news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்வதை அரசு அறிந்திருக்கவில்லையா? அந்தப் பகுதியில் எந்தவிதப் பாதுகாப்பும் போடப்படாதது ஏன்? ஏன் அந்த மக்கள் கைவிடப்பட்டனர்? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், மத்திய அரசு மற்றும் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி. இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து வரும் நிலையில் மணிப்பூர் பற்றி எரிந்தது; தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன; தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் மட்டுமின்றி வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இத்தகைய தொடர் உள்நாட்டுப் பாதுகாப்புத் தோல்விகள் நடைபெற்றபோது, அவர் இராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இடம் கொடுத்த பாதுகாப்பு குறைபாடுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகுவாரா?”

- திருமதி. பிரியங்கா காந்தி, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்

தமிழ்நாட்டைச் சனாதனமயப்படுத்த பா... துடிக்கிறது. இங்குள்ள கட்சிகளுடனும் சாதிய மதவாத அமைப்புகளுடனும் பா... இணைந்து செயல்படத் தொடங்கிய பிறகுதான் சாதியின் பெயரில் வன்முறைகள், கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சாதியக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் இயற்ற பா... ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருந்து, வெறுப்பு அரசியலைப் பரவவிடாமல் தடுக்கவேண்டும்.\"

- திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறைக்கு எனமாநிலப் பாதுகாப்பு ஆணையம்என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆணையம்தான் காவல்துறையை வழிநடத்த வேண்டும். இந்த ஆணையம் காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முறைப்படுத்தி நடுநிலையோடு செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அச்செயல்பாடுகளை அறிக்கையாகச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதிக்க வழிவகுக்கும். இந்த ஆணையத்தின் அறிக்கையைச் சட்டமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும். மாநிலக் காவல்துறையின் அமைச்சர் இந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்; எனினும் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. இந்த ஆணையத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முக்கியமான உறுப்பினராக இருப்பார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும், மாநிலத் தலைமைச் செயலாளரும், மாநிலக் காவல்துறை தலைவரும் உறுப்பினர்களாகச் செயல்படுவர். மேலும், மதிப்பும் கண்ணியமும் கொண்ட அரசியல் சாராத பொதுமக்கள் மூன்று அல்லது ஐந்து பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த ஆணையம்தான் காவல்துறையை நடத்த வேண்டும் எனும் நிலை ஏற்பட்டால், காவல்துறை தன் பணிகளைத் தன்னிச்சையாகச் செய்ய வாய்ப்புகள் அதிகம்.”                              

- உச்ச நீதிமன்றம்

news
இந்திய செய்திகள்
பொய்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அருள்சகோதரிகள் கைது!

சத்தீஸ்கரில் உள்ள  துர்க் நகரில் மனித வர்த்தகம் மற்றும் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டில், அமல அன்னையின் அசிசி அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த வந்தனா பிரான்சிஸ், ப்ரீத்தி மேரி என்னும் இரண்டு அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்து தேசியவாத உணர்வோடு செயல்படும் பா... தலைமையிலான ஒன்றிய அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கிறித்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளையும், மதமாற்றத் தடைச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, கேரளக் கத்தோலிக்க ஆயர் பேரவையும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

news
இந்திய செய்திகள்
கேரளாவில் மறைந்த மேனாள் முதல்வருக்கு தலத்திரு அவை அஞ்சலி!

கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மேனாள் மாநில முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் தனது 101 வயதில் மரணித்தார். அவரது மறைவுக்குக் கேரளக் கத்தோலிக்க ஆயர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள், சமூக நீதி, ஊழலை எதிர்த்துப் போராடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் நலனுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும், தனது 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், பொதுமக்களின் தலைவராகவும், அரசியல் பிளவுகளைத் தாண்டி, அசைக்க முடியாத கொள்கைப் பிடிப்புள்ளவராகவும் உருவெடுத்தார் என்றும் சீரோ-மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் ஆயர் இரபேல் தட்டில் அவரைப் பாராட்டியுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வழக்கறிஞர் தொழிலில் உள்ளவர்கள் அறம் சார்ந்து வாழவேண்டும். திருக்குறள் ஓர் உன்னதமான செல்வம்! வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மேஜைமீது கண்டிப்பாக திருக்குறள் புத்தகம் வைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு குறளாவது படிக்கவேண்டும். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறிய இந்த மண்ணில், தத்துவத்தை அறிந்து சட்டம் பயிலும் மாணவர்கள் அனைத்து நுணுக்கங்களையும் கற்க வேண்டும்

- மாண்புமிகு அரங்க. மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

சனநாயகத்தின் தூணாக நீதித்துறை விளங்குகிறது. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் நீதித்தேரில் இரண்டு சக்கரங்களைப் போன்றவர்கள். வழக்குகளில் ஆஜராகும்போது வழக்கறிஞர்கள் முழு தயாரிப்போடு இருக்கவேண்டும். வழக்குத் தொடரும் கட்சிக்காரர்கள் தங்களது மனைவியைவிட தனது வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களைதான் பெரிதாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது.”

