news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு துறவியர் பேரவையின் ‘மண்ணைக் காக்கும் பேரியக்கம்!’

தமிழ்நாடு துறவியர் பேரவை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராம மக்கள் இணைந்து 02.07.2025 அன்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஆகாச பைரவ பீட குளத்தைத் தூர்வாரி, நீர் வளங்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இப்பணியில் பொதுமக்கள், குழந்தைகள், விவசாய முன்னேற்றச் சங்கத் தலைவர் திரு. துரை மற்றும் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி மரிய பிலோமி மற்றும் துறவியர் பலரும் இணைந்துகொண்டனர். இயற்கை வளங்களைக் காப்பது என்பது மனிதகுலம் அனைத்திற்கும் மாபெரும் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பதைத் தமிழ்நாடு துறவியர் பேரவையின்மண்ணைக் காக்கும் பேரியக்கம்உணர்த்தியுள்ளது.

news
தமிழக செய்திகள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ‘முதல் பசிலிக்கா’

தமிழ்நாட்டில் 11-வது பேராலயமாகவும், இந்தியாவின் 35-வது பேராலயமாகவும், உலகளவில் 1933-க்கும் மேற்பட்ட பேராலயங்களின் வரிசையில் சென்னை புனித தோமையார் மலை - புனித தோமையார் திருத்தலம் அகில இந்தியத் திருத்தலப் பேராலயமாக (Minor Basilica) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தந்தையின் அறிவிப்பினைத் தமிழில், செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள் வாசித்தார்கள்.

03.07.2025 அன்று மாலை 4 மணிக்குத் திருத்தல வளாகத்தில் நடந்த இப்புனித நிகழ்வில் மேன்மை பொருந்திய நமது திருத்தந்தையின் இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தூதர் பேராயர் லியோ போல்தோ ஜிரெல்லி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார்கள். அவரோடு ஐதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணி பூலா, மும்பை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியஸ் மற்றும் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்றனர். விழா நிறைவில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ஆர். இராஜேந்திரன், சா.மு. நாசர், மேனாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.

news
தமிழக செய்திகள்
திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் பாராட்டு!

திருத்தணிக்கு அருகில் உள்ள ஆர்.கே.பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் திருநங்கை ஜென்சி என்பவர். தனது இளங்கலைப் பட்டத்தைத் திருத்தணியில் உள்ள அரசுக் கல்லூரியிலும், தனது முதுகலைப் பட்டத்தை அம்பேத்கர் அரசுக் கல்லூரி வியாசர்பாடியிலும், தொடர்ந்து தனது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை ஆங்கிலத்துறையில் சென்னை, இலயோலா கல்லூரியிலும் முடித்தவர். இன்று அவர் இலயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருடைய இந்தச் செயலுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னுடையXவலைத்தளத்தில், “வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி, உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக் கரை சேரட்டும், தடைகளும் புறக்கணிப்பும் கல்வி என்னும் பேராற்றலால் வெல்லட்டும்என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருச்சி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள்இலயோலா மாற்றங்களுக்கான திறவுகோல்என்று அக்கல்லூரியைப் பாராட்டியுள்ளார்.

news
தமிழக செய்திகள்
நெஞ்சம் நிறைந்த நன்றி

கடந்த ஓர் ஆண்டாகஇறைவேண்டலின் பரிமாணங்கள்என்னும் தலைப்பில் மன்னிப்பு, பரிவு, அர்ப்பணம், கொடுத்தல், நற்பணி, அமைதி, உடல், மனம், சொல் எனப் பல்வேறு கோணங்களில் தொடர் கட்டுரை வழங்கிநம் வாழ்வுவாசகர்கள் பலரின் பாராட்டைப் பெற்ற அருள்முனைவர் குமார் ராஜா அவர்களுக்குநம் வாழ்வுதனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. தந்தை அவர்களின் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுப் புதிய நூலாக வெளிவர உள்ளது. பிரதிகளை விரும்புவோர்நம் வாழ்வுதலைமைச் செயலகத்தைத் தொடர்புகொள்ளவும். தந்தை அவர்களின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறோம்.  

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
சிறாருக்கான நம்பிக்கை வளர் மாநாடு

திண்டுக்கல் மறைமாவட்டத்தில் யூபிலி 2025-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக மாணவர்களுக்கான நம்பிக்கை வளர் மாநாடு ஜூன் மாதம் 7-ஆம் நாள் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்கள், “மாணவர்கள் இந்த யூபிலி ஆண்டில் இறைநம்பிக்கையில் வளர்ந்து நல்ல கிறித்தவ மாணவர்களாக, இயேசுவுக்குச் சான்றுபகர்கின்றவர்களாக வாழவேண்டும்என்று எடுத்துரைத்தார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுவின் பொதுச்செயலர் அருள்பணி. பெனடிக்ட் ஆனலின்சிறார்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற தலைப்பில், “நாம் எல்லாரும் கடவுளின் அன்பான பிள்ளைகள்; நம்மோடு வாழும் எல்லா உயிர்களும் நம் சொந்தங்கள்; நாம் பூமியைப் பண்படுத்தி, பாதுகாத்து அதனுடன் பயணிக்கப் பிறந்தவர்கள்என்ற கருத்தை முன்வைத்தார். திண்டுக்கல் மறைமாவட்டக் குருகுல முதல்வர் பேரருள்பணி. . சகாயராஜ் அவர்களும், மரியன்னை பள்ளி இல்ல அதிபர் அருள்பணி. மரிவளன் சே.. அவர்களும் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வாழ்த்திப் பேசினார்கள். இம்மாநாட்டில், மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளிலிருந்து 850-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் கலந்துகொண்டனர். புனித தோமா அருள்பணி மைய இயக்குநர் அருள்பணி. . சூசை ஆரோக்கியதாஸ் மற்றும் யூபிலி ஆண்டு ஒருங்கிணைப்பாளரும், புனித வளனார் பேராலயப்  பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான அருள்பணி. இரா. மரிய இஞ்ஞாசி ஆகியோர் இம்மாநாட்டைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.

news
தமிழக செய்திகள்
‘கல்பனா சாவ்லா’ விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு!

துணிவு மற்றும் சாகசச் செயல் புரிந்த வீரப் பெண்ணுக்குகல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. வரும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படவுள்ள இந்த விருதுக்கு அரசு இணையதளம் (http://awards.tn.gov.in) வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களையும் அந்த இணையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.             

- தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு