news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.12.2024)

சமூகத்திலும் திரு அவையிலும் பெண்களின் குரல்கள் அதிகமதிகமாகச் செவிமடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.”

- நவம்பர் 15, திருப்பீடக் கருத்தரங்கின் உரை

குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்; வறுமை, கல்வியறிவு, போதைப்பொருள் ஆதிக்கம் போன்ற பிரச்சினைகளால் சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் எதிர்காலம் பற்றிக் கனவு காண முடியாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.”

நவம்பர் 16, இத்தாலிய தேசிய இளையோர் உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அறிவை மேம்படுத்துவதிலும் நூலகர்களின் முக்கியப் பங்கு உள்ளது. நூலகங்கள் அமைதியின் இடங்களாகவும், சந்திப்பின் சோலைகளாகவும், சுதந்திரமான கலந்துரையாடல்களாகவும் இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.”

- நவம்பர் 16, திருப்பீட நூலகத்தாருக்கான செய்தி

இன்னல்கள், நெருக்கடிகள், தோல்விகள் போன்றவற்றில் கூட, இயேசுவின் நற்செய்தியானது பயமின்றி, மகிழ்ச்சியில் நிலைத்திருப்போம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.” 

நவம்பர் 17, ஞாயிறு மூவேளைச் செப உரை

தூய ஆவியார் செபத்தின் வழியாக நம்முள் நுழைந்து நமது வாழ்க்கையை மாற்றுகின்றார். நாம் நமது இதயத்தைத் திறக்க வேண்டும்; தூய ஆவியாருக்கு இதயத்தில் இடமளிக்க வேண்டும்.”

- நவம்பர் 18, ‘எக்ஸ்தளப்பதிவு  

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (24.11.2024)

திருப்பலியில் நமது வாழ்வுக்குள் வரும் இயேசு, தம்மை நற்கருணைப் பேழையில் வெளிப்படுத்தி, அவர் குரலுக்கு அமைதியில் நம்மைச் செவிமடுக்கச் செய்கிறார். அவ்வாறே, நமக்குள் வரும் கிறிஸ்துவை இறைமக்களிடம் எடுத்துச் செல்வதையே, நற்கருணை பவனியும் குறித்துக்காட்டுகின்றது.” 

- நவ. 07, குருமட மாணவர்களுக்கு ஆற்றிய உரை

மனித மாண்பை மேம்படுத்துதல், உண்மையைத் தேடுதல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட செயல்களுக்கான விருப்பத்தின் கருவியாக உலகமயமாக்கல் விளங்குகின்றது. கல்வியின் தரத்தை நாம் மாற்றாவிட்டால் இவ்வுலகை நம்மால் மாற்ற முடியாது.”

- நவ. 09, கற்றல் மற்றும் கல்விக்கான கருத்தரங்குச் செய்தி

கடவுள் பாவிகளின் செபத்திற்கு இறுதிவரை செவிசாய்க்கின்றார். கடவுளுடைய இதயத்திற்கு நாம் திரும்புவதன் வழியாக அறிவிலிகளின் கண்களுக்கு இறந்தவர்களைப்போல் தோன்றினாலும் மீட்பின் நம்பிக்கையை நாம் காணலாம்.”

- நவ. 09, குறுஞ்செய்தி

தேவையில் இருக்கும் மக்களை அதிகார நிலையில் இருந்து பார்த்து அவர்களை அவமானப்படுத்தாமல், நம்பிக்கையையும் உதவியையும் அளிக்க இயேசுவின் போதனைகள் நம்மை அழைக்கின்றன.”

- நவ. 10, திருப்பயணிகளுக்கான மறையுரை

செய்யும் பணிகளில் நுட்பமான உணர்வுடன் செயல்பட வேண்டும்; எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். நிர்வாகத்துடன் இணைந்து நன்றாகப் பணியாற்றும்போது வாழ்வில் நாம் வளர அவை உதவுகின்றன.”

- நவ. 11, ஆலயப் பணியாளர்களுக்கு வழங்கிய செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (17.11.2024)

புலம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்பட வேண்டும்; அவர்களுடன் நாம் செல்ல வேண்டும்; அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும்; ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

- அக். 28, மறைப்பணியாளர் சந்திப்புச் செய்தி 

திருமுழுக்கு என்பது பிறப்பின் அருளடையாளம் என்றால், உறுதிப்பூசுதல் என்பது வளர்ச்சியின் அருளடையாளம்; சான்று வாழ்வின் அருளடையாளம்; முதிர்ச்சியான கிறித்தவத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள ஒன்று.”

- அக். 30, திருப்பயணிகளுக்கான மறைக்கல்வி உரை

தகவல் தொடர்பாளர் பணி என்பது ஓர் அழைப்பு, மறைப்பணி, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாகக் கிடைக்கும் வழிமுறைகளை அறிவாற்றலுடன் பயன்படுத்துவது எல்லாவற்றிற்கும் மேலாக இதயத்துடன் தொடர்பு கொள்வது.”

- அக். 31, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் சந்திப்புச் செய்தி

இயேசுவின் மலைப்பொழிவில் வரும் நற்பேறுகள் ஒவ்வொரு கிறித்தவரின் அடையாள அட்டை, புனிதத்துவத்திற்கான பாதை

- நவ. 01, மூவேளைச் செபவுரை

இறந்தவர்கள் இறைவனில் வாழ்கிறார்கள், பூமியில் புதைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் ஒரு நாள் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்குகொள்ளும்.” 

