சிறுமலரின் சிறுவழி
இன்று
நமக்குப் புதுவழி
சிறுநிலா
சாய்ந்த போது
மெல்ல
வந்து பூத்தது ஒரு மலர்!
சிறு
மலராய் பூத்தவள்!
சின்ன
அன்பால் ஈர்த்தவள்
விண்மீனாய்
மெல்ல எழுந்தவள்
விடிவெள்ளியாய்
என்றும்
மலர்ந்தவள்!
ஒளிபொருந்திய
சிறு புன்னகையால்
ஒய்யாரமாய்
வலம் வந்தமையால்
சிறிய
செயலொன்றாலே
சீரிய
அன்பு பெருகுமென்றாள்!
சிறுவழியில்
நடந்தவள்
சிற்பமாய்
வாழ்ந்தவள்
சின்ன
உதவிகள் செய்தவள்
சின்ன
உள்ளம் கொண்டவள்!
எளிமையின்
உருவமுடையவள்
- தெரேசாள்
குழந்தை
உள்ளமுடையவள்
- தெரேசாள்
சிறிய
பாதை தந்தவள் - தெரேசாள்
பெரிய
மனம் கொண்டவள் - தெரேசாள்!
சின்ன
அன்பும்
சிந்தைத்
தூய்மையும்
அன்பனின்
அருளும் இரக்கமிகையும்
பாசமெனும்
வாசல் கொண்டமையால்
பரமனைப்
பருவ
வயதிலே அடைந்தாள்!
சிறிய
செயல் புன்னகை ஒன்றும்
வாழ்வில்
பெரும் மாற்றம் தரும்
அவள்
வாழ்ந்தது
வார்த்தையினால்
அல்ல;
அன்பின்
செயலால் உருமாறினாள்!
துன்பத்தில்
கூட நம்பிக்கை
தனிமையில்
கூட
இறைவன்
கை
தூய்மை
கொண்ட
அந்த
நெஞ்சம்
தெய்வத்தைத்
தேடி
அடைந்தது
தஞ்சம்!
அவள்
வழி பெரிதல்ல
பூமியின்
பிரச்சினைகளும் பெரிதல்ல
ஆனால்,
அந்தச் சிறுவழி
கடின
வழியுமல்ல
வானம்
தொடும்
ஓர்
எளிய வழியுமல்ல!
மூழ்கவில்லை
துன்பக்கடலில்
அவள்
இறைவனின் கரத்தை ஏணியாக்கினாள்
என்
வழி முழுவதும்
நம்பிக்கை
என்றாள்
அன்பு
ஒன்றே
என்
முதல் பணி என்றாள்!
சிறிய
செயல்களில் அன்புடைமை
பெரியவரிடத்தில்
தாழ்ச்சியுடைமை
கடவுளின்
மீது நம்பிக்கையுடைமை
இயற்கையின்
மீது ஆர்வமுடைமை!
சிறுமலர்
மானிடத்தின் வழிகாட்டி
அழிவற்ற
அன்பின் ஆலயம் கட்டி
அவள்
வழி நமக்குப் புதுவழிகாட்டி
சிறுவழியால்
இறையரசைச்
சுட்டிக்காட்டி!
அந்த
மலரின் பாதை
பார்க்கச்
சிறியது போலும்
ஆனால்
அதில் நடப்போருக்கோ
புதிதாய்ப்
பிறக்கும் பாதைகள்!
தூய
வாழ்வு வாழ்ந்தவள் - பிறர்
துன்பம்
நீக்கப் பிறந்தவள் - தன்
துயர்
என்றும் மறந்தவள் - அன்பில்
தூண்
போல் உயர்ந்து நிற்பவள்!
சிறுமலரின்
சிறுவழி - எந்நாளும்
எங்களை
நடத்தும் இறைவழி
அது
நமக்கு உணர்த்தும் பெருவழி
அதுதான்
அன்பு என்னும் தனிவழி!
கிறிஸ்துவை
அன்பு செய்த ராணியே!
துன்பத்தை
வரமாகப்
பெற்ற சிறுமலரே!
மரியாயின்
அருள் பெற்ற ராணியே!
வேதனையை
வரமாகப்
பெற்ற சிறுமலரே!
இறைநம்பிக்கையில்
வாழ்ந்தவளே!
ஆன்மாக்களை
அவரில் மீட்டெடுத்தவளே!
தாழ்ச்சி
பொறுமையின் சிகரமே!
தரணிக்கு
நீ ஓர் இலக்கணமே!
குழந்தை
உள்ளம் கொண்டவரே!
என்றும்
நீங்கா இடம் பெற்றவரே!
சிறுமலரின்
சிறுவழி - இன்று
எங்களுக்குப்
புதுவழி!
வாழியவே
சிறுமலரே!