“மருத்துவச்
சிகிச்சை என்பது பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதற்கான வழி மட்டுமே அல்ல; அது நாட்டுக்கே சேவையாற்றுவதற்கான வழியாகும். மருத்துவர்கள் நோயை மட்டும் குணப்படுத்துவதில்லை; அவர்கள் ஆரோக்கியமான சமூகத்திற்கு அடித்தளம் இடுகின்றனர். அதேவேளையில், மருத்துவர்கள்-நோயாளிகளுக்கு இடையே சீரான தகவல்தொடர்பு இருப்பதற்கான பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தங்களின் தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நோயாளிகளின் வலியை உணர்ந்து குணப்படுத்துவதன் முக்கியத்துவம் மருத்துவர்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.”
- மாண்புமிகு, திரௌபதி முர்மு,
குடியரசுத்
தலைவர்
“ஒரு குற்றச் சம்பவம் நிகழ்ந்தால் அது குறித்து விசாரிக்க உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விசாரணையின்போது உடல் ரீதியாக யாரையும் துன்புறுத்தக்கூடாது. முறையாக அழைப்பாணை கொடுக்காமல் யாரையும் அழைத்து விசாரிக்கக்கூடாது. இரவு 7 மணிக்கு மேல் விசாரணைக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது. விசாரணைக்காக யாரையாவது காவல் நிலையத்தில் வைத்திருந்தால், அப்போது காவல் நிலையத்தில் கண்டிப்பாக ஆய்வாளர் இருக்கவேண்டும். பெண்கள், குழந்தைகளிடம் பகல் நேரத்தில் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை இரவு 7 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்.”
- திரு. சங்கர் ஜிவால்
டி.ஜி.பி,
தமிழ்நாடு
காவல்துறை
தலைமை
இயக்குநர்
“சிந்து சமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம், சீன நாகரிகம், சுமேரிய நாகரிகம் ஆகியவை நகரங்களில் பழமையானவை. வரலாறுகள் அறியப்பட்டவரை சிந்து சமவெளி எகிப்திய, மயன் நாகரிகங்களுக்கு மத்தியில் கிடைத்திருக்கிற சுமேரிய நாகரிகம்தான் நீண்டது, மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது. சிந்து சமவெளிப் பகுதிகளிலும் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும்போது சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பது உறுதியாகிறது.”
- முனைவர் திரு. வைகைச்
செல்வன்,
முன்னாள்
அமைச்சர்