news
கவிதை
நாமும் உயிர்ப்போம்!

பாரோர் பாவம் போக்கிடவே

பாடு பட்டவர் உயிர்த்தாரே!      

யாரும் நினையா ஆன்மாக்களை!

என்றும் காக்க உயிர்த்தாரே!

சாவை வென்று உயிர்த்தாரே!

சரித்திர மாகி உயிர்த்தாரே!

பாவம் இன்றி உயிர்த்தாரே!

பட்டொளி வீசி உயிர்த்தாரே!

இயேசு வழியில் உயிர்ப்போமே!

இன்னல் நீங்கி உயிர்ப்போமே!

மாசு இன்றி உயிர்ப்போமே!

மாண்பு நிறைந்து உயிர்ப்போமே!

அயலான் அன்பில் உயிர்ப்போமே!

அலகை விட்டு உயிர்ப்போமே!

தயவுகாட்டி உயிர்ப்போமே!

தன்னலம் விட்டு உயிர்ப்போமே!

இறைவழி சென்று உயிர்ப்போமே!

இன்பம் பொங்க உயிர்போமே!

நிறைவாய் வாழ்ந்து உயிர்ப்போமே!

நிம்மதி அடைந்து உயிர்ப்போமே!

தீமை விட்டு உயிர்ப்போமே!

திடமனம் பெற்று உயிர்ப்போமே !

ஊமை இன்றி உயிர்ப்போமே!

உன்னத ராகி உயிர்ப்போமே!

திரு அவை வழியில் உயிர்ப்போமே!

திருந்தி வாழ்ந்து உயிர்ப்போமே!

அருமறை மகிழ உயிர்ப்போமே!

ஆண்டவர் அருளால் உயிர்ப்போமே!

பாவ மின்றி உயிர்ப்போமே!

பக்குவம் பெற்று உயிர்ப்போமே!

ஆவல் கொண்டு உயிர்ப்போமே!

அகிலம் போற்ற உயிர்ப்போமே!

தன்னைக் காக்க உயிர்ப்போமே!

தன்மொழி காக்க உயிர்ப்போமே!

தன்இனம் காக்க உயிர்ப்போமே !

தாழ்ச்சி பெற்று உயிர்ப்போமே!

பிறருக் காக உயிர்ப்போமே!

பகுத்தறி வுடனே உயிர்ப்போமே!

அறவழி வாழ உயிர்ப்போமே!

அன்பு வழியில் உயிர்ப்போமே!

புனிதர் வழியில் உயிர்ப்போமே!

புத்துயிர் பெற்று உயிர்ப்போமே!

புன்னகை சிந்தி உயிர்ப்போமே!

புகழின் உச்சியில் உயிர்ப்போமே!

அன்னைமரி வழி உயிர்ப்போமே!

அன்றாட பணிவழி உயிர்ப்போமே!

பெண்மையைப் பேணி உயிர்ப்போமே!

பேரின்பம் அடைய உயிர்ப்போமே!

news
கவிதை
கல்வாரிப் பயணம் புகட்டும் பாடம்!

உலகிற்கு உண்மையும்

நன்மையும்

வேப்பங்காய்தான்...

பதவியும் பணமும் மனிதனைப்

பீடித்திழுக்கும் பேய்தான்!

உண்மையைக் கைகழுவியவன்

மனசு அழுக்கானது!

காட்டிக் கொடுத்தால் காசு கிடைக்கும்

எட்டப்பன் குரு யூதாசு!

மணிமகுடம் சூடும் தலையில்

முள்முடியும் சூடப்படும் தலைபத்திரம்!

ஆடையைத் தொட்டாலே

அற்புதங்கள் மகிழாதே...

ஆடை முழுவதும் அகற்றப்படும்?

வாழ்க - வாழ்த்தும் ஒழிக - வசையும்

நீர்க்குமிழிதான்!

தவறுகிறவன் மனிதன்

மனம் மாறுகின்றவன்

மாபரனின் மைந்தன்!

அவமான சின்னம்கூட

மாமனிதன் கரங்களில்

அற்புதப் பாத்திரமாகும்!

சாட்டையால் அடித்தவன்

சிலுவை சுமத்தியவன்

ஈட்டியால் குத்தியவன் யார்? தெரியாது!!

ஆனால், எல்லா வலியும் தாங்கியவன்...

சரித்திரம்  படைக்கிறான்!

வாழ்வில் விழுந்து, எழுகிறவன்தான்...

வெற்றி சிகரம் ஏறுவான்!

