news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

என் போன்றோரின் இளமைக் காலங்களில் பதற்றம், மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற வார்த்தைகளை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. பெற்றோரிடம்கூட இதைக் கூற முடியாது. ஆனால், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று வயது பெண் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, ‘குழந்தைக்கு உடல்ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை; அது மனஅழுத்தத்தால் ஏற்படுகிறதுஎன்றார். மாணவர்கள், எத்தனை மணிநேரம் கைப்பேசியை ஒதுக்கி வைக்கிறீர்களோ அதைப் பொருத்து மன ஆரோக்கியமும் மேம்படும்.”

நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன், மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும் பின்பும் நீதி மன்றங்கள் ஆதிக்க சாதியைச் சார்ந்த கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுத்து வந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்என்ற அரசாணை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அர்ச்சகர்களுக்கான தகுதிகளைப் படித்து, முறையாகப் பயிற்சி பெற்ற பிறகும் அனைத்துச் சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை. சாதிய ஒழிப்புக்கு எதிரான இந்தச் சட்டப் போராட்டத்தில் பி.வி.பி. போன்ற அறக்கட்டளைகள் மக்கள் மன்றங்களிலும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டும்.”

உயர்திரு. அரிபரந்தாமன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி

குரு, சீடர் உறவு உண்மையாக இருத்தல் வேண்டும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழும் காலங்களில் சாதனை படைக்க வேண்டும். வாழும் காலங்கள் அர்த்தமுள்ளதாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். இதற்குச் சான்றாகப் பல்வேறு நூல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற நூல்களை வாசிப்பதன் மூலம் சாதனை படைக்கலாம்.”

பேராசிரியர் அரங்க.இராமலிங்கம்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“தேர்தல் ஆணையம், மத்தியில் ஆளும் பா.ச.க. அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. முழு நாட்டிலும் தேர்தல்களில் வாக்குகள் திருடப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக பீகாரிலும் ‘பா.ச.க. - தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதி நடக்கிற து. அதாவது, தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்த (Special Intensive revision – SIR) செயல்முறை, வாக்காளர் பட்டியலில் போலிப் பெயர்கள் சேர்ப்பதையும், உயிருள்ளவர்களை ‘இறந்தவர்கள் என்று குறிப்பிடுவதையும்தான் செய்கிறது. அரசியலமைப்பையும் சனநாயகத்தையும் கேலிக்குள்ளாக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல், தேசத் துரோகத்திற்குச் சமம்!”

உயர்திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

“தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர்களை அகற்றி, மகாராஷ்டிராவில் பா.ச.க. வெற்றிபெற்றது. இப்போது பீகாரிலும் அதைச் செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில், தேர்தலுக்கு முன்பு மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இது மாநில அரசின் நிர்வாகத்தைக் குலைக்கும் முயற்சி, பா.ச.க. ஓர் ஊழல்வாத, வாக்குத் திருடர்களின் கட்சி!

செல்வி. மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள முதல்வர்

“விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும், சமூகம் சார்ந்த விரோத மனநிலை எடப்பாடிக்கு இருக்கிறது என்கிறேன். தொடக்கத்திலிருந்து தலித் அமைப்புகளில் பணியாற்றி, இப்போது தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். என்னைப் பார்த்து, ‘பிச்சைக்காரன் என்று இழிவுபடுத்துகிறார் எனில், சமூக விரோத எண்ணங்கள் அவருக்குள் புதைந்திருக்கின்றன என்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இன்னும் சாதிய விரோத மனநிலை இருப்பது வேதனையளிக்கிறது. அது தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதல்ல.”

திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூக அரசியலில் புரட்சி செய்யும் ‘நம் வாழ்வு’ இதழுக்கு உயரிய விருது!

இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் அமைப்பின் (Indian Catholic Press Association) 30-வது தேசிய மாநாடு புனே நகரின் ஞானதீப கல்விக்கூடத்தில் உள்ள இனிகோ சதன் அரங்கத்தில் கடந்த மூன்று நாள்களாக (செப். 19-21) நடைபெற்றது.

இந்த மாநாட்டில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் சமூக, ஆன்மிக, அரசியல் மற்றும் வாழ்வியல் வழிகாட்டியாக விழிப்புணர்வு வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுஇதழின் சிறப்பான பணிகளைப் பாராட்டி இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகை அமைப்பு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவ்விருதினை அமராவதி மறைமாவட்ட ஆயர் மேதகு மால்கம் செக்கியூரா, ICPA-இன் இந்திய ஆயர் பேரவை ஆலோசகர் மேதகு ஹென்றி டிசூசா அவர்களும், ICPA-இன் தலைவர் உயர்திரு. இக்னேசியஸ் கொன்சால்வா அவர்களும் வழங்க, ‘நம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் பெற்றுக்கொண்டார்.

இவ்விருதைப் பெற்றுக்கொண்ட அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள், தமிழ்நாடு ஆயர் பேரவையின் மேனாள் மற்றும் இந்நாள் ஆயர் பெருமக்களுக்கும், முதன்மை ஆசிரியர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மற்றும் சந்தாதாரர்களுக்கும் இவ்விருதினை அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார்.

news
இந்திய செய்திகள்
‘நம் வாழ்வு’ முதன்மை ஆசிரியர் ICPA செயற்குழு உறுப்பினராகத் தேர்வு!

இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கத்தின் தென் மாநிலங்களின் பிரதிநிதியாக, தமிழ்நாடு கத்தோலிக்க இதழானநம் வாழ்வுவார இதழின்  முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புனேயின் ஞானதீப கல்விக் கழகத்தின் வளாகத்தில் உள்ள இனிகோ சதனில், இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கத்தின் (ICPA) ஆண்டுப்  பொதுக்குழுக் கூட்டம் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில்புதிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்தலில்இந்தியன் கரன்ட்ஸ்பத்திரிகையின் மேனாள் ஆசிரியர் அருள்பணி. சுரேஷ் மேத்யூ OFM CAP தலைவராகவும், அருள்பணி. ஜோ எருப்பக்காட் SSP துணைத்தலைவராகவும், அருள்சகோதரி டெஸ்ஸி ஜேக்கப் SSPS செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்பொருளாளராக அருள்பணி. சஜித் சிரியக் SSP, இணைச் செயலாளராக ரெஞ்சித் லீன், தென் மாநிலங்களின் பிரதிநிதியாக தமிழ்நாடு கத்தோலிக்க இதழானநம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அருள்முனைவர் செ. இராஜசேகரன், வடக்கு மண்டலத்திற்கு அருள்பணி. . கௌரவ் நாயர் மற்றும் மேற்கு மண்டலத்திற்கு ராஜேஷ் கிறிஸ்டியன், நிறுவன உறுப்பினராகதி நியூ லீடர்பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான அருள்பணி. ஆண்டனி பங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்தல், மூத்த பத்திரிகையாளர் லாரன்ஸ் கோயல்ஹோ தலைமையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் மேனாள் தலைவர் இக்னேஷியஸ் கொன்சால்வஸ் அவர்களுக்குச் சிறப்பாக நன்றி தெரிவித்தனர். இந்த ICPA, கத்தோலிக்க ஊடக வல்லுநர்களுக்கான ஒருங்கிணைந்த தளம் என்பது குறிப்பிடத்தக்கது.  

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சட்டம் என்பது வெறும் பட்டம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தின் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறுவதே சட்டக்கல்வியின் உயரிய நோக்கம். விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நிலைப்புத்தன்மை ஆகியவை இக்கால வழக்கறிஞர்களுக்குத் தேவை. இந்திய அரசியல் சாசனம், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான கருவூலமாக உள்ளது. நீதிபரிபாலனச் சமத்துவம், சகோதரத்துவம், நீதிநெறி என்பதே பல வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்கிறது.”

- உச்ச நீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வர் சிங்

எந்த அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் தேவையற்ற குப்பையும் இருக்கின்றன. நாம்தான் குழந்தைகளுக்குச் சரியானதை அடையாளம் காட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற தலைமுறையாக மாணவர்கள் மாறிவிடக்கூடாது. தொழில்நுட்பத்திற்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்தவேண்டும். அறத்தின் வலிமையையும் நேர்மையின் தேவையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். பாடப்புத்தகங்களைக் கடந்து, இலக்கியங்களை, பொது அறிவுத் தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்திகளின் தேவையைப் பற்றியெல்லாம் புரியவைக்க வேண்டும். கல்வி தொடர்பாகச் செய்யும் பணிகளைத் தாண்டி, மாணவர்களுக்குள்ளே சமத்துவம், சமூகநீதியின் தேவையைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனதுவிட்டு பேசுங்கள். நூலகங்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்கு, ஆசிரியர்கள் முதலில் படித்துக் கொண்டே இருக்கவேண்டும்.”

- உயர்திரு. மு..ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

பெண்கள் குடும்பத்தை மட்டுமே நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எனக் கூறுவது சரித்திரப் பிழை. பெண் சமுதாயத்திற்கு ஆட்சி புரியவும் தெரியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியுள்ளனர். பல்வேறு தடைகளைத்தாண்டி இந்தியாவிலேயே முதல் பெண் வழக்கறிஞராகப் பதிவு செய்தவர் கார்னிலியா. அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்தச் சமுதாயம் எப்போது பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்கிறதோ, அப்போதுதான் மண்ணும், நாடும் உயரும் என்பது பாரதியின் கூற்று. அதற்கேற்ப பெண்கள் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் மேலோங்கி வர வேண்டும்சமூகமும் காலமும் ஒன்றாக நிலைத்து நிற்பதில்லை. ஆகவே, பெண் வழக்கறிஞர்கள் நோக்கமும் செயல்பாடுகளும் அறிவு சார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.”

- உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் சனநாயக முறையின்மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாகும். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் என அனைவருக்கும் வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டு, தேர்தலில் வெற்றிபெற்று வருகிறது. இதைப் பீகாரில் அரங்கேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டுக்கு எதிராகப் பீகாரில் தொடங்கிய இந்தப் புரட்சிப்பயணம் விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து தேசிய இயக்கமாக உருவெடுக்கும். தற்போது பா.ச.க. தலைவர்களை ‘வாக்குத் திருடர்கள் என மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

“அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாமீது 50 விழுக்காடு வரி விதித்துள்ளார். இரஷ்யா கச்சா எண்ணையைக் குறைந்த விலைக்குத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், அம்பானிக்கும் அதானிக்கும்தான் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு இரஷ்யா கொடுக்கிறது. அதன் பயன் இந்திய மக்களுக்குச் சென்றடையவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.”

- திரு. செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. அதேபோல், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடும் தரவேண்டும். தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.”

- இரா. முத்தரசன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர்