திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (21.12.2025)
மக்களுடனான கடவுளின் உடன்படிக்கையைக் கொண்டாடுகின்ற திருமண விருந்திற்காக அழைக்கப்பட்ட மனுக்குலம் அனைத்தையும் ஒரு புதிய ‘சீயோனின் மகளாக’ மரியா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
1. “மேன்மைப்படுத்தப்பட்ட சீயோனின் மகளான
மரியா” (இறைத்திட்டத்தில்
திருச்சபை, எண். 55), கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது வான தூதரால் வாழ்த்தப்பட்டு, மனுக்குலத்தின் பிரதிநிதியாகக் கடவுளுடைய மகனின் மனுவுருவாதலுக்காக அவரின் சொந்த இசைவைக் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார்.
வானதூதர்
அவரிடம் கூறிய முதல் வார்த்தையே மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பாகும். ‘CHARIE’ என்பதன் அர்த்தம்
‘மகிழ்ந்திடு’ ஆகும்.
இந்தக் கிரேக்கச் சொல்லானது இலத்தீன் மொழியில் ‘AVE’ என்று
மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்குரியதான இந்தச் சாதாரண சொற்றொடர் வானதூதரின் கருத்தோடும் இந்த நிகழ்வு நடந்த இடத்தின் சூழலமைவோடும் முழுமையாக ஒத்துப்போவதாகத் தெரியவில்லை.
உண்மையில்,
‘CHAIRE’ என்பது கிரேக்கர்களால்
வாழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதொரு சொல்லாடலாகும். ஆனால், சிறப்புமிக்கதொரு சூழலமைவில் கூறப்பட்ட இந்த வார்த்தையானது வழக்கமானதொரு சந்திப்புச் சூழலில் கூறப்படும் வாழ்த்துச் சொல்லிலிருந்து மாறுபட்டதாகும். அதேநேரத்தில், மனித வரலாற்றில் தனிச் சிறப்புடையதொரு செய்தியைக் கொண்டு வருகின்றோம் என்பதை வானதூதர் அறிந்திருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வகையில், ஒரு சாதாரண மற்றும் எளிமையானதொரு வாழ்த்தானது அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாததொன்றாகவே இருக்கின்றது. அதற்குப் பதிலாக, ‘CHAIRE’ என்ற வார்த்தையின்
உண்மையான அர்த்தத்தைக் குறித்துக்காட்டுகின்ற ‘REJOICE’ அதாவது ‘மகிழ்ந்திடு’ எனும்
சொல்லே இந்தச் சிறப்புமிக்க நிகழ்விற்கான பொருத்தமானதொரு சொல்லாகத் தோன்றுகின்றது. குறிப்பாக, கிரேக்கத் திரு அவைத் தந்தையர்கள் தொடர்ச்சியாக இறைவாக்கினர்களின் வாக்குகளைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுகின்றவாறு, மகிழ்வதற்கானதோர் அழைப்புதான் மீட்பரின் வருகைக்கான
அறிவிப்பிற்கு மிகவும் பொருத்தமான அர்த்தமாக இருக்கின்றது. ‘மகிழ்ந்திடு;
ஏனெனில், ஆண்டவர் அரும்பெருஞ் செயல்களைச் செய்துள்ளார்!’
2. இறைவாக்கினர்களின்
வாக்குகளுள் முதலாவதாக இறைவாக்கினர் செப்பனியாவைப் பார்ப்போம். கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் ஏடானது இறைவாக்கினர் செப்பனியாவின் இறைவாக்கோடு ஒத்துப்போவதைக் காட்டுகின்றது: “மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி”
(செப் 3:14). இங்கே மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பு இருக்கின்றது: “உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி”
(செப் 3:14,14). ஆண்டவரின் பிரசன்னமும் இங்கே குறிக்கப்படுகின்றது: “இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத்
தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்” (செப்
3:15). அஞ்சக்கூடாது என்பதற்கானதோர் அழைப்பு இங்கே இருக்கின்றது: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம்”
(செப் 3:16). இறுதியாக, மீட்பிற்கான கடவுளின் தலையீட்டிற்கான வாக்குறுதியும் இங்கே இருக்கின்றது: “உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்” (செப்
3:17). இவ்வாறு, ஆண்டவர் அவரின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு விரும்பியதால் மகிழ்வதற்கான எல்லாக் காரணங்களும் பெற்றுள்ள மரியாதான் ‘சீயோனின் மகள்’ என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கான எண்ணற்ற ஒப்பீடுகள் சீரான இடைவெளியில் இருக்கின்றன.
வேறொரு
மாறுபட்ட சூழலாக இருந்தாலும், இதேபோன்றதொரு மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பானது யோவேலின் இறைவாக்கிலும் வருகின்றது: “நிலமே, நீ அஞ்சாதே; மகிழ்ந்து
களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்!... இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கின்றேன் என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” (யோவே
2:21-27).
3. எருசலேமில்
இயேசு நுழைவதோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் செக்கரியாவின் இறைவாக்கும் இங்குக் குறிப்பிடத்தக்கதொன்றாகும்
(மத் 21:5; யோவா 12:15). இதில் மகிழ்ச்சிக்கான காரணமாக மெசியாவாகிய அரசரின் வருகையானது பார்க்கப்படுகின்றது: “மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக்குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமல் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க்கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் முதல் மறு கடல் வரை, பேராறு முதல் நிலவுலகின் எல்லைகள் வரை செல்லும்”
(செக் 9:9-10).
இறுதியாக,
இறைவாக்கினர் எசாயா புத்தகத்தில் மகிழ்ச்சிக்கான அறிவிப்பானது தெய்வீக ஆசிர்வாதத்தின் அடையாளமான அதன் எண்ணற்ற தலைமுறையிலிருந்து தோன்றும் புதிய சீயோனின் எழுச்சியில் கூறப்படுகிறது: “பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள் என்கிறார் ஆண்டவர்”
(எசா 54:1).
இவ்வாறு,
மகழ்ச்சிக்கானதோர் அழைப்பின் காரணங்களாக இம்மூன்றும் இருக்கின்றன. அவரின் மக்கள் மத்தியில் கடவுளின் மீட்புப் பிரசன்னம், மெசியாவாகிய அரசருடைய வருகை மற்றும் பெருந்தன்மையும் வளமையுமிக்க அவரின் மாட்சி இவையனைத்தும் மரியாவில் நிறைவேற்றம்
பெற்றன. அவை கருத்தரித்தலின் அர்த்தத்தை திரு அவையின் பாரம்பரியத்தினால் வானதூதரின் வாழ்த்தொலிக்கு அடைமொழியாக்கப்பட்டதை நியாயப்படுத்துகின்றன.
மெசியாவினுடைய
வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்கான ஒப்புதலைக் கொடுப்பதற்கு மரியாவை அழைத்ததன் வழியாகவும், ஆண்டவரின் தாயாக இருப்பதற்கான மிகவும் உன்னதமான தகுதியை அவளிடம் அறிவித்ததன் வழியாகவும் வானதூதர் அவரை மகிழ்வதற்கு அழைக்கின்றார். இதையே இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் நமக்கு இவ்வாறு கூறுகின்றது: “இறுதியாக, சீயோனின் மாண்புமிக்க மகளான அவரோடு, வாக்குறுதியை எதிர்ப்பார்த்திருந்த நீண்ட காலம் முடிந்து புதிய திட்டம் உருவாக்கப் பெறுகிறது. இத்திட்டத்திலே மனிதரைப் பாவத்தினின்று தம் உடலில் நிகழ்ந்த மறைநிகழ்ச்சிகள் வாயிலாக மீட்க இறைமகன் அவரிடமிருந்தே மனித இயல்பை எடுத்துக் கொண்டார்”
(இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 55).
