news
உலக செய்திகள்
ஐந்தாவது உலக தாத்தா-பாட்டிகள் தினம்

ஐந்தாவது உலக தாத்தா-பாட்டிகள் தினத்திற்கான தலைப்பாகநம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர் (சீரா 14:2) என்ற வார்த்தையைத் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜூலை 27 -ஆம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள இந்த நாளில், முதியோர் குடும்பங்களில் மற்றும் திரு அவை சமூகங்களிலும் நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்படுவார்கள். 2021 -ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் துவக்கிய தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம், தலைமுறைகள் இடையே இணக்கம் மற்றும் சந்திப்பை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது.

news
உலக செய்திகள்
செயற்கை நுண்ணறிவு முன்வைக்கும் ஆபத்துகள்!

மனித அறிவால் உருவாக்கப்பட்ட நுண்ணறிவு, நல்லவைகள் மற்றும் தீயவைகளுக்கு வழிவகுக்கும் என்பதைத் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். திருப்பீடத்தின் நம்பிக்கை கோட்பாட்டுத்துறையும், கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துறையும் இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிட்ட திருத்தந்தை, “செயற்கை நுண்ணறிவு, ஏழ்மை, பாகுபாடு, சுரண்டல் மற்றும் தவறான செய்திகள் பரப்புதல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது; இயல்பான மனித தலையீடு இல்லாமல், போர் போன்ற நிகழ்வுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெரிய ஒழுக்க ரீதிப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் பாதிக்கப்படுவது,  என்ற கவலையையும் தெரிவிக்கின்றது. மோசமான தனிமைப்படுத்தல், பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் தாக்கம் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதை அவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறதுஎன்று கூறினார்.

news
உலக செய்திகள்
2025-ஆம் ஆண்டு மியான்மரில் அமைதி மலரும் ஆண்டாக இருக்கும்!

ஏறக்குறைய நான்கு ஆண்டுகாலமாக நாட்டில் நடந்து வந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, மியான்மரில் அமைதி மலரும் ஆண்டாக 2025 இருக்கும் என்று மியான்மர் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்லஸ் தெரிவித்துள்ளார். இளைஞர்களை அமைதியின் சிற்பிகள் எனக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களுக்கான வாய்ப்புகளையும் கல்வியையும் வழங்குவது அவசியம் என வலியுறுத்தினார். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டின் ஆன்மாவையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார். நல்லிணக்கம் என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல; அது ஒரு தேர்வாகும், அன்பை வழங்கும் செயலாகும் என்றும் விளக்கிய அவர், உண்மையான அமைதி என்பது போரற்ற சூழல், இது அனைவருக்கும் நீதி, பாதுகாப்பு மற்றும் மாண்பை அளிக்கும் என்பதை எடுத்துரைத்துள்ளார்.

news
உலக செய்திகள்
தென்கிழக்கு நைஜீரியாவில் இரண்டு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டனர்!

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியான அனம்பிரா மாநிலத்தில் உள்ள அமல உற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரி மரியா மற்றும் அருள்சகோதரி கிரேஸ் ஆகியோர் சனவரி 7 அன்று கடத்தப்பட்டதாகFidesசெய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இருவரும் ஓக்போஜியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் ஆயுதமேந்திய நபர்கள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இரண்டு அருள்சகோதரிகளையும் மீட்பதற்காகக் காவல்துறை கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news
உலக செய்திகள்
முதன்முறையாகத் திருப்பீடத் துறையின் தலைவரான அருள்சகோதரி!

திருத்தந்தை பிரான்சிஸ் முதன்முறையாக ஒரு பெண் துறவியைத் திருப்பீடத் துறையின் தலைவராக நியமித்துள்ளார். கொன்சலாத்தா துறவு சபையைச் சேர்ந்த இத்தாலிய அருள்சகோதரி Simona Oramoilla அவர்கள் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புகளுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2011 -ஆம் ஆண்டில் கொன்சலாத்தா துறவு சபையின் தலைவியாகப் பணியாற்றி, 2023 அக்டோபரில் திருப்பீடத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் திரு அவையில் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் துறவி என்ற பெயரைப் பெறுகிறார்.

news
உலக செய்திகள்
புனிதக் கதவு வழியாக ஐந்து இலட்சம் பேர் கடந்து சென்றனர்!

வத்திக்கானில் புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு வழியாக கடந்த இரு வாரங்களில் 5,45,532 பேர் கடந்து சென்றதாக யூபிலி ஆண்டிற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 24-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் புனிதக் கதவைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது திருப்பயணிகள் ஆர்வத்துடன் புனிதக் கதவுக்குள் நுழைந்தனர். அவ்வாறே, ஜனவரி 5 -ஆம் தேதி புனித பவுல் பெருங்கோவிலின் புனித கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உரோம் நகரின் நான்கு பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் வழியாகத் திருப்பயணிகள் சென்று பலனடைந்து வருகின்றனர்.