news
இந்திய செய்திகள்
போரில் நாசமாகும் குழந்தைகள்!

காசா பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல்கள் குழந்தைகளைப் பெருமளவில் பாதிப்படையச் செய்துள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கியதிலிருந்து 15,613 குழந்தைகள் கொல்லப்பட்டனர், 33,900 குழந்தைகள் காயமடைந்தனர். 20,000 குழந்தைகள் அனாதைகளாக மாற்றப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீனிய நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புனித பூமி பொறுப்பாளர் அருள்பணி. பால்த்தாஸ், குழந்தைகளின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். காசா பகுதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள குழந்தைகளுக்கு உதவிகள் வழங்க திரு அவை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. “குழந்தைகள் கொல்லப்படும் குற்றம் மனிதகுல வரலாற்றில் அழிக்க முடியாத பாவமாக இருக்கும்என அருள்பணி. பால்த்தாஸ் கூறியுள்ளார். இத்தாலி நாடு, காசா குழந்தைகளுக்குச் சிகிச்சை வழங்கி உதவி செய்து வருகின்றது.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது மிகவும் அலட்சியம் கொண்ட ஓர் அரசின் உண்மை முகத்தை மறைப்பதாகவே உள்ளது. கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு என்பது கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அரசின் செயல்பாடுகளின் அடையாளமாக மாறி உள்ளது. அதிகாரக் குவிப்பின் தீங்கு நிறைந்த விளைவுகள், கல்வித்துறையில் முக்கியமாக எதிரொலித்துள்ளன.”

- திருமதி. சோனியா காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்

அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள்... என்று ஒன்றிய அரசு கூறியது. பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்துடிஜிட்டல் இந்தியாஎன்றார்கள். அடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள்; குறைவான இருப்புத்தொகை என்று கூறி அபராதம் விதித்தார்கள். தற்போது அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி .டி.எம்.மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 23 வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏழைகளுக்கு வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்து வருகிறது. இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல; இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் .டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப் படுகிறது. ஆனால், எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடத்தைக் கற்பிக்க தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிச் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியார் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் தமிழாசிரியர்களுக்கு வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணம். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாகத் தமிழ் ஆசிரியர் பணி இடங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.”

- உயர்திரு. மருத்துவர் இராமதாஸ், பா... நிறுவுநர்

news
இந்திய செய்திகள்
அருள்பணியாளரின் குறும்படம்

திருநங்கைகள் தினமான மார்ச் 31 அன்றுடிரான்ஸ்சென்டர்என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரியான கே. பிரித்திகா அவர்களின் பயணத்தை விவரிக்கிறது.

அருள்தந்தை எர்னஸ்ட் ரொசாரியோ .. இயக்கியுள்ள இந்த 28 நிமிட ஆவணப் படமானது திருநங்கை சமூகத்திற்கான சவால்களை எடுத்துக்காட்டுகின்றது. இந்த ஆவணப்படம்  பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தியாவிலுள்ள அறியப்பட்ட மொழிகளில் எழுத்துரு பெற்ற முதல் மொழி தமிழ்தான். அது ஆதாரப்பூர்வமாக  நிரூபிக்கப்பட்டது.  இப்பெருமையை நாம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், உண்மையான பெருமைகளை உணராமல் இருப்பதும், இல்லாத பெருமைகளைத் திரும்பத் திரும்ப எடுத்துக்கூறுவதுமான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் இலக்கியம் நம் வளமை; நம்  பெருமை. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் கற்றவர்களால்-கற்றவர்களுக்காக எழுதப்பட்டது. ஆனால், திருக்குறள் போன்ற நூல்கள் கற்றவர்களால் மற்றவர்களுக்காக எழுதப்பட்டது. பாரதியார் ஒருவரே சரியாக நம் உணர்வை வரிசைப்படுத்தினார்: ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு, என் மொழி, என் இனம், என் நாடுஎன்று வரிசைப்படுத்தினார். இந்த வரிசை இருக்கும் வரை நாட்டுப்பற்று  குறையவே குறையாது. ஆகவே, இந்த வரிசை சரியாக இருக்க வேண்டும்.” 

