news
சிறப்புக்கட்டுரை
இஸ்திரிப் பெட்டி (வலையும் வாழ்வும் – 34)

அது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட பகுதி. வானுயர வீடுகள் இல்லையென்றாலும், இரண்டு மூன்று மாடிகளில் வீடுகள் அட்டைப் பெட்டிகளைப்போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கதையைக் கூறும் வகையில் கவித்துவமாகக் காட்சியளித்தன.

துள்ளியோடும் மான்குட்டியைப்போல பாவாடைச் சட்டையோடு ஏழு வயது ஜாஸ்பின் குதூகலமாக அந்தஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் தெருக்களில் தினமும் ஓடித்திரிவாள். ஜாஸ்பினுடைய பெற்றோர் அந்த அப்பார்ட்மெண்ட்காரர்களின் துணிகளுக்கு இஸ்திரிப் போட்டுத் தருபவர்கள். தினமும் வீட்டிலிருந்து குடும்பத்தோடு தங்கள் மூன்று சக்கர சைக்கிளில் வந்துவிடுவார்கள். அந்த மூன்று சக்கர சைக்கிள் இஸ்திரிப் போடுவதற்காகவே நடுவில் பலகை அடிக்கப்பட்டுப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது.

ஜாஸ்பினும், அவளுடைய தாயும் பின்பக்கமாக அமர்ந்துகொள்ள, அந்த மூன்று சக்கர சைக்கிளை அவளுடைய தந்தை, ஒரு தேரை இழுத்து வருவதைப்போல இழுத்து வருவார். அந்தச் சைக்கிள் ஓட்டிச்செல்வதற்கு ஏற்றதாக இல்லை. ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்ட் தெருக்களில் செல்வதற்கு ஜாஸ்பினுக்கு ஆர்வமாக இருக்கும். தினமும் வருகிறபோதும் போகிறபோதும், அத்தெருவில் ஓடியாடி விளையாடுகிறபோதும், இஸ்திரி போடப்பட்ட துணிகளை வீடுகளுக்குச் சென்று கொடுத்துவரப் போகிறபோதும் அந்த வீடுகள் அவளுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தும்.

மஞ்சள் பெயிண்ட் அடித்த வீட்டிற்குமஞ்சணத்திஎன்று பெயர் வைத்தாள். வெள்ளை நிற வீட்டிற்குவெளுப்பி.’ வீட்டின் முன்பாகக் கொடிகள் படர்ந்திருந்த வீட்டின் பெயர்பூங்கொடி. இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் அவள் பெயர் வைத்திருந்தாள். சில வீட்டுச் சன்னல்கள் அவளைப் பார்த்துக் கண்ணடிக்கும்; வீட்டு மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணிகள் அவளைப் பார்த்துக் கையசைத்து அழைக்கும். சிலசமயம் அந்த வீடுகளோடு அவள் பேசுவதும் உண்டு. அந்த அப்பார்ட்மெண்ட் தெருக்களில் அவளைத் தெரியாத யாரும் இல்லை, எந்த வீடும் இல்லை.

ஒருநாள் காலைஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் எதிர்புறம் இருந்த குடிசை வீடுகளை இடித்துப் போட புல்டோசர் வண்டி ஒன்று வந்து நின்றது. அந்தச் சேரிப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் எல்லாரும் தங்கள் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அவர்களுள் ஜாஸ்பினும் ஒருவர்.

அதிகாரிகள் பின்வாங்குவதாக இல்லை. ‘நீங்க இருக்கிறது புறம்போக்கு நிலம்; பிரச்சினை பண்ணாமல் உடனே காலி செய்யுங்கள்என்று அதிகாரி ஒருவர் ஒலிப்பெருக்கியில் கூறிக் கொண்டிருந்தார்.

எங்க வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கே சாமி போவோம்?’ என்று மூதாட்டி ஒருத்தி அதிகாரி ஒருவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு சத்தம் போல, வந்திருந்த அதிகாரிகளுக்கு அங்கிருந்த யார் சொல்லும் கேட்கவில்லை.

வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. குழந்தைகள் கட்டிய கடற்கரை மாளிகையை ஏதோ பெருத்த கால்கள் மிதித்துச் செல்வதைப் போல, அந்தப் புல்டோசர் இயந்திரம் அந்த ஏழைக் குடில்களை இடித்துப்போட்டுச் சென்றது. மழைக்காலத்தில் முட்டைகளையும் தானியங்களையும் சுமந்து தப்பிச்செல்லும் எறும்புகளைப்போல, ஒவ்வொருவரும் அவரவர் வீட்டின் எச்சங்களைச் சுமந்து கொண்டு புறம்போக்கு நிலம் தேடிச்சென்றனர்.

சில நாள்கள் கழித்து, ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்டிற்கு வழக்கம்போல ஜாஸ்பினும் அவளுடைய குடும்பமும் மூன்று சக்கர சைக்கிளில் வந்தனர். எப்போதும் துள்ளித்திரியும் ஜாஸ்பின் அன்று பெரும் கவலையில் இருந்தாள். எல்லாரிடமும், ‘இனி நாங்கள் இங்கு வரமாட்டோம்; வேறு இடத்திற்குச் சென்றுவிட்டோம்என்று கூறவும், ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்டிலிருந்து பெறவேண்டிய பாக்கி ரூபாயைப் பெற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் அந்தக் குடும்பம் கூறியது.

அங்குக் குடியிருந்தவர்களில் யாரும் அவர்களைப் பார்த்து, ‘இங்கேயே கொஞ்ச நாள் தங்கிக்கொள்ளுங்கள்; உங்களுக்குச் சிறு இடத்தை ஏற்பாடு செய்து தருகிறோம்என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. பணத்தைக் கூட யாரும் கூடுதலாகக் கொடுக்கவில்லை.

பத்து ஆண்டுகள் இந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்களுக்குத் துணி இஸ்திரி பண்ணிக் கொடுத்தும் கொஞ்சம்கூட இவர்களுக்கு நன்றியுணர்வு இல்லையேஎன்று அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொரு வீடும் ஜாஸ்பினுடன் ஏதோ பேச முயற்சித்தன. ஆனால், அவளுக்கு இப்போதெல்லாம் அந்த வீடுகளையும், வீட்டில் உள்ளவர்களையும் பிடிக்கவே இல்லை. அவற்றையெல்லாம் வில்லன்கள் போலவே பார்த்தாள். ‘வெளுப்பிகைகொட்டிச் சிரிப்பதைப் போலிருந்தது. ‘மஞ்சணத்திநக்கலடிப்பதைப் போலிருந்தது. ‘பூங்கொடிஏளனச் சைகை காட்டினாள் என்றே அவளுக்குத் தோன்றியது. ‘இஸ்திரிப்பெட்டி ஒன்றைக் கொண்டு இந்தப் பூமியையே சமப்படுத்திவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று எண்ணிக்கொண்டாள். சைக்கிளின் பின்புறத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டே அந்தஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் வீடுகளை ஏக்கத்தோடு பார்த்தவாறே கடந்து சென்றாள் ஜாஸ்பின்.

ஜாஸ்பினைப்போல சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் ஏங்கக்கூடிய ஏராளமான சிறுமிகள் இவ்வுலகில் உள்ளனர். அதிலும் குறிப்பாக, இணையப் பாதுகாப்பு பற்றித் தொடர்ந்து பேசிவருகின்ற அமெரிக்காவைச் சார்ந்த தேஜஸ்வியைப் பற்றிக் கூறலாம். சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தேஜஸ்வி தொடர்ந்து வழங்கி வருவதால்டைம் (Time) பத்திரிகை அச்சிறுமியின் புகைப்படத்தை 2025, செப்டம்பர் மாத இதழின் அட்டைப்படத்தில் வெளியிட்டுக் கௌரவித்தது.

