news
தமிழக செய்திகள்
“சமயத்தின் வழியே இயற்கையைப் பாதுகாத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்!”

தமிழ்நாடு துறவியர் பேரவையும், சென்னை மாநில சேசு சபை குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு, சென்னை இலயோலா கல்லூரி வளாகத்தில், ஏப்ரல் 30 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.. ஸ்டாலின் அவர்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  அப்போதுதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராக இருந்தாலும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களால் மட்டுமல்லாது, அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக இருந்தவர்எனப் புகழாரம் சூட்டினார்.

மேலும், “2013-ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அன்பு, அமைதி, இரக்கம், எளிமை ஆகிய நற்பண்புகளின் அடையாளமாகவும் உலக அமைதி, மனிதநேயம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்என்றும், முற்போக்குச் சிந்தனைகள் கொண்டு கத்தோலிக்கத் திரு அவையை வழிநடத்திப் பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர். மேலும், அகதிகள் பிரச்சினை பற்றியும், புலம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும், திரு அவையின் மேல்மட்ட நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும், மரண தண்டனைகளை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க முடியாது என்றும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்என்றும் திருத்தந்தையின் மானுடநேயப் பண்புகளை விவரித்துக் கூறினார்.

அவ்வாறே, “பூமி மற்றும் அதன் பலன்களைக் காப்பாற்ற வேண்டியது மதக்கடமை என்றும், இயற்கை வளங்களை  அழிப்பது பெரும் பாவம் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்சமயத்தின் வழியே இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்திய மாபெரும் செயல் வீரர் என்றும், அனைத்து மதங்களையும் ஒன்றாகக் கருதுகிற தன்மை, இரு நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் எழுகின்றபோது அமைதியை ஏற்படுத்தும் தூதுவராகவும், இஸ்லாமிய நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு உடன் தோழர்களாக அவர்களை அரவணைத்துக் கொண்டதும் பல்சமய உரையாடலுக்கான அவருடைய முன்னெடுப்புகளும் கத்தோலிக்க ஊடகத்தையும் தாண்டி அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தனஎன்றும் நினைவுகூர்ந்தார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் உயர்திரு. நாசர், திருச்சி கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருள்முனைவர் ஜோ.அருண், இலயோலா கல்லூரி அதிபர் அருள்முனைவர் இராபின்சன், சென்னை மாநில சேசு சபைத்  தலைவர் அருள்முனைவர் செபமாலை ராஜா, தமிழ்நாடு துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி பிலோ, தூய பிரான்சிஸ்க்கு சகோதரிகள் சபையின் தலைவர் அருள்சகோதரி ஆரோக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- செய்தி: திருமதி. டாரத்தி, நம் வாழ்வுசென்னை மண்டல செய்தியாளர்

news
தமிழக செய்திகள்
கடையருக்கும் எழுந்தேற்றம்!

தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் நன்றி!

அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், ஏப்ரல் மாதம் 16-ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் இரண்டு சட்ட மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார்.   இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில் இந்த மசோதாக்கள் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும் சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கின்றன.

இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 நபர்கள், கிராமப் பஞ்சாயத்துகளில் 12913 நபர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 388 நபர்கள், மாவட்ட ஊராட்சிகளில் 37 நபர்கள் என, சுமார் 14,000 மாற்றுத் திறனாளிகள் உரிமை பெறுவர். இது மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 667 கோடியிலிருந்து இந்த நிதியாண்டில் ரூபாய் 1,432 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

நம் சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் மாற்றுத்திறன் படைத்த சகோதர- சகோதரிகளுக்குத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் அதிக உரிமைகளையும் சமூக நலன்களையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

கடையருக்கும் எழுந்தேற்றம்என்ற குறிக்கோளோடு சமூக நீதிக்கான அரசாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கும் சிறப்பாக, தமிழ்நாடு முதல்வர் திரு. மு. . ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக குறிப்பாக, கிறித்தவ மக்கள் சார்பாக தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை சிறப்பான நன்றியை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு மக்கள் அனைவரின் நலனுக்காகவும் பணிகள் செய்து இந்த அரசு தொடர்ந்து உதவிட வேண்டும், உழைத்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தங்கள் உண்மையுள்ள

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை மற்றும்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்

news
தமிழக செய்திகள்
மக்கள் இவரை யாரென்று சொல்கிறார்கள்?

ரொம்ப நல்லவர். நாடுகளுக்கிடையே சமாதானத்திற்கு வழிகாட்டியவர். ஆன்மிகத்தில் தளராத பக்தி கொண்டவர். ஏழைகளிடமும், குழந்தைகளிடமும் எப்போதும் அன்பு செலுத்தியவர்.” 

- செல்வி. காணிக்கைமேரி, பாகாயம், வேலூர்

எளிமையின் வடிவம். மிகுந்த பக்தி. அவரைப் பார்க்கும்போது தெரியும் அவருடைய இரக்கமும் மன தைரியமும். அவரை நேரில் பார்க்கக்கூடிய பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.”

- திரு. அலெக்ஸாண்டர், கூடல்நகர், மதுரை

சிறைச்சாலை கைதிகளின் பாதத்தைக் கழுவியதை நினைக்கும்போது அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. விளிம்புநிலை மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர். சாதி, மதம், இனம் கடந்து எல்லாவித மக்களாலும் விரும்பப்பட்டவர்.”

- திருமதி. ரோஸ்லின்மேரி, பொன்மலை, திருச்சி

ஏழை மற்றும் நலிந்த மக்களுக்காக வாழ்ந்த ஆன்மிகவாதி. உலகில் சமாதானத்துடன் மக்கள் வாழ பல முயற்சிகள் செய்தவர். உக்ரைன் போரின்போது அவரது உரை மக்கள்மீது அவர் எவ்வளவு அன்பு செய்தார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.”

