பூனா
மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ஜான் ரோட்ரிக்ஸ் (57) அவர்கள் மும்பை உயர் மறைமாவட்டத்தின் வாரிசுப் பேராயராக, நவம்பர் 30 அன்று திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்டு
21, 1967 அன்று மும்பையில் பிறந்த இவர் 1998, ஏப்ரல்
18 அன்று மும்பை உயர் மறைமாவட்டத்திற்காகக் குருவாக அருள்பொழிவு பெற்றார். பேராயரின் செயலர், கோட்பாட்டு இறையியல் பேராசிரியர் போன்ற பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய இவர் மே 15, 2013 அன்று மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, மார்ச் 25, 2023 அன்று பூனா மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது தனது சொந்த உயர் மறைமாவட்டத்திற்கே வாரிசுப் பேராயராக (co–adjutor) நியமிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.