ஒருமுறை தேஜஸ்வியின் தாத்தாவிற்கு ஈமெயில் ஒன்று அவளுடைய மாமாவிடமிருந்து வந்திருந்தது. அதில், ‘ஏற்கெனவே எனக்குக் கொடுக்கவேண்டிய இரண்டாயிரம் டாலர் பணத்தை உடனடியாகக் கொடுக்கவேண்டும்என்று குறிப்பிட்டிருந்தது. எண்பத்தைந்து வயதான தேஜஸ்வியின் தாத்தாவும், ஏதாவது அவசரத் தேவையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவசரம் அவசரமாக இரண்டாயிரம் டாலர் பணத்தை ஏற்பாடு செய்தார். பணத்தைத் தயார் செய்துவிட்டு அந்த ஈமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக்கணக்கிற்கு அனுப்புவதற்கு முன்பாக தன் மகனிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாமே என்று எண்ணி தேஜஸ்வியின் அப்பாவிற்குத் தொலைப்பேசி செய்திருக்கிறார். இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ என்று நினைத்த தேஜஸ்வி அவளுடைய தாத்தாவிடம் பணம் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டு, தன் மாமாவிற்குக்கால்செய்து பேசும்போது அவர், ‘அப்படிப் பணம் கேட்கவே இல்லை; சில நாள்களுக்கு முன்பாக என் ஈமெயிலை யாரோஹேக்செய்துவிட்டார்கள்என்று கூறியிருக்கிறார். கடைசியாக இது சைபர் கிரிமினல்களின் வேலை என்பது உறுதியானது.

இந்த நிகழ்விற்குப் பிறகு தேஜஸ்வி இதனைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறாள். அதில், ‘குறிப்பாக 2024-ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 8,60,000 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனஎன்றும், அதில் பெரும்பான்மையான குற்றங்கள் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களைக் குறிவைத்தே நடைபெறுவதாகத் தன் ஆய்வில் தேஜஸ்வி அறிந்துகொண்டாள்.

இருளைப் பழிப்பதைவிட, ஒளியேற்றுவது மேல்என்ற கூற்றிற்கேற்ப, தேஜஸ்விqield Seniorsஎன்னும் இணையத்தளம் மூலம் பெரியவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தினாள். தேஜஸ்வியுடைய இந்த முயற்சி சைபர் குற்றங்களிலிருந்து பலரைக் காப்பாற்றியதோடு, பலருக்கும் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் கற்றுக்கொள்கின்ற சூழல் மாறி, சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
பிணம் தேடும் கழுகுகள்

வேளாண் நிலப்பகுதிகளில் உழவர்கள் நிலத்தை உழுதிடவும், நிலங்களுக்கு உரம் வேண்டியும் ஆடு மாடுகளை வைத்திருப்பது உண்டு. நஞ்சை நிலப்பகுதிகளில் வாழ்வோர் சிலவேளை திடீரென கழுகுப் பறவைகள் கூட்டமாகப் பறந்து வருதலைக் காண முடியும். கழுகுக் கூட்டத்தைக் காணும் ஊர் மக்கள் உடனே ஒரு முடிவுக்கு வருவர். அது என்ன முடிவு? ஊரில் யார் வீட்டிலோ மாடு ஒன்று செத்துப் போயுள்ளது என்ற ஏகோபித்த முடிவு. கழுகுகளின் வருகைக்கு மாடொன்றின் சாவுதான் காரணமாகும். மாடொன்றின் சாவு நிகழாவிடத்தில், கழுகுகளின் வரவு இல்லை என்பதே உண்மை. மாட்டின் சாவை அதன் நுகர்வு சக்தியால் உணரும் கழுகுகள், இதுவரை எங்கே குடியிருந்தனவென்று யாருக்கும் தெரியாது.

நவீன கழுகுகள்

புல்வாமாவில் என்ன நடந்தது என்பது பற்றிப் பேசுவதை நாம் நிறுத்திக்கொண்டோம். இந்திய இராணுவத்தினர் நாற்பதிற்கும் மேற்பட்டோர் இராணுவ வாகனத்தில் பயணப்பட்டபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அநியாயமாகக் கொல்லப்பட்ட செய்தியையும், அத்தாக்குதலில் நடத்தப்பட்ட கொலைப்பாதகம் இன்றைய ஒன்றிய அரசினை ஆளும் கட்சியின் மற்றொரு வெற்றிக்கு வழிகோலியது என்பதையும் நாம் அறிவோம். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதாகப் பலியானமைக்கு இராணுவத்தினரின் தவறான பாதுகாப்பு நடவடிக்கையே காரணம் என்று உண்மை பேசியமாலிக்எனும் பெயர்கொண்ட அன்றைய ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்னவானார்? எதிர்க்கட்சிகள் கூட கவலைப்படவில்லையே!

பிணந்தின்னி பாசிசக் கழுகுகளுக்கு விலைமதிக்கவியலா உயிர்கள் கிடைத்தன; கழுகுகள் உண்டு ஏப்பம்விட்டன; பசிதீர்ந்த கழுகுகள் வேறொரு பிணத்திற்குக் காத்துக்கிடந்தபோது கிடைத்ததுதான்பெகல்காம்எனும் பிணக்காடு. பெகல்காமில் கிடைத்தது நல்ல வேட்டை. கொலையுண்டோர் 26 பேரும் ஆண்களாயிருக்க, அரசியல் ஆதாயம் காண விரும்பிய மதவாதப் பாசிச கழுகுகளுக்கு அது நல்வாய்ப்பாக அமைந்தது. கொல்லப்பட்ட ஆண்களின் மனைவியர்சிந்தூர் (பொட்டு) இழந்து வெறும் நெற்றியாயினர். சாவிலும் ஆதாயம் தேடும் இந்தப் பிரிவினைவாத அரசியல் கழுகுகளுக்கு நல்ல வேட்டை. தீவிரவாதிகள் தாக்குதலில் அழிக்கப்பட்டசிந்தூர்என்னும் பொட்டு இவர்களின் இரையாயிற்று. தாக்குதலை மேற்கொண்ட பாகிஸ்தான் கழுகுகளை வீழ்த்த இந்திய அரசின் விமானங்களே கருவியாயிற்று. கழுகுகளின் வாழ்வில் எங்கோ இறந்து கிடக்கும் மாட்டுப் பிணத்தை மட்டுமே தேடி அலைந்து உண்ணுவதைப் பார்க்கிறோம். ஆனால், நமது வாழ்வில், பிணமாக்கப்பட்டவர்களின் சடலமே மற்றோர் அரசியல் வெற்றிக்குப் பாதை அமைக்கவும் அதன் நிமித்தம் மேலும் பல கொலைகளை நிகழ்த்தவும் வாழும் பாசிஸ்டுகள் தயாராக உள்ளனர்.

இந்நிகழ்வில் காணும் வேடிக்கை என்னவென்றால், மற்றொரு நாட்டின் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும், பலியானோரின் அவல மரணத்திற்கும் பாகிஸ்தானின் ஊடுருவலைக் காரணமாக்கியது இந்திய ஒன்றிய அரசியலாகும். குறிப்பாக, உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டிய உள்துறை அமைச்சர் அதற்குப் பொறுப்பேற்கவில்லையே? ஏன்?

26 பேர் கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்டனர். அது அரசியல் இலாபக்கணக்கானது. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு நல்ல வேட்டை! பிணத்தின் மீதான கோரத்தைக் கேள்வி கேட்க ஆளில்லை. ‘சிந்தூர் ஆப்ரேஷன்எனும் பெயரில் வேட்டையாடிய கழுகுகள் தேசப்பற்றாளராயினர். கற்பனைகூட செய்யமுடியாத அளவிற்கு அந்நியக் கழுகுகள் தண்டிக்கப்பட்டதாக நமதூர் பாசிசத் தலைவர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளுமே பிணந்தின்னிக் கழுகுகளுக்கு நல்ல விருந்தாயின. மேலும், மற்றொரு புல்வாமா கிட்டாதா? பெகல்காம் நிகழாதா? என்று ஏங்கும் பிணந்தேடும் கழுகுகளுக்கு அடுத்து இரையாகப்போவது யார்? அந்த இரையின் மீது நடத்தப்படும் அரசியலை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?

அண்மையில் இந்தியத் தலைநகரின் மையப் பகுதியில் கார் ஒன்று வெடித்துச் சிதறுகிறது. வழக்கமாகக் குண்டுவெடிப்புகள், தீவிரவாதத் தாக்குதல்கள் என்பன போன்ற நடவடிக்கைகளின் மொத்தப்பழியும் இசுலாமியத் தோழர்கள் மீதுதானே விழும்! டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். இசுலாமியப் பல்கலைக்கழகம் தீவிரவாத வலையுள் சிக்கவைக்கப்பட்டுள்ளது; மீண்டும் கழுகுகளுக்குக் கொண்டாட்டமே!

ஏற்கெனவே அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட (அதாவது செத்துப்போன) இசுலாமியப் பிணங்கள் அரசியல் சூது செய்வோர்க்கு இரையாகி உள்ளன.

இம்மாதிரியான கோரநிகழ்வுகள் ஆளும் கட்சியினருக்கு, அக்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய அமைச்சர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதில்லை; பேரானந்தத்தையே அளிக்கின்றன. அவை கழுகுகளுக்குக் கிடைத்த பெருந்தீனி!

வேண்டாதோரைக் கைகாட்டிவிட்டு கையை மடக்கிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் வன்மம் கேள்விக்குள்ளாகும் வேளை, மக்களுக்குப் பதில் கூறவேண்டிய அரசின் பொறுப்பாளர்கள் பதவியைத் துறக்கவில்லையே! கண்டிக்கும் எதிர்க்கட்சிகளோ அரசின் பொறுப்பாளர்களைப் பொறுப்பேற்றுப் பதவி துறக்கக் கட்டாயப்படுத்தவில்லை. ஏன்?

நாட்டில் நடைபெறுகின்ற தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் ஒரு மதம் சார்ந்த தீவிரவாதிகளாலேயே திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தும் ஆட்சியாளர்கள் இந்தியப் பாதுகாப்பிற்கு நேரிட்ட தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டாமா? தாக்குதல்களில் பலியான மாடுகள் செத்துப் போயின; பிணங்களைச் சுவைப்பதுதான் தங்கள் வேலை என்று இவர்கள் கூறாமல் கூறுகிறார்களோ?

மதக்கலவரங்கள், படுகொலைகள், பதற்றங்கள்... எல்லாம் அரசியல் இலாபத்திற்கும் மதரீதியான ஒருங்கிணைப்பிற்கும் (Polarise) பயன்படும் அரசியல் களங்களாக மாறிவருவதை நன்குணர்ந்த மதவாத அரசியல் வணிகர்கள் மிக நேர்த்தியாகவே இத்தொழிலைச் செய்கிறார்கள்.

மானுடத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலையாக வர்ணிக்கப்பட்ட 2002-இன் குசராத்கோத்ராவன்முறையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பிணமாயினர். கொலையுண்டோரைத் தாண்டி வன்முறைக்கு- அவதூறுகளுக்கு-அவமானப்படுத்தப்படலுக்கு ஆளான கொடுமையான நிகழ்வுகள் ஏராளம். குசராத் கொலைகளால் வீசி எறியப்பட்ட பிணங்கள் பலருக்கு அன்று விருந்தாயின. இவ்விருந்து தந்த விளைவு என்ன? 2014, 2019, 2024-களில் நல்ல விளைச்சல்! தொடர்ந்துஹாட்ரிக்வெற்றி! குசராத் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர் மும்முறை இந்தியப் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவர் இப்போது வெறும் பௌதீக மனிதரல்லர்; அவர் ஒரு விசுவக் குரு! அவர் ஓர் அவதாரம்! இதுதான் கட்டமைக்கப்பட்ட வெற்றி!

தமிழ்நாட்டுக் கழுகுகள்

தமிழ்நாட்டு அரசியல் களம் பல வேடிக்கை நிகழ்வுகளைச் சந்தித்து வருவதோடு, பல வேடிக்கை மனிதர்களின் விந்தையான விளையாட்டுகளையும் கண்டுவருகிறது.

விடுதலை பெற்ற இந்தியா, குடிகளைக் குடிமக்களாக அங்கீகரித்து, குடிமக்களைக் காக்கும் சனநாயக அரசையும், சனநாயகப் பாதுகாப்புக்கென அரசமைப்பு உரிமைச் சட்டத்தையும் தந்தது. சனநாயகம் எனும் நவீன தத்துவத்தையும், சனநாயக விழுமியங்களைக் காக்கும் வகையிலான சனநாயக அரசையும் சனநாயக அரசின் செம்மையான செயல்பாடுகளுக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில், சனநாயக நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. விடுதலை பெறும் இந்தியாவில் மதப்பெரும்பான்மையினரின் நாடாக- மதம் சார்ந்த நாடாக இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும் என்ற மதவாதிகளின் கனவுக்கு மாறாக உருவாக்கப்பட்ட இந்திய சனநாயக அரசின் அரசமைப்புச் சட்டத்தை (Constitution) Un Hinduஇந்துப் பண்பு இல்லாததுஎன்று வர்ணித்த கோல்வால்க்கரின் கூற்றை நனவாக்கும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் இன்றைய மதவாத அரசு தன் கொள்கைகளால் நாளும் சிதைத்து வருவதை நாடறியும்.

சனநாயக அரசின் அனைத்துக் கொள்கைப் பண்புகளும் மதவாத அரசினால் சிதைக்கப்பட்டு வரும் நிலை அறிந்த இந்திய மதச்சார்பற்ற கட்சிகள், ‘இந்தியாஎன்ற கூட்டணியை உருவாக்கி, மதவாதக் கட்சிகளுக்குச் சவால் விடுத்து வரும் காலம் இது. இன்றைய அரசியல் தளத்தில் கருத்தியல் ரீதியான போரின் தேவையை உணர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைவைப் பெரிய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் சனநாயக சக்திகள் எதிர்நோக்கியிருக்க, தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, மேனாள் ஆளுங்கட்சி, திராவிடத்தை முன்னோட்டாகக் கொண்ட ஒரு கட்சி மேலே கூறப்பட்ட பாரதிய சனதா கட்சியோடு கூட்டணி வைக்கிறது.

திராவிடம் ஒரு கருத்தியலின் அடையாளமாயின், இந்துத்துவம் இவ்வடையாளத்தோடு எப்போதும் உடன்படாதது! ஒரு பிற்போக்குக் கொள்கையின் அடையாளம் அது என்பதனை அனைவரும் அறிந்த நிலையிலும், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியைத் தகர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மதவாதப் பாசிசக் கட்சியோடு டெல்லி வரை பயணித்து உடன்பாடு செய்துகொண்ட மேனாள் முதல்வரை-தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு ஆளும் கூட்டணியினர் கேள்விக்குள்ளாக்கியபோது, மேனாள் முதல்வர் எடப்பாடியார் அளித்த பதில்தான் நம்மைச் சிந்திக்க வைத்தது.

அண்ணா தி.மு.. எவரோடு கூட்டுவைக்கலாம் அல்லது கூடாது என்று தீர்மானிக்கும் உரிமையை எவரும் கேள்வி கேட்க முடியாது.”  இப்படிக் கேலியாகப் பதில் கூறிய எடப்பாடியாரின் தோரணை ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கியது. இந்தியாவில் பா... எதிர்ப்பைக் கொள்கை ரீதியாக முன்னெடுத்துவரும் மாநிலங்களுள் தமிழ்நாடு முதன்மை பெறுவதை அறிவோம். தமிழ்நாட்டை விழுங்குவதன் மூலம் இந்தியாவை முழுமையாக விழுங்கிடத் துடிக்கும் பா...வின் போக்கினை எடப்பாடி அறியாதவரா?

இது கட்சிக் கூட்டு அல்ல; கொள்கையை அடகு வைக்கும் கூட்டு. இப்போக்கு எதேச்சதிகாரத்தின் விளைவு. இக்கூட்டு பொருந்தாக் கூட்டு. எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி எடப்பாடியார் அளித்த பதிலில், குடிமக்கள் கேலி செய்யப்படுவதோடு விடுதலை பெற்ற இந்தியா, கட்டிக்காக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பலியாகப் போவதை நாம் காண முடியவில்லையா?

தி.மு.. ஆட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுவதில்லை. தி.மு.. அரசு திராவிடக் கொள்கைகளின் மொத்த வடிவம் என்றும் நாம் ஏற்கவேண்டுவதில்லை. ஆனால், ‘வாழ்வா? சாவா?’ என்ற இக்கட்டான சூழலில் எடப்பாடியார் போன்றோரின் சந்தர்ப்பவாதப்போக்கை எதிர்த்தே ஆகவேண்டும். எடப்பாடியார் விரும்பும் ஆட்சி மாற்றம் நிகழுமானால், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எவரும் காப்பாற்ற இயலாது.

எங்கேயாவது பிணம் விழாதா? பசியாறுவோமா? என்று அலையும் கழுகுகளைவிட, கேவலமாக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் பரப்புரைகளைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் எப்போதோ நடக்கும் ஒரு பாலியல் வன்முறை, ஆணவக்கொலை, காவல்நிலையக் கொலை மற்றும் சித்திரவதை நிகழ்வுகளை தமிழ்நாடு முழுவதும் எப்போதும் நடப்பதாகப் பரப்புரை செய்வதும், ‘தி.மு.. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லைஎன்ற ஒற்றை முழக்கத்தோடு கழுகு போன்று சுற்றித்திரிவோரின் நோக்கமென்ன?

ஏற்கெனவே கூறியதுபோல தமிழ்நாட்டில், தி.மு.. ஆட்சியில் சீர்செய்யப்பெற வேண்டியன நிறையவே உள்ளன. எங்கேயாவது பிணம் விழாதா? என்று அலைந்து இந்த ஆட்சியை வீழ்த்த எண்ணும் கழுகுகளின் நோக்கைப் புரிந்துகொள்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள்

எண்ம (டிஜிட்டல்) தனிநபர் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் 2025- மத்திய மின்னணு மற்றும் தகவல்    தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தங்கள் தரவுகளைக் குடிமக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த விதிமுறைகள் வழிவகை செய்கின்றன. அத்துடன் இணையத்தில் அவர்களின் தன்மறைப்பு நிலையைக் (பிரைவசி) காக்க வேண்டும் என்பதும் இந்த விதிமுறைகளின் நோக்கமாக உள்ளது.

தனிநபர் தரவுகள் தொடர்பாக நிறுவனங்கள் கடுமையாகப் பின்பற்றவேண்டிய கால அட்டவணையையும் இந்த விதிமுறைகள் தெளிவாக வரையறுத்துள்ளன. இந்த விதிமுறைகள் 12 முதல் 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக நடைமுறைக்கு வரும்.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023-ஆம் ஆண்டின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளின்படி, ஒருவரின் தனிப்பட்ட தரவுகள் எதற்காகத் திரட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக விளக்கி, அதற்குச் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து எளிமையான முறையில் ஒப்புதல் பெறுவதற்கான நோட்டீசைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் (ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்கள், கூகுள், விளையாட்டுச் செயலி நிறுவனங்கள் போன்றவை) வெளியிடவேண்டும்.

தனிநபர் ஒருவரின் தரவு கசிந்தால், அது குறித்து அந்த நபருக்குத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் முறைப்படி எளிமையான மொழியில் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தரவு கசிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டியவரின் விவரங்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்தத் தரவுகளைக் கையாள்வது தொடர்பான சந்தேகங்கள் குறித்து, தனிநபர்கள் கேள்வி எழுப்புவதில் உதவ, தரவுப் பாதுகாப்பு அதிகாரி அல்லது பிரத்யேக அதிகாரியைத் தொடர்பு கொள்வதற்கான விவரத்தைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் தெளிவாகத் தெரியப்படுத்தவேண்டும்.

90 நாள்களில் பதில்: தங்களைப் பற்றிய தரவுகளைத் தனிநபர்கள் அணுகுதல், பிழைகளைத் திருத்துதல், புதுப்பித்தல் அல்லது அளிக்கும் உரிமை, அந்த உரிமையைத் தங்கள் சார்பாகப் பயன்படுத்த மற்றொருவரை தனிநபர்கள் நியமித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு அதிகபட்சமாக 90 நாள்களுக்குள் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் பதிலளிக்கவேண்டும்.

தரவுப் பாதுகாப்பு வாரியம்: இணைய வழியில் பிரத்யேக தளம், கைப்பேசி செயலி மூலம் தங்கள் தரவுகள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் அளிக்கவும், அந்தப் புகார்கள் மீதான நடவடிக்கை இந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பின்தொடர உதவும் வகையிலும், முழுமையான எண்ம நிறுவனமாகத் தரவுப் பாதுகாப்பு வாரியம் செயல்படும். இந்தப் புகார்கள் தொடர்பான முடிவுகளுக்கு எதிராகத் தொலைத்தொடர்பு சச்சரவுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (டி.டி.எஸ்..டி.) மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகள் மூலம், தங்கள் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை எந்த நேரத்திலும் இரத்து செய்யும் அதிகாரம் தனிநபர்களுக்குக் கிடைக்கும். விளம்பரம் அல்லது மோசடி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அமைப்புகளைப் பொதுமக்கள் தவிர்க்கவும், எந்தவோர் எண்ம வழியிலும் அவர்களின் தனிநபர் தரவு, காணொளி மற்றும் குரல் பதிவை அனுமதியின்றிப் பெறுவதைத் தடுக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் தரவு கசிவின் தன்மையைப் பொறுத்து அதற்குத் தரவுப் பாதுகாப்பு வாரியம் அபராதம் வசூலிக்கவும் இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன.

சட்ட நடவடிக்கை: தனிநபரின் அனுமதியில்லாமல் அவரின் கைப்பேசி எண் கசிந்து தேவையற்ற அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை எந்த நிறுவனம் கசியவிட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, அது குறித்துச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்த விதிமுறைகள் உதவும்.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துதல்: ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால் அதற்கு எதிரான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சூழல்களில் பொதுமக்களுக்கு உள்ள உரிமையை இந்த விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன.

மூன்று ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால்: பயநராக உள்ள தனிநபர்கள் தங்கள் கணக்கை மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்தால், அவர்களின் தனிப்பட்ட தரவை இணையவழி வர்த்தக நிறுவனங்கள், இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகத்தளங்கள் அளிக்கவேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

news
சிறப்புக்கட்டுரை
‘Gen Z’ புரட்சி (வலையும் வாழ்வும் – 33)

ஹார்ன்சத்தம், காலை வெப்பம், கடுத்திருக்கும் முகங்கள், கலைந்திருக்கும் முடிகள், புகை கக்கும் வாகனங்கள், புழுதி கிளப்பும் மனித பெருமூச்சுகள்.... என்று சென்னை மாநகரம் வழக்கம் போலவே விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மெட்ரோ இரயில் பணிகளினால் குறுகிய வாடிவாசலிலிருந்து வெளியேறும் கட்டுக் கடங்கா காளைகளைப்போல, சிலர் குறுகிய பயணப்பாதையில்கூட முண்டியடித்துக் கொண்டு வாகனங்களை ஓட்டிச்சென்றனர். எங்கும் பரபரப்பு என்னும் கொடிய வியாதி எல்லாரையும் தொற்றிக்கொண்டதாகவே தெரிந்தது.

இத்தகைய கூட்ட நெரிசலில் பெண் ஒருத்தி இருசக்கர வாகனம் ஒன்றில் தன் ஆறு வயது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அப்பெண்ணின் மகள் புதிய டிரஸ் அணிந்திருந்தாள். இன்று அவளுக்குப் பிறந்த நாளாக இருக்கக்கூடும். தனது பிறந்தநாளில் தன்னோடு படிக்கும் குழந்தைகளுக்குசுவீட்ஸ்கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சாக்லேட் பாக்ஸ் ஒன்றைக் கையில் வைத்திருந்தாள்.

அவர்கள் டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த ஒருவன் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை மோதித்தள்ளினான். கீழே தூக்கிவீசப்பட்ட அச்சிறுமி பலத்த காயங்களுடன் சாலையில் இரத்த விரிப்பின் மேல் நினைவற்றுக் கிடந்தாள். அவளின் கைகளிலிருந்த சாக்லேட் சாலையெங்கும் சிதறிக் கிடந்தன. இதற்கிடையில் பைக்கிலிருந்து இறங்கிய அந்த முரட்டு உருவத்திற்குச் சொந்தக்காரன் அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைத் தன் இரும்பு கையால் பலவந்தமாக இழுத்துப் பறித்தான். எவ்வளவோ போராடிப் பார்த்தும் முடியாததால் தன் தங்கத்தாலியைப் பறிகொடுத்தாள் அந்தப் பெண்.

கீழே விழுந்துகிடந்த அந்த ஆறு வயது சிறுமி திமிறிக்கொண்டு எழுந்து, அந்தத் திருடனின் விரலை இறுக்கமாகப் பிடித்துக் கடித்தாள். வலி தாங்காமல் அவள் தலையில் வேகமாக அடித்து அவளைத் தன் காலால் எட்டி உதைத்தான் அந்த முரடன். காலில் உதைபட்ட பந்துபோலத் தூரமாகப் போய் விழுந்தாள் அச்சிறுமி. பைக்கில் வந்த அந்த உருவம் வந்த பைக்கிலேயே தப்பித்துச்சென்றது.

ஊசியின் காதில் நூல் கோர்க்கும் நேரத்திற்குள் எல்லாம் வேகமாக நடந்து முடிந்திருந்தது. உடைந்து போன தன் இடது காலை இழுத்துக்கொண்டே மூச்சற்றுக் கிடந்த தன் மகளின் அருகில் சென்று கதறி அழுதாள் அந்தத் தாய். தன் மகளின் பிறந்தநாளே அவளுக்கு இறப்பு நாளாகியது. தங்கத்தாலியைத் திருடிச்சென்ற அந்தத் திருடனின் சுண்டுவிரல் இறந்துபோன அச்சிறுமியின் வாயில் இருந்தது.

இவ்வளவு நடந்தபிறகும் அந்தச் சிறுமிக்கு இருந்த தைரியம் யாருக்குமில்லை. கூடியிருந்தவர்கள் யாரும் தடுத்து நிறுத்தவில்லை; தட்டிக் கேட்கவுமில்லை. ஒருசிலர் ஓடிவந்து உதவி செய்தனர். வேறுசிலர் நடந்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் தங்கள் செல்போனில் நடப்பதைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். இதைவிடக் கொடுமை என்னவெனில் சிலர் அங்குச் சிதறிக்கிடந்த சாக்லெட்டையும் பொறுக்கிச்சென்றனர்.

டிராபிக் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்குக் குரங்காய் தாவியது. அங்குக் கூடியிருந்தவர்களில் பலரும் உடனடியாகக் கலைந்து சென்றனர். அவர்களில் பலரும் அந்த முரட்டுத் திருடனின் முகமூடியையே அணிந்திருந்தனர் என்று தோன்றியது.

உலகின் போர்களாலும் தீவிரவாதத் தாக்குதல்களாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது மகளிரும், சிறுவர்-சிறுமியருமே என்கிறது .நா. சபை. அதேபோல நாட்டின் ஊழல்வாதிகளாலும் இலஞ்சப் பெருச்சாளிகளாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இளையோரே எனலாம். சிலர் நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்கின்றனர். ஒருசிலர்அது நமது வேலை அல்லஎன்று சாகும் வரை பார்வையாளர்களாகவே இருந்துவிடுகின்றனர். தட்டிக்கேட்கின்றவர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இலஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்களின் குரல்வளை நெரிக்கப்படுவதோடு, அவர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.

சில காலங்களுக்கு முன்பாக ஏழை எளியவர்கள் இதனாலேயே பேச்சற்ற சமூகமாக இருந்து வந்தனர். பெரும் ஊடகங்களின் விசுவரூப வளர்ச்சியினால் சாமானிய ஊடகங்கள் உயிரிழந்து காணப்பட்டன. பெரும் வெகுசன ஊடகங்கள் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கைகளிலேயே இருந்தன. அவர்கள் சொல்லும் கருத்துகளே பேசுபொருள் ஆயின. நாம் எதைச் சிந்திக்கவேண்டும் என்று அவர்கள் வரையறுக்கிறார்களோ, அதுவே ஊடக விவாதங்களாயின.

இன்றும் அத்தகைய சூழல் இல்லாமல் இல்லை. ஆயினும், சமூக ஊடகங்களின் வரவிற்குப் பிறகு ஒவ்வொரு மனிதனும் ஓர் ஊடகவியலாளர் ஆனான். கண்முன் நடக்கும் அநீதிகளைப் படம் பிடித்து உலகிற்கு வெளிப்படுத்தினான்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் அடித்தள மக்களின் பிரச்சினைகள், ஊழலுக்கு எதிரான, அதிகாரப்போக்கிற்கு எதிரான கருத்துருவாக்கங்கள் சமூக ஊடகங்களின் விவாதப்பொருளாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மாற்றங்களுக்கு வழிவகுத்தன. அண்மையில் நேபாளத்தில் எதிரொலித்தGen Zபுரட்சியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நேபாளத்தில் நிலவிய சமூகச் சீர்கேடுகளை, அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் குழந்தைகளுடைய சொகுசு வாழ்க்கைமுறையை இளையோர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர். மேலும், அதிகாரிகளின் ஊழல் போக்கை இளையோர் சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ‘டிஸ்கார்ட் (Discord) மற்றும்பிட்சாட்(Bitchat) போன்ற புதியவகைத் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினர். இதனை எதிர்கொள்ள முடியாத அரசு, அந்நாட்டில் பத்திற்கு மேற்பட்ட சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கின்றது.

இச்செயல் அந்நாட்டு இளையோரை மேலும் கோபமடையச் செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போராட்டங்கள், வன்முறை நிகழ்வுகள், துப்பாக்கிச் சுடுதல்கள் அரங்கேறுகின்றன. இரு பதிற்கும் மேற்பட்டவர்கள் இவ்வன்முறைச் செயல்களினால் உயிரை இழந்திருக்கிறார்கள். அந்நாட்டின் பிரதமர் தன் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார். சமூக ஊடகங்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டிருக்கின்றது.

இளையோர் சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பல்வேறு சான்றுகளோடு உறுதியாகக் கூறமுடியும்.

2011-இல் எகிப்தில் நடந்தவீ ஆர் ஆல் காலேத் செட்டு போராட்டம் (We Are All Khaled Said Protest), 2012-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஆம் நம்பர் 132 போராட்டம் (‘I am Number 132 Protest), 2014-இல் ஹாங்காங்கில் நடைப்பெற்றகுடை போராட்டம் (The Umbrella Movement), 2013-ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்றடு நாட் டச் மை இண்டர்நெட் போராட்டம் (Do not Touch my Internet Protest), 2010-இல் அரபு நாடுகளில் பற்றியெரிந்தஅரபு ஸ்பிரிங் போராட்டம் (Arab Spring Protest), 2014-இல் தைவானில் நடைபெற்றசூரியகாந்தி போராட்டம் (The Sunflower Protest), இந்தியாவில் 2017-இல் தமிழ்நாட்டில் நடந்த மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம், 2020-இல் ஹத்ராஸ் போராட்டம், டெல்லி பெண் கூட்டுப்பாலியல் சீண்டலுக்கு எதிரான போராட்டம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமூக ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்குக் கருவி மட்டுமல்ல, போராட்டத்திற்கான ஆயுதம். அதனைச் சரியாகப் பயன்படுத்தும்போது அது சமூக மாற்றத்தைக் கொணர்கிறது என்பதே உண்மை.

news
சிறப்புக்கட்டுரை
அட்டைக் கத்தி ஆட்டங்கள்

தமிழ்நாட்டில் 2031-இல் பா... ஆட்சியென ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கனவு காண்கிறது. அதற்கான சதுரங்க விளையாட்டின் ஆட்டக்  காய்களை வேகமாக நகர்த்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் இலக்கை அடைய .தி.மு..வை வளைத்துவிட்டது. கரூர் துயரச் சம்பவங்களுக்குப் பின்பு .வெ..வும் தானே வலையில் விழுந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலகால நஞ்சு தமிழரின் மூச்சுக்குழலை நெருக்கும் வலைப் பின்னல் வழி இறுகுகிறது.