4. கிறிஸ்து
பிறப்பின் அறிவிப்புப் பற்றிய திருவிவிலியப் பகுதியானது ஆழமானதொரு மகிழ்ச்சிக்குக் கடவுளால் அழைக்கப்பட்ட புதிய ‘சீயோனின் மகளில்’ மரியாவைக் கண்டுகொள்ள நம்மை அழைக்கின்றது. இது மெசியாவின் தாய், உண்மையில் கடவுளுடைய மகனின் தாய் என்கின்ற அவரின்
சிறப்பானதொரு பங்கை வெளிப்படுத்துகின்றது. தாவீதின்
மக்களுடைய சார்பாக நின்று அந்தக் கன்னி வானதூதரின் செய்தியை
ஏற்கின்றார். ஆனால், மனுக்குலம் அனைத்தின் சார்பாக அவர் ஏற்றார் என்றும் நாம் கூறலாம். ஏனென்றால், பழைய ஏற்பாடானது தாவீதின் வழிவந்த மெசியாவின் பங்கை எல்லா நாடுகளுக்கும் விரிவுபடுத்துகின்றது (ஒப்பிடுக. திபா 2:8; 71s72d, 8). தெய்வீக எண்ணத்தில், அவருக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவிப்பானது உலக மீட்பிற்கானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது.
இறைவாக்கினர்களால்
முன்னறிவிக்கப்பட்ட
மகிழ்ச்சியை
மரியா
வரவேற்கின்றார்!
கடவுளின்
திட்டத்தினுடைய இந்த உலகளாவிய பார்வையை உறுதிப்படுத்துவதற்கு சீயோன் மலைமேல் எல்லா மக்களும் கொண்டாடவிருக்கின்ற (ஒப்பிடுக. எசா 25:6) அந்த மாபெரும் விருந்து மற்றும் கடவுளுடைய அரசின் இறுதி விருந்தை அறிவிக்கின்ற அந்த நிகழ்வோடும் (ஒப்பிடுக. மத் 2:1-10) மீட்பானது ஒப்பிடப்படும். அநேக பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு இறைவார்த்தைகளை நாம் நினைவுகூர முடியும்.
‘சீயோனின் மகள்’ என்கின்ற வகையில், கடவுள் மனுக்குலம் அனைத்தோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் கன்னியாக மரியா இருக்கின்றார். இந்நிகழ்வில் மரியாவின் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்கானது தெளிவாக இருக்கின்றது. இந்தச் செயலை ஒரு பெண்ணானவள் செய்கின்றாள் என்பது இங்குத் தனிச்சிறப்புமிக்கதாகும்.
5. புதிய
‘சீயோனின் மகள்’ என்கின்ற வகையில், உண்மையில் மரியா கடவுளோடு திருமண உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்குப் பொருத்தமான ஒருவராக இருக்கின்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் எந்தவொருவரைக் காட்டிலும் மரியாவால் ஆண்டவருக்கு மணவாட்டியின் உண்மையான இதயத்தைக் கையளிக்க முடியும்.
மரியாவைப் பொறுத்தவரை
‘சீயோனின் மகள்’ என்பது ஒரு கூட்டுப்பொருள் மட்டுமல்ல, மனிதகுலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபர் மற்றும் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது இறையன்பின் முன்மொழிதலுக்கு மணமகளுக்கு உரித்தான அன்பினால் அவரின் தனிப்பட்ட பதிலை அளிக்கின்றார்.
இவ்வாறு,
முற்றிலும் சிறப்பான வகையில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியானது கடவுளுடைய
திட்டத்தின் நிறைவு இங்கு முழுமைக்கு வருவதால் ஏற்படும் மகிழ்ச்சியால் அதை அவர் வரவேற்கின்றார்.
மூலம்:
John Paul II,
Mary responds to God with spousal love, in «L’Osservatore Romano», Weekly
Edition in English, 8 May 1996, p. 11.
“என் இதயத்திற்கேற்ப உழைப்பாளர்களை நான் உங்களுக்கு அளிப்பேன்” என்ற இறைவார்த்தைக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் 2013, மார்ச் 13-ஆம் நாளன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ். இறந்தாலும் நம் நினைவுகளிலும் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இயேசுவின் நற்செய்தி விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் இந்த நவீன காலகட்டத்தில் தன் செயல்கள் வழியாக மெய்ப்பித்தவர்.
“கொடையாகப் பெற்றீர்கள், கொடையாக வழங்குங்கள்” என்ற
இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி தன் வாழ்வால் நற்செய்தி அறிவித்தவர். வரலாற்றையே மாற்றி எழுதும் வகையிலும், தான் தேர்ந்தெடுத்த முதல் நாளிலே இவரைப் பற்றி அறிய வியக்கும் வகையில் முந்தைய திருத்தந்தையர்களின் பெயரைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையின் வடிவமாக, அமைதியின் தூதுவராக வாழ்ந்து காட்டிய புனித பிரான்சிஸ் அசிசியாரின் பெயரைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தும் காட்டினார்.
தெற்கு
சூடான் நாட்டில் உள்நாட்டுப் போரால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னைக் காணவந்த அந்நாட்டு மன்னரின் காலடியில் மண்டியிட்டுப் போரை நிறுத்தும்படி மன்றாடினார். இஸ்ரேல்-பாலஸ்தீனம், இரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக அமைதிக்கான போர்க் குரல் எழுப்பியவர் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தைக்கு
என்று ஒதுக்கப்பட்ட மாளிகை, ஆடம்பர உடைகள், காலணிகள், உணவுகள் மற்றும் பொருள்களைப் பயன்படுத்தாமல், பணியாளர்களின் பணியாளராக, எளிமையின் சின்னமாக, ‘நான் ஒரு பாவி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று
தலையைத் தாழ்த்தி வணங்கியபோது உலகமே வியப்புற்றது.
“ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கின்றீர்கள்” (யோவா
12:14) எனும் வாக்கிற்கிணங்க, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எய்ட்ஸ் நோயாளிகளான பெண்கள், ஆண்கள், சிறைக்கைதிகள், கைவிடப்பட்டவர்கள் என ஏழைகளின் பாதங்களைக்
கழுவி ‘கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்’ என்று
முதன்முதலில் நிரூபித்துக்காட்டியவர்.
காணாமல்
போன ஆட்டைத் தேடிச்சென்ற நல்லாயனைப்போல சமூகத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட காயப்பட்டோரைத் தேடிச்சென்று காயங்களுக்கு மருந்திடுவதே அருள்பணி என்றும், அருள்பணியாளர்கள், துறவிகள் தங்களது நிறுவனங்களை விட்டு வெளியேறி, எளியோர் மத்தியில் அன்பைப் பகிர்வதே மேன்மையான மேய்ப்புப்பணி என்று வாழ்ந்து காட்டியவர்.
