news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் அபாயகரமானது. அதன் முகவராகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மக்களின் வாக்குரிமைக்கும் நாட்டின் சனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக பா... உருவெடுத்துள்ளது. அக்கட்சி ஆட்சியிலிருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை.”

- திரு. மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்

மக்கள் பிரதிநிதிகள் எல்லாருமே அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை கொண்டவர்கள். எனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது ஆக்கப்பூர்வமான முறையில் மக்கள் பிரச்சினைகளை அவர்கள் நலன் சார்ந்து விவாதித்துத் தீர்வு காணும் கூட்டத்தொடராக அமைய வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பு. இதை நிறைவு செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புகளுக்குமே உண்டு. ஒவ்வொரு விநாடியும் மக்கள் வரிப்பணம்! அதை நாம் விரயம் செய்தால் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற பொறுப்பும் கடமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டும்.”

- முனைவர் கோ. விசுவநாதன் வேந்தர், வி..டி. பல்கலைக்கழகம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 414 வட்டாரங்களில் 500 வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சிறந்த அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. மாதிரிப் பள்ளிகளில் உள்ளதைப் போன்ற நவீன வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்டு - உறைவிட வசதிகள் மட்டும் இடம்பெறாது. அந்தப் பள்ளியில் வாரந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். நீட், ஜே... போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து +2 மாணவர்களும் தங்கள் சுய விருப்பத்தின்படி இணைந்து பயன்பெறலாம். இந்த வெற்றிப் பள்ளிகள் மூலமாக, சுமார் 50,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.”

- திரு. பி. சந்திரமோகன், பள்ளிக் கல்வித்துறைச் செயலர்

news
இந்திய செய்திகள்
பஞ்சாப் சிறுபான்மையினர் ஆணையத்திற்குப் புதிய தலைவர்!

போதகர் அங்கூர் நருளாவின் நண்பரான ஜட்டிந்தர் மசிஹ் கௌரவ் அவர்களை பஞ்சாப் மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக அம்மாநில அரசு நியமித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் கலனூர், குர்தாச்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பால்மிகி-புரொட்டஸ்டேண்ட் குடும்பத்தில் பிறந்த இவர், பிரிந்த சபை அமைப்புகளில் நன்கு அறியப்பட்ட முகமாக இருப்பவர். கத்தோலிக்கர் மற்றும் பழங்காலப் புரொட்டஸ்டேண்ட் மதப்பிரிவினர் பொறுப்பு வகித்த பின்னணியில், பெந்தகோஸ்து திரு அவையைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வகிப்பது இதுவே முதல் முறை.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வாக்குத் திருட்டு குறித்த தகவலை நான் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டேன். அதை ஆதாரங்களுடன் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், போலி வாக்காளர்கள் குறித்து பா... தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களுக்குத் தேர்தல் ஆணையம் எவ்வித ஆதாரத்தையும் கேட்கவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். இதை எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே அவர் அறிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசால் உண்மையான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியாது; இடஒதுக்கீட்டிற்கான 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்கவும் முடியாது.”

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பிரதமர் புகழ்ந்து பேசியது அந்த நாளையே அவமதித்த செயலாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் புகழ்ந்து பேசியதும், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் சுதந்திர தின அழைப்பிதழில் இந்துத்துவக் கொள்கைத் தலைவர் சாவர்க்கரின் புகைப்படத்தை மகாத்மா காந்தியின் படத்திற்கு மேல் அச்சிட்டதும் மிகப்பெரிய சதியின் ஒரு பகுதி என்பதைக் காட்டியுள்ளது. வெறுப்புணர்வு, வகுப்புவாதம், கலவரம் என்ற மோசமான வரலாற்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுமந்து கொண்டுள்ளது. மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவு என்ற நமது வரலாற்றைப் புதைத்து வெறுப்புணர்வு பரப்பும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.”

