news
கவிதை
சிந்தி ‘ய்யா’

ஒவ்வொரு

சுதந்திர தினத்தின்போதும்

கொடி மட்டுமே

கம்பத்தின் உச்சியில்

சுதந்திரம் என்னவோ

பாதி கம்பத்தில்தான்...!

 

அன்று

சுதந்திர தாகம் கொண்டோரின்

தொண்டைக் குழிகள்

இன்னமும்

அடிமை இந்தியர்களின்

இரத்தத்தால்தான்

நனைகின்றன...!

 

அன்றைய

அடிமைச் சங்கிலிகளை

ஆபத்தானவைகள்

என்றுணர்ந்து

வெட்டி வீசினோம்...

இன்றைய

அடிமைச் சங்கிலிகளை

ஆபரணம்போல்

அணிந்துகொண்டால்

எப்படி அறுத்தெறிய...?

 

சுதந்திரம் கிடைத்தும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்

பாரத மாதா எழுபத்தொன்பது ஆண்டுகளாகவே

தனது கண்ணீரைத்

துடைக்கும்படியான

ஒரு குழந்தையை

ஏன் பெற்றெடுக்கவில்லை

என்பது கேள்விக்குறிதான்...!

 

இன்னமும்

துப்பாக்கிச் சத்தத்தில்

பதறி எழும்

குழந்தைகளிடம்

எப்படிச் சொல்ல

நாம் சுதந்திர நாட்டில்தான்

வாழ்கிறோம் என்பதை....?

 

இந்தியாவின்

நீர்நிலைகள் கூட

சில இந்தியர்களின்

தாகம் தீர்க்காமலே

கடலுக்குள்

சங்கமிக்கும் சோகத்தை

யாரிடம் சொல்லி அழ....?

 

தீபகற்ப நாட்டில்

தனித்தனித் தீவுகளாக வாழும்

சுதந்திர இந்தியர்களை

மூழ்காமல் காக்க

மீண்டுமோர்

அந்நியப் படையெடுப்பு

வேண்டும் என்பதே

நிதர்சனமான உண்மை...!

 

பழைய

காலடித் தடங்களையும்

அழிக்காத

புதிய இந்தியாவின்

பாதையில்தான்

காந்தியின் கைத்தடியும்

பாதுகாப்பைத் தரும்....!

 

பெருந்தலைவர்கள்

கண்ட கனவெல்லாம்

பலிக்கும்படி

இனியாவது

விழித்துக்கொள்ளட்டும்

என் இந்தியா....!

 

ஒரே குடையின்

கீழே இருக்கட்டும்

என் பாரதம்....!

அதற்காகத்

துருபிடித்த

கைப்பிடிக் கம்பிகளை

மாற்றக்கூடாது

என யார் சொன்னது...?

சிந்திப்போம்!

news
கவிதை
மதுரைப் பேராயர் வருகவே! ‘சாமி முத்தே!’

குற்றாலச் சாரல்மழை குளுமைப் பேச்சில்,

    நெல்லைத்தமிழ் மணப்பா(ங்)கு ஆளுமை வீச்சில்,

(கீ) வண்டானம் சுற்றிநீதிமான்போல் பனைசெழிக்கும்

    சிற்றாலைகள் கிணற்றுநீரால் பாசனம் கொழிக்கும்

நெய்தல்தவிர்த்து நாலுவகை ஒருங்கமை பூமி!

    அத்தைஅருள் சகோசெசிலியின் குரு! வா! ஊக்கம்!

அந்நாள்பணி ஆரோக்கிய சாமியின் ஈர்ப்பு

    இந்நாள்நீயீர் மதுரைப்பேர் ஆயர்காப்பு!

பாளை(யின்)பாது காவலரின் வழிப்பா தையில்நீர்!

    மநாயக் கன்பட்டி அன்னையில் மடியும்

பாளைமடல் விரிந்தேற்கும்புளியைப் புனிதரும்

    ‘தமிழ்வையையில் தலைமையேற்க வைத்தார் இனிதே!

காளை போலத் துடிப்பு! ‘இருத யராஜ்வின் பாங்கு (பான்மை)

    ஏழ்மை இனிமை! ஆன்மிக வளர்ச்சி! மேன்மை

கோல்வழுவா (நெடு) செழியன்நகர் உம்செங் கோண்மை!

    கைகுவிக்கும்! வைகையே!இனி எழுந்து கூடலில்!

கொன்சால் வாஸ்திரு அவையைநட்டபூமி!

    தமிழ்சந்நியா சிபோல்வாழ்ந்த தத்துவர் பூமி!