தற்கால
சூழலில் கேள்விக்குள்ளான சில அறநெறிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர். “வெவ்வேறு பாலின இயல்புகளைத் தீர்ப்பிட நான் யார்? கடவுள் மட்டுமே” என்று குறிப்பிட்டவர். “நற்கருணை என்பது தூயவருக்கு அளிக்கப்படும் பரிசு அன்று; மாறாக, பலவீனமானவர்களுக்கும் அளிக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து மற்றும் ஊட்டச்சத்து” என்று
கூறி உயர்ந்து ஓங்கிய மாமனிதர்.
திரு
அவையில் நிகழும் பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் ஆயர்கள், அருள்பணியாளர்களுக்கு மட்டுமே சிறப்பு இருக்கைகள் தரப்பட்டிருக்கும். ஆனால், அருள்சகோதரிகள், பெண்கள் இதில் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அமர்த்தப்படுவார்கள். பெண்களைப் பங்குகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க யோசிக்கும் இந்தக் காலகட்டத்தில், முற்போக்குச் சிந்தனையாளரான நம் திருத்தந்தை பிப்ரவரி 2021-இல் பொதுச் செயலகத்தின் இரண்டு துணைச் செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நந்தினி பென்னாட்டை நியமித்தார். 2025, சனவரி 6-இல் சகோதரி பிரம்பில்லாவைப் பத்திதான் பேராலய முதல்வராகவும், சகோதரி இராபில்லா பெற்றினேன் அவர்களை நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராகவும் பதவியேற்க வைத்தார். இவ்வாறு பெண்களை மாண்புடன் நடத்தி திரு அவையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தார். திரு அவையின் மையம் பொதுநிலையினர். அவர்களுக்கே நம் பணி. அவர்களுக்காகவே நாம் அழைக்கப்பட்டு இருக்கின்றோம் என்று பொதுநிலையினரை முன்நிறுத்தி, பொதுநிலையினருக்கும் நிர்வாகப் பொறுப்பை வழங்கிய முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இறைவனின் தாயான அன்னை மரியாவைத் தன் வாழ்விலும் தாயாக ஏற்று, அவரை அன்பு செய்து எல்லாத் திருத்தந்தையர்களும் புனித பேதுருவின் பேராலயத்திற்குள்தான் அடக்கம் செய்யப்படுபவர் என்ற நிலையை மாற்றி, தான் எப்பொழுதும் செபம் செய்யும் சாந்தா மரியா பேராலயத்தில் மிகவும் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதல் திருத்தந்தை.
“உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” என்ற
இறைவார்த்தைக்கிணங்க இந்த 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து இறந்தாலும், மக்களின் மனங்களில் திரு அவையின் கோட்பாடுகளைக் காப்பதில் இரும்புக் கரம் கொண்டவர். ஏழை எளிய மக்களை, ஒதுக்கப்பட்டுள்ளோரை அரவணைப்பதில் எளிமையும் தாழ்ச்சியும் கொண்டு வாழ்ந்தவர். இவர் மாமனிதர், வாழும் புனிதர், சிறந்த நல்லாயன், நீதியின் திருத்தந்தை, ஈகையின் திருத்தந்தை, நம்பிக்கையின் திருத்தந்தை மற்றும் மதங்களைக் கடந்து எல்லார் உள்ளங்களிலும் இடம்பெற்ற திருத்தந்தை இறந்தும் வாழ்கிறார்.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
காணாமல்
போனவர்களைத் தேடி மீட்க வந்த நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்களுக்கு அருளும் இரக்கமும் அமைதியும் உண்டாவதாக! நமது கத்தோலிக்கத் திரு அவை சிறைப்பணி ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது கிறித்தவ நம்பிக்கையின் அடிப்படையான கோட்பாடு அனைவருக்கும் மீட்பு உண்டு என்ற நம்பிக்கைதான்.
இந்த
ஆண்டின் சிறைப்பணி ஞாயிறு கருப்பொருள் ‘வீழ்ந்தோர் இறைவேண்டலால் எழுவர்’ என்பது. கடவுளின் அருளாலும், திரு அவையின் ஆதரவுடனும் சிறைவாசிகள் மீண்டெழுவது இப்பொழுது இயலும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது இந்தக் கருப்பொருள். கண்டனம் செய்வதற்கு விரைவாகவும், மன்னிக்க மெதுவாகவும் இருக்கும் உலகில், நற்செய்தி நம்மை ஓர் உயர்ந்த உண்மைக்கு அழைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் அவர்கள் எவ்வளவு தூரம் விழுந்துவிட்டாலும், கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர். அவருடைய இரக்கமும் நமது இறைவேண்டலும் அவர்கள் மாற்றத்தை அடைய உதவிபுரியும்.
மீட்பிற்கான அழைப்பு
படைப்பின்
தொடக்கத்திலிருந்தே உடைந்தவர்களிடம் கடவுளின் அசைக்க முடியாத அன்பைக் காண்கிறோம். ஆதாமும் ஏவாளும் வீழ்ந்திருந்தும் கைவிடப்படவில்லை. அரசர் தாவீது கடுமையான பாவம் செய்தபோதிலும், மனந்திரும்பி கடவுளின் இதயத்திற்கு ஏற்ற மனிதரானார். ஒரு காலத்தில் கிறித்தவர்களைத் துன்புறுத்திய புனித பவுல், பிற இனத்தாரின் சீடரானார். ஊதாரி மகன் மன்னிக்கப்படவில்லை; ஆனால், கொண்டாடப்பட்டார். இவை வெறும் கடந்தகால கதைகள் மட்டும் அல்ல; அவை தெய்வீகமானவை. இது நம்பிக்கையும் மனந்திரும்புதலும் ஆகும். எசேக்கியேல் இறைவாக்கினர் மூலம் கடவுள் அறிவிக்கிறதுபோல், “தீயோர் சாக வேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே, உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்” (எசேக்
33:11).
இயேசு கிறிஸ்து:
இரக்கமுள்ளவர்
மற்றும்
மறு
சீரமைப்பு
செய்பவர்!
தமது
பொது வாழ்வில் இயேசு புறந்தள்ளப்பட்ட மக்களிடையே பாவிகள், வரிவசூலிப்பவர்கள், குற்றவாளிகளோடு நடந்தார். சிலுவையிலிருந்து மனந்திரும்பிய ஒரு கள்வனிடம் மன்னிப்பு வார்த்தைகளைப் பேசினார்: “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்”
(லூக் 23:43). வரி வசூலிப்பவர்களுடன் அவர் உணவருந்தினார். விபச்சாரப் பெண்ணை மன்னித்தார். இழந்து போனதைத் தேடினார். இழந்துபோன நாணயம், காணாமற்போன ஆடு, இழந்துபோன மகன் போன்ற உவமைகள் மூலம் அவர் தந்தையின் இதயத்தை வெளிப்படுத்தினார். “மனம் மாற தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்”
(லூக் 15:7); “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்.”