- திரு. ஜோசப் பீட்டர், விருதுநகர்

எளிமையானவர், மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். திரு அவை வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்தவர். இளைஞர்களைக் கிறித்தவத்தில் வளர பல முயற்சிகள் மேற்கொண்டவர். உலக அமைதிக்காகப் பாடுபட்டவர்.”

- திரு. அந்தோணிசாமி, பாண்டிச்சேரி

சமூகப்பற்றாளர், உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று அதிகம் விரும்பியவர். தன்னுடைய வருமானத்தையும் ஏழைகளுக்காகச் செலவிட்டவர்எளிமையானவர்.”

- திரு. கிறிஸ் அன்டோஸ், நெல்லை

சுற்றுச்சூழல் மீது அதிகம் அக்கறை கொண்டவர். ரொம்ப எளிமையானவர் என்பதற்கு அவருடைய இறுதி அடக்கம் பற்றி அவர் கூறியிருப்பதே சிறந்த உதாரணம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.”

- திருமதி அருள்மேரி அருளானந்தம், உடுமலை

அன்புக்கும் சமாதானத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். எல்லா மக்களையும் விரும்பக்கூடியவர். கிறித்தவ சாட்சிய வாழ்விற்கு மிகுந்த சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர்.”

- திருமதி. மெர்சி, தஞ்சாவூர்

அவருடைய மரண செய்தியைக் கேட்டபோது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நல்ல மனிதர். மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர். மிகவும் மென்மையானவர்.”

- திரு. ஜோசப்ராஜ், மாம்பலம், சென்னை

எளிமையான வாழ்க்கைக்குச் சிறந்த முன்னோடி. அரபு நாடுகளுக்கு முதன் முதலில் சென்ற திருத்தந்தைஅவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை அன்போடு சந்தித்துப் பேசக்கூடியவர். மனிதநேயம் கொண்டவர்.”

- திரு. ஜேம்ஸ், ஈரோடு

 

news
தமிழக செய்திகள்
‘மாற்றங்களை முன்னெடுத்த முற்போக்காளர்’ (திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்குத் தமிழ்நாடு தலைவர்கள் இரங்கல்)

அமைதி, இரக்கம் மற்றும் பணிவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவர், வறுமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சேவைக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.”

- ஆளுநர் ஆர்.என். ரவி

அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்களிடம் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையைக் கொண்டு சென்றவர்.”

- திரு. எடப்பாடி பழனிசாமி (.தி.மு..)

தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சேவைக்காகவும், சமூகச் சமத்துவத்துக்காகவும், மத நல்லிணத்துக்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்தவர் போப் பிரான்சிஸ்.”

- திரு. நயினார் நாகேந்திரன் (பா...)

உலகில் நலிவடைந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் போப் பிரான்சிஸ்.”

- மருத்துவர் . இராமதாஸ் (பா...)

இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தியவர். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையே உரையாடலை மேற்கொள்ள அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தன.”

- முதல்வர் மு.. ஸ்டாலின்

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.”

- திரு. கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)

போப் பிரான்சிஸ் மறைவு கிறித்தவர்களுக்கு மட்டுமன்றிசகோதரத்துவம் மற்றும் உலக அமைதிஆகிய வற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.”

- திரு. தொல். திருமாவளவன் (வி.சி..)

 

news
தமிழக செய்திகள்
இரங்கல் தீர்மானம்

கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகவும் பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 88-வது அகவையில் 21-04-2025 அன்று வத்திக்கான் நகரில் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார், துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தன. அன்னாரது மறைவினால் அவரை இழந்து துயருற்றிருக்கும் வத்திக்கான் கத்தோலிக்கத் திரு அவைக்கும், உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவ மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.”

- தமிழ்நாடு சட்டமன்றம்

news
தமிழக செய்திகள்
எளிய மக்களின் குரல்!

கத்தோலிக்கத் திரு அவைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் இறைவனிடம் மீண்டார் எனும் செய்தி அறிந்து வருந்துகிறோம். கத்தோலிக்கக் கிறித்தவத்திற்கு மட்டுமின்றி, இந்த இழப்பு ஆன்மிக உலகிற்கும் ஏற்பட்ட இழப்பாகும்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் நாள் 266-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் இலத்தீன் அமெரிக்கத் திருத்தந்தை எனும் வரலாற்றுத் தடத்தைப் பதித்தார். இறைப்பணி, தேவாலயங்களின் சேவை, மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

அன்பு, நம்பிக்கையுடன் கூடிய துணிவையும் தனது செயல்பாடாகக் கொண்டு இயங்கியவர். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டியவர் அவர். அதனாலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தனது பணிகளில் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தார்.

சமூக நீதிக்கொள்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர். அதனாலேயே எளிய மக்களின் குரலாகவே அவரது குரல் ஒலித்தது. அடிமைத்தனத்தை அறுத்தெறிய வேண்டும் என்பதைத் தொடர்ந்து முழங்கியவர். பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி, வத்திக்கானில் பெண்களுக்குப் பதவிகளையும் வழங்கினார்.

போரிடும் கெட்ட உலகத்தை வேரோடு சாய்ப்போம்என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். போர் இல்லாத அமைதியான உலகைச் மைப்பதைப் பெரிதும் விரும்பியவர். அதனாலேயே பாலஸ்தீனம் மீதான இஸ்ரயேலின் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துப் போர் நிறுத்தத்தை வேண்டினார்.

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவச் சகோதரர்களின் இழப்பின் வருத்தத்தில் நாங்களும் பங்கெடுக்கின்றோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பிய போர்களற்ற அமைதியான உலகம் மைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

- மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ, மாநிலத் தலைவர்,

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு, புதுச்சேரி