news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.06.2025)

 இதயம் மட்டுமல்லாது உலகம், சமூகம், திரு அவை என எல்லா இடங்களிலும் கடவுளின் வார்த்தை பலனளிக்கிறது.”

- மே 21, முதல் புதன் மறைக்கல்வி உரை

மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும்.”

- மே 21, காசா மக்களுக்காக விண்ணப்பித்த திருத்தந்தை

அனைத்து மக்களிடையே நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாக இருக்கவேண்டும்.”

- மே 22, திருப்பீட மறைப்பணிச் சங்கத்தின் பன்னாட்டு உறுப்பினர்கள் சந்திப்பு

நம்பிக்கையும் செபமும் நாம் உண்ணும் உணவுக்குச் சுவையைத் தரும் உப்பு போன்றது.”

- மே 24, வத்திக்கான், உரோமன் கூரியா பணியாளர்கள் சந்திப்பு

இறைத்தந்தையால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் நாம் அக்கறை கொண்டு வாழ வேண்டும்.”

- மே 24, ‘வலைதளத்தின் முதல் குறுஞ்செய்தி

கடவுளின் அன்பை எல்லா இடங்களிலும் கொண்டு செல்வதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.”

- மே 25, பாஸ்கா கால மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.06.2025)

அமைதி என்பது போர் அற்ற நிலை என்பதல்ல; மாறாக, மனித மனங்களின் தாழ்ச்சியிலும், உரையாடலில் கவனமும், தற்பெருமை மற்றும் பழிவாங்கலை மறுத்தலும் ஆகும்.”

- மே 16, திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு

ஆயுதங்கள் அமைதியாகட்டும்என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் திரு அவை ஒருபோதும் சோர்வடையாது.”

- மே 14, கீழை வழிபாட்டுமுறை திரு அவையினரோடு சந்திப்பு

நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்கின்றோமோ, அவ்வளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

உரையாடல் செய்பவர்களாக, உறவின் பாலங்களைக் கட்டியெழுப்புபவர்களாக நாம் வாழ வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

ஒற்றுமையான திரு அவை, ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும், நல்லிணக்கம் அடையும் உலகிற்கான புளிக்காரமாகவும் இருக்கும்.”

- மே 18, திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்புத் திருப்பலி

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தையின் திருவாக்கு - திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (25.05.2025)

கடவுள் நம்மை அன்பு செய்கின்றார், நம் அனைவரையும் அன்பு செய்கின்றார். தீமை வெற்றிபெறாது! நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்.”

- மே 8, திருத்தந்தையின் முதல் ஊர்பி எத் ஓர்பி  (Urbi et Orbi) செய்தி

கடவுள் அன்பின் மிக அழகான வெளிப்பாடுகளில் ஒன்று அன்னையர்; அவர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மீது அளவற்ற அன்பினைப் பொழிபவர்கள்.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உறவின் பாலங்களைக் கட்டுவது என்பது தீர்ப்பளிக்காமல் இருப்பது, செவிசாய்ப்பது மற்றும் கதவுகளை மூடாமல் இருப்பது.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உண்மையான, நீதியான, நீடித்த அமைதி விரைவில் தேவை. போர் இனி ஒருபோதும் வேண்டாம்.”

- மே 11, ஞாயிறு மூவேளைச் செபவுரை

அளப்பரிய ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை

மனிதகுல நன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும்.”

- மே 12, உலகச் சமூகத் தொடர்புத் துறையினருக்கு ஆற்றிய உரை

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (04-05-2025)

அன்பு என்பது எப்போதும் ஓர் அர்ப்பணிப்பு, அன்புடன் மற்றவரை நாம் சந்திக்கச் செல்லும்போது ஏதாவது ஒன்றினைக் கண்டிப்பாக நாம் இழக்க வேண்டியிருக்கும்.”

