கர்தினால்
ஸ்டீசூஃபன் சோ, ஹாங்காங் மறைமாவட்ட இயேசு சபை அருள்பணியாளர். உணவின் மாண்பை மதிப்பதன் முக்கியத்துவத்தை ஜனவரி 3-இல் சிந்தனை வலைதளத்தில் இவர் பகிர்ந்தார். உணவின் வீணாக்கம் மற்றும் அதன் மேல் நமக்கு உள்ள பொறுப்புகளைப் பற்றிக் கருத்து தெரிவித்த இவர், “நமது கடமை, உணவின் மாண்பை மதிப்பது”
என்று குறிப்பிட்டார். மேலும், உலகில் அனைத்து உயிர்களும் கடவுளின் அன்பாலும் கருணையாலும் படைக்கப்பட்டன என்றும் கூறி, அவற்றின் பாதுகாப்பு மற்றும் கவனிப்பில் கடவுளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். பெரும்பான்மையான விருந்துகளில் உணவுகள் வீணாகும் என்பதைக் கண்டால் உணவின் மாண்பு பாதிக்கின்றது என்பது அர்த்தம். மனிதர்களுக்கான உணவின் அடிப்படையில் நமக்கு ஒரு பொறுப்பும் பண்பும் இருக்க வேண்டும். எதிர்நோக்குடன் வாழும் இந்த யூபிலி ஆண்டில், உணவை வீணாக்காமல், அதை மாண்புடன் மதிக்க வேண்டும் என்று கர்தினால் சோ வலியுறுத்தினார்.