மலர்கள்
மலர்ந்துகொண்டே
இருக்கின்றன!
மௌனமாய்,
அழகாய்
மலர்ந்துகொண்டே
இருக்கின்றன
அக்கினிப்
பிழம்புச் சொற்கள்
அவற்றின்
உரமாயின.
தீ
நாக்கு மலர்களைச்
சுடுவதில்லை.
அம்மலர்களின்
துயரம்
அவை
பெற்ற
வடுக்கள்
குறித்து அல்ல;
மலர்களை
முத்தமிட்டுச் செல்லும்
வண்ணத்துப்
பூச்சிகளுடன்
கைகோர்த்து
உயரப்
பறக்க விடாமல்
தடுக்கும்
வேர்கள் குறித்துதான்.
ஆனால்
வேர்களினின்றி மலர்களில்லையே!
அம்மலர்கள்
மௌனமாய்,
அழகாய்
மலர்ந்துகொண்டே இருக்கின்றன
வண்ணத்துப்பூச்சியின்
அடுத்த
தீண்டலை எதிர்பார்த்து!