இறைவேண்டலின்
இறகுகள்
இறைவேண்டலும்
உண்ணாநோன்பும் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்கு அடித்தளமாகும். இறைவேண்டல் மூலம்தான் இதயங்கள் மென்மையாகின்றன. மனச்சாட்சிகள் விழித்தெழுந்து, அருளைப் பெறுகின்றன. உலகெங்கிலும் உள்ள சிறைவாசிகளின் நலனுக்காக நற்கருணைநாதர் முன் தன்னார்வலர்கள் பரிந்து பேசுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கான இந்த இடைவிடாத இறைவேண்டலில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம். இணைய வழியில் அல்லது ஆன்மிக வகையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காகத் தொடர் நோன்பு, தொடர் திருப்பலி, தொடர் செபமாலை மற்றும் இறைஇரக்க வழிபாடுகளையும் சிறைப்பணி ஏற்பாடு செய்கிறது. உங்கள் அன்றாட இறைவேண்டல்கள் மற்றும் ஆன்மிக முயற்சிகள்... குறிப்பாக, பயங்கரவாதிகள் போன்ற கடுமையான குற்றவாளிகளுக்கு அவர்களைக் கருணையை நோக்கி உயர்த்தும் சிறகுகளாக அமைகின்றன.
தண்டனைக்குப்
பின்னால்
நம்பிக்கை...
திருத்தந்தை
பிரான்சிஸ் ஒருமுறை கூறியது: “ஆண்டவர் மறு ஒருங்கிணைப்பில் வல்லவர்; அவர் நம்மைக் கையைப் பிடித்து மீண்டும் சமூகத்திற்குள் கொண்டு வருகிறார்.” சிறையில் அடைக்கப்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும், அவர்களுக்குச் சேவை செய்பவர்களுடனும் நம்பிக்கையுடன் ஒன்றாக நடப்போம். புனித கதவைப்போல நம் இதயங்கள் அகலத் திறக்கட்டும். அதனால், யாரும் விலக்கப்பட மாட்டார்கள்; மேலும், அனைவரும் கடவுளின் மாற்றும் அன்பை அறியட்டும். இந்தச் சிறைப்பணி ஞாயிறு நம் தைரியத்தைப் புதுப்பிக்கட்டும். மறக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்யவும், குரலற்றவர்களுக்காக வாதிடவும், பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நற்செய்தியை அறிவிக்கவும்தான். திரு அவை கண்டனம் செய்வதற்கான நீதிமன்ற அறை அல்ல; மாறாக, குணப்படுத்துவதற்கான மருத்துவமனை. கிறிஸ்துவின் வார்த்தைகளை எதிரொலிப்போம்: “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்” (யோவா
8:11).
ஆசிரும் நன்றியும்!
தாராளமான
எனது சகோதர ஆயர்களுடன் சேர்ந்து, அனைத்து மறைமாவட்டங்களுக்கும், முக்கிய மேலதிகாரிகளுக்கும் மற்றும் உங்கள் தொடர்ச்சியான இறைவேண்டல்களுக்கும் ஆதரவிற்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இழந்தவர்களைத் தேட வந்த இயேசு உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக! சிறைவாசிகளின் மறுவாழ்வில் அயராத சேவை செய்த அனைத்துச் சிறைப்பணி தன்னார்வலர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியச் சிறைப்பணியின் பாதுகாவலர்களான புனித மாக்சிமில்லியன் கோல்பே மற்றும் வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் சேவியர் வான்துவான் ஆகியோர் இந்தப் பணிக்காகப் பரிந்து பேசட்டும். நமது அன்னையாம் தூய கன்னி மரியா உங்களை எப்போதும் பாதுகாத்து வழிநடத்தட்டும்!
தமிழ்நாடு திரு அவை ஆகஸ்டு முதல் ஞாயிறை (03.08.2025) இளைஞர் ஞாயிறாகக் கொண்டாடுகின்றது. இவ்வாண்டின் இளைஞர் ஞாயிறின் கருப்பொருளாக, “நீங்களும் சான்று பகர்வீர்கள்; ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்” (யோவா 15:27) எனும் இயேசுவின் ஆற்றலூட்டும் வார்த்தைகளை மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.
இளைஞர்
இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரோடு தங்கி, அவரின் பணிவாழ்வில் உடன் பயணித்து, அவரது இறையாட்சிக் கொள்கைகளைத் தமதாக்கி, அவரது பார்வையைக் கொண்டவர்கள் தாம் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பை உடனுணர்ந்த பிறகு இச்சீடர்கள், தங்கள் வாழ்வால் இயேசுவிற்குச் சான்றுபகர்ந்தார்கள். குறிப்பாக, தேவையிலிருப்பவர்களுக்குப் பணியாற்றுதல், ஏழைகள், கைம்பெண்கள், பிற இனத்தார் போன்றோருக்கு முன்னுரிமை கொடுத்தல், தயக்கமின்றித் துணிவுடன் உண்மையை எடுத்துரைத்தல், நோயுற்றோரை நலமாக்குதல், பிரிவினைகளை அகற்றி வாழ்தல், பெண் சீடர்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பணிகளாலும் பண்பாலும் சீடர்கள் சான்று பகர்ந்தார்கள். ஆட்சியாளர்களின் தீங்கிழைக்கும் ஆட்சி முறைக்கு எதிரான, முரண்பட்ட ஆளுமைகளாய் நயன்மை காத்தார்கள். தங்களின் நேர்மையான நிலைப்பாட்டிற்காக இன்னுயிரையும் இழக்க அவர்கள் தயங்கியதில்லை. எனவேதான், இயேசுவின் சீடர்களாய் வாழ ‘இயேசு அனுபவம்’ பெற்றிருப்பதோடு, இயேசுவிற்குச் சான்று பகரும் வாழ்க்கைமுறையும் அடிப்படைத் தேவையாகிறது. இயேசு அனுபவமும் சான்று பகரும் வாழ்வுமே உண்மையான சீடத்துவ வாழ்வின் இரு இணைபிரியா, ஒன்றையொன்று நிறைவு செய்யும் பக்கங்கள்.
இயேசுவுடன் உடனிருத்தல்
“இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். உங்களை நண்பர்கள் என்றேன்”
(யோவா 15:15) என இயேசு இன்று
இளைஞர்களுக்காக நட்பிற்கான அழைப்பை விடுக்கிறார். அதோடு, “வந்து பாருங்கள்”
(யோவா 1:36) என இளைஞர்களை அவரோடு
தங்கி வாழ அழைக்கிறார். சான்று பகரும் சீடத்துவ வாழ்விற்கு இயேசுவோடு உடனிருக்கும் அருள்வாழ்வே அடித்தளமாகும். இதை உணர்ந்துதான் தமிழ்நாடு திரு அவையின் இளைஞர் பணிக்கான கொள்கையின் முதல் முன்னுரிமையாக அருள்வாழ்வும் இறைநம்பிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசுவோடு
உடனிருக்கும் ஆழமான அருள்வாழ்வை வளர்க்க இளைஞர்கள் இறைவார்த்தையை வாசித்து, உள்வாங்கி, இக்காலச்சூழலுக்கு ஏற்ப புரிந்து வாழ்ந்து காட்டலாம்; அருளடையாளங்களின் பொருளுணர்ந்து, அவை விடுக்கும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கலாம்; ஆழ்நிலைத் தியானம், இயற்கைத் தியானம், இனிய இசை தியானம், திருச்செபமாலை, புதுமையான இறைவேண்டல்கள், இளைஞர் திருப்பலி, ஆற்றுப்படுத்தும் ஒப்புரவு போன்ற அருள்வாழ்வு பயிற்சிகள் வழியாகவும் இயேசு அனுபவம் பெறலாம். இளைஞர் இயேசுவின் ஆளுமையையும் செயல்பாடுகளையும், வாழ்வியல் முறைகளையும், வாழ்வின் மதிப்பீடுகளையும், உறவுகொள்ளும் முறையையும், உதவி செய்யும் பாங்கினையும் தன்வயப்படுத்தியும் இயேசுவோடு உடனிருக்கலாம். இவ்வாறு இளைஞர் இயேசு என்னும் திராட்சைச் செடியின் கிளைகளாய் இளைஞர்கள் இணைந்திருக்கவேண்டும். உயிரோட்டமான இணைவே கனிகள் ஈவதற்கான உயிராற்றல் என்பதை நெஞ்சில் நிறுத்தவேண்டும்.
