்தது நாடாளுமன்ற உறுப்பினர்கள். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள்.”

திருமிகு. .சிதம்பரம், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாட்டில் பல இடங்களில் மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மத அடிப்படையில் பிரித்து, சமூகத்தைச் சிதைக்கும் முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை. இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் இந்துகள், முசுலிம்கள், கிறித்தவர்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினைகளை நிர்மூலமாக்கி உள்ளனர். நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். வெறுப்பு அரசியலை எப்படிக் கையாளப் போகிறோம்? என்ன வீச்சில் விரட்டி அடிக்கப் போகின்றோம்? என்பதே! மதம் என்னும் கோடாரி கொண்டு மனித இதயங்களைப் பிளக்கும் சக்திகளை முழு மூச்சில் முழுவதும் விரட்டி அடிக்கவேண் டும்.”

திருமிகு. நா. மணி பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் - வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்யவேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் - இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும். அத்தகையதொரு நிலையென்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாகவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டிற்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் உங்களை அழைக்கிறேன்.”

மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

நாளை நமக்கு எதிராக நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாகவும், எழுச்சி குரலாகவும் இருக்கவேண்டும். 33 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை நாங்கள் என்றோ சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் எனும்போது ஒரு திராவிட கட்சி அல்ல, அத்தனை கட்சிகளும் சொல்லிக் கொண்டு இருக்கும் செய்தியை இன்றுதான் புதிய கண்டுபிடிப்பு போல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் (மத்திய அரசு) இப்போது சொல்லும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது தூண்டில் முள்ளின் நுனியில் வைத்திருக்கும் சின்ன மீன். அதைக் கவ்வமாட்டோம். விவாதிப்போம்.”

திருமிகு. கமல்ஹாசன், தலைவர் மக்கள்நீதி மய்யம்

மக்களவையில் மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கைக் கணக்கில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தொடர மத்திய அரசு முனைப்புடன் இருப்பது, தொகுதி மறுவரையறை மசோதா 2026-இன் வரைவு அறிக்கையைப் பார்க்கும் போது தெரிகிறது. இத்தகைய நடவடிக்கை மிகுந்த அநீதியானது. ஏனெனில், 1976-ஆம் ஆண்டின் தேசிய மக்கள்தொகைக் கொள்கையை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்திய கேரளா உள்ளிட்ட மாநிலங்களை இது தண்டிப்பதாக அமையும். மறுபுறம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பின்தங்கிய மாநிலங்கள், தங்கள் மெத்தனமான செயல்பாட்டிற்காக (கூடுதல் தொகுதிகள் மூலம்) வெகுமதி பெறுவது போல இது அமையும். கூட்டாட்சி தத்துவம் நமது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு. மக்களாட்சியில், பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை நோக்கம் வெறும் மக்கள்தொகை எண்ணிக்கையாக மட்டும் இருக்கமுடியாது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் உணர்வுகளையும் குறிப்பாக, மாநிலங்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அணுகுமுறையைக் கையாள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடனான அணுகுமுறை என்பது மிகவும் அவசியமானது. அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட உள்ள ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சியானது, நமது அரசமைப்பு உருவாக்கத்தின் அடிப்படையாக இருந்தஒருமித்த கருத்துஎன்னும் உணர்வைச் சந்தேகத்திற்கு இடமின்றி சிதைத்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா இது?” 

மாண்புமிகு. பினராயி விஜயன், கேரள முதல்வர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா... அமைச்சர்களும் பா... முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வார்களா? தமிழ் மண்ணில் நின்று மும்மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்குத் தருவது எவ்வளவு? பா... ஆளும் மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? என வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது தாக்குதல் தொடுக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா? கண்ணியமற்ற அவதூறுகளுக்குப் பதிலாக, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியிலிருந்து படையெடுத்து வந்தாலும் தமிழ்நாடு தலைகுனியாது.”

