news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

மின்வாரிய அதிகாரிகளில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் மக்களுக்குத் தவறான கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது .வெ.. அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது. எனவே, மின் கணக்கீட்டுப் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

திருமிகு. நயினார் நாகேந்திரன், பா... மாநிலத் தலைவர்

தமிழ்நாடு அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் ரூ.1.5 இலட்சம் கோடி வேளாண்மை மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். குறுவைச் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 சிறப்பு மானியம் வழங்கவேண்டும். பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவேண்டும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆக உயர்த்தப்படவேண்டும். அனைத்து வேளாண்மைப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும். நெல் கொள்முதல் கிடங்குகள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படவேண்டும்.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

இன்றைய சமூகத்தில் சாலை விபத்துகள், சைபர் மோசடிகள், போதைப் பழக்கம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. தமிழ்நாட்டில் தினமும் ரூ.13 கோடி முதல் ரூ.15 கோடி வரை சைபர் மோசடிகளால் பொதுமக்கள் பணத்தை இழக்கின்றனர். எனவே, ஆன்லைன் மோசடிகள் குறித்து அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். போதைப்பொருள் மட்டுமின்றி, மதுப்பழக்கமும் போதைதான். போதைப்பழக்கம் ஒருவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல; குடும்பத்தை, சமூகத்தைச் சீரழிக்கும். எனவே, சாலை விபத்து, சைபர் குற்றம், போதைப்பழக்கம் ஆகிய மூன்று ஆபத்துகளிலிருந்தும் மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, போதையற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கவேண்டும்.”

திருமிகு. . அமல்ராஜ், சென்னை காவல் ஆணையர்

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்வி நிலையங்களும் மாணவர்களுக்கு நவீனத்துடன் கலாச்சாரம், பாரம்பரிய உணர்வையும் புகட்டவேண்டும். நவீனத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும்போதுதான் சமநிலையான வளர்ச்சியைப் பேணமுடியும். நாட்டின் மக்கள்தொகையில் 65% இளையோர் உள்ளனர். எனவே, இந்தியாவைஇளைஞர்கள் நாடுஎன்றே கூறலாம். வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதும் பிரதான அமைப்பு முறையில் அவர்களை இணைப்பதும் முக்கியமானது. நவீன வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்க நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். எதையும் சாதிக்கக்கூடிய, அசைக்க முடியாத துணிச்சல் கொண்ட நமது இளைஞர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமுள்ளன.”

உயர்மிகு. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் அவர்களைப் பணியமர்த்துவது சமூகநீதிக் கொள்கைக்கு முரணானதாகும். முந்தைய ஆட்சியாளர்கள் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்கக்கூடாது என்ற கோரிக்கையைப் புறக்கணித்தனர். இச்சூழலில் புதிய அரசு தனியார்மயமாக்கலுக்கு முடிவு கட்டவேண்டும். மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்கும் முயற்சியை உடனடியாக அரசு கைவிடவேண்டும். மேலும், தற்காலிக முறை, ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்கவேண்டும்.”

உயர்மிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்

விவசாயிகள் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் என எல்லா இடங்களிலும் கடன் வாங்கி விவசாயம் செய்கிறார்கள். 2021 முதல் 2023 - ஆம் ஆண்டு வரை, 1,968 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு நாளைக்கு இரு விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டிலும் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.”

திருமதி. சௌமியா அன்புமணி, பா... சட்டமன்ற உறுப்பினர்

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டேன், சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்என்று கூறிய முதல்வரின் காதுகளுக்கு, பாலியல் வன்கொடுமையால் குழந்தைகளை இழந்து ஓலமிடும் பெற்றோரின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பில் எப்போது கவனம் செலுத்தப்போகிறீர்கள்? குற்றவாளிகள் சிறிதும் அச்சமின்றிக் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், எதிர்க்கட்சியாக ஆறு மாதம் எதுவும் கேட்கக்கூடாது என நினைக்கிறீர்களா? அல்லது தி.மு..வின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?

