news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.04.2025)

இறையழைத்தல் என்பது நம் இதயத்தில் விதைக்கும் ஒரு விலைமதிப்பற்ற கொடை. நன்மையை இழந்து அன்பு மற்றும் சேவையின் பயணத்தைத் தொடங்குவதற்கான ஓர் அழைப்பு.”

- மார்ச் 19, 62-வது உலக இறையழைத்தல் நாளுக்கான செய்தி

ஒவ்வோர் இறையழைப்பும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பொது நன்மைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது.”

- மார்ச் 19, 62-வது உலக இறையழைத்தல் நாளுக்கான செய்தி

பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அன்பு ஒன்று மட்டுமே நம்மை ஒன்றாக இணைக்கின்றது; ஒன்றித்து வளரச் செய்கின்றது.”

- மார்ச் 22, யூபிலி ஆண்டை முன்னிட்டு திருப்பயணிகளுக்கான உரை

நமது வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் குறிப்பாக, கடினமான மற்றும் துயரமான நேரங்களிலும் அதனைக் கையாள்வதற்குப் பொறுமை மிக அவசியமானது.”

- மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை மூவேளைச் செபவுரை

எங்கெல்லாம் ஒரு குழந்தை அல்லது வலிமையற்ற ஒருவர் பாதுகாப்பை உணர நாம் உதவுகிறோமோ, அப்போதெல்லாம் நாம் இறைவனுக்குப் பணியாற்றி அவரைப் பெருமைப்படுத்துகின்றோம்.”

- மார்ச் 25, திருப்பீட அவைக்கு அனுப்பிய செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (30.03.2025)

செபத்தில் மூழ்கி, இறை ஒளியால் நிறைந்து, உருமாற்றம் அடைந்த இயேசு, தமது செயல்களின் வழியாக நமக்குத் தமது எல்லையற்ற அன்பின் ஒளியைக் காட்டுகின்றார்.” 

மார்ச் 16, மூவேளைச் செபவுரை

இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். துன்ப நேரங்களில் தமது அன்பின் ஒளிக்கதிரைப் பிரதிபலிக்கும் மக்களை நம் அருகில் வைப்பார்.”

- மார்ச் 16, மூவேளைச் செபவுரை

போர் என்பது சமுதாயங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்து வருவதால் உடன்பிறந்த உணர்வு, நீதி, எதிர்நோக்கு மற்றும் அமைதிக்கான ஆவல் நம்மில் எழுப்பப்பட வேண்டும்.”

- மார்ச் 18,  Luciano Fontana என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தி

போர் என்பது முட்டாள்தனமானது. எது வாழ்வைக் கொணரும், எது வாழ்வைக் கொல்லும்? என்ற உண்மையை நாம் அறிந்து, தனியாகவோ அல்லது சமூகமாகவோ எடுக்கும் பாதை குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும்.”

- மார்ச் 18, Luciano Fontana என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தி

வார்த்தைகள் என்பவை மனித குலத்தின் சூழலை வடிவமைப்பவை. அவை இணைக்கவும் பிரிக்கவும் ஆற்றல் பெற்றவை; எனவே, முதலில் வார்த்தைகளிலிருந்தும் நம் மனங்களிலிருந்தும், பின்னர் உலகிலிருந்தும் ஆயுதங்களைத் தவிர்த்திட முயற்சிக்க வேண்டும்.”

- மார்ச் 18, Luciano Fontana என்பவருக்கு அனுப்பியுள்ள செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (23.03.2025)

“சாம்பல் நாம் என்னவாக இருக்கிறோம் என்ற நினைவை நம்மில் புதுப்பிக்கிறது, அதேவேளையில், நாம் என்னவாக இருப்போம் என்ற நம்பிக்கையையும் நம்மில் உருவாக்குகிறது.”

- மார்ச் 05, திருநீற்றுப் புதன் மறையுரை

கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, நாம் மனத்தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் தவக்காலத்தின் வழியாகப் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.”

- மார்ச் 05, திருநீற்றுப் புதன் மறையுரை

நாம் வாழ்கின்ற சமூகம், சந்தைக் கருத்தியல்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது. தனிநபர் இலாபம் மற்றும் பலன்களை எதிர்பார்த்துப் பணியாற்றும் இச்சமூகத்தில் தன்னார்வலர்களின் பணியானது எதிர்நோக்கின் அடையாளமாகவும், இறைவாக்காகவும் இருக்கின்றது.”

- மார்ச் 09, மூவேளைச் செப உரை

சோதனைக்கு உட்படுத்தப்படும்போது நாம் தனியாக இல்லை; பாலைவனத்தின் வழியாக, வாழ்க்கைக்கான பாதையைக் காட்டும் இயேசு நம்முடன் இருக்கின்றார்.”

- மார்ச் 09, யூபிலி திருப்பலி மறையுரை

இறைமகன் இயேசு பாலைவனத்திற்குச் செல்வது அவர் எத்துணை துணிச்சல் நிறைந்தவர் என்பதை நிரூபிப்பதற்காக அல்ல; மாறாக, அவர் எவ்வளவு வலிமையானவர் என்பதை நிரூபிப்பதற்காக.”

- மார்ச் 09, யூபிலி திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (16.03.2025)

காயமடைந்த குடும்பத்தின் வலியைக் குணப்படுத்த சிறந்த மருந்து மன்னிப்பு. மன்னிப்பு என்பது மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும்.”

- மார்ச் 4, திருத்தந்தையின் மார்ச் மாத செபக் கருத்து

இயற்கையை நமது பேராசை சுரண்டலில் இருந்து விடுவிப்பதற்காக, நாம் அனைவரும் நமது நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மாற்றுவோம்.”

- மார்ச் 5, பிரேசில் நாட்டு மக்களுக்கு அனுப்பிய கடிதம்

புலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்... இவர்கள் கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையின் வழியாக எதிர்நோக்கின் சான்றுகளாகத் திகழ்கின்றார்கள்.”

- மார்ச் 3, திருத்தந்தையின் குறுஞ்செய்தி

வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நமது உறுதிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அச்சங்களில் நிலைத்து நிற்காமல் இருக்கவும், அறிவியலின் குரலுக்குச் செவிசாய்ப்பது அவசியமாகிறது.”

- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி

நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு. எதிர்நோக்கு ஒருபோதும் நமக்கு ஏமாற்றத்தைத் தருவதற்காகக் காத்திருப்பதில்லை.”

- மார்ச் 3, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவைக்கு வழங்கிய செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (09.03.2025)

ஞானியரின் பயணம் நம்பிக்கை, துணிவு மற்றும் எதிர்நோக்கை அடையாளப்படுத்துகிறது.”

- பிப்ரவரி 19, புதன் பொது மறைக்கல்வி உரை

எதையும் கேட்காமல் கொடுப்பது நம்மை ஒன்றிணைக்கின்றது; மக்களின் நன்மையைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாது ஒன்றித்து இருப்பதை வெளிப்படுத்துகிறது.”

- பிப்ரவரி 23, திருத்தொண்டர்களுக்கான யூபிலி மறையுரை

மன்னிப்பது என்பது, நம்மிலும் நம் சமூகங்களிலும் ஒரு வரவேற்கத்தக்க, பாதுகாப்பான எதிர்காலத்தைத் தயார் செய்வதாகும்.”

- பிப்ரவரி 23, திருத்தொண்டர்களுக்கான யூபிலி...

அன்பின் அடையாளமாக இருப்பது என்பது அனைவரையும் அரவணைக்கும் அன்பு கொண்டவர்களாக மாறுவது; தீமையை நன்மையாக மாற்றுவது; உடன்பிறந்த உணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குவதாகும்.”

- பிப்ரவரி 23, ஞாயிறு மூவேளைச் செபவுரை

நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும் கடவுள் விடுக்கும் அழைப்புக்குச் செவிமடுத்து நம் வாழ்வை மாற்றியமைக்கவும் நல்வாய்ப்பைத் தருகிறது இந்தத் தவக்காலம்.”

- பிப்ரவரி 25, திருத்தந்தையின் தவக்காலச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (02.03.2025)

நிலம், நீர் மற்றும் உணவு ஆகியவை வெறும் பொருள்கள் அல்ல; மாறாக, அவை வாழ்க்கையின் அடிப்படை மற்றும் இயற்கையோடு உள்ள மக்களின் பிணைப்பு.”

- பிப்ரவரி 10, பூர்விக மக்களின் உரிமைக்கான செய்தி

 “போர்களால் குழந்தைகள் அழிந்துவரும் வேளையில், இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது. மேலும், நீதியான மற்றும் உடன்பிறந்த உறவுக்கான உலகத்தை ஊக்குவிக்கக்கூடிய ஓர் உலகளாவிய மொழியாக இசையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” 

- பிப்ரவரி 11, இசை விழாவிற்கான  செய்தி

இயேசுவின் பிறப்பிற்கு முதல் சாட்சிகளாக இருப்பவர்கள் இடையர்கள். இவர்கள் விலங்குகளுடனேயே பயணித்து அதனுடனேயே இருப்பதால் துர்நாற்றம் கொண்டவர்கள். சமூகத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களாக இருந்தாலும், அவர்களே எதிர்நோக்கின் முன்மாதிரிகள்.” 

- பிப்ரவரி 12, யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மறைக்கல்வி உரை

கிறிஸ்துவின் உடலில் சகோதர-சகோதரிகளாக ஒன்றிணைந்துள்ள அனைவரின் குடும்பமும், அனைவருக்கும் சமமாகப் பரிமாறப்படும் ஆன்மிக உணவான நற்கருணையால் உறுதிபெற வேண்டும். இது நம்மைக் கடவுளோடும், ஒருவர் மற்றொருவருடனும் ஒன்றிணைக்க வழிவகுக்கிறது.”

- பிப்ரவரி 14, திருப்பயணிகள் சந்திப்புச் செய்தி

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்து, அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.”              

- பிப்ரவரி 16, மூவேளைச் செபவுரை