news
தமிழக செய்திகள்
இன்றைய தமிழ்நாட்டின் ‘புதிய கமாலியேல்கள்’

முதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட் அவர்களின்தகைசால் செம்மல் விருது - இன்றைய தமிழ்நாட்டின்புதிய கமாலியேல்கள்என்ற நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ஆம் நாள் வேளாங்கண்ணி திருத்தலத் தியான மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மியான்மர் நாட்டின் முதல் கர்தினாலும் Yangon மறைமாவட்ட பேராயருமான மேமிகு சார்லஸ் போ தலைமை தாங்கினார். தஞ்சை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு முனைவர் சகாயராஜ் அவர்கள் பங்கெடுத்து, விருந்தினர் அனைவரையும் வரவேற்றார். அருள்முனைவர் R.K. சாமி அவர்கள் இந்நிகழ்வு பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். மூன்று நிகழ்வுகளை மையப்படுத்தியதாக இவ்விழா அமைந்திருந்தது.

முதலில், முதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் பெயரால் இரண்டு பேருரைகள் வழங்கப்பட்டன. ‘New Frontiers of Mission in Asiaஎன்ற தலைப்பில் கர்தினால் மேமிகு சார்லஸ் போ அவர்களும், ‘Changing Scenario and the Evolving Challenging of Ministries in the Church in Tamil Naduஎன்ற தலைப்பில் அருள்முனைவர் X.D. செல்வராஜ் அவர்களும் கருத்துரை வழங்கினர்.

இரண்டாவது நிகழ்வாக, அருள்முனைவர் R.K. சாமி அவர்கள் தொகுத்தThe Shrines are the Wellsprings of Salvationஎன்ற ஆங்கில நூலும், அருள்முனைவர் கரம்பை S. செபாஸ்டின் அவர்கள் எழுதியEcumenism in the Local Church: Sacraments, Mother Mary, Veneration of Saints and Joint Actionஎன்ற தமிழ் நூலும் அருள்முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் அவர்களால் வெளியிடப்பட்டது.

மூன்றாவது, மிக முக்கிய நிகழ்வாக, உண்மையை உரக்கச் சொல்லி, இறையியலைப் பொதுவெளியில் பேசி, நடைமுறைப்படுத்தியவர்களுக்குமுதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட்தகைசால் செம்மல் விருதுவழங்கி, அவர்கள் இன்றைய தமிழ்நாட்டின்புதிய கமாலியேல்கள்எனப் பெருமைப்படுத்தப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு, தமிழ்நாடு மேனாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தாரகை கத்பர்ட்அருள்முனைவர் மைக்கிள் A. அமலதாஸ் சே.., அருள்பணி. ஜேம்ஸ் பாரதபுத்ரா சே.., அருள்முனைவர். X.D. செல்வராஜ், அருள்சகோதரி. அன்னை முனைவர் மரிய பிலோமி FBS, தொழிலதிபர் திருவாளர் அமல்ராஜ், திரு. இலாரன்ஸ், திரு. கிளமென்ட் ஆன்றனி, திரு. ஜோசப் பாண்டியன் ஆகிய 11 நபர்களுக்குபுதிய கமாலியேல்விருது வழங்கப்பட்டன.

இந்தச் சிறப்பு நிகழ்வில் பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேமிகு பிரான்சிஸ் கலிஸ்ட், சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பன், கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜீவானந்தம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம், கோட்டாறு மறைமாவட்ட மேனாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் யுவான் அம்புரோஸ் மற்றும் 350-க்கும் மேற்பட்ட இறைமக்கள் கலந்துகொண்டனர். விழா நிகழ்வுகள் அனைத்தையும் அருள்முனைவர் R.K. சாமி வழிநடத்தினார்.

news
தமிழக செய்திகள்
நம் வாழ்வின் நன்றிக்குரியோர்

நம் வாழ்வின் நன்றிக்குரியோர்

நம் வாழ்வின் வாரந்தோறும் ஞாயிறு திருப்பலியில் மக்களைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றவும், நம் வாழ்வுவார இதழ் பற்றிக் கூறி சந்தாதாரர்களை உருவாக்கவும், மறைமாவட்டப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் பேராதரவு தரும் பங்குத்தந்தையர் ஒவ்வொருவருக்கும் ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்பான நன்றிக்குரியோர்!