- உயர்திரு. பாலச்சந்திரன் ... (ஓய்வு), எழுத்தாளர்பேச்சாளர்

தோற்றுப்போகாதே! படிப்பில் மட்டும் தோற்றுப்போகாதே! தோற்றுப்போனால், அடுத்தவர்கள் நினைப்பதுபோல்தான் நம் வாழ்க்கை அமையும். வெற்றியடைந்தால் நாம் நினைப்பதுபோல நம் வாழ்க்கையை வாழலாம். இப்போது அது புரியாது; இளம் வயதில் அது புரியாது. ஆனால், புரிந்தவர்கள் வெற்றி அடைகிறார்கள். வாழ்க்கையில் முன்னேறி, அதிகாரம் என்ற எல்லைக்குள் போய் பொருளாதாரத்தில் பெரியவர்களாக இந்த நாட்டையும் இந்தக் குடும்பத்தையும் காப்பாற்றுகின்ற அத்தனை ஆளுமைகளுக்கும் அடித்தளமாக அமைந்தது கல்வியே!”

- முனைவர் திருமதி. பர்வீன் சுல்தானா, கல்வியாளர்

கடவுள்கள் சரியாகத்தான் உள்ளனர். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. தொல்லியல் துறையினர் மதுரை - திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மலை அனைவருக்கும் பொதுவானது.”

- நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஜே. நிஷாபானு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தியா என்பது செழுமையான மொழிகளின் நிலமாகும். நாடாளுமன்றத்தில் கூட மக்களவை உறுப்பினர்களின் பேச்சு 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.  தற்போது மொழிகள் விவகாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் கவலை அளிக்கிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை நமது கலாச்சாரம் வலியுறுத்துகிறது. இந்திய நிலப்பரப்பில் மொழி தொடர்பான மோதல் போக்கு வேண்டுமா? நம் நாட்டின் மொழிகள் ஆழமான ஞானத்துடன் கூடிய இலக்கியச் சுரங்கத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வோர் இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம்.”

- உயர்திரு. ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர்

ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்குச் சுமையாகவே அமையும். இதைக் கல்வியாளர்கள்  உள்ளிட்ட அறிவியல் பார்வை கொண்ட பலரும் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை வழியிலான அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மாணவர்களின் மீது மொழித்திணிப்பு என்னும் சுமையை ஏற்றாமல், திறன் மேம்பாடு என்கின்ற வாய்ப்பை வழங்க வேண்டும். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் ஒன்றிய அரசின் இரகசியத் திட்டம். அதை வெளிப்படையாகவே தமிழ்நாடு எதிர்த்து நிற்கும்; வென்று காட்டும்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

மொழிக்கொள்கை என்பது வேறு, கல்விக் கொள்கை என்பது வேறு. மொழிக்கொள்கை என்பது அரசின் நிர்வாகத்தோடு தொடர்புடையது. மொழிக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை மறுப்பதும், விடுவிக்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது. புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மாட்டோம் என்கிற, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து, ஒட்டுமொத்த நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல; 2001- 2006 காலகட்டத்தில் நவோதயாப் பள்ளிகளைத் தமிழ்நாடு ஏற்க மறுத்தபோது, அப்போது இருந்த ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை நிறுத்தவில்லையே! இப்போது மட்டும் ஏன் இந்தப் பிடிவாதம்? இருமொழிக் கொள்கையில் .தி.மு.. உறுதியாக உள்ளது.”

- உயர்திரு. செம்மலை, மேனாள் கல்வி அமைச்சர்

news
இந்திய செய்திகள்
கிறித்தவர்கள் மீது தாக்குதல்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தவக்காலத்தின்போது கிறித்தவர்களின் செபக்கூட்டங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் ஆன்மிக வழிபாட்டிற்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரிக்கை வைத்துள்ளனர். 2024-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தில் 209 கிறித்தவர் மீதான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.