பிறர் துயர் துடைப்பவரும்

பிறர் சுமையைத் தாங்குவோரும்

பிறருக்காய் கண்ணீர் வடிப்போரும்

கடவுளின் வடிவங்கள்!

வாள் எடுத்தவன்

வாளாலே சாவான்...

வாழ்க்கையையே

கொடுப்பவன்

வரலாறாய் வாழ்வான்!

மனிதன் இறப்புக்குப் பின்னும்

உயிர்ப்புடன் வாழ்கின்றான்

தான் வாழ்ந்த வாழ்வால்!

news
கவிதை
பேராற்றலே பெண்டீர்!

ஒரு பெண்ணாக இருப்பது தெய்வீகப் பரிசு;

அவள் இதயம் மென்மையானது, ஆனாலும் வலிமையானது!

அருளுடனும் திடத்துடனும் அவள் உயர்ந்து நிற்கிறாள்;

ஆன்மாவில் தளர்ந்து போகாமல் அனைத்திலும்

                                வெற்றி கொள்கிறாள்!

அவளுடைய கருணை ஒரு நதியைப் போல பாய்கிறது;

இரக்கமும் ஞானமும் அவள் பக்கத்தில் நடக்கின்றன!

சோதனைகளில் தன்னை அவள் புடமிட்டுக் கொள்கிறாள்;

அன்பிலும் நம்பிக்கையிலும் அவளுடைய

                                பலம் காணப்படுகிறது!

அவள் ஒரு பெரும் சுடருடன் வழியை ஒளிரச் செய்கிறாள்;

இயற்கையின் ஆற்றல் அவள்; இதமான ஆன்மா அவள்!

ஒரு தாயாக, தலைவியாக, உண்மையுள்ள தோழியாக

அவள் செய்யும் அனைத்திலும் நேர்த்தியும்

                                அக்கறையும் கொள்கிறாள்!

அவள் குடும்பத்தின், சமூகத்தின் முதுகெலும்பு;

அவள் மரபு, நீண்ட வரலாறாய் எதிரொலிக்கிறது!

கடும் போராட்டங்களால் அவள் மேலே உயர்ந்தவள்;

அவளுடைய நம்பிக்கை ஆழம் கொண்டது!

                                உள்ளம் அன்பு கொண்டது!

வலிகளால் அவள் பயணம் செதுக்கப்பட்டது;

ஆனாலும் மகிழ்வோடு வாழ்வைத் தழுவிக் கொண்டவள்!

அவளுடைய ஆற்றல் வானமளவு; அசைவு பூமியளவு;

அவளே ஆற்றல்; அவளே விடியல்;

                                புதியன காட்டும் வைகறை வானம்!

news
கவிதை
வானம் வசப்படும்!

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கல்லூரி மாணவ-மாணவியருக்கான கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக முதலிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு ரூ. 10,000 பரிசு பெற்ற கவிதை இது! அருள்சகோதரி அபிசா SAP அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

வசப்படும் வசப்படும் வானம் வசப்படும்

- நன்று வாழ்ந்தால் நாளும் வசப்படும்!

தமிழைச் சுவாசிக்க சுவாசிக்க!

தரணியை நேசிக்க நேசிக்க!

புத்தகங்களை வாசிக்க வாசிக்க!

புதிய சிந்தனைகளை யோசிக்க யோசிக்க!

வசப்படும் வானம் வசப்படும்!

முயற்சி செய்திடச் செய்திட!

பயிற்சி பயின்றிடப் பயின்றிட!

முன்னேற்றம் அடைந்திட அடைந்திட!

பண்போடு வாழ்ந்திட வாழ்ந்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

வள்ளுவனைப் போல் வல்லவனாய்

வாழ்ந்திட வாழ்ந்திட!

வட்டவடிவத்தைப் போல் சமமாய்

அணைத்திட அணைத்திட!

வண்ணங்களைப் போல் அழகாய் மாறிட மாறிட!

வல்லினங்களைப் போல்

வலிமையாய் உயர்ந்திட உயர்ந்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

ஆசானை மதித்திட மதித்திட!

ஆன்றோரைப் புகழ்ந்திட புகழ்ந்திட!

ஆர்வமாய்ச் செயல்பட செயல்பட!

ஆயனைப் போல் அணைத்திட அணைத்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

தாய் தமிழுக்காய் உழைத்திட உழைத்திட!

தாமரை போல் மலர்ந்திட மலர்ந்திட!

தாகமாயிருப்போரின் தாகம் தணித்திட தணித்திட!