உயர்மிகு. மு.. ஸ்டாலின், தி.மு.. தலைவர்

.வெ.. தனது தேர்தல் வாக்குறுதியில் குறு சிறு விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின் ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு சிறு விவசாயிகளின் கடன் தொகை முழுமையாகவும் ரூ.50,000-க்கு மேல் பெற்றவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தது. விவசாயிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து ரூ.75,000 வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறு சிறு விவசாயிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள தற்போதைய அரசின் அறிவிப்பு ஏற்கக்கூடியது அல்ல; எனவே, .வெ.. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யவேண்டும்.”

உயர்மிகு. எடப்பாடி பழனிச்சாமி, .தி.மு.. பொதுச்செயலர்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்றவேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிடவேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் சட்டம் இயற்றவில்லை என்பது கவலையளிக்கிறது.” 

உயர்மிகு. தொல். திருமாவளவன், விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர்

news
தமிழக செய்திகள்
பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-27 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் (Diploma in Co-oerative Management) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். வயது வரம்பு கிடையாது.

ஆன்லைனில் மட்டும்...

தகுதியுடைய நபர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ தபால் மூலமாகவோ கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம்

news
தமிழக செய்திகள்
சமூக நலனுக்காகத் தொண்டாற்றும் இளைஞர்களுக்கு ‘முதல்வர் விருது’

சமுதாய நலனுக்காகத் தன்னார்வத்துடன் தொண்டாற்றும் இளையோரை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதிற்குட்பட்ட தலா 3 ஆண், 3 மகளிருக்குமுதலமைச்சர் மாநில இளைஞர் விருதுவழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் ரூ.1 இலட்சம் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் பதக்கமும் வழங்கப்படும். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 15 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகள் குடியிருந்தவராகவும், சமுதாய நலனுக்காகத் தன்னார்வத்துடன் தொண்டாற்றியவராகவும் இருக்கவேண்டும். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே விருதிற்குக் கருத்தில் கொள்ளப்படும். மத்திய - மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

கூடுதல் விவரங்களுக்கு...

தகுதியுள்ள நபர்கள் பிறப்புச் சான்று, அடையாள அட்டை நகல், இருப்பிடச் சான்று, காவல்துறையிடமிருந்து பெறப்படும் தடையின்மை சான்று மற்றும் சமூகப் பணிகள் செய்ததற்கான ஆதாரங்கள் போன்றவற்றுடன் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். பின் தங்களது சாதனை பற்றிய பத்திரிகைச் செய்திகள் மற்றும் சான்றிதழ்களை மூன்று புத்தகங்களாகத் தயார்செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 74017 03480 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த மேனாள் முதல்வர் கருணாநிதியின் கண்ணியத்தைச் சிதைத்து, அவமதிக்கும் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவரது உருவப்படத்தை மிக மோசமாகச் சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அநாகரிகமான பதிவைக் கண்டவர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கமுடியாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால உச்சமாக வளர்ந்திருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுப்பது எப்படி? என்ற வினாவிற்கு விடைதேடி, உலக நாடுகளும் அறிஞர்களும் விவாதித்து வருகின்றனர். அநாகரிகமான குற்றங்கள் நேரும்போது, சமூகம் ஒட்டுமொத்தமாக இணைந்து கண்டிக்கவேண்டும்.”

திருமிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர்

99 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வைத்துதான் இட ஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது. இந்தப் பழைய தரவுகள் போதுமானதாக இல்லை. இதை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. எனவே, தமிழ்நாட்டில் புதிதாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தினால்தான் தமிழ்நாட்டில் உள்ள இரண்டே கால் கோடி குடும்பங்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த துல்லியமான நிலையைக் கண்டறியலாம்.”

திருமிகு. அன்புமணிபா... தலைவர்

தமிழ்நாட்டில் நிகழும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனி சிறப்புச்சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம். பழங்குடியினருக்கு மேற்கொள்ளப்பட்ட சமூக - பொருளாதாரக் கணக்கெடுப்பைப்போல, ஆதிதிராவிடர் மக்களுக்கும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.”

திருமிகு. வன்னியரசு, சமூக நீதித்துறை அமைச்சர்