news
உலக செய்திகள்
78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை

78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார்   திருத்தந்தை

78,000 மக்கள் அமரக்கூடிய கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. ‘வார்த்தையைக் கேட்பதும், வார்த்தையை வாழ்வதும்என்ற மையக்கருத்தில் மறையுரையாற்றினார். வீணான குழப்பத்தை ஏற்படுத்தும் மனித வார்த்தைகளின் மத்தியில், நமது வாழ்வின் பயணத்திற்கான ஒரே உண்மையான திசைகாட்டியான கடவுளின் வார்த்தை தேவைப்படுகிறது. இவ்வார்த்தை மட்டுமே, காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. முதல் சீடர்கள் இயேசுவைத் தங்கள் படகில் அனுமதித்ததுபோல, நாமும் இயேசுவை நம் வாழ்க்கை என்னும் படகில் தாழ்மையுடன் வரவேற்று, அவருக்கு இடமளித்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, வாழ்வாக்க வேண்டும் என்று நிறைவு செய்தார் திருத்தந்தை.

news
உலக செய்திகள்
78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை

78,000 மக்களுடன் திருப்பலி நிறைவேற்றினார்   திருத்தந்தை

78,000 மக்கள் அமரக்கூடிய கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. ‘வார்த்தையைக் கேட்பதும், வார்த்தையை வாழ்வதும்என்ற மையக்கருத்தில் மறையுரையாற்றினார். வீணான குழப்பத்தை ஏற்படுத்தும் மனித வார்த்தைகளின் மத்தியில், நமது வாழ்வின் பயணத்திற்கான ஒரே உண்மையான திசைகாட்டியான கடவுளின் வார்த்தை தேவைப்படுகிறது. இவ்வார்த்தை மட்டுமே, காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. முதல் சீடர்கள் இயேசுவைத் தங்கள் படகில் அனுமதித்ததுபோல, நாமும் இயேசுவை நம் வாழ்க்கை என்னும் படகில் தாழ்மையுடன் வரவேற்று, அவருக்கு இடமளித்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, வாழ்வாக்க வேண்டும் என்று நிறைவு செய்தார் திருத்தந்தை.

news
உலக செய்திகள்
மசூதிக்குள் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 45-வது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிலுள்ள Istiqlal மசூதிக்குள் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்றார். இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நஸ்ருதின் உமர் திருத்தந்தையை வரவேற்று, மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இந்த மசூதியையும், நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார் திருத்தந்தை.

மசூதியையும், கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப் பாதைநட்புறவின் சுரங்கப் பாதைஎன அழைக்கப்படுகிறது. ‘சமயங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை. ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறதுஎன்றார் திருத்தந்தை. இந்நிகழ்வு சமய நல்லுணர்வுக்கு வித்தாக அமைந்துள்ளது.

news
உலக செய்திகள்
மசூதிக்குள் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 45-வது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிலுள்ள Istiqlal மசூதிக்குள் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்றார். இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நஸ்ருதின் உமர் திருத்தந்தையை வரவேற்று, மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இந்த மசூதியையும், நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார் திருத்தந்தை.

மசூதியையும், கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப் பாதைநட்புறவின் சுரங்கப் பாதைஎன அழைக்கப்படுகிறது. ‘சமயங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை. ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறதுஎன்றார் திருத்தந்தை. இந்நிகழ்வு சமய நல்லுணர்வுக்கு வித்தாக அமைந்துள்ளது.

news
உலக செய்திகள்
பத்தாயிரம் இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 9 அன்று பப்புவா நியூ கினி நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட இளையோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், பாபேல் கோபுரத்தின் விவிலியக் கதையை ஒரு பாடமாக அவர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கை மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான இரண்டு வழிகளை வேறுபடுத்தினார்.

ஒன்று, குழப்பத்திற்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கிறது; மற்றொன்று, கடவுளுடனும், நம் சக மனிதர்களுடனும் சந்திப்பதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்று தெளிவுபடுத்தி, நம்பிக்கையின் புன்னகையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தினார்.

news
உலக செய்திகள்
பத்தாயிரம் இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 9 அன்று பப்புவா நியூ கினி நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட இளையோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், பாபேல் கோபுரத்தின் விவிலியக் கதையை ஒரு பாடமாக அவர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கை மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான இரண்டு வழிகளை வேறுபடுத்தினார்.

ஒன்று, குழப்பத்திற்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கிறது; மற்றொன்று, கடவுளுடனும், நம் சக மனிதர்களுடனும் சந்திப்பதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்று தெளிவுபடுத்தி, நம்பிக்கையின் புன்னகையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தினார்.