2025-ஆம் ஆண்டிற்கான
உலகப் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான மையக் கருத்தாக ‘புலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்’ என்பதைத்
திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
மார்ச்
3, 2025 அன்று அவர் வெளியிட்ட குறுஞ்செய்தியில், அக்டோபர் மாதம் 4, 5 ஆகிய நாள்களில் யூபிலி நாள் என இந்தத் தினம்
சிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். போர்கள், மோதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்காகச் செபிக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
புலம்பெயர்ந்தோர்
தங்கள் வாழ்வில் கடவுளை நம்பி, எதிர்நோக்கின் சான்றுகளாக உள்ளனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.