நம்பிக்கையால் வேதியர்கள் மறைப்பணி செய்தார்

    மன்னர்களும் உவந்துபோற்றிய ஆன்மிகப் பூமி

பன்னாட்டார் வணிகநோக்கில் மறைப்பணி வளர்த்தார்!

    ஒருத்திக் கொருத்த தமிழ்பண்பைச் சொன்னஆனந்தர்

 பனுவல் நூல் பலகண்டபெஸ்கிமுனிவர்

    பல் பணியால் தடைகடந்து உயர்ந்தார்! அன்றே!

அறுபதாண்டுகள்பதுரவதோவிசுவாச ஆணையம்

    அருமாந்த திரு அவையில் தீயவை குழப்பம்

புதுமறைதிரு அவைபிறக்கவே மதுரைச் சீமை

    மறைமாவட்டம் மறைமாநிலம் பிறந்தது கேளீர்!

அருமை மிகு அலக்ஸ் காளோஜ் அதிபர்! வித்து!

    பின்னாளிலும்திருச்சி, மதுரைமுதலாயர் சொத்து

சிறப்புடையஜான்பார்த்தேஅகஸ்டீன் பெசாந்த்

    ‘லியோர்னாடுவழிமுறைஆயர்இறைப்பணி முகிழ்ந்து!

சாதீயத் துதடுப்புச் சுவர்ஒழித்தலியோர்னாடு

     ‘செம்மறிப்பார் வைசிங்கத் துணிவில்திரவியம்

காட்சிக்கெளியர், அறிவியலாளர், ‘ஞானா திக்கம்

    ஐக்கியசிறு பான்மை குரல்மரியானுஸ் ஆரோ

தூரநோக்கு, தொடர் முயற்சி, உளவியல்பெர்னாண்டோ

    விவிலியத்து சுவடிபொருள் கை ‘(கோ) பாப்பு சாமி

ஈரம் நிறை, ஏழ்மைஇனிமைகிறித்துவின் மதிப்பில்

    சங்கம்வளர் மதுரைப்பேராயர்! வருகசாமி முத்தே!!’

news
கவிதை
அமைதி பிறக்கட்டும்!

குரல் எழுப்பு...

உரிமைகள் மறுக்கப்படும்போது!

உடைமைகள் சூறையாடப்படும்போது!

உணர்வுகள் காயப்படும்போது!

உண்மைகள் புதைக்கப்படும்போது!

 

குரல் எழுப்பு...

நீதி சாகடிக்கப்படும்போது!

ஆள்பலம் ஒன்றுசேரும்போது!

மனிதர்கள் தாழ்த்தப்படும்போது!

மனிதனை மனிதனே

மதிக்காதபோது!

 

உரக்கக் குரல் எழுப்பு...

உன் எதிரொலி

எளியவருக்கு இரங்கட்டும்!

வாழ்விழந்தவர்களுக்கு

வாழ்வாகட்டும்!

அடிமைகளுக்கு விடுதலையாகட்டும்!

நானிலமெங்கும் அமைதி பிறக்கட்டும்!

news
கவிதை
கவிதைச் சாரல்

எனது முகத்தில்

எழுதப்படுகிறது

அவ்வப்போது

உங்கள் முகங்களின்

முகவரிகள்!

துடைத்துக்கொள்கிறேன்

அடிக்கடி

மனித அழுக்கின்

கறைகளை!

இப்படிக்குக் கவிதை!

 

எளிதில்

எல்லாரையும்

மன்னியுங்கள்!

எளிதில் யாரையும்

நம்பாதீர்கள்!

உண்மையாக

நேசியுங்கள்!

உரக்கச் சிந்தியுங்கள்!

சத்தமாகச்

சிரியுங்கள்!

சுத்தமாகச்

சுவாசியுங்கள்!

சுயமாக

யோசியுங்கள்!

ஆழ்ந்து செபியுங்கள்!

தீரத்தோடு

துணியுங்கள்!

தீர்ந்த பிறகும்

நம்புங்கள்!

நன்றாக வாழுங்கள்!

 

இல்லாத ஒன்றிற்காய்

மாளிகை மாடங்களும்!

விண்முட்டும்

கோபுரக்

கலசங்களும்!

குடியிருக்க

இல்லையொரு வீடு!

மானங்காக்க

இல்லையொரு

கோவணம்!

 

அதனாலென்ன?

கொடுத்தது நாடாகவும்

உடுத்துவது

நிர்வாணமாகவும்தான்

இருந்துவிட்டுப் போகட்டுமே!

அதனால் என்ன?