சான்று பகர்தல்
இயேசுவோடு
உடனிருந்து உயிரியக்கம் பெறும் இளைஞர்கள் தாங்கள் வாழும் சமூகத்தில் உயிராற்றலோடு ஈடுபடுவார்கள். “இளைஞர் தெருக்களில் களமாடுகிறார்கள்; மாற்றத்தின் மிக முக்கிய ஆதரவாளர்களாக இருக்க விழைகின்றனர்; இயேசு வெறும் பார்வையாளர் அல்லன் அவர் ஈடுபட்டார். எனவே, ஏதோ ஒரு வழியில் பொதுநலனுக்காகப் போராடுங்கள், ஏழைகளுக்குப் பணியாற்றிடுங்கள். அன்பும் பணியாற்றும் பண்பும் கொண்ட புரட்சியின் முதன்மையான செயல்பாட்டாளர்களாக இருங்கள்”
(கிவா 174) என்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற
திருத்தூது ஊக்கவுரை வழியாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
“இளைஞர்களே! நீங்கள் கடவுளின் அன்பைத் தழுவிக்கொள்ளவும், நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாக வாழவும் பிளவுபட்ட உலகில் அமைதிக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
பணியாற்றுவதற்கான அழைப்பிற்குப் பதிலுரைக்க அஞ்ச வேண்டாம்”
எனத் திருத்தந்தை லியோ அழைப்பு விடுக்கின்றார்.
இயேசுவோடு
உடனிருந்து, அவரது அனுபவத்தில் வேரூன்றிய இளைஞர்கள், தங்கள் வாழ்க்கை நிலைகளுக்கும் தனியழைப்பிற்கும் ஏற்ப சமூகத்தில் ஈடுபட்டு, சமூக நீதிச் செயல்பாடுகளில் களமாட வேண்டும். ஆண், பெண் நிகர்நிலையைப் பேணிக்காக்கப் பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம், பாலியல் கொடுமைகள் போன்றவற்றிற்கெதிராக அறச்சீற்றத்துடன் பல முன்னெடுப்புகளை எடுப்பதோடு பெண்ணுரிமையைப்
பேணுதல், பெண்களின் மாண்பைப் போற்றுதல், சமவாய்ப்பு போன்ற மாற்றநிலை நோக்கிப் பயணிக்கவேண்டும். சாதியத்தால் பிளவுபட்டுக் கிடக்கும் திரு அவையையும் சமூகத்தையும் கேள்விகேட்டு, இளைஞர் இயேசுவின் அன்புநெறியிலும் சமன்மைப் பாதையிலும் இயங்கும் புதிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். மது, போதைப்பொருள்களால் மாண்பிழந்து தள்ளாடும் இளைஞர், மாணாக்கர் சமூகத்தை நெறிப்படுத்தி, போதையில்லாப் புதிய இளைஞர் பண்பாடு, போதை நோய்க்கான மருத்துவம், போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கங்களோடு போராட வேண்டும். இளைஞர் உலகை வீழ்த்தும் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், அறநெறியற்ற ஊடகப் பயன்பாடு, இணையவழி அச்சுறுத்தல்கள் போன்ற எண்மின் படையெடுப்புகளை வீழ்த்த அறநெறியுடன் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.
உறவுகளையும்
வளங்களையும் பாதுகாப்பையும் அழித்து, சொல்லொண்ணாத் துயரத்தில் குற்றுயிராக்கும் போர்களுக்கெதிராகவும் நாடுகளின் முதலாளித்துவப் போக்கிற்கெதிராகவும், பொதுமையில் வேரூன்றும் நிலையான அமைதியை நிலைநாட்டும் இறையாட்சியின் தலைவர்களாக இளைஞர்கள் உயர வேண்டும். பகட்டையும் கவர்ச்சியையும் புறந்தள்ளி, கொள்கையுள்ள அரசியலை இனம்காணவும், தாங்கள் வாழும் பகுதியில் அரசியல் தன்மையோடு இளைஞர்கள் செயல்பட வேண்டும். இயற்கை வளங்களைச் சூறையாடும் திட்டங்களையும் சட்டங்களையும் முதலாளித்துவ அமைப்புகளையும், அறிவுக்கூர்மையுடனும் அரசியல் ஆற்றலோடும் இளைஞர்கள் அகற்றவேண்டும்.
மலைவாழ்
மக்களுக்கான நீதிப்பணிக்காக உயிர் விட்ட அருளாளர் இராணி மரியா, பழங்குடியினரின் உரிமைகளுக்காக உயிர்நீந்த அருள்பணி. ஸ்டேன் சுவாமி, ஊழலுக்கெதிராகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்ட காங்கோ நாட்டு இளம் அருளாளர் ஃபுளோரிபர்ட் ப்வானா சூய் (Floribert Bwana Chui), நாட்டுரிமைக்காகப்
போர்புரிந்த இளம் வீராங்கனை புனித ஜோன் ஆஃப் ஆர்க், ஊடகத் துறையில் கிறித்தவ மனநிலையோடு செயலாற்றிய அருளாளர் கார்லோ அக்குத்திஸ், மனித உரிமைக்காகக் குரல் கொடுத்ததால் கொலை செய்யப்பட்ட பேராயர் புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரையும் உங்கள் சான்று வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
இளைஞர்
இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், எல்லாப் பங்குகளிலும் இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டுச் செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். பங்குகள், மறைவட்டங்கள், மறைமாவட்டங்கள் ஆகிய தளங்களில் இளைஞர்களுக்கான உருவாக்கப் பயிற்சிகளான தலைமைத்துவம், ஆளுமை, சமூகப் பகுப்பாய்வு போன்றவை வழங்கவேண்டும். எல்லா மறைமாவட்டங்களிலும் பயிற்சிபெற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து, பங்குச் சந்திப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். அக்குழுக்கள் வழியாகப் பங்கு இளைஞர் இயக்கங்களை ஒருங்கிணைத்து, உயிரூட்டி, ஆற்றல்படுத்த வேண்டும்.
22-வது
இளைஞர் ஞாயிறன்று (03.08.2025) போதைப்பொருள்களுக்கெதிராக விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்திடவும், குருதிக் கொடையாளர் பட்டியலை எல்லாப் பங்குகளிலும் உருவாக்கி, தமிழ்நாடு அளவில் தொகுத்திடவும், பங்களவில் ஏழை மாணவர் ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை வழங்கிடவும், மறைமாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திடவும், மதுக் கடைகளை அகற்றக் கோரியும், போதைப் பொருள்கள் விற்பனையைத் தடைசெய்யக் கோரியும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்குக் கோரிக்கை மனு வழங்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இறையாசியும்
அன்னை மரியாவின் வழிநடத்துதலும் உங்கள் அனைவரோடும் இருப்பனவாக!