- ஏப்ரல் 16, புதன் மறைக்கல்வி உரை

இயேசுவின் உயிர்ப்பு என்னும் ஒளி நிறைந்த தளிர் நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனைக் கவனமாகப் பாதுகாத்து வளரச்செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா  திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

இந்த உலகம் வன்முறை மற்றும் தீமைகளால் மிகக்கொடியதாக மாறினாலும், கடவுள் நமது வாழ்க்கைப் பாதையில் நம்மோடு உடன் பயணிக்கின்றார் என்னும் மகிழ்வின் நற்செய்தியை எடுத்துரைப்பதே இயேசுவின் உயிர்ப்பு.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

தீமை என்பது நமது வாழ்விலிருந்து மறைந்து விடவில்லை, அது நம் வாழ்வின் இறுதிவரை இருக்கும். ஆனால், கடவுளின் அருளை வரவேற்று ஏற்பவர்களின் வாழ்வில் அது ஒருபோதும் அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தாது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி

உயிர்ப்பு என்பது வாழ்க்கையின் விழா. கடவுள் நம்மை வாழ்வதற்காகப் படைத்தார், மனிதகுலம் மீண்டும் உயர வேண்டும் என்று விரும்புகிறார். அவரது பார்வையில் ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.04.2025)

ஒன்றாகத் துன்பத்தை எதிர்கொள்வது நம்மை மனிதர்களாக ஆக்குகிறது; வலியைப் பகிர்ந்துகொள்வது புனித வாழ்வுப் பயணத்தின் ஒரு முக்கியமான படி.”

- ஏப்ரல் 6, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் அதிகமாகும்போது, கடவுளின் அருளும் அன்பும் நம்மை இன்னும் நெருக்கமாகப் பிடித்து வாழ்வில் உயர்த்துகின்றன.”

- ஏப்ரல் 6, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

இயேசு நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் பார்க்கின்றார். நாம் இருப்பது போலவே நம்மை அன்பு செய்கின்றார்.”

- ஏப்ரல் 9, புதன் மறைக்கல்வி உரை

ஆறுதல் மற்றும் மீட்பின் தோற்றுவாயாக விளங்கும் திருச்சிலுவையில், ஆண்டவராகிய இயேசுவைத் தியானித்து, இந்தச் சோதனைக் காலத்தை வெல்வோம்.”

- ஏப்ரல் 9, திருப்பயணிகளான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய செய்தி

வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற, மாட்சிமைக்கு வழிவகுக்கின்ற, அன்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட, ஏமாறாத நம்பிக்கையின் அறிவிப்பாளர்களாக இளையோர் இருக்க வேண்டும்.”

- ஏப்ரல் 12, UNIV பன்னாட்டு இளையோர் மாநாட்டுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.04.2025)

கிறித்தவ மகிழ்ச்சி என்பது ஒருபோதும் ஒருசிலருக்கு மட்டும் உரியது அல்ல; ஆனால், அது எப்போதும் எல்லாருக்கும் உரியது.”

- ஏப்ரல் 01, இத்தாலியத் திரு அவைக்கு அனுப்பியச் செய்தி

தொலைந்து போனவர்களைத் தேடிக் கண்டடையாமல் கடவுள் ஒருபோதும் கடந்துபோக மாட்டார்.”

- ஏப்ரல் 02, புதன் மறைக்கல்வி உரை

உயிர்த்தெழுந்த இயேசு ஆண்டவரின் கொடையான தூய ஆவியார் ஒன்றிப்பு, நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உறவின் தோற்று வாயாக இருக்கிறார்.”

- ஏப்ரல் 03, யூபிலி பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியச் செய்தி

புனிதக் கதவு வழியாக உள்நுழைவதும், திருத்தூதர்கள் மற்றும் மறைச்சாட்சிகளின் கல்லறைகளைத் தரிசிப்பதும் நாம் நமது வாழ்நாளில் எப்போதும் திருப்பயணிகளாக நடைபோடுகின்றோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.”

- ஏப்ரல் 04, ஸ்லோவாக்கியத் திருப்பயணிகளுக்கு அனுப்பியச் செய்தி

நலவாழ்வுப் பணியாளர்களின் பணி எளிதானது அல்ல; அவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.”

- ஏப்ரல் 06, மூவேளைச் செப உரை

எதிர்காலத்திற்கான நம்பிக்கையற்றவர்களாக நாம் இருக்கும் தருணத்தில் கூட, கடவுள் நம்மைத் தனியாக விடுவதில்லை; தோல்வியடையும் சூழலிலும் கடவுளின் உடனிருப்பை நாம் அனுபவிக்க முடியும்.”

- ஏப்ரல் 06, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை