news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.01.2025)

செபம் நமது இதயத்தைத் தூய்மையாக்குகின்றது; அதன் பார்வையை ஒளியூட்டுகின்றது, எதார்த்தத்தை அதன் ஒரு நிலையிலிருந்து மாற்றி, மறுநிலையிலிருந்து பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.”

- டிசம்பர் 16, செப ஆண்டுஎக்ஸ்தளப்பதிவு

தங்களது குற்றங்களைக் கண்டறிந்து களைய முற்படுபவர்கள், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையிலிருந்து விடுபட்டு, இதயங்களின் ஒற்றுமையை உருவாக்கும் ஒரே கடவுளின் செயலுக்கு இடமளிக்கிறார்கள்.”

- டிசம்பர் 21, உரோம் கியூரியா சந்திப்புச் செய்தி

இம்மண்ணில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் ஒரு தவறு அல்ல; மாறாக, வாழ்வின் கொடை; ஆகவே, எலிசபெத்தைப் போல வயிற்றில் குழந்தையைச் சுமந்து ஆவலுடன் காத்திருக்கும் கருவுற்ற தாய்மார்களின் அழகை வியந்து போற்றுவோம்; இறைவனுக்கு நன்றி கூறுவோம்.”

- டிசம்பர் 22, வத்திக்கான் மூவேளைச் செப உரை

யூபிலி என்பது தனி மனிதர்களாகவும் சமூகமாகவும் நாம் நமது வாழ்க்கையின் பொன்னான நேரங்களைக் கணக்கிடுவதற்கான காலம்; இது தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுத்து வாழ்வதற்கான அழைப்பின் காலம்.”

- டிசம்பர் 23, ‘எக்ஸ்தளப்பதிவு

இயேசுதாம் அமைதியின் கதவு. பலமுறை நாம் அந்தக் கதவின் நுழைவாயிலில்தான் நிற்கிறோம். ஆனால், அதைக் கடக்க நமக்குத் துணிவு இல்லை, ஏனென்றால் அது நம் வாழ்க்கையை ஆன்ம பரிசோதனை செய்துபார்க்க நமக்குச் சவால் விடுகிறது.”

- டிசம்பர் 25, Urbi et Orbi

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.12.2024)

பகைமையின் சுவர்கள் உடைக்கப்பட்டு, ஒரே கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்.” 

- டிசம்பர் 07, புதிய கர்தினால்களுக்கு ஆற்றிய உரை.

இசைக் கச்சேரியில் இடம்பெறும் அமைதியான நேரங்கள், இடைவெளிகள், மாற்று ஒலிகள் ஆகிய அனைத்தும் மிக முக்கியம். தேவையற்றவை என எந்த ஒன்றையும் கடவுள் ஒருபோதும் உருவாக்குவதில்லை, ஒவ்வொருவரும் அவரவர் பகுதியை மற்றவர்களுடன் இணைந்து வெளிப்படுத்தவே இவ்வுலகில் அழைக்கப்படுகின்றார்கள்.”

- டிசம்பர் 07, இன்னிசைக் கச்சேரி கலைஞர்கள் சந்திப்புச் செய்தி

சாதாரண சிறிய புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணான மரியா இறைத்திருவுளத்திற்குஆம்என்று பணிந்ததால் வரலாற்றின் மையத்திற்கு அழைக்கப்படுகின்றார்.”

- டிசம்பர் 08, மூவேளைச் செப உரை

அனைவரையும் அணுகக்கூடியதாக இறையியல் இருக்க வேண்டும். பயணத்தை மீண்டும் துவங்கும் இடமாக, தேடும் இடமாக, கண்டறியும் இடமாக இறையியல் இருக்கவேண்டும்.”

- டிசம்பர் 09, வத்திக்கான் பன்னாட்டு இறையியல் மாநாடு

எல்லா வறுமைக்கும் அடிப்படைக் காரணமாக, தாயாக இருக்கும் போரினால் மிக அடிப்படையான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அப்படி உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் அமைதிக்கான கூக்குரலிற்கு அரசுத்தலைவர்கள் செவிசாய்க்கட்டும்.”                                  