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்:
“தந்தையே, சென்றமுறை நாம் சந்தித்தபோது, எவ்வாறு சாதாரண நீர் புனிதப்படுத்தப்படுகின்றபோது
ஆற்றல் வாய்ந்ததாக மாறுகிறது என்பதை திருவிவிலியப் பின்னணியிலும் அறிவியலின் பின்னணியிலும் நீங்கள் சுட்டிக்காட்டினீர்கள். இது என் சிந்தனையை இன்னும் அதிகமாக்கியது. மனிதர்களாகிய நம் எண்ணங்களும் வார்த்தைகளும் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவை என்பதை என்னால் உணர முடிந்தது. உதாரணமாக, நம் மனம் கூட நேர்மறையான வார்த்தைகளைக் கேட்கும்போதும், நல்ல எண்ணங்களிலிருந்து உருவாகும் அதிர்வுகளை உணரும்போதும் உற்சாகமடைகிறது. உயரமடைகிறது, உருவாக்கம் கொள்கிறது. எதிர்மறை வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் சிதைக்கப்படுகிறது, சீரழிக்கப்படுகிறது, சிக்கலாகின்றது. இதுதான் தண்ணீருக்கும் நடக்கிறது. ‘ஆசிர்வதித்தல்’, ‘புனிதப்படுத்தப்படுதல்,’
‘மந்திரித்தல்’ என்றாலே
ஆற்றல்மிக்க நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவதுதானே! இப்பொழுது ஆற்றல் மையங்கள்மீது எண்ணெய் பூசப்படுவது குறித்துச் சொல்லுங்கள் தந்தையே!”
மார்த்தா:
“எனக்குத் தெரிந்தவரையில், நம் அன்றாடச் செயல்பாடுகளில் எண்ணெயின் பங்களிப்பு மிகவும் அதிகம். மிதிவண்டி உள்பட எல்லா வகையான இயந்திரங்களும் சிறப்பாகச் செயல்படுவதற்கு எண்ணெயின் பங்களிப்பு இன்றியமையாதது. நம் உடல்கூட ஒருவகையான இயந்திரம்தான். அதன் சிறப்பான செயல்பாடுகளுக்கு எண்ணெய் மிகவும் முக்கியமானது. எண்ணெயின் முக்கியத்துவம் என்ன என்பதை திருவிவிலியமும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சுவையான உணவிற்கு எண்ணெயின் பங்களிப்பு மிகவும் அவசியம் (எண் 11: 8); விளக்கு எரிவதற்கு மிகவும் அவசியமானது எண்ணெய் (மத் 25:1-9); உடல்நோய்க்கான மருத்துவத்தில் எண்ணெய் முக்கியம் இடம்பெறுகிறது (எசா 1:6, லூக் 10:34); உடலின் நலனை மட்டுமல்ல, நறுமணத்தைக் கூட்டுவதற்கும் எண்ணெய் பயன்படுகிறது (ரூத் 3:3); யூத பாரம்பரியத்தில், ஒரு விருந்தினர் வீட்டிற்கு வரும் போது அவரை எண்ணெய் பூசி வரவேற்பது வழக்கம் (லூக் 7:46); வாழும்போது மட்டுமல்ல, வாழ்ந்து இறந்தபின்பு உடலைப் பதப்படுத்துவதற்கு எண்ணெய் தேவைப்படுகிறது (மாற் 16:1).”
அருள்பணி:
“எண்ணெயினால் நம் புறவாழ்விற்கு நிறைய பயன்கள் உண்டு என்றாலும், அருளடையாளத்தில் நாம் எண்ணெயைப் பயன்படுத்துவது ஆன்மிகக் காரணங்களுக்காக! மூன்றுவிதமான எண்ணெய்களைத் திரு அவை அருளடையாளக் கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது. அ) கிறிஸ்மா தைலம்
(SC), ஆ)
ஆயத்தக்கார எண்ணெய் (GS) மற்றும்
நோயாளர் திருஎண்ணெய் (GI). வழக்கமாக
இம்மூன்று எண்ணெய்களுமே ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் புனித வாரத்தில் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் அனைத்து குருக்களும் பங்கெடுக்கும் சிறப்புத் திருப்பலியில் புனிதப்படுத்தப்படுகின்றன. எனினும், அவசரச் சூழ்நிலையில் ஆயத்தக்கார எண்ணெயும், நோயாளர் திரு எண்ணெயும் அருள்பணியாளர்களாலேயே புனிதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படலாம்.
ஆயத்தக்கார
எண்ணெயானது ஒரு நபர் கடவுளின் அருளைப் பெறுவதற்கான தயாரிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. திரு அவையின் மரபின்படி, ஒரு நபரைப் பீடித்திருக்கும் எதிர்மறைத் தன்மைகளிலிருந்தும் தீயோனின் செயல்பாடுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆயத்தக்கார எண்ணெயானது குழந்தைகளின் நெஞ்சில் பூசப்படுகிறது. தீமைக்கு எதிரான போராட்டத்தில், எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்படுவது ஒருவருக்கு வலிமையளிக்கிறது என்கின்ற கருத்தை திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது (திபா 23:5, திபா 45:8, எபி 1:9). மேலும், அருள்பொழிவு ஒருவரைப் பொய்மையிலிருந்து காக்கிறது என்பதையும் திருவிவிலியத்தில் பார்க்கிறோம் (1யோவா 2:27). புனித ஹிப்போலித்துஸ் (St. Hippolytus) தனது
‘The Apostolic Tradition’ (கி.பி. 210) என்ற நூலில் இந்த எண்ணெயை ‘பேயோட்டுவதற்கான எண்ணெய்’
(The oil
of exorcism) என்று அழைக்கிறார். இந்த மரபானது திரு அவையில் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. பேயோட்டுவதற்கான
இறைவேண்டல் முன்னெடுக்கப்படுகின்ற வேளையிலே இந்த எண்ணெய் குழந்தையின் நெஞ்சின்மீது பூசப்படுகிறது.
நோயாளர்
திரு எண்ணெய் குறித்து நாம் நோயில்பூசுதல் அருளடையாளம் குறித்துப் பேசும்போது கவனம் செலுத்தலாம். கிறிஸ்மா தைலமானது நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதன் அடையாளமாக நம்மீது பூசப்படுவது. கிறிஸ்மா தைலத் திருப்பலியின்போது, மந்திரிக்கப்பட இருக்கின்ற ஒலிவ எண்ணெயோடு நறுமணத் தைலமானது கலக்கப்படுகின்றது. இது கடவுளே நம் வாழ்வின் நறுமணமாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாகவும் இருக்கிறது (2கொரி 2:15,16). திருமுழுக்கு, உறுதிபூசுதல், குருத்துவம் ஆகிய மூன்று அருளடையாளக் கொண்டாட்டங்களுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.”
கிறிஸ்டினா:
“கிறிஸ்மா எண்ணெயின் சிறப்பம்சம் என்ன தந்தையே?”
