news
இந்திய செய்திகள்
‘வாழ்நாள் முழுவதும் கற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்’

வாழ்வில் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற விரும்பும் இளைஞர்கள் எதிர்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் சமாளித்து, தொடர்ந்து கற்பதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்வதை வாழ்வின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் முன்னேற முயற்சிகளை மேற்கொள்ளாமல், நேர்மையுடனும் மன உறுதியுடனும் செயல்பட வேண்டும்.”

- பேராசிரியர் மகேஷ் சந்திர மிஸ்ரா, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) முன்னாள் இயக்குநர்

news
இந்திய செய்திகள்
சாலை விபத்துகளால் இரத்ததான சேவை அதிகரிப்பு

சாலை விபத்துகளால் இரத்தத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இரத்ததானம் செய்ய பல இளைஞர்கள் இன்றைக்கு முன்வருகின்றனர். ஆனால், இயந்திரமயமான உலகம், வேகமான வாழ்க்கையில் அவசரத் தேவைக்காக அவர்களைத் தொடர்புகொள்வது எதிர்காலத்தில் கடினமாக இருக்கலாம். எனவே, தொடர்ந்து இரத்ததான முகாம்களை நாம் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”

- திருமதி. சுதா சேஷய்யன், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்

news
இந்திய செய்திகள்
வரிவிலக்குக் கிடையாது!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றும் கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் வழங்கப்படும் சம்பளம் வருமான வரி விதிகளின் கீழ் வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 93 மறைமாவட்டங்கள் மற்றும் சபைகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பள்ளிகளில் பணிசெய்யும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் தங்கள் வருமானத்தை முழுவதுமாகத் தங்கள் மறைமாவட்டத்திற்கும், சபைகளுக்கும் கொடுத்து விடுகின்றார்கள். அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்யப்படுகின்றது. அதனால், வருமான வரிவிலக்குத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நவம்பர் 7 அன்று வரி செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

news
இந்திய செய்திகள்
இந்தியத் திரு அவைக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

இந்தியாவின் நான்கு மறைமாவட்டங்களான தமிழ்நாட்டின் வேலூர், மும்பையின் வசை, கொல்கத்தாவின் பாக்டோக்ரா ஆகியவற்றுக்குப் புதிய ஆயர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்கு இணை உதவி ஆயரையும் நவம்பர் 9 அன்று திருத்தந்தை  பிரான்சிஸ் நியமித்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டற்குப் புதிய ஆயராக அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களையும், மும்பையின் வசை மறைமாவட்டப் புதிய ஆயராக அருள்தந்தை தாமஸ் டிசோசா அவர்களையும், கொல்கத்தாவின் பாக்டோக்ரா மறைமாவட்ட ஆயராக ஆயர் பால் அவர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்குத் துணை உதவி ஆயராக அருள்தந்தை அந்தோணி தாஸ் பிள்ளை அவர்களையும் நியமித்துள்ளார்.

news
இந்திய செய்திகள்
ஒவ்வொருவரும் நேர்மையுடன் இருந்தால் நம் தேசம் வலிமை பெறும்

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் நேர்மையோடும் உண்மையோடும் இருந்திட வேண்டும். நாம் கடைப்பிடிக்கும் சின்னச் சின்ன ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் நம்மையும் வாழ்வில் உயர்த்தும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். நாம் பணியாற்றும் அலுவலகத்தில் நேர மேலாண்மையை நாம் சரியாகப் பின்பற்றினால், நம்மைப் பார்த்து சக ஊழியர்களும் பின்பற்றுவார்கள். யாராவது நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல், நம் மனமறிந்து உண்மையாகவும் விதிகளை மீறாமலும் செயல்பட்டால் நமக்கான இலக்கினை நம்மால் விரைந்து அடைய முடியும்.”

- திரு. வி. நந்தகுமார், .ஆர்.எஸ்., வருமான வரித்துறை ஆணையர்

news
இந்திய செய்திகள்
‘அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதே கடமை’

அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை நீதித்துறை பாதுகாக்கும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் நம்பிக்கை. அத்துடன் நீதி பரிபாலன சேவையையும் நீதித்துறை பூர்த்தி செய்யும் என்றும் அரசமைப்புச் சட்டம் நம்புகிறது. அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதும், அனைத்துக் குடிமக்களையும் அவர்களின் அந்தஸ்தைப் பார்க்காமல் சமமாக நடத்துவதும் அரசமைப்புச் சட்டப்படி நீதித்துறையின் கடமை.”

- திரு. சஞ்சீவ் கன்னா, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி