news
உலக செய்திகள்
காசா மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட அழைப்பு

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் தாக்குதல்களால் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 11,000 பேர் காணாமல் போய் உள்ள நிலையில், எண்ணற்ற குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனக் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஏழைகளின் பக்கம் நின்று,  பிறரன்பு மற்றும் நீதிக் காக உழைத்து வரும் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு, ஒழுக்க ரீதியுடன் கூடிய பன்னாட்டு தலைவர்களின் அவசர நடவடிக்கையைச் சார்ந்தே காசா மக்களின் வருங்காலம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

news
உலக செய்திகள்
இலங்கையில் குழந்தைகளின் நலன் காக்கும் தடைகள் அமல்

வறுமையில் வாடி வயிற்றுப் பசி போக்க குழந்தைகளும் பள்ளி செல்லாமல் பயணம் செய்பவர்களிடம் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் மற்றும் வீட்டு வேலைக்குச் செல்வதும் பெருகிவரும் இக்காலச் சூழலில் இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இவ்வேளைகளில் ஈடுபடுவதும் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

news
உலக செய்திகள்
தமஸ்கஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் மனிதக் குண்டு வெடிப்பு

ஜூன் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரியாவில் உள்ள தமஸ்கஸ் நகரிலுள்ள தூய எலியா கிரேக்க ஆலயத்தில் வழிபாட்டில் கலந்துகொண்ட ஒருவர், மனித வெடிகுண்டுகளால் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 52 பேர் காயமடைந்ததாகவும், இந்தப் பயங்கரவாத செயலைச் சிரியா நாட்டின்  இடைக்கால அதிகாரிகள் பொறுப்பேற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கிறித்தவச் சமூகங்கள் மற்றும் அனைத்து மதச் சமூகங்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் நடவடிக்கைகள் செலுத்தப்பட வேண்டும் என்றும் கிரேக்க வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

news
உலக செய்திகள்
மழைக்காடுகளைப் பாதுகாப்பதில் உலகை வலுப்படுத்துவோம்!

உலக மழைக்காடுகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில் இந்த ஆண்டு மழைக்காடுகளைப் பாதுகாப்பதில் உலகை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலகில் ஆக்ஸிஜன் 20 விழுக்காடும், மருந்துகள் 25 விழுக்காடும் காடுகளிலிருந்து பெறப்படும் நிலையில் காடுகள் எரிந்தும் அழிந்தும் கொண்டிருப்பது மனித வாழ்வாதாரத்திற்குக் கேள்விக்குறியாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

news
உலக செய்திகள்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் திருத்தந்தையின் இரங்கல்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் இலண்டன் புறப்பட்ட ஏர் விமானம் சிறிது நேரத்திலேயே விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்த திருத்தந்தை 14-ஆம் லியோ, பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாகவும், இறந்தவர்களின் ஆன்மாக்களை இறைவனின் இரக்கத்திற்கு ஒப்புக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
உலக அமைதிக்கான திருத்தந்தையின் வேண்டுகோள்!

ஈரான் மற்றும் இஸ்ரயேலில் அண்மையில் நடக்கும் போர் குறித்துப் பேசிய திருத்தந்தை, அணுசக்தி அச்சுறுத்தலிலிருந்து விடுபட்ட ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மரியாதையுள்ள சந்திப்புகள் மற்றும் நேர்மையான உரையாடல்கள் வழியாகத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நீதி, உடன்பிறந்த உணர்வு, பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அமைதிக்கான காரணத்தை ஆதரித்தல், நல்லிணக்கப் பாதைகளைத் தொடங்குதல், அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மாண்பை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவித்தல் போன்றவை அனைத்து நாடுகளின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.