அருள்பணி:
“தூய ஆவியின் பிரசன்னத்தையும் ஆற்றலையும் நாம் பெறுவதற்கான அடையாளமாக கிறிஸ்மா எண்ணெய் நம்மீது பூசப்படுகிறது. எண்ணெய் பூசப்படுகின்ற வேளையில், தூய ஆவி இறங்கி வருவதைப் பற்றிய குறிப்பு திருவிவிலியம் முழுவதும் காணப்படுகிறது. சவுல், தாவீது ஆகியோர் எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்பட்ட பின்பு, கடவுளின் ஆவியார் அவர்கள் மீது தங்கி அவர்களை ஆட்கொண்டார். எலியாவால் அருள்பொழிவு செய்யப்பட்ட பின்பு, கடவுளின் ஆவி எலிசா மீது தங்கியது. இயேசுவும் கடவுளின் ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டது குறித்துக் குறிப்பிடுகிறார். திரு அவை வரலாற்றிற்கு வருகின்றபோது, திரு அவைத் தந்தையர்களில் முக்கியமாகக் கருதப்படுகிறவர் எருசலேம் நகரத்து புனித சிரில். அவர், ‘எண்ணெய் பூசுவது என்பது உடன்படிக்கையின் முத்திரை ஆகும். தூய ஆவியார் நம்மீது பொழியப்படுகிறார் என்பதன் அடையாளம் ஆகும்’ என்கின்றார். இக்கருத்தைச் சொல்லிவிட்டு அவரே நமக்கு ஓர் அழைப்பையும் தருகிறார். எனவே, எண்ணெய் பூசுதலை ஒரு வெற்றுச் சடங்காக மட்டும் எண்ணி விடாதீர்கள். திருப்பலியின்போது தூய ஆவியார் சாதாரண ரொட்டியை இயேசுவின் உடலாக மாற்றுவதுபோல, எண்ணெய் பூசுதல் வழியாக உங்கள்மீது இறங்கி வரும் தூய ஆவியார் உங்களைக் கடவுளின் சாயலாக மாற்றுகிறார்.”
மார்த்தா:
“தந்தையே, நீங்கள் இக்கருத்தைக் கூறும்போது, புனித பவுலின் கீழ்க்காணும் வார்த்தைகள் என் நினைவிற்கு வருகின்றன: ‘அவரே (கடவுளே) நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்’
(2கொரி 1:21, 22).”
அருள்பணி:
“திருமுழுக்குக் குறித்து நாம் மற்றொரு கருத்தையும் மனத்திலிருத்துவது அவசியம். திருமுழுக்கைத் திருவிவிலியம் பாவமன்னிப்போடு தொடர்புபடுத்துவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்’
என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திற்கும் சென்று அவர் (திருமுழுக்கு யோவான்) பறைசாற்றி வந்தார்’
(லூக் 3: 3) என்றும், ‘நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்’
(திப 2: 38) என்றும் நாம் வாசிக்கிறோம். கடந்த கட்டுரைகளில் நாம் வாசித்ததுபோல, புறம் நோக்கிய மனம் தன்னைத் தக்கவைப்பதற்காக எத்தகைய தீமையையும் செய்ய துணிந்து விடுகிறது. இதுவே பாவம் என்பது! எனவே, புறம் நோக்கிய மனத்தை அகம் நோக்கித் திருப்புவது என்பது பாவத்திலிருந்து மீண்டெழுவதே! பாவத்திலிருந்து மன்னிப்புப் பெறுவதே! இவ்வாறு பாவத்திலிருந்து மீண்டெழும் மனம் குற்றமற்றதாக மாறுகிறது என புனித பேதுரு
எடுத்துரைக்கிறார்: ‘திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது’ (1பேது
3: 21). மேலும் கிறிஸ்துவோடு இணைந்து அவரைப்போல வாழ்வதற்கான வழியையும் திருமுழுக்கு நமக்குத் திறந்து வைக்கிறது என்பதை புனித பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்” (கலா
3:27).
மார்த்தா:
“தந்தையே! மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு சில செயல்பாடுகளின் தொகுப்பாகத் தெரியும் திருமுழுக்கு அருளடையாளம் எவ்வாறு புது வாழ்விற்கான வழிமுறையாக இருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கினீர்கள்! நன்றி தந்தையே!”
தொடரும்
வழிபாட்டுமுறைகள், அறம், சமூகம் மற்றும் இறையியல், நற்செய்திப் பணிமுறை என்பவை சார்ந்த கருத்து மோதல்கள் இன்று திரு அவையில் நிலவுகின்றன. அவற்றை மேற்கொண்டு ஒன்றிப்புறவை வளர்த்தெடுக்கத் துணிச்சலான முயற்சிகள் தேவை. ‘பன்மையில் ஒருமை’ எனும் திரு அவையின் இயல்புப் பண்பைச் சிறப்பாக வெளிப்படுத்துபவை, அதனுடன் ஒன்றிப்புறவில் உள்ள கீழைத் திரு அவைகள். அவற்றை இலத்தீன் மயமாக்கும் அணுகுமுறை கைவிடப்பட்டு, அவற்றின் தனித்தன்மையும் தன்னாட்சியும் அதிகமதிகமாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இன்று வந்துள்ளது. அவற்றின் பன்மையில் ஒருமை எனும் அனுபவம் திரு அவையின் கூட்டியக்கத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் உதவ முடியும்.
உண்மையான
உலகளாவியத் திரு அவையாகத் திகழ அதற்குப் பல்வகை வெளிப்பாடுகள் இயல்பானவையும் இன்றியமையாதவையும் ஆகும். ஏனெனில், அது வாழும் இடங்களும் பண்பாடுகளும் சூழமைவுகளும் வெவ்வேறானவை. அவற்றின் வேறுபடும் அர்த்தங்களையும் முதன்மைகளையும் பல்வகை வளங்களையும் ஏற்று மதிக்கும் உணர்வைத் திரு அவை இன்னும் அதிகம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையைக் காத்து வளர்க்கும் முனைப்பில் பன்மைத்தன்மையை அழிக்கும் மிகையான மையப்படுத்தலுக்கும் ஒருசீராக்குதலுக்கும் அது ஆளாகி விடக்கூடாது.
“நற்கருணையிலிருந்தே நாம் பன்மையில் ஒருமை என்பதை எடுத்துரைக்கக் கற்றுக்கொள்கிறோம்; ஒரே அருளடையாள மறைபொருள், பல்வேறு வழிபாட்டு மரபுகள், கொண்டாட்டத்தில் ஒன்றிப்பு, அழைத்தல்கள், அருள்கொடைகள், பணிகள் என்பனவற்றில் பல்வகை. இதுவே பன்மையில் ஒருமை. ஆவியார் உருவாக்கி வளர்க்கும் இந்த ஒத்திசைவு அனைத்தையும் ஒரு சீராக்குதல் அல்ல; இருப்பினும், திரு அவைசார் கொடை ஒவ்வொன்றும் பொது வளர்ச்சிக்காகவே என்பதை வேறு எதையும்விட நற்கருணை அதிகமாகப் புலப்படுத்துகிறது” (முஅ
3f).
கூட்டியக்கத்
திரு அவையின் இன்றியமையாத ஒரு பண்பு பல்வேறு பிரிந்த அல்லது சீர்திருத்தத் திரு அவைகளுடன் ஒன்றிப்பிற்கான முயற்சிகள். தம் சீடர்களின் ஒன்றிப்பு என்பது இயேசு விரும்பியதும், தமது இறுதி இரவு விருந்தின்போது தந்தையிடம் இறைவேண்டல் செய்ததும் ஆகும் (யோவா 17:20-26). அவர் விடுக்கும் அழைப்பு, நாம் பெற்றுள்ள பொதுவான திருமுழுக்கு என்பனவற்றின் அடிப்படையில் கிறித்தவ ஒன்றிப்பிற்கான பயணத்தைத் தொடரவும் தீவிரப்படுத்தவும் கத்தோலிக்கத் திரு அவை உறுதிபூண்டுள்ளது.
மேலும்,
திரு அவை அதிகமதிகமாக இன்று பல பண்பாடு மற்றும்
பல்சமயச் சூழமைவுகளில் இயங்குகிறது. இதனால் அந்தப் பல்வேறு பண்பாடுகள் மற்றும் சமயங்களுக்கு இடையே உரையாடல் அவசியமாகிறது. “தூய ஆவியார் எந்தச் சமயத்தையும் நம்பிக்கையையும் பண்பாட்டையும் சார்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் வழியாகப் பேசமுடியும் என்பதைத் திரு அவை அறிந்துள்ளது” (முஅ
5f)). இதனால் அது மக்களிடையே ஒன்றிப்பை உருவாக்க பல்சமய உரையாடலை ஊக்குவிக்கிறது. இவ்வுரையாடல் மனிதகுலத்தின் ஒன்றிப்பு, சமூக நீதி, அமைதி, ஒப்புரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பனவற்றையும் நோக்கியதாக இருத்தல் வேண்டும். மேலும், கூட்டியக்கத் திரு அவை எங்கு இருந்தாலும் ஏனைய சமய நம்பிக்கையாளர்களுடன் இணைந்து அப்பாதையில் நடக்க உறுதிகொண்டுள்ளது. அது நற்செய்தியின் மகிழ்ச்சியை அவர்களுடன் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு, அவர்களது கொடைகளை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இத்தகைய ஒத்துழைப்பின் வழியாக அனைவரும் சகோதரர், சகோதரிகள் என ஒன்றிணைந்து நீதி,
தோழமை, அமைதி என்பனவற்றை வளர்ப்பதே நமது நோக்கம்.
இத்தகைய
சூழ்நிலைகளில் அதன் நற்செய்தி அறிவிப்புப் பணியும் உடன் பயணித்து, செவிகொடுத்து, கற்றுக்கொள்வதாக அமைவது அவசியம். எந்த ஒரு சமயத்தை அல்லது பண்பாட்டைச் சந்திப்பது என்றாலும், அது தான் சார்ந்திருப்பதற்குச் சமமான புனித இடத்தில் புகுகின்ற உணர்வுடன் செய்யப்பட வேண்டியது ஆகும். அதற்கு ஒருவர் தன்னுடைய ‘காலணிகளைக் கழற்றி வைத்துக்கொண்டு’ தாழ்மை
மற்றும் மதிப்பு உணர்வோடு செல்வது அவசியம் (முஅ 5c).
மேலும்,
பிற சமய மரபுகளுடன் உள்ள உறவில் நட்புறவு, நல்லிணக்கம், ஒத்திசைவு என்பனவற்றை வளர்ப்பதும், அருள்வாழ்வு மற்றும் அறம்சார் விழுமியங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதும், அவற்றைச் சந்தித்து அவற்றுடன் உரையாடி, வளங்களைப் பரிமாற்றம் செய்வதும் கூட்டியக்கத் திரு அவைக்கு இயல்பான செயல்பாடுகள்.
நற்செய்தி
அறிவிப்புப் பணி சில இடங்களில் குடியேற்ற ஆதிக்கத்தோடும் அந்தந்த மக்களின் பண்பாட்டுக் கலைப்பு, சமய அழிப்பு என்பனவற்றுடன் கைகோர்த்தே நடந்துள்ளது. “செய்துள்ள தவறுகளை ஏற்றல், அவை பற்றிய புதிய புரிதலைக் கற்றுக்கொள்ளுதல், குடியேற்ற ஆதிக்கத்தைக் கடந்த புதிய தான்மையுணர்வைப் புனைய முனையும் தலைமுறையோடு இணைந்து பயணித்தல் என்பன அத்தகைய சூழமைவுகளில் நற்செய்தி அறிவிப்புப் பணியாற்றுவதற்கு அவசியம். நாம் ஒருவரை ஒருவர் நிறைவாக்குகிறோம், வேறுபட்ட பண்பாடுகளைச் சந்திப்பது கிறித்தவக் குழுமங்களின் நம்பிக்கைசார் வாழ்வையும் புரிதலையும் செழுமைப்படுத்த முடியும் என அவற்றை மதிக்கும்
மனநிலையும் தாழ்மையுணர்வும் அப்பணிக்கு அவசியமான அடிப்படைப் பண்புகள்”
(முஅ 5e).
செயல்படுத்தச்
சில
பரிந்துரைகள்
1. திரு
அவையில் அனைத்து நிலைகளிலும் மிகையான மையப்படுத்தலைத் தவிர்க்கும் வழி வகைகளைத் தெளிதேர்வுசெய்து முக்கிய முடிவு எதுவெனினும், அதனுடன் தொடர்புடைய எல்லாருடைய ஒத்திசைவையும் பங்களிப்பையும் கூட்டியக்க முறையில் பெற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும் (முஅ 5m).
2. அந்தந்த
மண்ணின் மக்களுக்கு எவ்வாறு அருள்பணி ஆற்றுவது என அவர்களுக்கு ஏற்ற
புது வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி அவை பற்றி முடிவெடுப்பது அருள்பணி சிறப்புற உதவும் (முஅ 5n).
3. திரு
அவையின் வாழ்விற்கு முக்கியமான திருவழிபாடு, அறவியல், சமூக நிலைப்பாடுகள், இறையியல் என்பனவற்றில் முரண்படும் பல புரிதல்களும் விளக்கங்களும்,
நற்செய்தி அறிவிப்புப் பணிமுறை, பண்பாட்டுமயமாதல் என்பவை பற்றிய கருத்து வேறுபாடுகளும் இன்று பரவலாக உள்ளன. உரையாடல் வழியாக இவை பற்றிய கருத்து ஒற்றுமையை உருவாக்கி, ஒற்றுமைக்கான துணிச்சலான முயற்சிகளில் இறங்குவதுடன் அவற்றை மேற்கொள்ள ஒப்புரவுக்கான செயல்பாடுகளையும் முன்னெடுக்கவும் வேண்டும் (முஅ 5i).
4. இன்றைய
உலகில் பல்வேறு சமூகங்களுக்கு இடையில் வணிகத்தை மட்டுமல்ல; கொடிய ஆயுதங்களைக்கூடக் கையாளும் அளவிற்கு மோதல்களும் போட்டிகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு வன்முறை இல்லாத தீர்வு காண்பது எவ்வாறு என்பது பற்றி அதிகம் சிந்திப்பதும், உரிய பயிற்சிகள் கொடுப்பதும் அவசியம். பல்வேறு சமயங்களுடன் உரையாடி, ஒத்துழைத்து இத்துறையில் கிறித்தவர்கள் பெரும் பங்களிப்பு செய்யமுடியும் (முஅ 5k).