கனடாவின்
மாண்ட்ரீலில் நடைபெற்ற ‘மனித பரிமாணம்’
குறித்த அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், “இரஷ்யப்
படையினரிடம் பிடிபட்ட உக்ரேனிய சிறார்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை விடுவிக்க, அதன் மனிதாபிமான பணிகளைத் தொடர, வத்திக்கான் தனது உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது” என்றார்.
குறிப்பாக,
இரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட 19,000 -க்கும் மேற்பட்ட உக்ரேனிய சிறார்களை விடுவிப்பது மற்றும் கைதிகள் பரிமாற்றம் குறித்து ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திருத்தந்தையிடம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக அவர்களை
விடுவிக்க பல முயற்சிகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது என்று பேராயர் கூறினார்.