news
உலக செய்திகள்
திரு அவையின் தாய்மையை வெளிப்படுத்த மறக்காதீர்கள்!
சிங்கப்பூர் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தாரைச் சந்தித்த திருத்தந்தை, ‘மக்களோடும் கடவுளோடும் ஒன்றுபட்டு, தங்களுக்குள் சகோதரர்களாக, ஆயருடன் ஒன்றிணைந்தவர்களாக வாழ வேண்டும்’ என்று குருக்களிடம் கேட்டுக் கொண்டார். பிறகு பெண்களிடம் பேசிய திருத்தந்தை, தங்கள் அடையாளத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், ‘திரு அவையின் தாய்மையை வெளிப்படுத்த மறக்காதீர்கள்’ என்றும் கூறினார். இறுதியாக ‘புன்னகைத்துக்கொண்டே இருங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
news
உலக செய்திகள்
சிங்கப்பூரில் திருத்தந்தை
தனது 45-வது திருத்தூதுப் பயணமாக, செப்டம்பர் 12 அன்று சிங்கப்பூர் சென்ற  திருத்தந்தை பிரான்சிஸ், ‘சிங்கப்பூர் கீழ்நிலையிலிருந்து வளர்ச்சியின் மேம்பட்ட நிலையை எட்டியுள்ளது, இது தற்செயல் அல்ல; உண்மையில் நன்கு சிந்திக்கக்கூடிய தலைவர்கள், இணக்கமான திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக இது அமைந்துள்ளது. பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு நாடு இது. ஒருவருக்கொருவர் மீதான மரியாதை, ஒத்துழைப்பு, உரையாடல், சட் டத்தின் எல்லைக்குள் ஒருவரின் நம்பிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவை சிங்கப்பூரின் வெற்றி மற்றும் நிலைத்தன்மைக்குக் காரணம். பொறுப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வழியாக, மனிதகுலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு, சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது’ என்று கூறினார்.
news
உலக செய்திகள்
78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை

78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார்   திருத்தந்தை

78,000 மக்கள் அமரக்கூடிய கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. ‘வார்த்தையைக் கேட்பதும், வார்த்தையை வாழ்வதும்என்ற மையக்கருத்தில் மறையுரையாற்றினார். வீணான குழப்பத்தை ஏற்படுத்தும் மனித வார்த்தைகளின் மத்தியில், நமது வாழ்வின் பயணத்திற்கான ஒரே உண்மையான திசைகாட்டியான கடவுளின் வார்த்தை தேவைப்படுகிறது. இவ்வார்த்தை மட்டுமே, காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. முதல் சீடர்கள் இயேசுவைத் தங்கள் படகில் அனுமதித்ததுபோல, நாமும் இயேசுவை நம் வாழ்க்கை என்னும் படகில் தாழ்மையுடன் வரவேற்று, அவருக்கு இடமளித்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, வாழ்வாக்க வேண்டும் என்று நிறைவு செய்தார் திருத்தந்தை.

news
உலக செய்திகள்
78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை

78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார்   திருத்தந்தை

78,000 மக்கள் அமரக்கூடிய கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. ‘வார்த்தையைக் கேட்பதும், வார்த்தையை வாழ்வதும்என்ற மையக்கருத்தில் மறையுரையாற்றினார். வீணான குழப்பத்தை ஏற்படுத்தும் மனித வார்த்தைகளின் மத்தியில், நமது வாழ்வின் பயணத்திற்கான ஒரே உண்மையான திசைகாட்டியான கடவுளின் வார்த்தை தேவைப்படுகிறது. இவ்வார்த்தை மட்டுமே, காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. முதல் சீடர்கள் இயேசுவைத் தங்கள் படகில் அனுமதித்ததுபோல, நாமும் இயேசுவை நம் வாழ்க்கை என்னும் படகில் தாழ்மையுடன் வரவேற்று, அவருக்கு இடமளித்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, வாழ்வாக்க வேண்டும் என்று நிறைவு செய்தார் திருத்தந்தை.

news
உலக செய்திகள்
மசூதிக்குள் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 45-வது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிலுள்ள Istiqlal மசூதிக்குள் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்றார். இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நஸ்ருதின் உமர் திருத்தந்தையை வரவேற்று, மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இந்த மசூதியையும், நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார் திருத்தந்தை.

மசூதியையும், கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப் பாதைநட்புறவின் சுரங்கப் பாதைஎன அழைக்கப்படுகிறது. ‘சமயங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை. ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறதுஎன்றார் திருத்தந்தை. இந்நிகழ்வு சமய நல்லுணர்வுக்கு வித்தாக அமைந்துள்ளது.

news
உலக செய்திகள்
மசூதிக்குள் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 45-வது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிலுள்ள Istiqlal மசூதிக்குள் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்றார். இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நஸ்ருதின் உமர் திருத்தந்தையை வரவேற்று, மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இந்த மசூதியையும், நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார் திருத்தந்தை.

மசூதியையும், கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப் பாதைநட்புறவின் சுரங்கப் பாதைஎன அழைக்கப்படுகிறது. ‘சமயங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை. ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறதுஎன்றார் திருத்தந்தை. இந்நிகழ்வு சமய நல்லுணர்வுக்கு வித்தாக அமைந்துள்ளது.