கேரள
மாநிலம் கோழிக்கோட்டில் முஸ்லிம்களின் தாய் என்று போற்றப்படும் 58 வயதான கார்மல் அருள்சகோதரி மரியானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அக்டோபர் 24 அன்று உயிரிழந்தார்.
மலப்புரம்
மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் 2010- ஆம் ஆண்டு முதல் பாத்திமாகிரி சமூக சேவை மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த இவர், பெண்களின் நலனுக்காக அயராது உழைத்து, அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு
வந்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் வெள்ளத்தின் போது நிவாரணம் மற்றும் ஆறுதல் ஆகிய இவரின் செயல்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.
அருள்சகோதரி
மரியானி தனது சமூகப் பணிகளுக்காக கேரள கத்தோலிக்க ஆயர் பேரவை, பல உள்ளூர் மற்றும்
தேசிய அமைப்புகளிடமிருந்து பல விருதுகளைப் பெற்றார்.
முஸ்லிம்களுக்கு ‘அம்மாவாக’
மாறி பல உதவிகளையும், சீர்திருத்தங்களையும்
செய்த இவரின் இழப்பு மிகப்பெரியது.