- நவ. 02, லௌரென்தினோ கல்லறைத் திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (10.11.2024)

குடும்பத்தில் எப்போதும் உரையாடல்கள் இருக்க வேண்டும்; மோதல்கள் இருந்தாலும் தங்களுக்குள் உரையாடல் மேற்கொள்பவர்களாகக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இருக்கவேண்டும். உரையாடல் இல்லாத குடும்பம் இறந்த குடும்பம் போன்றது.”

- அக்டோபர் 25, 16-வது ஆயர்கள் மாமன்றத்தின்போது குடும்பத்தில் சினேடாலிட்டி காணொளியில் எடுத்துரைத்தது

ஏழைகள் எண்களாகவோ, பிரச்சினைகளாகவோ, நிராகரிக்கப்படு பவர்களாகவோ கருதப்படக்கூடாது; என்றும் நமது உடலாக இருக்கும் உடன் சகோதரர்கள் போன்று கருதப்பட வேண்டும்.”

- அக்டோபர் 25, உரோமை தூய இலாத்தரன் பெருங்கோவிலில் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான செய்தி

பார்வையற்றவரைக் கண்ட இயேசு உடலாலும் உள்ளத்தாலும் அவரின் குரலுக்குச் செவிமடுத்தார். நாம் தெருவில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களை விலக்குகின்றோமா? நிராகரிக்கின்றோமா? அவர்களது குரலுக்குச் செவிசாய்க்கின்றோமா? என்று சிந்திப்போம்.”

- அக்டோபர் 27, வத்திக்கான் ஞாயிறு மூவேளைச் செப உரை.

வாழ்வது என்பது எப்போதும் தன்னை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளுதல், புறப்படுதல், கனவு காணுதல், திட்டமிடுதல், எதிர்காலத்திற்காகத் தன் இதயத்தைத் திறந்திருத்தல்.”

- அக்டோபர் 27, 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவு திருப்பலி மறையுரை

 “புலம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்பட வேண்டும், அவர்களுடன் நாம் செல்ல வேண்டும், அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும், ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

- அக்டோபர் 28, புனித சார்லஸ் மறைப்பணியாளர்கள் சபை உறுப்பினர்களுடன் சந்திப்புச் செய்தி


news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (03.11.2024)

“இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே, உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.”

- அக்டோபர் 16, புதன்கிழமை மறைக்கல்வி உரை

“ஏழைகளைத் தயவு செய்து மறந்து விடாதீர்கள்,  நீர், உணவு, வேலை, மருந்து, நிலம், வீடு என ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் உலகத்தைக் கனவு காண்போம்.”

- அக்டோபர் 17, உலக வறுமை ஒழிப்பு நாள் குறுஞ்செய்தி

“அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குதல் என்பது கட்டமைப்புகளை மாற்றியமைப்பது அல்ல; மாறாக, மாற்றுத் திறனாளிகள் பற்றிய நமது மனப்போக்குகளை மாற்றுவதன் வழியாகச் சமூக வாழ்வின் முழு பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்றுதல்.”

- அக்டோபர் 17, G7 இத்தாலி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கான சந்திப்புச் செய்தி 

 “அனுதின செபம் மற்றும் நற்கருணை நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றுகின்றன; தந்தை கடவுளில் நிலையான முடிவற்ற வாழ்வை நோக்கி நம்மை வழிநடத்துகின்றது.”

- அக்டோபர் 19, ‘செப ஆண்டு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தி 

“நாம் விலகினாலும் நம்மை விட்டு விலகிச் செல்லாத, நம்மை ஒருபோதும் கைவிடாத இயேசுவே நமது மிகப்பெரிய உண்மையான உற்ற நண்பர்.”

- அக்டோபர் 21, திருத்தந்தையின் குறுஞ்செய்தி


news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.10.2024)

“வாழ்வின் கடைசி நிமிடம் வரை ஒரு நபர் மனமாற்றம் பெறமுடியும். எனவே, மரணதண்டனை என்பது மனிதனின் மீற முடியாத தன்மையையும், மாண்பையும் பாதிப்படையச் செய்யும். அதனால் அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”  

- அக்டோபர் 10, மரணதண்டனை குறித்த குறுஞ்செய்தி

“போர்களை விரும்புகின்ற, அவற்றை வழிநடத்துகின்ற, தேவையில்லாமல் நீடிக்கின்ற, அதில் இலாபத்தைச் சம்பாதிக்கின்ற மனிதர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்.”

- அக்டோபர் 12, குறுஞ்செய்தி

“உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே.”

- அக்டோபர் 13, ஞாயிறு மூவேளைச் செப உரை

“நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு அருளடையாளத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தி, நாம் வாழ்கின்ற இந்தப் பொதுவான உலகிற்கான நன்மைக்காக உழைக்கும்போது கிறிஸ்துவின் மறைப்பணியினை ஆற்றும் அவரின் சீடர்களாக மாறுகின்றோம்.”

- அக்டோபர் 11, கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிப்பாட்டில் மறையுரை

“திரு அவையில் பணியாற்றும் கர்தினால்கள் தங்களது பார்வையை உயர்த்துதல், நீடித்தல், இதயத்தை விரிவுபடுத்துதல் மிக அவசியம். இதன் வழியாக உலகளவில் அனைவரையும் தீவிரமாக அன்பு செய்ய முடியும்.”

- அக்டோபர் 12, புதிய கர்தினால்களை உரோமைக்கு அழைக்கும் கடிதம்