news
தமிழக செய்திகள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இராஜராஜ சோழன் பெயர்

தமிழகத்தில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், சிறந்த ஆட்சி நிர்வாகத்தைக் கொடுத்த இராஜராஜ சோழனைத்தான்பெருமன்னன்என அழைக்கிறோம். அவரது ஆட்சிக் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர் இராஜராஜ சோழன். அவரின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட இராஜராஜன் என்ற பெருமன்னனின் சதய விழாவைத் தமிழக அரசு நடத்துவதுடன், தமிழுக்குத் தொண்டாற்றக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இராஜராஜ சோழன் பெயரைச் சூட்ட வேண்டும். அவ்வாறு செய்வது பெருமன்னன் இராஜராஜ சோழனுக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும்.”

- திரு. ஆர். சுரேஷ் குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

news
தமிழக செய்திகள்
நன்றி! நன்றி! நன்றி!

நம் வாழ்வின் பொன்விழா ஆண்டுத் தயாரிப்பாக வாரந்தோறும் ஞாயிறு திருப்பலியில் மக்களைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றவும்நம் வாழ்வுவார இதழ் பற்றிப் பேசி சந்தாதாரர்களை உருவாக்கவும் மதுரை உயர் மறைமாவட்டப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் பேராதரவு தரும் பங்குத்தந்தையர் ஒவ்வொருவருக்கும் ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்பான நன்றிக்குரியோர்!

தன் பங்கு மக்களைநம் வாழ்வுவார இதழில் வாசகர்களாகவும் சந்தாதாரர்களாகவும் மாற்றும் வண்ணம் வாசிப்பு, வார இதழ் தயாரிப்பின் சிறப்புகள் - சிரமங்கள், ‘நம் வாழ்வு  இதழின் தனித்துவம், குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தல், ‘நமது இதழுக்கு நாம்தான் ஆதரவு அளிக்க வேண்டும்என விழிப்புணர்வு கொடுத்து 102 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்த மதுரை, அண்ணாநகர் ஆரோக்கிய அன்னை திருத்தலப் பங்குத்தந்தை அருள் பணி. எட்வின் சகாயராஜ் அவர்களுக்கும், 70 சந்தாக்களைப் பெற்றிட உதவிய கே.புதூர், தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை அருள்பணி. ஜார்ஜ் .. அவர்களுக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.     

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
ஓய்வு பெறும் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி

மதுரை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அந்தோணி பாப்புசாமியின் (75 வயது) பணி நிறைவை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி சவரிமுத்து அவர்களை நவம்பர் 4 முதல் மதுரை உயர் மறைமாவட்ட திருத்தூது நிர்வாகியாக நியமித்துள்ளார்.

திண்டுக்கல் மறைமாவட்டம், மாரம்பாடியில் 01-10-1949 அன்று பிறந்த பேராயர் பாப்புசாமி, 07-07-1976 அன்று திருச்சி மறைமாவட்டத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998-இல் மதுரையின் துணை ஆயராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது ஆயர் பயணம் தொடங்கியது. 2003-ஆம் ஆண்டில் அவர் திண்டுக்கல்லின் முதல் ஆயரானார். 2014-இல் மதுரைப் பேராயராக உயர்ந்தார்.

பேராயர் பாப்புசாமி அவர்கள் திரு அவையின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவராகவும் (2018-2022),  பாளையங்கோட்டை (2018-2019) மற்றும் குழித்துறை (2022-2024) ஆகிய மறைமாவட்டங்களுக்கான திருத்தூது நிர்வாகியாகவும் பணியாற்றியவர். புதிய நிர்வாகி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

news
தமிழக செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்

தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. இந்தப் பாரம்பரியத்தைக் காப்பதில் என்னுடைய பங்கும் இருக்கும்.”

- திரு. கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

news
தமிழக செய்திகள்
‘இதயம் காப்போம் திட்டம்’

உலகச் சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார் 1.70 கோடி பேர் மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய் உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ஆம் தேதிஉலக இதய தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், புகைபிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள். இதய நோய் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துணை சுகாதார நிலையம், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.”

- திரு. டி.எஸ். செல்வ விநாயகம், தமிழ்நாடு பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர்

news
தமிழக செய்திகள்
மதமாற்றம் நடக்கவில்லை!

கும்பகோணம் கீழ் மைக்கேல்பட்டியில் உள்ள புனித திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி 2022, ஜனவரியில் தற்கொலை செய்துகொண்டதற்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை (சி.பி..) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், 265 ஆவணங்களைத் தயார் செய்ததாகவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தெரிவித்தது. மதமாற்றம் என்ற குற்றச்சாட்டை ஆதரிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.