தாகத்தோடு தமிழை நாடிட நாடிட!

வசப்படும் வானம் வசப்படும்!

அச்சமென்ற மடமையைப் போக்கிட போக்கிட!

அறியாமை என்ற அவலத்தை அகற்றிட அகற்றிட!

அறமென்ற அன்பனை நோக்கிட நோக்கிட!

அகம் என்ற அமுதத்தைக் காத்திட காத்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

வெற்றிக்கனியைச் சுவைத்திட சுவைத்திட!

வெற்றுக்காகிதங்களை நிரப்பிட நிரப்பிட!

வெட்கத்தைத் தினம் வென்றிட வென்றிட!

வெண்மையான நிறம் போல் மாறிட மாறிட!

வசப்படும் வானம் வசப்படும்!

ஞாயிறைப் போல் உதித்திட உதித்திட!

ஞானத்தை நாளும் போற்றிட போற்றிட!

ஞாலம் போல் பரந்த மனம் கொண்டிட கொண்டிட!

ஞாபகமாய் எதிர்காலத்தை நோக்கிட நோக்கிட!

வசப்படும் வானம் வசப்படும்.

ஏழைகளுக்காய் ஏங்கிட ஏங்கிட!

ஏற்றத்தாழ்வுகளை நொறுக்கிட நொறுக்கிட!

ஏடுகளைச் சுமந்திட சுமந்திட!

ஏமாற்றங்களை எதிர்த்திட எதிர்த்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

தினமும் ஒரு குறள் படித்திட படித்திட!

திருவள்ளுவரைப் போல் வாழ்ந்திட வாழ்ந்திட!

தித்திக்கும் தேனாய் மாறிட மாறிட!

திறமையோடு செயல்பட செயல்பட!

வசப்படும் வானம் வசப்படும்!

திறமைகளை அறிந்திட அறிந்திட!

திடமான மனம் கொண்டிட கொண்டிட!

திட்டங்களை வகுத்திட வகுத்திட!

தீபமாய் ஒளிர்ந்திட ஒளிர்ந்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

வார்த்தைகளில் மட்டும் அல்ல அல்ல!

வாழ்க்கையாய் மாற்றிட மாற்றிட!

வாடும் உள்ளங்களை அன்பு செய்திட செய்திட!

வானமளவு இரக்கம் காட்டிட காட்டிட!

வசப்படும் வானம் வசப்படும்!

வானம் வசப்படும் வசப்படும் - இதன்படி

வாழ்ந்தால் மட்டுமே வசப்படும்

வானமும் வசப்படும் ஞானமும் வசப்படும்!

news
கவிதை
அருள்செய் லூர்தம்மே...!

விண்முடிசூழ்  நீள்()க்கச்சை தேவமகளாகி

                தாளடியால் மண்ணளந்து விண்ணரசியாய்

தண்குளிரும் வான்உடுகுகள் கதிர்நிலவை

கால்பதித்து செங்கைஇரு குவித்தவளாய்

கண்ணுயர்த்தி கைதொழுதிட்டபெர்ந்தெத்தெனும்

                அருமகளைக் காட்சிக்கண்  தருகற்பகமே!

விண்ணவர்கள் படைசூழ குன்றணையாய்

                வானரசியே! எனக்கருள்செய்லூர்தம்மே

மல்லிகையும் முல்லையும் மணக்கும் மலைமுடி

                மருமலரே! அருங்கொடியே லூர்துஅம்மே

அள்ளித்தரும் அருளூற்றை அளிக்கும் பாங்கில்

                ஆங்காங்கேகெபிகொண்ட அன்னைப் பேறே

துள்ளிவந்தபெர்ந்தத்திடம்செபிக்க வேண்டி

                துடிக்குமிதயம் மகிழவேண்டி காட்சி தந்தாய்.

புள்ளிகொண்ட லூர்தன்னையே! பண்பின் அம்மே!

                பக்தர்எம் வேண்டல்கள் தீரு மம்மே!

news
கவிதை
ஆறாக ஓடும் வற்றாத உழைப்பு!

இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமா

                இவ்விதழ் வழி கூறினால் ஏற்புடையதாகிடும்.