இனி திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழ்நாடு, ஊழலில்லாத தமிழ்நாடு, புதிய மாற்றம் என்ற பிரச்சாரங்கள் சங்பரிவார் அமைப்புகளால் விதைக்கப்படுகின்றன. ‘நடுநிலையாளர்கள்என்ற போர்வையில் மெத்தப் படித்தவர்களும் திரைத்துறையினரும் ஊடகங்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக அதையே திரும்பத் திரும்ப ஊதுகின்றனர். நடிகர் ரஜினி அன்று, அரசு இயந்திரச் செயல்பாட்டு முறைகளில் மாற்றம்வேண்டும் என்றார். பின்பு அவரே மாறிப்போனார்.

வருமான வரிப் பிரச்சினைகளில் மாட்டிய நடிகர் விஜய் அவர்களை, வருமான வரித்துறை  அதிகாரியே காப்பாற்றிய அதிசயம் நடந்தது. திரைமறைவில் வருமான வரித்துறை  அதிகாரி  விஜய்யின் அரசியல் ஆசைக்குத் தூபம் போடுகிறார். மறைமுக அரசியல் ஆலோசனைகள் வழங்குகிறார். ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் விருப்ப ஓய்வு கொடுத்த மறுநாளே .வெ..வில் சேர பணிவிடுப்பு செய்யும் அதிசயம் நடந்தது. எந்த ..எஸ்., .பி.எஸ்., .ஆர்.எஸ். அதிகாரியும் ஒரே நாளில் பணி விடுப்புச் செய்யப்படுவதில்லை என்பது வரலாறு.

அருண்ராஜ் அவர்கள் .வெ.. கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்குக் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி தரப்படுகிறது. அவர் அப்பொழுது அளித்த நேர்காணலில், அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து, மக்கள் பெறுகிற சலுகைகள் குறித்து எதிர்க்கருத்தை வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக, கரூர் துயரச் சம்பவங்களுக்குப் பின்னான .வெ.. சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், “தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்படும் ரூபாய் 1000-த்தை விட்டுக்கொடுங்கள்என்று தமிழ்நாட்டு மகளிருக்கு விஜய் முன்நின்று வேண்டுகோள் வைக்கிறார்.

கொஞ்சம் பின்னோக்கிப் போவோம். .வெ.. தலைவர் நடிகர் விஜய் நடித்தசர்க்கார்திரைப்படம் 2018-இல் வெளிவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைகோமளவல்லி, ‘கருவிலே நான் வில்லிஎனக்  கடுமையான தன் பழைய பகை சாடலுடன் காட்சிகள் திரையில் விரிகின்றன. நடிகர் விஜய் தானொருகார்ப்பரேட் கிரிமினல்என வசனம் பேசுவார்.  ‘சர்க்கார்திரைப்படத்தில் கதாநாயகனின் வீர வசனங்களால் பொதுமக்கள் அரசின் இலவசப் பொருள்களைத் தெருவில் வீசி எரிப்பதாகக்  காட்சிகள் இருக்கும். .வெ.. தலைவரின் திரைக் காட்சிக்கும், .வெ.. கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அவர்கள் பேச்சிற்கும் பொருந்திப் போகிறது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து விதைப்பு அல்லவோ!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரலாற்று ரீதியாக  ஜனரஞ்சக மற்றும் பொது நீதியின் அடிப்படையில் பொறுப்பற்ற இலவசங்களை அரசுகள் வழங்குவதை விமர்சிக்கிறது. ஒன்றிய மோடி அரசு, மாநில அரசுகளின் இலவசங்கள் குறித்து அடிப்படை  ஆர். எஸ்.எஸ். பார்வையில் அதிருப்தி  அடைகிறது. மாநில அரசுகளின் இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி அவர்களும்நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்களும் தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கிறார்கள். பீகார் தேர்தலில் மகளிர் தொழில் தொடங்க ரூபாய் 10,000 வழங்கி ஓட்டு திருடினர். இந்தத்  திருட்டு மகாராஷ்டிரா மாநிலத்திலும் அரங்கேறியது என்பதே பா...வின் வெற்றி வரலாறு.

பா... சார்ந்த வழக்கறிஞர் மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் செல்கிறார். அது தி.மு.., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள், அது சார்ந்த இலவசங்கள் சார்ந்ததுஉச்ச நீதிமன்றம், அது தேர்தல் ஆணைய வரம்புக்கு உட்பட்டது என்றும், அது மக்கள் வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை உரிமை என்பதால் தாம் தலையிட இயலாது என பின்வாங்கிவிட்டது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைச் சீர்குலைக்கிறதாஎன்பதை மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை கூறியது.

இந்தியப் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயம் மற்றும் கிராமப்புறங்கள் சார்ந்தது. விவசாயம் பருவகாலத் தொழில் என்பதால், விவசாயக்கூலிகள் பலன்பெற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் உள்ளது. இது கிராம  மராமத்து  வேலைகளை அடிப்படையாகக் கொண்ட நூறுநாள் வேலைத்திட்டம் எனப்படுகிறது. இது இந்திய தேச மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தது.

நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளில்ஏன் ஐரோப்பிய நாடுகளில்கூட பொருளாதார மந்த நிலை ஏற்படுகிறது. மக்களிடையே  பணப்புழக்கம் குறைகிறது. மக்களின் கைகளில் காசு இல்லை. அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சிட்டு, பொதுமக்களின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடும்இதற்குஹெலிகாப்டர் மணிஎன்ற பெயர் உண்டு. ஏன், செல்வச் செழிப்பான அமெரிக்காவில், அரசு வழங்கும் உணவு அட்டை வழியாகப் பசியாறுபவர் ஆயிரமாயிரம் வறிய மக்கள்

இந்தியாவில் இதுபோன்ற இலவசத் திட்டங்களால் வறுமைக்கோட்டிற்கு உள்பட்டோரின் எண்ணிக்கை 27.1-லிருந்து 5.3 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. .வெ.. கட்சி பா... குறித்தும், சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்தும் மென்மைப் போக்கும் குறியீடு அரசியலும்  நடத்துகிறது. அட்டைக்கத்தி ஆட்டம் நடத்துகிறது. ‘நாம் தமிழர் கட்சிபோல, .வெ.. கட்சியும் இலவசங்கள் குறித்து எதிர்க்கருத்து கொண்டதா? என்பதை அறிவிக்கவேண்டும். .வெ..வின் செயல் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமையவேண்டும். ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைத்  .வெ..வினர்  ஏன் வழிமொழிகிறார்கள் என்ற விளக்கம் தமிழ்நாட்டு மக்களால் கேட்கப்படுகிறது.

.வெ.. என்பது தமிழ்நாட்டுச்  சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட கட்சி  என்ற குற்றச்சாட்டு உண்டு. .வெ..வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளான பொருளாளர், இணைப் பொதுச்செயலாளர், தேர்தல் மேலாண்மைச் செயலாளர் என அனைவரின் மீதும் ஆர்.எஸ்.எஸ். காவிச்சாயம் பூசப்படுகிறது. .வெ.. தன்னை ஒரு  திராவிடக் கட்சி என்றும், ‘எல்லாருக்கும் எல்லாமுமான சமூகநீதிஎன்பதாகத்  தன்னைக் காட்டியதுஆனால், செயல்பாட்டு ரீதியில் ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டங்களை ஆதரிப்பது, .வெ.. மீதான ஆர்.எஸ்.எஸ். சார்பு ஐயப்பாட்டை உறுதி செய்வதாகும்.