- டிசம்பர் 10, ‘எக்ஸ்தளப்பதிவு செய்தி


news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.12.2024)

இறைவனுக்காக நாம் காத்திருப்பது என்பது நம் நம்பிக்கைப் பயணத்தின் ஒரு முக்கியப் பகுதி. எனவே, ஒவ்வொரு நாளும் நமதாண்டவர் நம்மை வந்து சந்திக்கிறார், இறுதிக் காலத்தில் அவர் மீண்டும் வருவார்.”                        -

நவம்பர் 29, ‘எக்ஸ் தளப்பதிவு

வெறும் வார்த்தைகள் மட்டும் எப்போதும் பயன்படாது; மாறாக, நோய்வாய்ப்பட்ட  ஒருவரது கையைப்பிடித்து ஆறுதல் அளிக்க வேண்டும்; அத்தகைய செயல் நோயாளருக்கு மட்டுமல்ல, நமக்கும் பல நன்மைகளை அளிக்கும்.”

- நவம்பர் 30, வத்திக்கானில் இளைஞர்களுக்கு ஆற்றிய உரை

தலைநிமிர்ந்து நில்லுங்கள், விண்ணகத்தை நோக்கியே எப்போதும் உங்கள் பார்வையைச் செலுத்துங்கள். தேவையற்ற வீண் கவலைகளினால் உங்கள் உள்ளம் மந்தம் ஆகாதவாறு கவனமாகச் செயல்படுங்கள்.”      -

டிசம்பர் 01, மூவேளைச் செப உரை

நவீன அடிமைத்தனமாகிய மனிதவர்த்தகம், கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், மனித உறுப்புகள் வர்த்தகம் ஆகியவை மிகவும் மோசமானது, தவறானது, மனித நேயமற்ற செயல்.”               

- டிசம்பர் 02, ‘எக்ஸ் தளப்பதிவு

கடவுளின் தாயாம் அன்னை மரியா நமக்காகப் பரிந்து பேசுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை; எனவே, எப்போதும் நம் கரம்பிடித்து வழிநடத்த அவரிடம் கேட்பதை நாம் நிறுத்தக்கூடாது.”

- டிசம்பர் 02, அன்னை மரியின் அமல உற்பவப் பெருவிழா தயாரிப்பு உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.12.2024)

நான் உம்மில் நம்பிக்கை கொண்டுள்ளேன்என இயேசுவை நோக்கி நாம் கூறும் வார்த்தைகளே மிகவும் சிறப்பான செபம்; இதற்கு வேறு வார்த்தைகள் தேவையில்லை.”

- நவ. 22, ‘எக்ஸ்தளப்பதிவு செய்தி

இறை ஒளியில் பிறரை அன்பு செய்து, அவர்களுக்கு உதவ நம்மையே நாம் கொடுப்பவர்களாக மாறுவோம்.”

- நவ 24, கிறிஸ்து அரசர் பெருவிழா மறையுரை

நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் அன்பைப் பரப்பலாம்; வேறுபாடுகளை மதித்து, தேவையிலிருப்பவர்களுக்குத் தங்களை அர்ப்பணிக்கலாம். இச்செயலே நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கவனித்துக் கொள்ள புதிய ஆற்றலை அளிக்கிறது.”

- நவ. 25, ஜெயின் சமய உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

கடந்த கால காயங்கள், தவறான எண்ணங்கள் ஒருபோதும் நம்மை நிலையான அமைதிக்கு இட்டுச்செல்லாது; மாறாக மோதல், போர், வன்முறை, பிரிவினைக்கே நம்மை இட்டுச்செல்லும் என்பதை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”

- நவ. 25, இளையோருக்கான செய்தி 

ஆண் என்றும், பெண் என்றும் வேறுபாடு இல்லை எனக் கூறப்படுவதற்கான காரணம் மீட்பின் திட்டத்தில் ஆண்-பெண் பாகுபாடு இன்றி, நாம் அனைவரும் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களாக, வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாக இருக்கின்றோம்.”