                மலர்களின் இதழ்கள் விரியவிரிய இரசிக்கத்

                தூண்டி  மனம் இலகுவாகிடும் இவ்விதழ்களின் ஏடுகள்/ விரிய

உச்சரித்து சுவைத்து சுவைதரச் செய்யும்/

                இதன் பிறப்பு 1975 சிறப்போ 2025/

                கிறித்தவத்திற்கு மட்டுமல்ல படைப்பனைத்திற்கும் ஏதுவாக/

                ஓருலகப் பார்வையில் உருவான இறைத் திட்டம்/

ஆகச்சிறந்த ஆளுமைகள் உள்ளத்துள் உதித்தது/

                இறைஇயேசு இராஜாவின் இலட்சியக்கனவை நிறைவேற்ற /

                கருவுருவாகி ஆய்வாளராக ஆட்சியாளராக சட்டமன்ற/

                நாடாளுமன்ற உறுப்பினர்களாக மிகுதியாகப் பங்கேற்று/

சமநீதி சமத்துவம் உலகளவில் மலர்ந்து /

                மனிதம்காத்து மக்கள்நலன் கருதும் அரசமைய/

                மலர்ந்தின்று பணி இராஜன் இயக்கத்திதழ்/

                நல்லவர்களின் நாடித்துடிப்பாக அமைய கூர்முனை/ கொண்டு

புரட்சி சீர்மிகுலகாக மறுமலர்ச்சியகமாக மாற்ற/

                இடையில் பணி ஆனந்தானந்தமாக மனிதம் உயர்வடைய/

ஆனந்தமடைய பல உருவாக்க படைப்புகளில்/ செயல்களில்/

                எழுத்தாளர் பயிற்சிபட்டறையுமொன்று ஒருகருவி நானும்/

இதுவரை இவையெல்லாம் ஒரு முன்னுரை இனி கவிதையின் வாயிலில்

உரோ: 5:5-இல் உள்ளது போல் யூபிலியாண்டின் எதிர்நோக்கு இதழ்

                யோவா: 10:09 உரைத்த வாயிலாக எதற்கு வாயில்?

                இறைஇயேசுதாம் அமைதியின் கதவு உள்ளே நுழைய துணிவில்லை

                இனி கடந்து ஆன்ம பரிசோதனை செய்து சவால் விட்டு

                பயணிக்கும் பாதை நீயாக உர்பி எத் ஓர்பி யூபிலி டிசம்பர் 6, 2025

ஒருசாராருக்கு உபதேசம் உரைத்தவர்  பேறுபெற்றுயர்ந்தவரெனில் /

                உருளுகின்ற உலகத்து மாந்தரெல்லாம் உவந்தேற்கும் /

                அருங்கருத்தை உரைத்த எம்பெருமான் இறைவார்த்தைக்கேற்ப

                தரணிக்கெல்லாம் பெருவிருந்து அருமருந்தான இதழிது/

உதிக்கின்ற ஆதவனைப் பின்னிறுத்தி உறக்கமெழுந்து/

                கொதிக்கின்ற பொதிசுமக்குமுன் கையேந்தும் இதழிது/

                விதியென்றெண்ணாதே விதையாகப் பிறப்பெடுமெனும் இதழ்/

                மதிகொண்டு மாசின்றி நானிலம் போற்றும் / இதழ்

விழுவிட்டு விசாலமாக நெடுந்துயர்ந்து இதழ்/

                எழுதுவதும் பேசுவதும் மனிதத்தின் எழுச்சிக்காக/

                பழுதான உள்ளங்கள் வழக்கமென்பதைத் தவிர்த்து/

                ஒழித்து அழுமக்கள் துயர்துடைக்கும் இதழ்/

கண்ணுற்றுப் பார்ப்பதற்குக் கவின்மிகு விருந்து/

                மின்னேற்றி தன்னகத்தே முன்னேற்றும் ஒளி/

                எல்லோரா ஓவியத்திற்கீடாய் ஓங்கின எழிலோவியம்/

                நல்லறிவுகளைப் படைப்பாக்கி நாடேற்றும் கலைக்கோயில்/

சொல்லாற்றல் மிகுதிங்கு செழுங்கருத்து ஊற்றிது/

                மெய்யுணர்வு நுண்ணறிவு தூண்டிடும் நெறிபிழகாதிங்கு/

                ஆறாக ஓடியது வற்றாத எமது உழைப்பு /

                நூறில் நிச்சயம் தடம் பதிப்பேன்/

வேரறுந்து வீழ்வேனோ தேரேறிச் செல்வேன் / மனத்தேரேறிச் செல்வேன்/

                இதழேந்துவோம் வாசிப்போம் யோசிப்போம் நேசிப்போம்/

                தரணியெங்கும் விடுதலை நாயகனின் புகழ் / பரப்புவோம்

                நறுமணம் பரவிவர பரவலாக்கம் செய்வோம்!