- திரு. பினராயி விஜயன், கேரள முதல்வர்

ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்வுக்காக நாம் களத்தில் நிற்கிறோம்; தொடர்ந்து நிற்போம். மதச்சார்புள்ளக் கூட்டணி, மதச்சார்பற்றக் கூட்டணி என்பதே தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான அரசியல். ‘மதச்சார்பின்மை காப்போம்என்ற கருத்தியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதன் மூலமாகவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை நாம் மேலும் உறுதிப்படுத்த முடியும்.”

- திரு. தொல். திருமாவளவன், வி.சி.. கட்சித் தலைவர்

news
இந்திய செய்திகள்
“குழு உணர்வோடு பயணிப்போம்” - கர்தினால் பிலிப் நேரி

வெர்னாவில் உள்ள பாட்ரே கான்சிசாவ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கோவாவின் இந்தியத் துறவற சபைகள் கூட்டமைப்பின் (CRI) வெள்ளி விழாவில் கலந்துகொண்ட கர்தினால் அவர்கள் துறவற சபைக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் தங்களது ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்த அழைப்பு விடுத்தார். மேலும், “நாம் சவாலான சூழலில் வாழ்கிறோம். கூட்டொருங்கியக்கத் திரு அவை என்பது அடிப்படையில் ஒரு பணியாற்றும் திரு அவைஎன்றார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அரசக் குடும்பம், நீதிபதிகள் அல்லது நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்காக நீதிமன்றங்களும் நீதித்துறையும் நாடாளுமன்றமும் இல்லை. அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கவே அவை உள்ளள. அந்த நீதி மக்களின் வீடுகளைத் தேடிச் செல்ல வேண்டும்; விரைவாகவும் குறைந்த செலவிலும் நீதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். நமது கலாச்சாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசமைப்புச் சட்டப்படி நமது கடமை. ஒவ்வொரு மதத்திற்கும் புனித நூல் உள்ளது. ஆனால், ஒவ்வோர் இந்தியருக்கும் அரசமைப்புச் சட்டம்தான் புனித நூலாகும். அதை நாட்டு மக்கள் அனைவரும் வாசிக்கவேண்டும்.”

- உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்கவேண்டும். மனிதராகப் பிறக்கும் அனைவருக்கும் நன்மை-தீமை என்ற கலப்புநிலை இருக்கும். இந்தக் கால இளைஞர்கள் எந்த ஒரு காப்பியத்தையும் முழுமையாகப் படிக்காமல் தீயவை இருப்பதாகக் கூறுகின்றனர். காப்பியங்களை எழுதியவர்கள் தீயவற்றைக் கூறுவதே இல்லை. காப்பியத்தில் தீமை இருப்பதுபோல தோன்றினாலும், ஆழமாகப் படித்தால் அதிலிருக்கும் உண்மைக் கருத்து விளங்கும்.”

- திரு. இலங்கை ஜெயராஜ், ஆன்மிகச் சொற்பொழிவாளர்

பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டுவந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார். இந்தியா - இரஷ்யா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால் இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும்.”

- முனைவர் வைகைச் செல்வன், மேனாள் அமைச்சர்

news
இந்திய செய்திகள்
வன்முறையால் பாதிக்கப்பட்டு மணிப்பூரில் இடம்பெயர்ந்தோருக்கு 20 வீடுகள்

இம்பால் மறைமாவட்டம் சிங்காட்டில் உள்ள புனித தாமஸ் ஆலயத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காகப் புதிதாக 20 வீடுகளைக் கட்டி திறந்துள்ளது. இந்த வீடுகள் மே 2023-இல் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே வெடித்த இன வன்முறையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புனித தாமஸ் ஆலய அருள்தந்தை அதனாசியஸ், “பதவியேற்புக்குச் சற்று முன்பு வானத்தில் ஒரு வானவில் தோன்றியது, இது புயலைத் தொடர்ந்து எழும் நம்பிக்கை, புதிய தொடக்கங்கள் மற்றும் தெய்வீக உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த அடையாளமாகும்என்று பகிர்ந்துகொண்டார்.