news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஒவ்வொரு துறையிலும் பா... வலிமையானதாக இருக்கிறது. பா...வை அரசியல் கட்சி என்பதைவிட, ஓர் இயந்திரம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். பா... ஓர் இயந்திரம்; அதைப் பின்னால் இருந்து வேறு ஓர் இயந்திரம் இயக்குகின்றது. இரண்டு இயந்திரங்களும் சேர்ந்து தேர்தல் ஆணையம் முதல் நாட்டின் கடைக்கோடியில் உள்ள காவல் நிலையம்வரை அனைத்து இயந்திரங்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலிமையான இயந்திரத்தை அனைத்து முனைகளிலிருந்தும் நாம் எதிர்கொள்ள வேண்டும். 2029, நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வலுவான சனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் சரிசெய்ய முடியாத இடத்திற்குச் சென்றுவிடுவோம். அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாகும்.”

உயர்திரு. . சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்

ஆப்ரேஷன் சிந்தூர்இராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது. நமது இராணுவ நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்ததால், இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை என்ன? என்று நான் மீண்டும் கேட்கிறேன். இது ஒரு குறைபாடு அல்ல; இது ஒரு குற்றம். இந்த விவகாரத்தில் உண்மையை அறிந்துகொள்ள இந்த நாட்டுக்கு உரிமை உள்ளது.”

- உயர்திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையில் இனப்படுகொலை நடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று .நா. மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இனப்படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத்தருவது இந்தியாவால் மட்டும்தான் சாத்தியமாகும். அதற்காக மத்திய அரசுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து, ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.”

- உயர்திரு. அன்புமணி இராமதாஸ், பா... தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தியா, உணவுப் பாதுகாப்பிலிருந்துவிவசாயிகளின் வளர்ச்சிஎன்று மாறவேண்டும். விவசாயிகள் விளைபொருள்களைச் சந்தைப்படுத்தவும் மதிப்புக் கூட்டவும் தொழில் முனைவோராகவும் வணிகர்களாகவும் மாறவேண்டும். விவசாய விளைபொருள்களின் சந்தை மிகப்பெரியது. மதிப்புக் கூட்டுப் பொருள்கள் மூலம் தொழில் வளம் பெருகும். மாணவர்களின் ஆராய்ச்சி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் தருவதாக இருக்கவேண்டும். இதற்கு அரசு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆதரவளிக்கவேண்டும். விவசாயிகளை முன்னிறுத்துவதாக ஆராய்ச்சி இருக்கவேண்டும்.”

- உயர்திரு. ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர்

பா... அரசியல் சாசனத்தைச் சேதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை பா... 400 இடங்களில் வெல்லும் என்ற உறுதியுடன் இருந்தது. அவர்களின் திட்டம் வெற்றி பெற்றிருந்தால் அரசியல் சாசனத்தை முற்றிலும் மாற்றியிருப்பர். புதிய குடியரசு, புதிய அரசியல் சாசனம் என மாற்றம் கொண்டு வந்திருப்பார்கள். தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால்தான் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டது என நினைக்கலாம். ஆனால், பா... இன்னும் அரசியல் சாசனத்தைத் தாக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ். சிந்தனையில் வளர்ந்தவர்கள் திட்டமிட்ட முறையில் சிறு சிறு சட்ட மாற்றங்கள் மூலம் சாசனத்தின் அடிப்படைகள் பாதிக்கப்படுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்ஃப் திருத்தச் சட்டம், கல்வி உரிமையைக் குறைத்தல் ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.”

- உயர்திரு. . சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்

சாதிப் பெருமை பேசியும், சாதித் தலைவர்களை மிகைப்படுத்தியும், ஆயுதங்களுடன் பழிக்குப்பழி என வீர வசனங்களுடன் மாணவர்களும் இளைஞர்களும் தங்களைத் திரைப்பட ஹீரோக்களாக நினைத்துச் சமூக ஊடகங்களில் வெளியிடும்ரீல்ஸ்கள்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்படும் இந்த ரீல்ஸ் காணொளிகள், சமூகத்தில் குறிப்பாக மாணவர்கள் இடையே சாதிய அடிப்படையிலான பகையையும் பிளவையும் ஆழமாகத் தூண்டுகின்றன. பள்ளி, கல்லூரி வளாக மோதல்கள், கல்வி நிலையங்களுக்குள்ளே மாணவர்கள் சாதி அடிப்படையாகப் பிரிந்து செயல்படுவது போன்ற செயல்பாடுகள் அவர்களின் படிப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன.”

- தமிழ்நாடு காவல்துறை

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

மாணவர்கள் தங்களின் அறிவு, திறமையை ஒன்றிணைத்து நிலையான வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு ஆகியவற்றில் பங்களிப்பை வழங்கி நம் தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தங்கள் கல்வியை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இறுதிவரை புதியனவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அப்போதுதான் அவர்கள் நிலைத்திருக்க முடியும். எதிர்காலத் தேவைகளை உணர்ந்து வேலை தேடுபவர்களாக அல்லாமல், தாங்களே புதிய முயற்சிகளை மேற்கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.”

- உயர்திரு. எம். நிர்மல் குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

அனைத்து மாவட்டங்களிலும் பட்டா நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்கான தடையில்லாச் சான்று, மத வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்படும் இடத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுப் பொதுச்சட்டம் மற்றும் ஒழுங்கு துறை மூலமாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. ஆகவே, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டடத்திற்கு அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை அமைக்கலாம். இதற்குத் தடையாக எந்தச் சக்திகள் இருந்தாலும் அவை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்.”

- மாண்புமிகு. நாசர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு

தற்போது சி.பி.. -இன் விசாரணைப் போக்கு விமர்சிக்கும் வகையில்தான் உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு வெவ்வேறு அளவுகோல் வைத்துச் செயல்படுகின்றனர். சில வழக்குகளில் வலுவான ஆதாரங்கள் இருந்தும், உயர் அதிகாரிகளை விடுவித்து, கீழ்நிலை அதிகாரிகளை மட்டுமே குற்றவாளிகளாகக் காட்டுகின்றனர். சி.பி.. அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. சில வழக்குகளில் தேவையற்றவர்களைக் குற்றவாளிகளாகச் சேர்ப்பது, தேவையற்ற விசாரணையைத் தொடர்வது, ஆவணச் சாட்சியங்களை ஆய்வு செய்யாமல், அறிவியல்பூர்வ தடயங்களைச் சேகரிக்காமல் முக்கியக் குற்றவாளிகளை விடுவித்துவிட்டு விசாரணை நடத்துகின்றனர். இதன் காரணமாக, சி.பி..மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சி.பி.. விசாரணை அமைப்பு தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைக்கிறார்களா?\"

- நீதிபதி கே.கே. இராமகிருஷ்ணன், உயர்நீதிமன்றம், மதுரை

news
இந்திய செய்திகள்
காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்கர் நல்லடக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 57 வயதான கத்தோலிக்கர் சுஷயீல் நத்தனியேல் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். இந்தோர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்தபோது, பயங்கரவாதிகள் இவரைச் சுட்டுக்கொன்றனர். ஏப்ரல் 24 அன்று இந்தோர் மறைமாவட்ட ஆயர் தோமஸ் மேத்யூ குட்டிமக்கல் தலைமையில் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. நத்தனியேலின் மனைவி ஜெனிபர், பயங்கரவாதிகள் அவரை மதம் கேட்டுச் சுட்டதாகத் தெரிவித்தார். இவரது குழந்தைகள் தப்பியோடியபோது காயமடைந்தனர்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அனைத்துத் தொழில் துறைகளும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான செயல்திறன் மிக்க தொழில்நுட்ப அறிவாற்றல் தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை வடிவமைக்க தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இயந்திரவழிக் கற்றல், தரவு அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உறுதுணை புரிகின்றன. தொழில்நுட்பங்களைப் படைப்பாற்றலுடன் ஒருங்கிணைத்து உருவாக்கும் புத்தாக்கத் திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

- பேராசிரியர் டேனியல் சந்திரன், சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை முதல் தலைமுறை உரிமைகள் என அழைக்கிறோம். அடுத்து சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை இரண்டாவது தலைமுறை உரிமைகள் என்கிறோம். பின்னர் வளர்ச்சி, சுகாதாரச் சூழலுக்கான உரிமைகள் போன்ற கூட்டுரிமைகள் மூன்றாவது தலைமுறை உரிமைகள் எனப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் நான்காவது தலைமுறை உரிமைகள் உருவாகியுள்ளன. இது பாலினத்தை மாற்றும் உரிமை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல், இனப்பெருக்க உரிமைகள் போன்ற தனிப்பட்ட சுயாட்சி உள்ளிட்ட உடலியல் சார்ந்த உரிமைகளாகவும் இணைய உரிமை, அந்தரங்க உரிமை, எண்ம ஆளுமைக்கான உரிமை போன்ற எண்ம மற்றும் தகவல் உரிமைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய உரிமைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை நம்முடைய பழைய உரிமைகளுக்கும் விழுமியங்களுக்கும் சவாலாக உருவாகியுள்ளன.”

- நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

மனிதர்களால் செய்யப்படும் பல்வேறு வேலைகளை மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரங்களால் செய்ய முடியும் என்பது உண்மைதான். அதேநேரம், இதனால் வேலைவாய்ப்பே இல்லாமல் போவதற்கு இன்னும் காலம் அதிகம் இருக்கிறது. முன்பு கம்ப்யூட்டர் வந்தபோதும் வங்கிகள், இரயில்வே துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால், அது பலுகிப் பெருகி இருக்கிறது. மக்கள்தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி இருக்கும் வரை ஒரு வேலை போனாலும், புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.”

- திரு. சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்

news
இந்திய செய்திகள்
திருத்தந்தையின் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் அஞ்சலி!

ஏழைகளை அரவணைத்து, ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்து, விளிம்புநிலை மக்களின் இறைவாக்கினராக வாழ்ந்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு வத்திக்கானில் இந்திய அரசின்  சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற அடக்கத் திருப்பலி நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.