- நவ. 25, அகாடமியின் உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.12.2024)

சமூகத்திலும் திரு அவையிலும் பெண்களின் குரல்கள் அதிகமதிகமாகச் செவிமடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.”

- நவம்பர் 15, திருப்பீடக் கருத்தரங்கின் உரை

குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்; வறுமை, கல்வியறிவு, போதைப்பொருள் ஆதிக்கம் போன்ற பிரச்சினைகளால் சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் எதிர்காலம் பற்றிக் கனவு காண முடியாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.”

நவம்பர் 16, இத்தாலிய தேசிய இளையோர் உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அறிவை மேம்படுத்துவதிலும் நூலகர்களின் முக்கியப் பங்கு உள்ளது. நூலகங்கள் அமைதியின் இடங்களாகவும், சந்திப்பின் சோலைகளாகவும், சுதந்திரமான கலந்துரையாடல்களாகவும் இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.”

- நவம்பர் 16, திருப்பீட நூலகத்தாருக்கான செய்தி

இன்னல்கள், நெருக்கடிகள், தோல்விகள் போன்றவற்றில் கூட, இயேசுவின் நற்செய்தியானது பயமின்றி, மகிழ்ச்சியில் நிலைத்திருப்போம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.” 

நவம்பர் 17, ஞாயிறு மூவேளைச் செப உரை

தூய ஆவியார் செபத்தின் வழியாக நம்முள் நுழைந்து நமது வாழ்க்கையை மாற்றுகின்றார். நாம் நமது இதயத்தைத் திறக்க வேண்டும்; தூய ஆவியாருக்கு இதயத்தில் இடமளிக்க வேண்டும்.”

- நவம்பர் 18, ‘எக்ஸ்தளப்பதிவு  

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (24.11.2024)

திருப்பலியில் நமது வாழ்வுக்குள் வரும் இயேசு, தம்மை நற்கருணைப் பேழையில் வெளிப்படுத்தி, அவர் குரலுக்கு அமைதியில் நம்மைச் செவிமடுக்கச் செய்கிறார். அவ்வாறே, நமக்குள் வரும் கிறிஸ்துவை இறைமக்களிடம் எடுத்துச் செல்வதையே, நற்கருணை பவனியும் குறித்துக்காட்டுகின்றது.” 

- நவ. 07, குருமட மாணவர்களுக்கு ஆற்றிய உரை

மனித மாண்பை மேம்படுத்துதல், உண்மையைத் தேடுதல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட செயல்களுக்கான விருப்பத்தின் கருவியாக உலகமயமாக்கல் விளங்குகின்றது. கல்வியின் தரத்தை நாம் மாற்றாவிட்டால் இவ்வுலகை நம்மால் மாற்ற முடியாது.”

- நவ. 09, கற்றல் மற்றும் கல்விக்கான கருத்தரங்குச் செய்தி

கடவுள் பாவிகளின் செபத்திற்கு இறுதிவரை செவிசாய்க்கின்றார். கடவுளுடைய இதயத்திற்கு நாம் திரும்புவதன் வழியாக அறிவிலிகளின் கண்களுக்கு இறந்தவர்களைப்போல் தோன்றினாலும் மீட்பின் நம்பிக்கையை நாம் காணலாம்.”

- நவ. 09, குறுஞ்செய்தி

தேவையில் இருக்கும் மக்களை அதிகார நிலையில் இருந்து பார்த்து அவர்களை அவமானப்படுத்தாமல், நம்பிக்கையையும் உதவியையும் அளிக்க இயேசுவின் போதனைகள் நம்மை அழைக்கின்றன.”

- நவ. 10, திருப்பயணிகளுக்கான மறையுரை

செய்யும் பணிகளில் நுட்பமான உணர்வுடன் செயல்பட வேண்டும்; எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். நிர்வாகத்துடன் இணைந்து நன்றாகப் பணியாற்றும்போது வாழ்வில் நாம் வளர அவை உதவுகின்றன.”

- நவ. 11, ஆலயப் பணியாளர்களுக்கு வழங்கிய செய்தி