திருச்சிராப்பள்ளி கிழக்குத் தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான திரு. இனிகோ S. இருதயராஜ் அவர்கள், தமிழ்நாடு அரசு சார்பில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து ‘நம் வாழ்வு’ வார இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
• சார், வணக்கம்.
முதலில்
உலகின்
140 கோடி
கத்தோலிக்கக்
கிறித்தவர்களின்
ஒப்பற்றத்
தலைவராகத்
திகழ்ந்த
திருத்தந்தை
பிரான்சிஸ்
அவர்களின்
மறைவுச்
செய்தியை
அறிந்து
உடனடியாக
மாண்புமிகு
தமிழ்நாடு
முதல்வர்
அவர்கள்
இரங்கல்
செய்தியும்,
தமிழ்நாடு
சட்டமன்றம்
இரங்கல்
தீர்மானத்தையும்
நிறைவேற்றியது.
குறிப்பாக,
நீங்களும்
தமிழ்நாடு
சிறுபான்மை
நல
அமைச்சர்
திரு.
S.M. நாசர் அவர்களும்
தமிழ்நாடு
மக்கள்
சார்பாக
உரோமைக்குச்
சென்று
திருத்தந்தைக்கு
இறுதி
மரியாதை
செலுத்திவிட்டு
வந்துள்ளீர்கள்.
உங்களுக்கும்,
அமைச்சர்
திரு.
நாசர்
அவர்களுக்கும்,
தமிழ்நாடு
முதல்வர்
அவர்களுக்கும்
‘நம்
வாழ்வு’ வார இதழ்
சார்பாக
நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
திருத்தந்தை
பிரான்சிஸ்
எல்லாருக்குமே
மிகவும்
பிடித்தமான
ஒரு
தலைவர்.
அவர்களைப்
பற்றி
ஓரிரு
வார்த்தைகள்
கூறுங்களேன்...
“நம் வாழ்வு’ வாசகர்களுக்கு வணக்கம்! உலகம் முழுவதும் இருக்கின்ற கத்தோலிக்கத் திரு அவையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் திரு அவையை அலங்கரித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். அவர் இன்று நம்மிடையே இல்லை என்ற மிகக் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்நேரத்தில் தமிழ்நாடு கிறித்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் சார்பாகவும், என் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருத்தந்தை
மிகவும் எளிமையான ஒரு மனிதர். அவரைப் பற்றிக் கேள்விப்படும்போது பொதுப் பேருந்தில் பயணித்தவர்; தனக்கான உணவைத் தானே சமைத்து உண்டவர்; திருத்தந்தையாகத் தேர்வான பிறகு, காலங் காலமாகத் திருத்தந்தையர்கள் வாழ்ந்து வந்த வசதியான வத்திக்கான் மாளிகையில் தங்காமல், குருக்களும் கர்தினால்களும் தங்குகின்ற ‘சாந்தா மார்த்தா’
இல்லத்தில் எளிமையாகத் தங்கியவர்; ஏழையாக வாழ்ந்த இவர், ஏழைகள்பால் மிகுந்த கரிசனை கொண்டவர்; புரட்சிகரமான செயல்களைத் திரு அவையில் நடைமுறைப்படுத்தியவர். திரு அவையில் பொதுநிலையினருக்கான பங்கேற்பை ஊக்கப்படுத்தியவர்; பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக வாழக்கூடிய மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தவர்; புலம்பெயர்ந்தவர்களும் நாட்டில் வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என நாட்டுத் தலைவர்களைக்
கேட்டுக்கொண்டவர்; பல நாடுகளுக்கும் சென்று
அமைதிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டவர் என்று அவரைப்பற்றிக் கூறிக்கொண்டே இருக்கலாம். உண்மையில் அவர் இந்நூற்றாண்டு கண்ட ஒரு புரட்சியாளர்!”
• திருத்தந்தையின் பணிப்பொறுப்பில்
அவர்
செய்த
புரட்சியான
செயலாக
எதைப்
பார்க்கிறீர்கள்?
“அவரது 12 ஆண்டு காலத் தலைமைப் பணியில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளே திருத்தந்தைக்குரிய ஆடம்பர ஆடைகளை அணிந்து வராமல், சாதாரண அங்கியையும் அவர் ஏற்கெனவே அணிந்திருந்த சிலுவைச் செயினையும் அணிந்து மக்களைச் சந்தித்ததே மிகப்பெரிய புரட்சிதான். பெண்களுக்கான உரிமை திரு அவையில் வழங்கப்பட வேண்டும் எனக் கருதி அவர்களை வத்திக்கானில் மிக உயர்ந்த பொறுப்புகளில் பணியமர்த்தியவர். திருத்தந்தைக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. அவர் ஒன்றைக் கூறினால் ஒட்டுமொத்தக் கத்தோலிக்கர்களும் ஏற்றுக்கொள்வர். அவருடைய கருத்துக்கு யாரும் மறுப்புக் கூற முடியாது; ‘ஏன் முடிவெடுத்தீர்கள்?’ என்று கேட்கவும் முடியாது. ஆனால், அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று எண்ணி 2013-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அவ்வாண்டே, செப்டம்பர் 28-ஆம் தேதி ‘C-9’ என்ற
கர்தினால்களின் உயர்மட்ட அவையை உருவாக்கி, அக்டோபர் மாதம் முதல் தேதி அதன் முதல் கூட்டத்தை வழிநடத்தினார். இன்று எந்தத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வார்? திருத்தந்தையின் இந்தச் செயலைப் புரட்சியான ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.”
• நன்றி சார்!
கடந்த
ஆண்டு
திருத்தந்தையை
நேரடியாகப்
பார்க்கக்கூடிய
வாய்ப்பு
உங்களுக்குக்
கிடைத்தது.
பலருக்கும்
கிடைக்காத
ஒரு
வாய்ப்பு
அது.
உங்கள்
இதயத்தைத்
தொட்ட
நிகழ்வு
ஏதேனும்
ஒன்றைக்
குறிப்பிட்டுக்
கூற
முடியுமா?
“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் நாள் அனைத்துச் சமயத் தலைவர்களோடு திருத்தந்தையைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். எனக்கு மிகப்பெரிய ஓர் ஆச்சரியம் என்னவென்றால், மாபெரும் தலைவர் அவர்; உலகமே பார்த்து வியக்கின்ற தலைவர் அவர்; உலகத் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக விளங்கிய அவரைச் சந்திக்கும்போது ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும் என்று நினைத்தேன். நாங்கள் கிட்டத்தட்ட 100 பேர் கொண்ட ஒரு குழு சென்று, அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றோம். அப்போது அங்குச் சென்றபொழுது எந்தப் பரிசோதனையும் இல்லை. ஓர் இடத்தில் மட்டும் நிறுத்தி, ‘ஏதாவது பொருள்களை வைத்திருந்தால் வைத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று
ஒரே ஓர் அறிவுரை மட்டும் கூறினார்கள். அப்போது எங்களோடு வந்திருந்த ஒரு சீக்கிய மதக் குரு ஒருவர் அவருடைய சமய அடிப்படையிலே ஒரு வாள் வைத்திருந்தார். வாள் வைத்திருந்த அவரைப் பாதுகாவலர்கள் திருத்தந்தையைச் சந்திக்க உள்ளே அனுமதிக்கவில்லை. நான் உடனே பாதுகாவலர்களிடம், ‘இது அவர்களுடைய மத அடிப்படையில் வைத்திருப்பதுதான்.
நீங்கள் திருத்தந்தையிடம் போய் தெரிவியுங்கள். அவர் நிச்சயமாக அதை அனுமதிப்பார்’ என்று
கூறினேன். திருத்தந்தையிடம் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர், ‘மத அடிப்படையிலே இருந்தால்
அதை ஒன்றும் செய்ய வேண்டாம். அவரையும் அழைத்து வாருங்கள்’
என்று கூறி, அன்போடு அருகில் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
எனக்கு
ஒரு 15 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. ‘நீங்கள் இந்தியாவிற்கு வருகின்ற பொழுது உங்களை எங்கள் முதல்வர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார். நாங்கள் உங்கள் வருகைக்குத் தயாராக இருக்கிறோம்’ என்று
கூறியபோது, ‘வருகிறேன்’
என்று மகிழ்ச்சியோடு கூறினார். அந்தச் சந்திப்பு வாழ்நாளில் கிடைக்கப்பெற்ற பெரும்பேறு!”
• திருத்தந்தையின் அடக்க
நிகழ்வில்
பங்கெடுத்தது
குறித்துப்
பகிர்ந்துகொள்ளுங்களேன்...
“முதலமைச்சர் அவர்கள் நானும், சிறுபான்மை நலத்துறையின் அமைச்சர் அண்ணன் நாசர் அவர்களும் உரோமாபுரி சென்று திருத்தந்தையின் உடலுக்குத் தமிழ்நாடு மக்கள் சார்பாக இறுதி மரியாதை செலுத்திவிட்டு வாருங்கள் என உத்தரவிட்டார்கள். இதற்காக இந்த
ஒட்டுமொத்தக் கிறித்தவ மக்களின் சார்பாக நாங்கள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம். முதலமைச்சரின் ஆணைப்படி, கடந்த 25-ஆம் தேதி நாங்கள் உரோமாபுரி சென்று திருத்தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம். இதெல்லாம் வாழ்க்கையில் கிடைக்காத பெரிய பாக்கியம்! எங்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எல்லா ஏற்பாடுகளையும் வத்திக்கான் நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது. அவருடைய அடக்க நிகழ்வுகள்கூட திருத்தந்தையின் இறுதி விருப்பத்திற்கிணங்க மிக எளிமையாகவே நடைபெற்றது.
இந்தியத்
திரு அவை தலைவர்களையும் சந்தித்தோம். ‘தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்
அவர்கள் தமிழ்நாடு சார்பாகப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருப்பது நெகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது’ என்று
கர்தினால் ஆஸ் வால்டு கிரேசியஸ் அவர்களும், கர்தினால் பசேலி யோஸ் கிளேமிஸ் அவர்களும் கூறினர். தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நேரத்தில் 267-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் தலைமைப் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.”
• மிக்க நன்றி
சார்!
திருத்தந்தையைச்
சந்தித்து
மகிழ்ந்து
உரையாடிய
தருணம்
ஒன்று;
மற்றொன்று
துயரம்
மிகுந்து
உணர்ச்சி
பொங்க அவருக்கு அஞ்சலி செலுத்திய
தருணம்.
இது
ஓர்
உணர்வுப்பூர்வமான
பகிர்வு.
தாங்கள்
பகிர்ந்த
கருத்துகளுக்கு
நன்றி.
உங்கள்
பணி
தொடர
‘நம்
வாழ்வு’ வாழ்த்துகிறது!
நேர்காணல்:
அருள்பணி.
ஞானசேகரன், நம் வாழ்வு துணை ஆசிரியர்
திருத்தந்தை போப் பிரான்சிஸ் 2025-ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாக அறிவித்தபோது, தன்னார்வலராகப் பணியாற்ற விண்ணப்பித்து, நீண்ட பரிசீலனைக்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்து, நான் தன்னார்வலராகப் பணியாற்ற அழைப்பு வந்தது.
மே
மாதம் 2-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை பணியாற்ற ஏற்றுக் கொள்ளப்பட்டதும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின்பொழுதில் வத்திக்கானில் இருப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. மே 3, 4, 5 ஆகிய நாள்களில் புனித பேதுரு பெருங்கோவிலின் உள்ளே திருப்பயணிகளுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டேன். பல நாட்டு மக்களுக்கு
ஆங்கில மொழியில் தகவல்கள் தந்து, அவர்களின் திருப்பயண அனுபவம் சிறப்பாக அமைய உதவும் பணி இது. அதுவே பெரும் அனுபவம்!
மே
6, 7 ஆகிய நாள்களில் புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பயணிகளை நெறிப்படுத்தி ஆலயத்திற்குள் அனுப்பும் பணி. மே 8-ஆம் நாள் மதிய வேளையில் தன்னார்வப் பணியாளர்கள் இத்தாலியக் காவல்துறையோடு இணைந்து பெரும் எண்ணிக்கையில் வரக்கூடிய மக்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டோம்.
இந்நிகழ்வில்
எனக்குப் புனித பேதுரு சதுக்கத்தின் முன்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. மே 7-ஆம் நாள் இரவு 9 மணி அளவிலும், 8-ஆம் நாள் நண்பகல் வேளையிலும் வெளிவந்த கரும்புகை மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், மக்கள் பெரும் நம்பிக்கையோடு மாலை மூன்று மணியிலிருந்தே புனித பேதுரு சதுக்கம் நோக்கி வர ஆரம்பித்தார்கள். காவல்துறையோடு தன்னார்வப்
பணியாளர்களும் இலட்சக்கணக்கான மக்களை வரிசைப்படுத்திப் புனித பேதுரு சதுக்கத்திற்குள் அனுப்பினோம். மாலை ஐந்து மணிக்குப் புனித பேதுரு சதுக்கம் ஏறத்தாழ நிரம்பி வழிய ஆரம்பித்தது. கூடிய மக்களின் பார்வை முழுக்க புகைக் கூண்டை நோக்கியே இருந்தது. அச்சமயத்தில் சீகல் பறவைகள் புகைக் கூண்டைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தன.
இத்தாலி
நேரம் சரியாக 6 மணி 8 நிமிடத்தில் புகைக்கூண்டிலிருந்து வெண்புகை வர ஆரம்பித்தபொழுதில், புனித பேதுரு
பெருங்கோவில் மணி ஒலிக்க ஆரம்பித்தது. மக்கள் அனைவரும் கைத் தட்டலோடு ‘Viva Papa’, ‘Viva
Papa’ என்று
ஒருமித்தக் குரலோடு புதிய திருத்தந்தையை வாழ்த்த ஆரம்பித்தனர். மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம்.
பல
நாட்டுக் கொடிகள் கூட்டத்தின் மத்தியில் இருந்து வெளிப்பட்டு, திருத்தந்தை உலகளாவியக் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் என்பதை வெளிக்காட்டின. ‘திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்’ என்ற
செய்தி அறிந்ததும் உரோமை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். இதை முன்கூட்டியே அறிந்திருந்தத் தன்னார்வப் பணிக் குழுக்களின் தலைவர்கள் தகுந்த முன்தயாரிப்போடு இருந்தனர். இருந்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் புனித பேதுரு பெருங்கோவில் தொடக்கம் முதல் முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திபேர் நதிக்கரை வரையிலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. அடுத்த முக்கால் மணி நேரம் மக்களின் ஆரவாரமும் மகிழ்ச்சிக் குரல்களும் ஒலித்துக்கொண்டே இருந்தன.
பிறகு
இன்னிசை வாத்தியக்குழு முன்வர ‘swiss guard’ முப்படையினர் அணிவகுத்து வர, ‘புதிய போப் யாராயிருப்பார்?’ என்ற எதிர்பார்ப்பும் கூட ஆரம்பித்தது. அது கர்தினால் தோமினிக் மம்பார்தி (Cardinal Dominique Mamberti) பெயரை
அறிவிக்கும் வரை நீடித்தது.
திருத்தந்தை
தோன்றும் மாடத்தில் பணியாளர்கள் வத்திக்கான் கொடியைக் கொண்டு அலங்கரித்தனர். பிறகு கர்தினால் தோமினிக் மம்பார்தி மாடத்திற்கு வந்து பாரம்பரியச் சொற்களான ‘Hebemus Papam’ (‘நமக்குத் திருத்தந்தை கிடைத்துள்ளார்’) என்ற
அறிவிப்போடு அமெரிக்க நாட்டைச் சார்ந்த, தற்போது பெரு நாட்டில் பணியாற்றும் இராபர்ட் பிரான்சிஸ் கர்தினால் பிரிவோஸ்ட் ‘14-ஆம்
சிங்கராயர்’ (leo XIV)
என்ற பெயருடன் ஏந்தி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
எனத் தெரிவித்தார். அப்போது மற்ற கர்தினால்கள் அதே தளத்தின் பிற மாடங்களில் கூடிவந்தனர்.
சில
நிமிடங்களில் சிலுவையோடு ஒருவர் முன்வர திருத்தந்தை 14-ஆம் சிங்கராயர் திருத்தந்தைக்கான சிறப்பு உடையுடன் மக்கள்முன் தோன்றி அன்போடு கையசைத்துத் தன்னை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட மக்களின் ஒருமித்த வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். “உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக”
என்று ஆரம்பித்துத் தனது முதல் உரையையும் ஆசிரையும் மக்களுக்கு வழங்கினார். தனது உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றியும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.
தனது
உரையை முடித்த பிறகு ‘Viva Papa’ என்ற மக்களின்
மகிழ்ச்சி ஆரவாரத்தை மிகுந்த மகிழ்வுடன் கையசைத்து ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, மக்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தை 14-ஆம் சிங்கராயர் உலகில் அன்பும் மகிழ்ச்சியும் ஒப்புரவும் நிலைபெற உழைப்பார் என்ற எண்ணம் நம்மிடம் நிறைந்திருந்தது. வெண்புகையைப் பார்த்ததிலிருந்து வந்த பூரிப்பு, புல்லரிப்பு திருத்தந்தை விடைபெற்றுச் செல்லும் வரை நீடித்தது.
இறைவேண்டலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது; அதில் நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று நம்மை எச்சரிக்கிறது இறைவார்த்தை. திரு அவையின் புனிதர்களும் இறைவேண்டல் பற்றிய தங்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். எல்லா இறைவேண்டல்களும் இறைவனுக்கு ஏற்புடையன ஆகாது. எனவே, நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்னும் செய்தியைத் திருவிவிலியத்தின் பல இடங்களிலும் பார்க்கிறோம்.
1. முரண்பாடான இறைவேண்டல்:
நம் அனைவருக்குமே பொருந்துகின்ற ஒரு முரண்பாடான இறைவேண்டலை “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது” (மாற்
7:6) என இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டிச் சுட்டுகிறார் இயேசு. இது குறித்து நாம் எப்போதுமே விழிப்பாயிருக்க வேண்டும்.
2. இறுமாப்பான இறைவேண்டல்:
பரிசேயரும் வரிதண்டுபவரும் இறைவேண்டல் செய்தது பற்றிய உவமையில் இயேசு, “பரிசேயரல்ல, வரி தண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்; ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்” (லூக்
18:14) என்றார். இறைவார்த்தை, இறைவேண்டலில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் பிறரை இகழ்ந்து தீர்ப்பிடாமல் கவனமாயிருக்க வேண்டும்.
3. மேலோட்டமான இறைவேண்டல்:
“அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்; அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில் உள்ளீர்”
(எரே 12:2) என்று எரேமியா இறைவாக்கினரும், “தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை” (ஓசே
7:14) என இறைவாக்கினர் ஓசேயா வழியாகவும் நாம் எச்சரிக்கப்படுகின்றோம். நம் இறைவேண்டல்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்றனவா? என்று ஆய்வு செய்து எப்போதும் விழிப்பாயிருப்போமாக.
4. இறைவனுக்கு ஏற்காத இறைப்புகழ்ச்சி:
பல வேளைகளில் நம்மிடம் காணப்படும் இந்த முரண்பாட்டை தூய யாக்கோபு சுட்டிக்காட்டுகிறார். “தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே. போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?” (யாக் 3:9-11). எனவே, பிறரன்பில்லாத எந்த இறைவேண்டலும் இறைப்புகழ்ச்சியும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உணர வேண்டும்.
5. தகாத இறைப்புகழ்ச்சி: “பாவிகளின் வாயிலிருந்து வரும் இறைப்புகழ்ச்சி தகாதது. அது ஆண்டவரிடமிருந்து அவர்களுக்கு அருளப்படவில்லை. ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி வெளிப்பட வேண்டும். ஆண்டவரே அதை வளமுறச் செய்வார்”
(சீஞா 15:9) என்னும் வரிகள் சில வேண்டல்களை, இறைப்புகழ்ச்சியாக இருந்தாலும்கூட, இறைவன் புறக்கணிக்கிறார் என்று நம்மை எச்சரிக்கின்றன.
6. அறியாமையின் மன்றாட்டு: செபதேயுவின் மனைவி தன் மகன்கள் யாக்கோபு, யோவான் இருவரும் இயேசுவின் ஆட்சியில் வலப்புறமும் இடப்புறமும் அமரும் வரம் கேட்டபோது, இயேசு அவரிடம் “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை” (மத்
20:22) என்று பதில் கூறினார். ஆம், சில வேளைகளில் இறைவனிடம் என்ன மன்றாட வேண்டும் என்பதை அறியாமல், இறைவனின் பார்வையில் நமக்குத் தேவையற்றவற்றை மன்றாடுகிறோம். “அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்; அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத்
6:33) என்னும் இயேசுவின் அறிவுரை நாம் எதற்காக மன்றாட வேண்டும் என்னும் தெளிவைத் தருகிறது.
7. வெளிவேடம் நிறைந்த வேண்டல்:
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள்” (மத்
6:5) என்ற இயேசுவின் எச்சரிக்கை நம்மை விழிப்படையச் செய்யவேண்டும். நமது இறைவேண்டல் வாழ்வு பிறரது பாராட்டை, நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல; மாறாக, இறைவனின் ஏற்பிசைவைப் பெறுவதற்காக என்னும் தெளிவு நம் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வேண்டும்.
இறைவேண்டலிலும்கூட
சிக்கல்கள் இருக்கின்றன என்பதையே மேற்காணும் இறைமொழிகள் எடுத்துரைக்கின்றன. ஆகையால் “எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” (லூக்
21:36) என்னும் இயேசுவின் எச்சரிக்கை சொற்களை இதயத்தில் இருத்தி இறைவேண்டல் செய்வோம்.
8. மன்னித்த
பின்
வேண்டுதல்
செய்யுங்கள்:
“நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்” (மாற்கு
11:25). “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன்
பாவங்கள் மன்னிக்கப்படும்” (சீஞா
28:2).
9. பாவங்களை அறிக்கையிட்டு
மன்றாடுங்கள்:
“என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது; ‘என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!” (தானி 9:4).
10. கட்டுப்பாடுடன் வேண்டுதல் செய்யுங்கள்:
“எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்”
(1பேது 4:7).
அழகிய இளம் ஆண் மயில் ஒன்றிற்கு ஓர் ஆசை. ‘எத்தனை நாள்தான் இப்படி இந்தப் பெரிய தோகைகளை வைத்துக்கொண்டு உடல் வலிக்கப் பறந்து பறந்து இரை தேடுவது? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டது. கூண்டுக் கிளிகளுக்கு மேல் எப்போதும் அதற்குப் பொறாமை இருந்தது. ‘ஒரே இடத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு, கிடைப்பதை வயிறுமுட்ட தின்றுகொண்டு வீட்டாரின் தோளிலும் மடியிலும் புரண்டுகொண்டு வாழ்வதில் இந்தக் கூண்டுக் கிளிகளுக்கு இருக்கும் சௌகரியம் என் வாழ்வில் இல்லையே’ என்று ஏங்கித் தவித்தது இளம் மயில்.
ஒற்றைக்காலில்
பொழுதெல்லாம் காத்திருந்த நாரைக்கு அயிரை மீனே வாய்க்குள் வந்து மாட்டிக் கொண்டதுபோல இளம் மயிலுக்கு ஓர் அரண்மனை இளவரசனின் அறிமுகம் கிடைத்தது. இளம் அரசனுக்கும் பல நாள்களாக ஒரு
மயிலைத் தங்கக் கூண்டிலே வைத்து வளர்க்க வேண்டும் என்று ஆசையிருந்தது. இரண்டு பேரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தினர். இளம் மயில் மிகக் கண்டிப்பாக இளவரசனிடம் சொல்லிவிட்டது: “என்னைத் தேவையில்லாமல் பறக்கச் சொல்லக்கூடாது, பாடச் சொல்லக்கூடாது, ஆடச் சொல்லக்கூடாது” என்று.
இளவரசனுக்கும் இந்த டீலிங் பிடித்திருந்தது. ஆனால், ஒரே ஒரு கண்டிசன் மட்டும் போட்டான்: “நீ என் தங்கக்
கூண்டில் இருந்தாலே போதும்; ஆனால், நான் எப்போதெல்லாம் உனக்கு ஒரு வாய் உணவு தருகின்றேனோ, அப்போதெல்லாம் உன் தோகையிலிருந்து இறகு ஒன்றைத் தரவேண்டும்” என்றான்.
இளம்
மயில் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியது. “என் இறகுகளால் இனி எனக்கு என்ன பயன்? சுவையான அரண்மனை உணவே நான் இருக்கின்ற இடம் தேடி, வேளா வேளைக்கு வந்துவிடுகின்றது. சிறகடித்துப் பறக்க வேண்டிய தேவையில்லை. உழைக்கச் சொல்லுவார் யாரும் இல்லை. இறகுகள் போனால் என்ன? பார்த்துக்கொள்ளலாம்” என்று
டீலிங்கிற்கு ஒத்துக்கொண்டது.
வீட்டில்
புதிதாகக் கார் வாங்கினால் ஊரார் கண்ணே அந்தக் காரின் மேல் இருப்பதுபோல, மயில் வந்த வேளை அந்தப் பெரிய அரண்மனைக்கே ஒரு புதுப்பொலிவு வந்தது. அரசர், அரசி, பணிப்பெண்கள், சிறார்கள் என்று எல்லாரும் தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட இளம் மயிலின் அழகிலே மெய் மறந்து போனார்கள். அடிக்கடி வந்து தவறாது பார்த்துச் சென்றனர். இளவரசன் இளம் மயிலுக்கு ஒவ்வொரு முறையும் உணவு கொடுக்கும்போது மறக்காமல் ஒரு மயிலிறகைப் பெற்றுக்கொள்வான்.
காட்டு
வெள்ளம் கண்ணில் எதிர்படும் அனைத்தையும் அள்ளிச் சுருட்டிக்கொண்டு ஓடுவதுபோல காலம், பல பகல் இரவுகளைச்
சுருட்டிக்கொண்டு ஓடியிருந்தது. பெரும்பாலான தன் இறகுகளை இழந்திருந்த மயில் கொழுத்துப்போய் தன் அழகையும் அடையாளத்தையும் இழந்து, மழித்துவிடப்பட்ட தீக்கோழியைப் போலிருந்தது.
இப்போதெல்லாம்
அதனைக் காண யாரும் வருவதில்லை. இளவரசன்கூட தன் வேலையாள்களைத்தான் உணவு கொடுக்க அனுப்புவான். தனிமையிலும் வெறுமையிலும் தவித்திருந்த மயில், தன் முடிவு தவறானது என்று உணரும்போது அதன் உயிரும் தங்கக்கூண்டின் கம்பிகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.
மனிதன்
தொடக்கக் காலத்திலிருந்தே தன்னை வலிமையானவனாகக் காட்டிக்கொள்ள ஏதாவது துணைக்கருவியை எப்போதுமே பயன்படுத்தி வந்திருக்கின்றான். கற்காலத்தில் கூர்மையான கற்களைப் பயன்படுத்தி வேட்டையாடுவதற்கும் விவசாயம் செய்வதற்கும் பயன்படுத்தி இருக்கிறான். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் விலங்குகளைப் பழக்கப்படுத்தியும், சக்கரங்களைக் கண்டுபிடித்தும், துப்பாக்கி முதல் அணுகுண்டு வரை பயன்படுத்தியும் தன்னைப் பிறரைவிட வலிமையுள்ளவனாக எப்போதும் காண்பித்திருக்கிறான்.
சிலந்திக்கு
எட்டுக்கால்கள் இருந்த போதும், அதனுடைய வசதியான பகுதி அதனுடைய சிலந்தி வலை மட்டும்தான்; அதனைத் தாண்டி அதனால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனிதன் அப்படியல்ல; இரண்டு கால்கள் மட்டுமே இருந்தும் கூட அவனால் இருபது கால் பாய்ச்சலில் வசதிப் பகுதியைத் தாண்டியும் பயணம் செய்ய முடியும். இதற்கு அவனுடைய நுண்ணறிவே காரணம்.
மனிதன்
எப்போதுமே ‘இது போதும்’ என்று தேங்கி விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு படைத்தலில் ஈடுபட்டிருக்கின்றான். இதன் மூலமாகத் தன்னை வலிமையுள்ளவனாகக் காட்ட விரும்புகின்றான். இது தொடக்கத்திலிருந்தே மனிதனின் இயல்பாக இருந்திருக்கின்றது. இதனுடைய தொடர்ச்சியாகவே செயற்கை நுண்ணறிவை நாம் பார்க்கவேண்டும்.
செயற்கை
நுண்ணறிவு என்பது கணினியையும் இணையத்தினையும் பயன்படுத்தி, மனித அறிவிற்கு இணையான ஓர் அறிவைச் செயற்கை முறையில் உருவாக்குவது. இது மனிதனின் பணியினை எளிமைப்படுத்துகிறது. சில நேரங்களில் மனிதனையே தன் பணியிலிருந்து வெளியேற்றுகின்றது. செயற்கை நுண்ணறிவு (ai) என்று
இன்று பல்வேறு தளங்களில் நாம் பேசினாலும், இத்தகைய சிந்தனை ஆலன் மேத்திசன் டூரிங் (Alan Mathison Turing) என்பவரால்
1940-50-களிலேயே ஆராயப்பட்டது. எனவேதான் இவரை ‘செயற்கை நுண்ணறிவின் தந்தை’ என்கின்றனர். ‘இயந்திரங்கள் சிந்திக்க முடியுமா?’ (Can machines
think?) என்ற டூரிங்கின் கேள்வியே இன்றைய செயற்கை நுண்ணறிவுக்கெல்லாம் அச்சாணியாக அமைந்தது.
செயற்கை
நுண்ணறிவை இரண்டாகப் பிரிக்கலாம்: ஒன்று ‘பலவீனமான செயற்கை நுண்ணறிவு’
(Weak Artificial Intelligence); இவ்வகை செயற்கை
நுண்ணறிவு குறைந்த அறிவுத்திறன் கொண்டும் குறுகிய இலக்கிற்காகவும், குறைந்தபட்ச செயலுக்காகவுமே உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இதனாலேயே இதனை ‘நேரோ ஏஐ’
(Narrow ai) என்றும் கூறுவர். இதன் எடுத்துக்காட்டாக ‘சாட் ஜிபிடி’ செயலியைக் கூறலாம். ஒரு குறிப்பட்ட செயலை மட்டும் செய்யும் திறன் கொண்டது. மற்றொன்று ‘வலுவான செயற்கை நுண்ணறிவு’
(Strong Artificial Intelligence); இவ்வகை செயற்கை
நுண்ணறிவு ‘செயற்கை பொது நுண்ணறிவு’
(Artificial General Intelligence -AGI) மற்றும் செயற்கை அதிநவீன நுண்ணறிவு (Artificial Super Intelligence -ASI) போன்ற ‘ஏஐ’ தொழில்நுட்பத்தினால்
செறிவூட்டப்பட்டிருக்கின்றது.
சிந்திக்கும்
திறன், புரிந்துகொள்ளும் திறன், கற்றுக்கொள்ளும் திறன், கணக்கிடும் திறன் என்று மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் இணையான பண்பை இவ்வகை செயற்கை நுண்ணறிவு கொண்டு விளங்குகின்றது. எனினும், மனித அறிவையும் அதன் அதீத ஆற்றலையும் மிஞ்சிச் செல்ல இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கு இன்னும் சில காலம் ஆகும் என்றே கருதுகிறேன்.
இன்று
மருத்துவத்துறையில், இராணுவத்தில், கல்வித்துறையில், ஊடகத்தில், மனித மேம்பாட்டில், தொழில்புரட்சியில், விண்வெளி ஆய்வில் என்று இன்னும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு என்பது அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சியை முப்பரிமாணக் கோணத்தில் நமக்குக் காட்டுகின்றது. ஒருபுறம் வளர்ச்சி அறிவியலின் புரட்சி என்று மார்தட்டினாலும், மறுபுறம் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தினால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சைபர் குற்றங்கள், நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய போலிச் செய்திகள் மற்றும் காணொளிகள், அதில் இருக்கக்கூடிய நெறிமுறை சார்ந்தக் குழப்பங்கள் நம் மற்றும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை இன்றே நமக்கு உணர்த்துகின்றது.
தங்கக்
கூண்டும், வேளா வேளைக்குச் சாப்பாடும் என்றிருந்த இளம் மயில் தன் தோகையை இழந்து, தன் தன்மை இழந்து தீக்கோழியான கதையைப் போல, உதவிக்கு வந்தவனே நம்மை உருக்குலைக்க வருகிறான் என்பதைத் தெரிந்து விழிப்பாய் இருப்பது நல்லது.
மனித நாகரிக வளர்ச்சி என்பது இடப்பெயர்ச்சியில் ஆரம்பமாகிறது. கண்டங்கள், தேசங்கள் என எல்லைக் கோடுகள் வகுக்கப்பட்டபோது புலம்பெயர்வு நடக்கிறது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் தலைசாய்க்க இடமின்றிக் காற்றுவெளியில், எல்லை இல்லாக் கடற்பரப்புகளில், பாலைவெளிகளில் திசை அறியாமல் அகதிகளாய் அலைகிறார்கள். நாடற்ற, வீடற்ற ‘அகதி’ என்ற அம்மக்கள் வானமே வாழும் கூரையாக, தெருக்களில் வெயில், மழை எனப் பரிதவிப்பது நாகரிக உலகச் சமூகத்திற்கான பெரும் சவால்.
ஒரு
தேசிய இனமாக வாழும் நம்மைப் போன்ற குடிமைச் சமூக மக்களுக்கு, அகதிகளின் அவலம் அறிய வாய்ப்பு இல்லை. ‘அகதி எனப்படுவோர் அரசியல், மதம், இனம், நாட்டுரிமை காரணங்களால் மனித உரிமை மீறப்படுவதாலும், போர், வன்முறை காரணமாகச் சொந்த நாட்டில் வாழ வழியின்றி, நாட்டை விட்டு வெளியேறுவதாலும், புதிய புகலிடம் தேடுபவர்கள்’ என்ற
வரையறையில் அடங்குவர். இவர்களுக்கு அடுத்த வேளை உணவு, இருப்பிடம், செல்லும் தூரம், சென்று அடைகிற இடம் என எதுவுமில்லை. இவர்கள்
திசை தெரியாப் பறவைகள். இது காற்றுவெளிப் பயணம். ஒரு தூர தேசத்து நிலவிற்கான, துயர தேசத்துப் பயணம்.
உலகெங்கும் 120 மில்லியன் மக்கள் அகதிகளாக அலைகிறார்கள். இவர்களில் 36 சதவிகித மக்களை ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் அளித்துக் காக்கிறது.
1967-ஆம் ஆண்டு
சர்வதேசச் சமூகம் அகதிகளின் நிலை தொடர்பான, அகதிகளின் மறுவாழ்வை மையப்படுத்திய ஜெனிவா ஒப்பந்தத்தை உருவாக்கியது. மண்ணுரிமை தொடர்பான தேசியங்களின் புதுக் கலாச்சாரத்தால் அகதிகளின் வாழ்வுரிமை இன்றைய நாள்களில் கேள்விக்குறியாகி உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் அகதிகளை வரவேற்ற காலம் மாறி வருகிறது. தற்போது பல நாடுகள் அகதிகளுக்காகவே
குடியேற்ற விதிகளைக் கெடுபிடிகளாக மாற்றிவிட்டன.
அனைவருக்கும்
நினைவிலிருக்கலாம்...
2010-ஆம் ஆண்டு 40 ஈழத்தமிழர்கள் உள்பட 92 அகதிகள் தஞ்சம் தேடிப் பெரிய படகில் சென்றபோது, படகில் தண்ணீர் புகுந்து, தத்தளித்துக் கொண்டு இருந்தபோது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள கிறிஸ்துமஸ் தீவு அருகே மீட்கப்பட்டார்கள். இதுபோன்ற ஆபத்தான பயணங்களில் இறப்போரின் மொத்த எண்ணிக்கை தரவுகள் எவரிடமும் இல்லை.
2015-ஆம் ஆண்டு
அகதிகள் நெருக்கடியின் உச்சத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்தை ‘எ கிரேக்க டிராஜடி’ எனும்
புத்தகம் கண்ணீரால் விவரிக்கிறது. இந்த வாரத் தலைப்புச் செய்திகள் இப்படியாக இருக்கிறது... ‘அகதிகள் கிரீஸ் கடலில் விழுந்து விபத்து’,
‘பிரிட்டன் நோக்கிச் சென்ற 115 அகதிகள் மீட்பு’,
‘அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஆறு இத்தாலியர்கள் பலி’,
‘உலகம் முழுவதும் உயிரைப் பணயம் வைத்த அகதிகளின் பயணம் தொடர்கிறது.’ இது குறித்துப் பெரும் கவலை கொள்கிற உலகளாவிய அமைப்பான
யூ.என்.எச்.சி.ஆர். எல்லாத்
தேசங்களுக்கும் ‘கடவுளின் துன்பம்’ என்ற பெயரில் கோரிக்கை வைக்கிறது. ‘அகதிகளுக்கு ஆதரவு தாருங்கள்’
எனச் சர்வதேசச் சமூகத்திற்கு விண்ணப்பிக்கிறது.
நம்
நாட்டில் எல்லையோர மாநிலங்களில் அகதிகள் குறித்த பிரச்சினைகள் உள்ளன. வங்க தேசத்து அகதிகள் குறித்தே குடியுரிமைச் சட்டம் என்ற வாதமும் உண்டு. புதிய குடியுரிமைச் சட்டம் அகதிகளை நிரந்தரக் குற்றவாளிகள் என அறிவிக்கிறது. அவ்விதிகளைப்
பயன்படுத்தி அகதிகளை மனிதாபிமானம் இல்லாமல், இந்தியச் சிறையில் அடைக்க வழி கொணரப்பட்டது. தமிழ்நாட்டில் நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழ அகதிகள், அவர்களின்
மறுவாழ்வு குறித்த முன்னெடுப்புகள், எந்த நகர்வுகளும் இன்றி முடங்கியே கிடக்கின்றன. ஈழ
அகதிகள் மூன்று தலைமுறைகளைப்
பார்த்து விட்டார்கள்.
1964-இல் இந்திரா-சிறிமாவோ ஒப்பந்தப்படி இந்தியா, திரும்பிய தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காவது குடியுரிமை தாருங்கள் என்பதும் தரப்படவில்லை. அவர்களின் எண்ணிக்கை 5,25,000 என்பது குறிப்பிடத்தக்கது.
1983-ஆம் ஆண்டு
ஈழ விடுதலைப் போர் உச்சக்கட்டம் பெற்ற காலம். மண்டபம் பகுதியில் ஈழத்து அகதிகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி, இராமநாதபுரம் போன்ற அகதிகளின் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள். இயேசு சபையின் கிழக்காசிய நாடுகளுக்கான அகதிகள் மறுவாழ்வு மையம் இரவு-பகல் பாராமல் ஈழ அகதிகளை மீட்டு,
மண்டபம் முகாமில் பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குத் துணை நின்றது என்பதையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
அன்றிலிருந்து
இன்றுவரை இனவாத சிங்கள அரசின் கொடுங்கோன்மைக்குத் தப்பி, தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தோர் எண்ணிக்ககை மூன்று இலட்சம் ஈழத் தமிழர்கள். அவர்கள் 29 மாவட்டங்களில் 108 முகாம்களில் தங்கி உள்ளார்கள். அவர்களில் இன்று 58,492 பேர்
அகதிகள் முகாமில் உள்ளார்கள். 33,639 பேர் முகாமிற்கு வெளியேயும் வாழ்கிறார்கள். அவர்களுக்குப் போதிய இருப்பிட வசதி இல்லை. தமிழ்நாடு புலனாய்வுத் துறையாலும், காவல்துறையாலும் அகதிகள் முகாம்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்பதான நிலையே எனக்
குற்றம் கூறப்படுகிறது. இந்திய நாடாளுமன்றத்திலும், பொதுவெளிகளிலும் இவர்களைப் புதிய
குடியுரிமைச் சட்டத்தில் சேர்த்து, இந்தியக் குடிமக்களாக அறிவிக்க வேண்டும்
எனக் குரல்கள் தமிழ்நாட்டில் எல்லா
அரசியல் கட்சிகளிடமும் உள்ளது.
ஒன்றிய
அரசு தமிழர்களைப் புறக்கணிப்பது போலவே, ஈழத் தமிழர்களையும் புறக்கணிக்கிறது. நாம் அகதிகள் குறித்துப் பேசும்போது, சொந்த நாட்டு அகதிகளையும் பேச வேண்டும். இவர்களுக்குக் குடியுரிமை மட்டுமே அகதிகளை விட அதிக உரிமையாக இருக்கிறது. இரவு நேரங்களில் வீடற்ற, தலை சாய்க்க இடமில்லா மனநலன் பாதிக்கப்பட்டோர், அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் உறக்கத்திற்கான தவிப்பு கவலை தருவது. அவர்களை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூட்டப்பட்ட கடைகள், பொது இடங்கள் என்ற போர்வைகள் மாற்றாய் அமைந்து இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.
அரசு
மற்றும் தன்னார்வ அமைப்புகள் வீடற்றவர்களுக்காக இரவு தங்குமிடம் அமைத்து, அவர்களைப் பேணுவதைப் பெரும் நகரங்களில் காண முடிகிறது. சென்னையில் இராயப்பேட்டை, டி.டி.கே.
சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோர்
காப்பகம் உள்ளது. புதுடெல்லியில் சேசு சபை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இருப்பிடமற்றவர்களின் தங்குமிடத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் கண்டது நினைவிலாடுகிறது.
வேளைநகர் திருத்தலத்திலும் இதுபோன்ற மையம் செயல்படுவது பாராட்டத்தக்கதே.
அன்பு,
ஆறுதல், அரவணைப்புத் தேடும் துயர தேச அகதிகளுக்கும், சொந்த நாட்டு அகதிகளுக்கும் ஆதரவு அளிப்போம், அன்பு காட்டுவோம், அரவணைப்போம். நம் சகோதர அன்பில் மனிதாபிமானம்
பூக்கட்டும்; மானுடம் செழிக்கட்டும்!
“கடவுளின் இரக்கமே நம் விடுதலையும் மகிழ்ச்சியும் ஆகும். இரக்கத்திற்காகவே நாம் வாழ்கிறோம். இரக்கம் இல்லாத வாழ்க்கையை நாம் நினைத்துப் பார்க்க இயலாது. இரக்கமே நாம் சுவாசிக்கும் காற்று. இரக்கத்திற்கு நாம் வேலியிட முடியாது. நாம் மன்னிக்க வேண்டும், ஏனெனில், நமக்கு மன்னிப்பு தேவை.”
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுடைய வாழ்க்கையையும் பணியையும் வரையறுக்கிற ஒற்றைச் சொல் ‘இரக்கம்’ எனலாம். அவருடைய சொற்கள், செயல்கள், பயணங்கள் அனைத்தின் வழியாகத் திரு அவை காயம்பட்டவர்களோடு உடனிருத்தல், மனம் வருந்துவோரை மன்னித்தல், துன்புறுவோருக்காகக் குரல் கொடுத்தல் ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என விரும்பினார். இரக்கம்
என்பது வெறும் உணர்வு அல்ல; மாறாக, பரிவுள்ளம் கொண்ட கிறிஸ்துவை உடைந்துபோன உலகிற்குத் தருகிற செயல் என்பது திருத்தந்தையின் புரிதல்.
இரக்கம் நிறைந்து
தேர்ந்துகொள்ளுதல்
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் ஆயர் பணி விருதுவாக்கு ‘இரக்கம் நிறைந்து வரவேற்று தேர்ந்துகொண்டு’ (இலத்தீன்
மொழியில், ‘மிஸெ ரெந்தோ ஆத்குவே எலிஜெந்தோ’)
என்பதாகும். திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் அழைப்பை மையப்படுத்திய பீட் அவர்களுடைய சிந்தனை வரிகளிலிருந்து இந்த விருதுவாக்கை எடுத்துள்ளார் திருத்தந்தை. ஆண்டவருடைய இரக்கத்தைப் பெற்ற ஒருவர், அதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இந்த விருதுவாக்கின் அழைப்பாக இருக்கிறது. “ஆண்டவர் நம்மேல் இரக்கம் காட்டுவதில் சோர்ந்துபோவதில்லை. நாம்தான் அவருடைய இரக்கத்தைத் தேடுவதில் சோர்ந்து போகிறோம்”
என்கிறார் திருத்தந்தை (‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
2013, 3).
இரக்கத்தின் சிறப்பு
யூபிலி
ஆண்டும்
இரக்கத்தின்
தூதர்களும்
இரக்கத்துக்கான
சிறப்பு யூபிலி ஆண்டை (2015-2016) அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், அதற்கான அறிவிப்பு ஆணையில் - ‘இரக்கத்தின் முகம்’
(‘மிஸரிகோர்தியே வுல்துஸ்,’ 2015), “இயேசு கிறிஸ்துவைத் தந்தையுடைய இரக்கத்தின் வாழ்கிற முகம்” என்று மொழிந்தார். உலகில் உள்ள அனைத்து மறைமாவட்ட முதன்மை ஆலயங்களிலும் யூபிலி கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று அறிவித்த திருத்தந்தை, அனைவரும் கடவுளின் இரக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும்,
கடவுளுடைய இரக்கத்தின் அடையாளங்களாகத் திகழுமாறு ஏறக்குறைய 800 இரக்கத்தின் தூதர்களை நியமித்து, உலகமெங்கும் அவர்களை அனுப்பினார். திருத்தூதுப் பீடம் மட்டுமே மன்னிக்கக்கூடிய பாவங்கள் சிலவற்றை மன்னிப்பதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்கியதோடு, இரக்கம் பற்றிய சிறப்பான மறையுரைகளை ஆற்றவும், ஒப்புரவு அருளடையாளம் வழியாக அனைவரும் இறை இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கற்பிக்கவும்
வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எழுத்துகளிலும்
பணியிலும்
‘இரக்கம்’
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுடைய எழுத்துகளிலும் உரைகளிலும் இரக்கம் மையமாக இருந்ததோடு, இரக்கமே அவற்றின் வடிவமாகவும் இருந்தது. ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
(2013) என்னும் திருத்தூது ஊக்கவுரை வழியாக, “திரு அவை காயம்பட்டவர்களோடும் அழுக்கானவர்களோடும் உடன் நிற்க வேண்டும்”
(எண் 49) என்று அழைத்தார். நல்ல சமாரியன் (லூக் 10) உவமையின் பின்புலத்தில் வரையப்பட்ட ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (‘ஃப்ரதெல்லி
தூத்தி,’ 2020) என்னும் சுற்றுமடல் அனைவரோடும் பாராட்டப்பட வேண்டிய சகோதரத்துவத்தை எடுத்துரைப்பதுடன், இரக்கம் ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும் என்ற செய்தியையும் தருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தமட்டில் இரக்கம் என்பதே நற்செய்தியின் அடிப்படையும் சாரமும் ஆகும். “அவர்
நம்மேல் அன்புகூர்ந்தார்” (‘திலெக்ஷட்
நோஸ்’, 2024) என்னும்
சுற்றுமடல், இயேசுவின் திரு இதயத்தில் பொங்கி வழியும் இரக்கத்தை நோக்கி நம் கண்களைத் திருப்புகிறது.
நீதியில் கனியும்
இரக்கம்:
வலுவற்றோர்
பாதுகாப்பு
இரக்கமும்
நீதியும் இணைந்தே செல்கின்றன என்பது திருத்தந்தையின் புரிதல். ‘ஒடுக்கப்படுவோர்மேல் இரக்கம்’ என்று திருத்தந்தை போதிக்கும் போது, ஒடுக்குபவர்கள் நீதியுடன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் துணிவுடன் எடுத்துரைத்தார். புலம்பெயர்ந்தோர், வறியோர், போர் மற்றும் ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், வலுவற்ற பெரியவர்கள் ஆகியோருடைய மாண்புக்கும் தன்மதிப்புக்கும் எதிராக இழைக்கப்படும் அனைத்துக் குற்றங்களும் நீதியோடு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திருத்தந்தை உறுதியாக இருந்தார். சிறார் பாதுகாப்புக்கான ஆணைக்குழு அமைத்தார். ‘நீங்கள் உலகுக்கு ஒளியாக இருக்கிறீர்கள்’ (‘வோஸ்
எஸ்திஸ் லுக்ஸ் முன்ந்தி’)
என்னும் ஆணை வழியாக (2019, 2023) சிறாருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனையை உறுதி செய்யுமாறு திரு அவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இரக்கம் என்பது அனைவருக்கும் உரியது என்றாலும், இரக்கத்தின் வழியாகக் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதிலும் திருத்தந்தை உறுதியாக இருந்தார்.
வறியோர்களுக்கான
உலக
நாள்
ஆண்டின்
பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறை ‘வறியோர்க்கான உலக நாள்’ என்று கொண்டாட அழைப்பு விடுத்த திருத்தந்தை (2017), ‘இரக்கத்தின் வழியாகவே நீதியான சமூகம் மலரும்’ என்று அறிவித்தார். மேலும், புலம்பெயர்ந்தோர் மேலும் வறியோர் மேலும் காட்டுகிற இரக்கம் நாம் அவர்களுக்குச் செய்யும் பிறரன்புப் பணி அல்ல; மாறாக, அவர்களுக்கு நாம் வழங்கும் நீதி என்றும் எடுத்துரைத்தார். லாம்பேதுஸா கடற்கரையில் புலம்பெயர்ந்தோருக்காக அவர் செலுத்திய அஞ்சலி (2013), வங்கதேச நாட்டில் ரோகிங்கியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர்கள் சந்திப்பு ஆகியவற்றின் வழியாக (2017), ‘வறியவர்களின் கண்ணீர் நம் அனைவருடைய கண்ணீராக மாற வேண்டும்’
என்றார்.
காயம்பட்ட உலகிற்குக்
கட்டுப்போடும்
கனிவிரக்கம்
மூன்றாம்
உலகப் போர் சிறிய அளவில் பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது
என்று அடிக்கடி மொழிந்த திருத்தந்தை உக்ரைன், காசா, சிரியா, சூடான் ஆகிய இடங்களில் நடைபெறுகிற போர்களுக்கு எதிரான சமயத் தலைவரின் குரலாக அல்லாமல், ஒருவர் மற்றவரை அழிக்கத் துடிக்கும் மானுடத்தின் மனச்சான்றாக நின்றார். போர்கள் ஏற்படுத்தும் துன்பம், கண்ணீர், இழப்பு, இறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், ஆயுத வியாபாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார். போர்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடித்தார். திருத்தந்தை காட்டுகிற கனிவிரக்கம் அவருடைய இயலாமையில் எழுந்த உணர்வு அல்ல; மாறாக, அது ஓர் இறைவாக்கினருக்குரிய செயல்.
இரக்கம் நம்
வாழ்வாக!
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, அவர் விடுத்த இரக்கத்தின் அழைப்புக்குச் செவிகொடுத்து அதற்கு வாழ்வு தருவதே. நம் குடும்பங்களிலும் பணித்தளங்களிலும் சமூக உறவுகளிலும் கொஞ்சம் அதிகமாக இரக்கம் காட்டுவதே திருத்தந்தை நமக்கு விடுக்கிற அழைப்பு. நாம் கட்டுகிற பெரிய ஆலயங்களும், நாம் நடத்துகிற பெருநிறுவனங்களும் அல்ல; மாறாக, நாம் எளியோருக்குக் காட்டுகிற சின்னஞ்சிறு இரக்கச் செயல்களே நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம், அறிவிக்கிறோம் என்பதற்கான சான்றுகளாக அமைகின்றன. இரக்கத்தின் தூதராக நம் நடுவில் வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் நம் அனைவரையும் இரக்கத்தின் தூதர்களாக அனுப்புகிறார்!