மாண்புமிகு மு. . ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

புதுச்சேரி மண்ணை நேசிக்கிறேன்; மக்களுடைய அன்பு, நட்பு, தோழமை இவற்றையெல்லாம் நினைத்து அடிக்கடி இங்கு வர ஆசைப்படுகிறேன். ஆனால், இப்போது இங்கு வரும்போது என் மனத்தில் கவலைகள் படர்கின்றன. புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்லர்; எங்கோ இருந்து புதுச்சேரியை ஆட்சி செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆட்சி மக்களின் விருப்பத்தைச் செயல்படுத்தும் அரசு அல்ல; டெல்லியிலிருந்து கருத்துகளைத் திணிப்பவர்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது. பா... கருத்தியலை புதுச்சேரியில் புகுத்த நினைக்கின்றனர். புதுச்சேரி மக்களின் எண்ணங்களை ஏற்று நடத்தும் ஆட்சி இங்கு நடக்கவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைமீறி துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். எனவேதான், மாநில அங்கீகாரம் வேண்டும் என்று கூறுகிறோம்.” 

திருமிகு. இராகுல் காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

பெற்றோரைப் புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தில் 15 விழுக்காடு அல்லது ரூபாய் பத்தாயிரம் (இரண்டில் எது குறைவோ) பிடித்தம் செய்து பெற்றோருக்கு வழங்க வகை செய்யும் மசோதா தெலுங்கானா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 29 - ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைச் சமுதாயம் புறக்கணிக்கும் சூழல் ஏற்பட வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த நியமன அதிகாரி அமைப்பு மாநில அரசால் அமைக்கப்படும். பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுபவர்கள் இந்த அமைப்பிடம் புகார் அளிக்கலாம். அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, எம்.எல்.., எம்.எல்.சி., மாநகராட்சி உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.”    

மாண்புமிகு ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் சுமார் எட்டு நூற்றாண்டுகளாக மாபெரும் அறிவு மையமாக விளங்கியது. அதன் வீழ்ச்சியானது இந்தியாவிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் பேரிழப்பாக அமைந்தது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம் புத்துயிர் பெற்றுள்ளது. உலகம் பல சிக்கலான சவால்களைச் சந்தித்து வருகின்றது. அதேவேளையில் கருணைமிக்க, சுதந்திரமான, எதையும் ஆராய்ந்து வலுவாக முடிவு எடுப்பதற்கான சிந்தனையும் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் உலக அளவில் முன்னணிக் கல்வி நிறுவனமான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.” 

திருமிகு. முர்மு, குடியரசுத் தலைவர்

மானம் என்னும் தலைப்பை உடைய வான்புகழ் வள்ளுவரின் அதிகாரத்திற்கு வான்புகழ் உரையாளன் பரிமேலழகர்நிலை தாழாமைஎன்று பொருள் எழுதுவார். ‘அடைகின்ற சுகம் பெரிதல்ல; வீழ்ச்சியிலும் யானைபோல் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே பெருமைஎன்பார். தனிமனிதர்களின் பெருமை - சிறுமை என இவை பதவிகளினால் வருவதில்லை. வாழும் முறையினாலேயே வருகிறது. சனநாயகத்தின் ஒரே ஒரு சிறந்த கூறு, இரத்தச் சிந்தல்கள் இல்லாமல் ஆட்சி மாற்றம் நிகழ்த்தமுடியும் என்பதுதான். வாளும் வேலும் இல்லாமல் வாயாலும் பேனாவாலும் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும்!”

திருமிகு. பழ. கருப்பையா, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்

சிறப்புக் குழந்தைகளுக்குப் பள்ளி - கல்லூரிகளில் 5%  இடஒதுக்கீடும், வேலை வாய்ப்புகளில் 4%-மும் அரசு அளித்து வருகிறது. அந்தக் குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பெற்றோர், சிறப்பு ஆசிரியர்கள் தேவையான திறன் பயிற்சியும், வழிநடத்துதலும் அளிக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை முன்னதாகவே கண்டுபிடித்துப் பயிற்சி அளிக்கவேண்டும்.”

திருமிகு. எஸ். மதுமதி, செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு

news
இந்திய செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

தேசிய சனநாயகக் கூட்டணிக்கு உண்மையான தலைமை பாரதிய சனதா கட்சிதான்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர்கள் ஒப்புக்காக முன்வைக்கின்ற தலைவர்தான் .தி.மு.. பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி. பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியமல்ல, நூல் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.”

