news
உலக செய்திகள்
விண்வெளியில் ஆயுதக் குவிப்பு

அக்டோபர் 30 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் கபிரியேல் காசியா, நியூயார்க்கில் விண்வெளிப் பாதுகாப்பு குறித்து இரட்டை அறிக்கைகளை வெளியிட்டார். .நா. பொதுச்சபையின் ஆயுதக் குறைப்பு மற்றும் சிறப்பு அரசியல் பணிகள் குறித்த குழுக்களில் உரையாற்றிய பேராயர் காசியா, “அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் விண்வெளியையும் விட்டு வைக்கவில்லை. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் (ASAT) விண்வெளியில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இவை சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட எரிகணைகள். விண்வெளியின் பரந்த ஆற்றலை அரசுகள் பொதுநன்மைக்காகவும், அமைதிக்காகவும் பயன்படுத்த வேண்டும். ஆனால், அழிவுக்காக விண்வெளியின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றார்கள். விண்வெளியில் அனைத்து வகையான ஆயுதங்களையும் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேசச் சமூகம் ஒருமித்தக் கருத்தை எட்டாதது வருந்தத்தக்கதுஎன்று கூறினார்.

news
உலக செய்திகள்
பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றத்திற்குத் தண்டனை கொடுக்க வேண்டும்!

பத்திரிகையாளர்களுக்கு எதிராகக் குற்றங்கள் இழைப்போர் தண்டனையிலிருந்து தப்பிக்க வழிசெய்வது நிறுத்தப்பட வேண்டும் எனயுனெஸ்கோஅமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு எதிரானக் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இன்னும் பல முயற்சிகளை எடுக்க நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுப்பதாகவும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுத்து தண்டனை வழங்குவது, எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் ஒரு முக்கிய நெம்புகோலாக அமையும் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதுஉண்மையை எடுத்துரைத்ததற்காகவே 2022, 2023 -ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு நான்கு நாள்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் வீதம் கொல்லப்பட்டனர் என்றும், இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படுவது கிடையாது என்றும் தலைமை இயக்குநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
இறைவனில் இணைந்த ஏழைகளின் திருத்தூதர்

குஸ்தாவோ குத்தியரஸ்! (Gustavo Gutiérrez-Merino Díaz OP)

விடுதலை இறையியலின் தந்தை (Father of Liberation Theology) என்று கருதப்படும் டொமினிகன் அருள்பணியாளர் குஸ்தாவோ குத்தியரஸ் (Gustavo Gutiérrez-Merino Díaz OP) அவர்கள் கடந்த அக்டோபர் 22 -ஆம் நாள் தன்னுடைய 96-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் 1928 -ஆம் ஆண்டு பெரு நாட்டில் பிறந்தவர். முதலில் மருத்துவம் படித்த பிறகு தத்துவம், உளவியல், இறையியல் பயின்றார். லிமாவில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்களில் கவனம் செலுத்தினார். இலத்தீன் அமெரிக்க விடுதலை இறையியலின் நிறுவுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஒரு பெருவியன் மெய்யியலாளர் மற்றும் கத்தோலிக்க இறையியலாளர்.

1971-ஆம் ஆண்டு வெளியானவிடுதலை இறையியல் (A Theology of Liberation) எனும் இவரது நூல் விடுதலை இறையியலின் உருவாக்கத்திற்கு அடித்தளமாகக் கருதப்படுகிறது. இவர் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பெரிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வறியவர்களின் தேவைகளை மேம்படுத்துவதில்தான் மீட்பும், விடுதலையும் இணைந்துள்ளது என எடுத்துரைத்தார். ‘ஏழைகளின் திருத்தூதர்எனப் போற்றப்படும் இவர், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கத்தோலிக்கத் திரு அவையில் வறுமைக்குக் காரணம் சமூக மற்றும் பொருளாதார அநீதி என எடுத்துரைத்தார். ‘வறுமை என்பது இறப்பு (Poverty is Death); அது மக்களையும், குடும்பங்களையும் அழிக்கிறது. திரு அவை கடந்த காலங்களைவிட தற்போது தன் மக்களை நன்றாகப் புரிந்துகொள்கிறது எனக் கூறினார். நமது காலத்தின் மிகச் சிறந்த இறையியலாளர்களில் ஒருவரான இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.

news
உலக செய்திகள்
உயிருடன் எரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்
அக்டோபர் 6 அன்று ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மன்னி நகரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கிறிஸ்தவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள். சந்தையில் கூடியிருந்த மக்கள்மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; கடைகளைக் கொள்ளையடித்தனர்; பல கட்டடங்களுக்குத் தீ வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலரை உயிருடன் எரித்தனர். பாதிக்கப்பட்டவர்கள், ‘பயங்கரவாதிகள் எல்லாவற்றையும் எரித்தாலும், அவர்கள் எங்கள் நம்பிக்கையை எரிக்க முடியாது’ என்று கூறினர்.
news
உலக செய்திகள்
விளையாட்டு வாழ்வின் பாடல்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  ‘கொரியர் டெல்லோ ஸ்போர்ட்-ஸ்டேடியோ’வின் 100-வது ஆண்டு நிறைவு விழாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “வெற்றியின் உச்சம், வெற்றிக்கான முயற்சி மற்றும் தோல்வியின் இழப்பு ஆகியவற்றிலிருந்து வீரர்கள் கற்றுக்கொள்வதால், விளையாட்டு வாழ்க்கையில் பாடங்களை வழங்குகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த சலேசிய குருவான அருள்தந்தை லொரென்சோ மாசா அவர்கள் சிறுவர்களுக்காகக் கால்பந்து விளையாட திரு அவையின் கதவுகளைத் திறந்துவிட்டார். இனம், மதம் அல்லது வர்க்கம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விளையாட்டை அணிதிரளச் செய்வதற்கான வழிமுறையாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். மோதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும், விளையாட்டு மக்களை ஒன்றிணைத்து, ஒரே குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கின்றேன்”  என்று கூறினார்.
news
உலக செய்திகள்
திருத்தந்தையுடன் செலன்ஸ்கி
உக்ரைன் நாட்டின் அரசுத் தலைவர் செலன்ஸ்கி அக்டோபர் 11-ஆம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் ஆகியோருடனான சந்திப்பின்போது, இரஷ்யாவுடனான போரில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் போர் நிலைகள் குறித்தும், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், நீடித்த அமைதியைக் கொண்டு வரவேண்டுமென்றும், போரை முடிவுக்குக் கொணரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. திருத்தந்தை பிரான்சிஸ் ‘அமைதி என்பது வலுவற்ற ஒரு மலர்’ என்ற எழுத்துகளும், மலரின் உருவமும் பொறிக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும், இவ்வாண்டிற்கான அமைதி செய்தியையும், திருத்தந்தை எழுதிய சில ஏடுகளையும், உக்ரைன் கிரேக்கக் கத்தோலிக்கர்கள் குறித்த நூல் ஒன்றையும் அரசுத் தலைவருக்குப் பரிசாகத் திருத்தந்தை வழங்கினார்.