 

உன்னைச் சுற்றி இருக்கும்

தடைகளைவிட

உனக்குள்ளே இருக்கும்

திறன்

ஆற்றல் மிக்கது!

news
கவிதை
கவிதைச் சாரல்

களிப்பதுமில்லை!

கண்ணீரில்

நனைவதுமில்லை!

ஆர்ப்பதுமில்லை!

கோர்ப்பதுமில்லை!

அடங்குவதில்லை!

அடக்குவதுமில்லை!

வார்த்தைத் தூரிகைக்

கொண்டு

பரந்து விரிகிறது!

கவிதை வானம்!

 

உரக்கச் சொல்ல

முடியவில்லைதான்!

சில வலிகளையும்!

துடைக்கத் துடைக்கப்

பெருகும் கண்ணீருக்கான

காரணங்களையும்!

ஆனாலும்

உருகிப் போகிறோம்

வாழ்வின் நுட்பங்களில்

இறைவன் நமக்கென்றே

ஒளித்து வைத்திருக்கும்

இரசனைகளை நம்பியவாறே!

 

மௌனமும் நிசப்தமும்

மையம் கொள்ளும்

இடத்தில் எல்லாம்

யாரோ ஒருவரின்

யாரோ ஒருவர் மீதான

நம்பிக்கை

கொல்லப்பட்டிருக்கிறது

என்பதே பொருளாகும்!

 

ஆழ அடி தோண்டிட

வேலையாள் போதும்

அழகாய் வடிவமைக்க

நிபுணர்கள் வேண்டும்!

கல்லை உடைக்க

அடிமைகள் போதும்!

ஆனால்,

சிற்பங்களை

வடிவமைக்க

சிற்பிகள்தான்

வேண்டும்!

அவரவர் தனித்துவமே

கடவுளின் மகத்துவம்!

 

உங்களை

நியாயப்படுத்த

பிறரைக்

காயப்படுத்தாதீர்கள்!

news
கவிதை
திரு இருதய பக்தி!

ஏராளப் பாவங்கள்  மண்ணுலகில் பெருகியதால்

இறைவனே நீர் இதயம் நொந்தீர்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனுக்குலத்தை

ஏந்தியே காக்க வந்தீர் - மனிதர்

எண்ணங்க ளத்தனையும் நம்பிக்கைத் துரோகமாகச்

சிலுவையிலே உயிரைத் தந்தீர் - உம்

இருதயம் முழுக்கவே வலிகள்தாம் எம்மாலே

இன்னலன்றி எதை நீர் கண்டீர்?

 

எது எதையோ அடைவதற்கு தீய வழி என்னவென்று

மனிதர்கள் யாம் இங்கு ஆய்கிறோம் 

இறுகிப்போன சுயநலத்தால் நன்மைகளை விற்றவராய்

பாவ நெருப்பில் குளிர் காய்கிறோம்

எப்படியோ பொருள் சேர்த்துக் கொடிகட்டிப்  பறந்தவராய் 

ஆன்மாவை இழந்து தேய்கிறோம்

ஈட்டியதைக் கூட்டிப் பார்த்து இறுதியிலே சுழியம் கண்டு

இழந்த வாழ்வை எண்ணி மாய்கிறோம்

 

பண்பு கெட்டு நாங்கள் செய்யும் பாவங்கள் எல்லாமே

உம் இதயத்தில் முட்கள் செருகும்

பரமன் உம்  திரு இதயம் பாதிப்புக்குள்ளாகி

இடைவிடா(துகுருதி யொழுகும்

பரிசுத்தத்தனத்தை விட்டுப்  பாதை மாறி நடந்தாலும்      

மன்னித்து இரக்கம் பெருக்கும் - உம்

பாசமதை உணராமல் பாழும் எம் நெஞ்சங்கள்

பாறைபோல் தினமும் இறுகும்!

  

நன்றியில்லா நடத்தை மிக

                     நாளும் பாவ முட்களினால்

நெஞ்சத்தையே குத்திப் பிளந்தோம்

நல்லவராம்  ஆண்டவர் நீர் 

                மன்னித்  தருள்வதனால்

நாங்களுமே வாழ்வை அடைந்தோம்

என்றும் இயேசு திரு இதயப்

                பக்திப்பற்று மிகக்கொண்டு

வணங்குவோருக்கு உயர்வு நிச்சயம்!

இறைவா! நீர் எமக்குச் செய்த நன்றி

                          நினைத்து நடந்தாலே            

எமக்கு நல் வாழ்வுண்டு, இதுவே சத்தியம்!

                          *சுழியம் - பூஜ்யம்