- மாண்புமிகு ஆர். சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளுக்கும் உண்டு. நீதிபதி ஒரு சொல்லை நீதிமன்றத்தில் தவறாகப் பயன்படுத்தினால், அதுவும் நீதிமன்ற அவமதிப்புதான் இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இதை இன்று மக்கள் முன்னால் சொல்லவேண்டிய நிலைக்கு வழக்கறிஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமை வழக்கறிஞர்களுக்கு உண்டு. அதனால், இன்று நீதிமன்றத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.”

- திருமதி. . அருள்மொழி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாம் மருத்துவராகலாம், பொறியாளராகலாம், வழக்கறிஞராகலாம், விஞ்ஞானியாகலாம், ஏன் நாட்டின் உயர்ந்த பீடத்தில் இருக்கலாம், ஆனால், முதலில் மனிதர்களாக மாறவேண்டும். மனிதர்களாக நம்மை மாற்றுவதுதான் கல்வியின் நோக்கம்; கற்றலின் நோக்கம். எல்லாத் தாய்மார்களும் பத்து மாதம் சுமந்து ஒரு உயிரை வெளி உலகத்திற்கு அனுப்பும்போது, அந்த உயிரினத்தை எது மனிதனாக மாற்றிக்காட்டுகிறதோ, அதற்குப் பெயர்தான் கல்வி; அதற்குப் பெயர்தான் கற்றல். அந்த நிலையை நோக்கி மானுடம் பயணிக்கவேண்டும்.”

- குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார்

எந்தத் தேசத்தின் வளர்ச்சியையும் மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூகநீதியாக மட்டுமே இருக்கமுடியும். நீதியற்ற சமூகத்தில் எவ்வாறு மனப்பூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள்? மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்தியம் இல்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.”

- திரு. சி. மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய தலைமுறையினருக்கும் ஏற்ற வகையில், அறிவுரைகளை திருவள்ளுவரால் வழங்க முடிந்திருக்கிறது என்றால், அது மிகவும் ஆச்சரியத்திற்குரியதாகும். திருக்குறளில் கடவுள் குறித்தோ, தலைவர்கள் குறித்தோ, அரசர்கள் குறித்தோ, எந்தவிதக் குறிப்புகளும் இடம்பெறவில்லை. அதனால்தான் அதைபுதுமறைஎன்கிறோம். 5400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று கீழடி ஆராய்ச்சிகள் கூறினாலும்கூட, இன்றைக்கும் இளமை ததும்பும் மொழியாகத் தமிழ் திகழ்கிறது. எனவே, மாணவர்கள் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்ளவேண்டும்.”

- திரு. ஒளவை . அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்

தற்போதைய தலைமுறையினரிடம் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் இல்லை. அவ்வாறு இல்லாமல் நம்முடைய வேர்களைத் தேடிப்போகவேண்டும். திராவிட இயக்கத்திற்கும் தமிழ் இயக்கத்திற்கும் நட்பு முரண்பாடு உண்டு; பகை இல்லை. ஆனால், அதற்கு எதிர்மறையான கருத்துகள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ் மற்றும் தமிழர்களின் உரிமைகளைக் காக்க இரு இயக்கங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கவேண்டும்.”

- திரு. ஆளூர் ஷாநவாஸ், சட்டப்பேரவை உறுப்பினர்

news
இந்திய செய்திகள்
இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டைத் தடுக்க ஒரு சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கடுமையான மதமாற்றத் தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து அம்மாநில வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன் குலே மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், கிறித்தவத் தலைவர்களிடமிருந்து எதிர்வினைகள் எழும்பிய நிலையில், நாக்பூர் பேராயர் எலியாஸ் கொன்சால்ஸ், “நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச்சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமையே தவிர, மதச்சுதந்திரத்தை அடக்குவதற்குப் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது அல்லஎன்று கூறியுள்ளார்.