news
உலக செய்திகள்
போரில் உயிர் இழக்கும் அப்பாவிக் குழந்தைகள்!

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி இன்றுவரை உக்ரைன்மீது இரஷ்யா நடத்திய தாக்குதலால் 27,000-க்கும் மேற்பட்ட அப்பாவிக் குழந்தைகளும், 45,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 31,867 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலைத் தனதுXதளப் பக்கத்தில் வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம், ‘மேலும் இன்னும் எத்தனை இளம் உயிர்கள் சிதைக்கப்பட வேண்டும்? இன்னும் எத்தனை எதிர்காலங்கள் திருடப்பட வேண்டும்?’ என்ற கேள்விகளையும், ‘குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற மற்றும் நீடித்த அமைதி வேண்டும்என்றும் வலியுறுத்தியுள்ளது.

news
உலக செய்திகள்
நெருக்கடியிலும் நம்பிக்கை தளராத பாகிஸ்தான் கிறித்தவர்கள்!

பாகிஸ்தானில் மிகவும் இறுக்கமான, இழிவான காலச்சூழலில் வாழ்ந்து வருகின்ற கிறித்தவர்கள் பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் கேள்விகளுக்கு உள்ளாகும் நிலையில் மக்கள் இடம்பெயர்வது கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மே 31 அன்று இஸ்லாமாபாத் - இராவல் பிண்டி மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பாளர் மற்றும் பாகிஸ்தானிலுள்ள திருத்தந்தையின் மறைபரப்புப் பணிகளுக்கான தேசிய இயக்குநர் அருள்தந்தை ஆசிப் ஜான் கோகர், யூபிலி ஆண்டை முன்னிட்டுப் பேசுகையில், திருத்தந்தை 14-ஆம் லியோ நீதி, அமைதி, உண்மை ஆகிய மூன்று வார்த்தைகளை அழுத்தமாகக் கோடிட்டுக்காட்டும் மறையுரைகளை, பாகிஸ்தானிய நம்பிக்கையாளர்கள் வாழ்வாக்குவார்கள். நம்பிக்கையில் தளரா மனத்துடன் முன்னோக்கி, இணைந்த திரு அவையாக அவர்கள் பயணிக்கிறார்கள் என்றும் பதிவுசெய்துள்ளார்.

news
உலக செய்திகள்
மனித உரிமை மீறல்கள் அவமானத்தின் அடையாளம்

மே 22 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க்கில் நடைபெற்ற ஆயுத மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கருத்தமர்வில் .நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா, “மிகவும் பலவீனமான மனிதர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகள், மனிதாபிமான பணியாளர்கள் உள்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தல், அவசரத் தேவையில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகல் மறுக்கப்படுதல் ஆகியவை மனிதகுலத்திற்கான துயரமாக இருக்கின்றனஎன எடுத்துரைத்தார்.

news
உலக செய்திகள்
உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள்!

மே 16, வெள்ளிக்கிழமை .நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரசு அவர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்புகளின் அறிக்கையில் போர், மோதல்கள், அதிர்ச்சி தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தீவிர வானிலை மாற்றங்கள், கட்டாய இடப்பெயர்வுகள் ஆகியவை உலகளவில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தொடர்ந்து தூண்டி வருகின்றன என்று எடுத்துரைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், 2024-ஆம் ஆண்டில் 53 நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் 29,50,00,000-க்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை அனுபவித்தனர்; இது கடந்த 2023-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 13,70,00,000 மக்கள் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். உலகளாவிய உணவு நெருக்கடி குறித்த அறிக்கையானது, உலகு ஆபத்தான பாதையை நோக்கிச் செல்கின்றது; எனவே, மக்களின் உணவுத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார் அந்தோணியோ குத்தேரசு.

news
உலக செய்திகள்
போர் நிறுத்தம்: பாகிஸ்தான் திரு அவை மகிழ்ச்சி!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நான்கு நாள்களாக இடம்பெற்ற மோதல்கள் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தம் அமலாக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட பாகிஸ்தான் திரு அவை, மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க பேச்சுவார்த்தைகளும் நிலையான அமைதி முயற்சிகளும் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.  மே 11-ஆம் தேதி பாகிஸ்தான் ஹைதராபாத்தின் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில், அணு ஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஒப்புரவு ஏற்பட வேண்டும் எனச் செபங்களை அர்ப்பணித்த பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் சாம்சன் சுக்கார்தின், இடைக்காலப் போர்நிறுத்தம் வழியாக, பெரிய போரிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், போர் என்பது தீர்வாக முடியாது என்பதால் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் அழைப்புவிடுப்பதாக அறிவித்தார். தென் ஆசியப் பகுதியில் அமைதியான வருங்காலம் இடம்பெற வேண்டுமெனில் ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள், ஒருவருக்கொருவர் மதிப்பு, அமைதிக்கான அர்ப்பணம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டியின் பேராயர் ஜோசப் அர்ஷாத்.

news
உலக செய்திகள்
குழந்தைகளின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் காக்கப்பட வேண்டும்!

உலகில் பத்தில் ஒரு சிறார் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நாம் விவாதிக்க வேண்டிய அவசரத் தேவையாக உள்ளதுஎன .நா.வில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா. இன்று உலகில் பல நாடுகளில் சிறுவர் தொழிலாளர் முறை தொடர்வது குறித்தும், சிறார் ஆயுத மோதல்களுக்கெனத் திரட்டப்படுவது குறித்தும் திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொள்வதாகக் கூறிய அவர், சிறார் போர்க்களத்தில் வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்படுவது, கட்டாயத் திருமணங்கள், பாலியல் அத்துமீறல்கள் உள்பட பல்வேறு உரிமை மீறல்களிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அனைத்து நாடுகளும் உழைக்க வேண்டும் எனவும் திருப்பீடம் விண்ணப்பிப்பதாகத் தன் உரையில் வலியுறுத்தியுள்ளார்.