தமிழ்நாட்டு வாக்கு அரசியல் என்பது எளியோருக்கான, சிறுபான்மை மக்களுக்கான, சமூக நீதிக்கான அரசியலாகும். சமூகநீதியைப் புறந்தள்ளுபவர்களை  தமிழ்நாட்டு  மக்களும் புறந்தள்ளுவர். இந்த நியதி பா...வுக்கு  மட்டுமல்ல.வெ.. வுக்கும் பொருந்தும்.

news
சிறப்புக்கட்டுரை
அடையாளம் (Identity) மறுப்பும் – மறைப்பும்

சனநாயகச் சரிவுப் பணியில்அடையாள அரசியலின் பங்கு என்ன?’ என்பது பற்றிய ஆய்வுகள் நிறையவே வந்துள்ளன; வருகின்றன.  அடையாள அரசியலின் உள்ளார்ந்த சனநாயகமற்ற போக்கு, இந்துத்துவர்களின் அரசியல் நடவடிக்கையில் பெரும் இடத்தையும், இவ்வரசியல் சிதைக்கும் சனநாயகப் பண்புகளையும் இந்துத்துவ வகுப்புவாத அரசியலை உற்றுநோக்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தியாவில் மத ரீதியான வகுப்புவாத அரசியல் என்பது மதத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. மதம் எனும் அடையாளம் மட்டுமே வகுப்புவாத ரீதியில் மக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக உள்ளது. மதம் தொடர்பான அனைத்து அடையாளங்களும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு, கேட்போர் காதுகளில் வேத மந்திரமாக உருவேற்றப்படுகிறது. அடையாள அரசியலின் உருவாக்கத்தில் அடையாளங்கள் (Symbols) வகிக்கும் பங்கை ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இந்துத்துவர்கள் இவ்வடையாள வழி தம் கருத்தியலை மக்கள் மனத்தில் உருவேற்ற மிகப்பெரிய அளவில் திட்டமிட்டுள்ளமையும், அவர்கள் கண்ட வெற்றியும் மிகப்பெரிது. இராமன் என்றும், அயோத்தி என்றும், இராம சென்ம பூமி என்றும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கச் செய்ததை நாம் அறிவோம். இராமன் எனும் நாமம் வெறும் உச்சரிக்கப்பெறும் நாமமாக மட்டுமல்லாமல், இராமனைச் சுற்றிப் பின்னப்பட்ட அரசியலுக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இராமன் எனும் ஒரு பெயரைச் சுற்றி ஐந்து ஆண்டுகளாக நம் வீடுகளில் தினமும் உலாவந்த இராமாயணம் வெறும் திரைக்காட்சியல்ல; அது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட ஓர் அரசியல் பிம்பம்.

இராமாயணம்எனும் திரைத்தொகுப்பு மக்கள் மனத்தில் உருவேற்றப்பட்ட பின்பு இராமனுக்கான ஆலயம் உறுதியாயிற்று; திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பாபர் எனும் தீயபிம்பம் அளிக்கப்பட்டமை மக்களிடம் எந்தவிதக் கசப்புணர்வையும் உருவாக்கவில்லை; இனியும் உருவாக்காது.

குடிமக்களும் அடையாளங்களும்

குடிகள் உரிமை மறுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, உரிமை மானுடருக்கான இயல்பான கவசம் என்ற அடிப்படை அறிவே இல்லாதவர்கள். ஆனால், இக்குடிகள்தான் நாம் அனைவரும் உரிமை பெற்ற குடிமக்களாக உருமாற போராடி வெற்றி பெறத் துணை நின்றவர்கள். முடியாட்சியைத் தகர்த்து, குடியாட்சி எனும் சனநாயக ஆட்சிக்கு வித்திட்டவர்கள். உலகில் தோன்றிய அரசியல் வரலாற்றில் சனநாயக அல்லது குடிமக்களின் ஆட்சியே உயர்வானது என்று கருத இதுவே காரணமாகிறது.

குடிமக்களும் அடையாளமும்

குடிமகன் அல்லது குடிமகள் என்ற ஒற்றைச் சொல் மிக ஆழமான விழுமியத்தை உள்ளடக்கியது. குடிமக்கள் சனநாயக அரசின் சமத்துவ உரிமை பெற்றவர்கள். சமத்துவமே இவர்தம் பொது அடையாளம். இந்தியா விடுதலை பெற்று சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டு, சனநாயகக் குடியரசைக் காக்கும் வகையில், இந்திய தேசியத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டம்இந்தியக் குடிமக்களாகிய நாம்என்ற முதன்மை வாசகத்தோடு தொடங்குவதன் செம்மையை நாம் கவனிக்கத் தயங்குதல் கூடாது. ‘இந்தியக் குடிமக்களாகிய நாம் - ‘நாம்என்ற சொல் உள்ளடங்கிய ஒன்று (inclusive). ‘குடிமக்கள்எனும் பன்மைச் சொல்லும் உள்ளடங்கியதே. இந்தியக் குடிமக்களாகிய நாம் இந்நாட்டைச் சனநாயக சமன்மையுடைய, சமயச்சார்பற்ற இறையாண்மையோடு கூடிய குடியரசாக அறிவிக்கிறோம் (Republic). இந்தியக் குடிகள்குடிமக்கள்எனும் கவசம் தரித்து ஒன்றுபட்டவர்களாய், ஒருமனப்பட்டவர்களாய் பேதமின்றி அறிவித்த உரிமைப் பெட்டகமே அரசமைப்பு உரிமைச் சட்டம்.

குடிமக்கள் சனநாயக அரசில் சமமானவர்கள். சமத்துவமானவர்கள். சனநாயக அரசு அளிக்கும் அரசியல் சனநாயகத்தைக் காக்கும் வகையில்ஒரு நபர் ஒரு வாக்குஎன்ற உத்தரவாதமும் குடிமக்களுக்கான பெருமையே. இங்கு எழுகின்ற மிக முக்கியமான கேள்வி என்னவெனில், பன்மைச் சமூகம் ஒன்றில் வாழ்கின்ற குடிமக்கள், குடிமக்கள் என்ற கவசம் பெறுதலால் அவர்களுக்கென ஏற்கெனவே இருந்த அடையாளங்களை இழந்துவிடுவரா? குடிமக்கள் என்ற நாமத்தைப் பெறுகின்றபோதே அவர்கள் ஏற்கெனவே ஏற்றிருந்த அடையாளத்தை இழந்துவிடுவரா? இக்கேள்விகள் இன்றைய இந்துத்துவ மதவாத அரசியல் போக்கில் இந்தியக் குடிமக்கள் அறிய வேண்டிய ஒன்றாகும்.

சனநாயகம் உத்தரவாதப்படுத்திய குடிமக்களுக்கான குடியுரிமை, குடிமக்களின் தெரிவு செய்யும் உரிமையை (Power of Choiceஉத்தரவாதப்படுத்துகிறது. குடிமக்கள் சமமானவர்கள் என்றாலும், அவர்கள் ஒற்றைப் பண்புடையர் அல்லர். ஒரே அடையாளத்தைக் கொண்டவரும் அல்லர். குடிமக்கள் இனம், மொழி, மதம் எனும் அடையாளங்களால் வேறுபட்டவர்கள். வேறுபட்ட அடையாளத்தைக் கொண்ட இக்குடிமக்கள் ஒற்றைக் குணமுடையவர் அல்லர். சனநாயகம் தந்த குடியுரிமை குடிமக்களின் தனித்த அல்லது வேறுபட்ட பண்புகள். இதை மறுக்க முடியாது.

இந்தியக் குடிமக்கள் ஒரு தமிழராக, கிறித்தவராக அல்லது ஏதோ ஒரு மதம் அல்லது மொழி அல்லது இனம் சார்ந்தவராக இருக்க உரிமையுண்டு. குடியுரிமை குடிமக்களின் பண்பாட்டுரிமையை மறுக்கக்கூடாது. குடிமக்கள் சமமானவர்கள். ஆனால், வேறுபட்டவர்கள். வேறுபடுதல் அடிப்படை மனித உரிமை (Right to be different). இனம், மொழி, மத அடிப்படையிலான அடையாளங்களைத் தக்கவைத்தல், தனித்த அடையாளங்களைப் பேணுதற்கான போராட்டம் என்பது பிரிவினைக்கான போராட்டமல்ல; தனித்தன்மையைக் காப்பதற்கான போராட்டமே.

இந்தியக் குடிமகனாக ஒருவர் தன்னை ஏற்றுக்கொள்வதால், குடிமகன் சார்ந்த அடையாளத்தைக் காவுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாட்டின் குடிமகனின் தனித்த அடையாளங்கள் மறுக்கப்படுகின்றபோது, அந்நாட்டைத் தன் அடையாளமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

என்னுடைய மொழி அல்லது இனம் அல்லது மதம் சார்ந்த அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படுமானால் அல்லது மறுக்கப்பட்டு ஒற்றை அடையாளத்துள் முடக்கப்படும் சூழல் உருவாக்கப்படுமானால்நான் இந்தியன்எனும் அடையாளத்தையும் மறுக்கத் தயங்கமாட்டேன். இது சனநாயகம் வழங்கிய குடியுரிமைக்கான இலக்கணம்.

இந்தியர்கள் இந்தியராக வாழ வேண்டுமெனில், இந்துகளாகவே இருக்கவேண்டும் என்ற இந்துத்துவர்களின் கொள்கைக்குப் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்ற மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு மேற்கண்ட தெளிவு வேண்டும்.

இந்தியரை இந்துகளாக மட்டும் சுருக்கி, இந்தியாவை அல்லது இந்துவை விமர்சிப்பதைத் தேசத்துரோகமாகக் கட்டமைக்கும் கருத்தியலின் அடையாள அரசியலுக்குள் மறைந்திருக்கும் உரிமை மீறலைக்  கண்டுகொள்ள வேண்டுவது நம் கடமையாகும்.

மத அடையாளத்தால் வேறுபட்டவர்கள், ‘இந்தியர்என்ற அடையாளத்துள் அடங்கார் என்ற இந்துத்துவ முன்னோடிகளான கோல்வால்க்கரும் சவார்க்கரும் கூறிவந்தமையை அறிவோம். இந்திய நாட்டின் துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி அவர்கள் கிறித்தவர், இசுலாமியர் என்ற அடையாளங்களை மறுத்து, இந்தியாவில் வாழும் இசுலாமியர்இந்து இசுலாமியர் (Hindu Muslims), கிறித்தவர்இந்து கிறித்தவர் (Hindu Christian) என்பவராகத்தான் இருக்கமுடியும் என்ற புதிய அடையாளத்தை வழங்கத் தொடங்கினார். இது தனித்த அடையாள மறுப்பு. வெறும் அடையாள மறுப்பு மட்டுமல்ல, குடிமக்களின் அடிப்படை அடையாள மறுப்பும் ஆகும். இந்து என்ற அடைமொழியோடுதான் இந்திய சனநாயகம் வகுத்த குடிமக்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்பது கேவலமான ஒரு நடவடிக்கை அல்லாமல் வேறு என்ன?

1948-இல் ஐக்கிய நாட்டவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவோடு உருவான அகில உலக மனித உரிமைப் பிரகடனம் குடிமக்களின் அடிப்படை அடையாளம் பற்றிப் பேசியது. இப்பிரகடனம் குடிமக்களின் இயல்பான அடையாளங்களை அங்கீகரித்த நிலையில் இனம், மொழி, தேசிய இனம், மதம் எனும் அடையாள அடிப்படையில் குடிமக்கள் எவரையும் பாகுபடுத்துவதை மனித உரிமை மீறலாகப் பிரகடனப்படுத்தியது; .நா. அவையின் உறுப்பு நாடுகள் இதை ஒருமனத்தாக ஏற்றுக்கொண்டன; அதில் இந்தியாவும் ஒன்று

இங்கு என்ன நடக்கிறது?

மதச்சார்பற்ற இந்திய சனநாயக குடியரசு மத அடிப்படையில் மக்களை அணிதிரட்டுகிறது. ஒன்றிய அரசின் அன்றாட நிகழ்வுகள், பரப்புரைகள் அனைத்தும் ஏதோ ஓர் அடையாளத்தை முன்வைத்தே நடத்தப்பெறுகின்றன. அண்மையில் ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக முன்னெடுக்கப்பெறும் சிறப்புத் தேர்தல் திட்டம் மூலம் ஒதுக்கப்பெறும் குடிமக்கள் எப்பகுதியினர்?

ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பிரபாகர் பரகலா அவர்களின் இச்சிறப்புத் திருத்தம் பற்றிய விமர்சனம் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்: “ஒன்றிய அரசின் இத்திட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாது, இத்திட்டம் குடிமக்கள் மீது நடத்தப்படும் இரத்தம் சிந்தா இனப்படுகொலை (Blood loss Political Genocide) என்கிறார்.

ஹிட்லரின் பாசிசம் யூதர் என்ற அடையாளத்தை முன்வைத்து நடத்தப்பட்ட படுகொலை! அது வெளிப்படையான ஒன்று. ஆனால், இங்கு நடப்பது என்ன? ஊடுருவலாளரைத் தடுக்கவே இந்நடவடிக்கை என்கிறார் உள்துறை அமைச்சர். ஒன்றிய அரசு பேசும் ஊடுருவலாளர் யார் என்பதை நாடறியும். வங்கதேசத்து இசுலாமியரைத்தான் இவர்கள்ஊடுருவலாளர்என அடையாளப்படுத்திக் குறிவைக்கின்றனர்

வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி வரும் இராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும்ஊடுருவலாளர்களின்ஆதரவைப் பெறவே இப்பொய்யான பரப்புரையை நடத்துவதாக ஒன்றிய அரசின் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். புல்வாமா, பெகல்காம் மற்றும் அண்மையில் இந்தியத் தலைநகரில் நடந்த குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்பெறும் தீவிரவாதிகள் யார்?

புது தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட உமர் காலித், ஐந்து வருடங்களாகச் சிறைவாசத்திலிருந்து, பிணை வழங்கப் பெறாமல், இறுதியில் சிறையில் மடிந்த ஸ்டான் சாமியின் அடையாளம் எது?

இந்திய சனநாயகம் வழங்கிய குடியுரிமையை வெறும் அடையாளத்துள் சுருக்கி, ஒதுக்கும் (Exclude) பகை அரசியல் வழி ஒடுக்கும் இந்திய மதவாத அரசியலைப் புரிந்துகொள்வது இன்றைய தேவை. குடிமக்களின் பன்முக அடையாளங்களைச் சிதைத்து, ஒற்றைமத அடையாளத்துள் குடிமக்களைச் சிறை வைப்பதன் அரசியலைப் புரிந்துகொள்வோம்.

நான் இந்து மதத்தைச் சார்ந்தவன்; உங்களைப் போலவே நான் பின்பற்றும் மதத்தின்மீது கொண்ட நம்பிக்கையால் ஊக்கம் பெற்றுள்ளேன். பகவத் கீதையைக் கையில் ஏந்தி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யவேண்டும் என்பதே நமக்குக் கற்றுத்தரும் பாடம்- ரிஷி சுனக், மேனாள் பிரிட்டிஷ் பிரதமர், ‘தினமணி, 1.7.2024.

மதச்சார்பற்ற நாடென்று அறிவிக்காமல், மதச்சார்பின்மையை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்ற ரிஷி சுனக், தன் அடையாளத்தை அந்நாட்டில் சமரசம் செய்யவில்லை. இவர்தம் அடையாளத்தை அங்கீகரித்த இங்கிலாந்து நாடு, ‘மதச்சார்பற்றநம் இந்தியக் குடியரசுக்குத் தரும் பாடம் என்ன?