தம் பங்கு மக்களைநம் வாழ்வுவார இதழில் வாசகர்களாகவும் சந்தாதாரர்களாகவும் மாற்றும் வண்ணம், வாசிப்பு, வார இதழ் தயாரிப்பின் சிறப்புகள் - சிரமங்கள், ‘நம் வாழ்வுஇதழின் தனித்துவம், குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தல், ‘நமது இதழுக்கு நாம்தான் ஆதரவு அளிக்க வேண்டும்என விழிப்புணர்வு கொடுத்து 50 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்த சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் புழல் புனித அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. Y.F. போஸ்கோ அவர்களுக்கும், 52 சந்தாக்களைப் பெற்றிட உதவிய செங்கல்பட்டு மறைமாவட்டம் சேலையூர், புனித சூசையப்பர் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் பிரேம்குமார் அவர்களுக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.                                  

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
கிறிஸ்து பிறப்பு விழா - யூபிலி 2025 நல்வாழ்த்துகளும் ஆசிரும்!

ஆதவன் உதிக்க, காரிருள் மறைவது போன்று... நம்மைச் சூழ்ந்திருக்கும் காரிருளின் பல்வேறு தன்மைகளை முற்றிலுமாகப் போக்கிட பேரொளி தந்திடஉலகின் ஒளியாய்பிறந்துள்ள பாலன் இயேசுவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பிறந்துள்ள பாலன் இயேசுவின் வருகையானது நமக்கும், நம் குடும்பங்களுக்கும் பங்குத்தளங்களுக்கும் துறவற இல்லங்களுக்கும் அவருடைய வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் புது வாழ்வையும் புது விடியலையும் நிறைவாகத் தருவதாக!

கிறிஸ்து பிறப்பு அன்பின் காலம். மகிழ்வை, அமைதியை, இறைவனின் நிறை ஆசிரைப் பகிரும் காலம். கடந்த காலத்தின் நிறைவையும், நிகழ்காலத்தின் மகிழ்வையும், எதிர்காலத்தின் எதிர்நோக்கையும் குறித்துக் காட்டி நன்றியுணர்வுடன் வாழ வழிகாட்டும் காலம்.

கிறிஸ்து பிறப்பின்-2025 யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறைகூவலுக்கேற்ப புதிய எதிர்நோக்குடன் ஒருங்கியக்கப் பாதையில்எதிர்நோக்கின் திருப்பயணிகளாகநாம் பயணிப்போம். அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை எனும் இறையாட்சியின் மதிப்பீடுகளில் வாழ்ந்து இவ்விழுமியங்கள் கொண்ட சமூகத்தை உருவாக்குவோம்.

பிறக்கும் பாலன் இயேசு நம் அனைவருக்கும் விண்ணக மகிழ்வையும், அமைதியையும், ஆசியையும் நிறைவாக அருள்வாராக!

+ மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை - மயிலை உயர் மறைமாவட்டம், தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
முதல்வர் கணினித் தமிழ் விருது! நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழியாகத் தமிழ்மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக முதல்வர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ. 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்த 2024-ஆம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2021, 2022, 2023 -ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின்www.tamilvalarchithurai.in.gov.inஎன்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிச.31 - க்குள் அனுப்பி வைக்கவும் கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 - 28190412, 044 - 28190413 ஆகிய தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

                                                                          - தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
விருதுபெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காகப் பலர் ஆற்றிவரும் அரிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும்டாக்டர் அம்பேத்கர் விருதுவழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கானடாக்டர் அம்பேத்கர் விருதுபெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நவ. 22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ‘www.tn.gov.in/ta/forms/Deptname/I’ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

- தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
வேலூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து

தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராக, செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் 9 சனிக்கிழமை, இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா அன்று நியமனம் செய்துள்ளார். அருள்தந்தை அவர்கள், 1966, மே 3-ஆம் நாள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தில் உள்ள செய்யூரில் பிறந்தார். 1993, மார்ச் 25 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட தந்தை அவர்கள் சென்னை தூய சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். தொடர்ந்து செங்கல்பட்டு தூய யோசேப்பு பேராலயம், ஒரகடம் திரு இருதய ஆலயம், படப்பை தூய சகாய அன்னை ஆலயம் போன்ற பங்குகளில் பங்குத்தந்தையாகச் சிறப்புடன் பணியாற்றினார்.   

பெல்ஜியத்தில் லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முதுகலைப் பட்டத்தையும், உரோமில் உள்ள ஆஞ்செலிக்கம் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். செங்கல்பட்டு மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர், ஜீவன் ஜோதி இந்திய ஆட்சியாளர் உருவாக்கப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (Jeevan Jyothi Indian Administrative Service - JJIAS), பூவிருந்தவல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் துணை அதிபர், நூலகர், பேராசிரியர் எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர். ஏழு ஆண்டுகள் செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றிய இவர், தற்போது திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராகவும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுச் செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருடைய அருள்பொழிவு வருகின்ற டிசம்பர் 09 -ஆம் நாள் வேலூர் மறைமாவட்டப் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

- முதன்மை ஆசிரியர்