திருமிகு. . சிதம்பரம், மேனாள் மத்திய நிதி அமைச்சர்

தமிழ்நாட்டில் .தி.மு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி குறித்து இப்போது எந்தக் கருத்தும் கூறமுடியாது. அது தேர்தல் முடிவைப் பொறுத்துதான் அமையும். தேர்தல் கூட்டணி அமைக்கும்போது எல்லாக் கட்சிகளும் எப்படி ஒப்பந்தம் போடுவார்களோ, அதேபோல தேசிய சனநாயகக் கூட்டணியிலும் ஒப்பந்தம் போடப்படுகிறது. அது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தம்.

திருமிகு. தமிழிசை சௌந்தரராஜன், மேனாள் ஆளுநர், பா... மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் என்ற பெயரில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப்பெரிய ஊடுருவல்காரர்.”

திருமிகு மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் என்னைப் பற்றியும் .வெ..வைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சில கட்சிகளின் அணியாகத் .வெ.. செயல்படுகிறது எனக் கூறப்பட்டது. ஆனால், .வெ.. எப்போதும் மக்களின் அணியாகவே செயல்படுகிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதச் சமரசமும் செய்யப் போவதில்லை. வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் .வெ.. தலைமையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக உள்ளோம்.”

திருமிகு. விஜய்,  .வெ.. தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பெண்கள் யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எந்தச் சூழலிலும்தாங்களாகவேஇருக்கவேண்டும். அனைவரும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். நீங்கள் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும் நேர்மையாகப் பணியாற்றி உங்கள் கனவுகளை முழு மனதுடன் நனவாக்கவேண்டும். மாணவர்களின் கனவுகளை நனவாக்க நேர்மை அவசியம். மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத முன்வர வேண்டும். மாணவர்கள் நேர்மையாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். ஒருவர் செல்வத்தை இழக்கலாம், ஆரோக்கியத்தை இழக்கலாம்; ஆனால், குணத்தை இழந்தால் தன்னையே இழந்ததுபோல் ஆகும்.”

திருமிகு. இஷா சிங், டெல்லி வடக்கு மாவட்டக் கூடுதல் துணை காவல் ஆணையர்

ஓர் அறிவுசார்ந்த பொருளாதாரமாக இந்தியா உருவாக வேண்டுமானால், உயர்கல்வியும் ஆராய்ச்சியும் மிக வலுவாக வளர வேண்டியது அவசியம். அந்த வகையில், உயர்கல்வித்துறையில் முக்கியப் பிரச்சினையாக இருப்பது பேராசிரியர் காலிப் பணியிடங்கள்தான். நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், கல்வித் தரமும், ஆராய்ச்சி முன்னேற்றமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. ஆய்வகங்கள், ஆராய்ச்சி வசதிகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, உலகளவில் போட்டியிடக்கூடிய தரமான ஆராய்ச்சியை உருவாக்கப் பல நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.”

திருமிகு. . பாலகுருசாமி, மேனாள் துணைவேந்தர்

ஒரு நாட்டின் தலைவர் கொலை செய்யப்படும்போது, அந்த நாடும் உலகமும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கும்? நாடுகளின் தலைவர்கள் மிரட்டப்படும்போது, உலகில் அமைதி நிலவாது. உலகளாவிய சட்டங்களை அமெரிக்கா மீறி வருகிறது. டிரம்ப்பைப் பிரதமர் மோடிநண்பர்என்று அழைக்கிறார். இந்தியா இரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்தது. ஆனால், டிரம்ப் கொள்முதல் செய்யக்கூடாது அல்லது வரி விதிப்பேன் என்றார். டிரம்ப் ஒரு சர்வாதிகாரி. பிரதமர் மோடி அவருடைய சொல்படி கேட்கிறார். நாட்டை நிர்வகிக்க மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தனர். அதை விடுத்து, நாடு முழுவதும் பயணிக்கும் பிரதமர், தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நீண்ட காலத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத சூழலில், அதன் தலைவர்களை குறிவைத்துப் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்டமைத்த நாட்டை மோடி அழித்து வருகிறார்.”

திருமிகு. மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்