news
தமிழக செய்திகள்
நாடி வருவோருக்கு வரங்களை அள்ளித் தரும் செபமாலை அன்னை!

முதன்மைக் குருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டத்தில் முதல் தலைமை ஆலயமாக உருவானது கருமத்தம்பட்டி, புனித செபமாலை அன்னை பசிலிக்காவாகும். இங்கு வரும் பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் செபித்து, ஏராளமான அருள் வரங்களைப் பெற்றுச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதுவே அன்னை தன்னை நாடி வரும் மக்களுக்கு இறைவனிடம் பரிந்து பேசி, ஏராளமான புதுமைகளை அருள்கின்றார் என்பதற்குச் சாட்சியாகும்.

இறைவனுக்கும் மக்களுக்கும் இடையேயான பாலம் அன்னை மரியா. பல நூற்றாண்டுகளையும் கடந்த பின்பும் அனைத்து நலன்களையும் பெற்றுத் தருபவள் அன்னை மரியா. இப்பேர்பட்ட அன்னைக்கு நாம் நன்றி கூறி திருவிழா கொண்டாடுகிறோம். வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் புனித செபமாலை அன்னையின் தேர்த் திருவிழாவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறை இயேசுவின் ஆசிரைப் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கிறேன். பசிலிக்கா அருள்பணியாளர்களுக்கும், இறைமக்களுக்கும் மற்றும் வருகின்ற, திருப்பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!    இறையாசிர்!

- பேரருள்திரு. ஜான் ஜோசப் ஸ்தனிஸ், முதன்மைக்குரு, கோவை மறைமாவட்டம்

news
தமிழக செய்திகள்
செபமாலை அன்னை பக்தி குடும்பங்களை ஒன்றிணைக்கும்!

கோவை ஆயரின் ஆசியுரை

அன்புள்ள அருள்தந்தையர்களே, அருள்சகோதர, சகோதரிகளே! திருப்பயணம் மேற்கொள்ளும் இறைமக்களே! மற்றும் ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே! இறை இயேசுவின் நாமத்தில் உங்களுக்குக் கோவை, கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவின் பெயரால் வாழ்த்துகளையும், செபங்களையும் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

அன்னைக்கு ஆயிரம் பெயர்கள் இருந்தாலும், ‘செபமாலை அன்னை’ என்னும் பெயரும், அதன் பொருள் பொதிந்த ஆன்மிகச் செயலான செபமாலை செபிப்பதும், நாம் அன்றாட வாழ்வில் அவரை நினைவுகூர்வதும் சிறப்பு வழிமுறைகளாகும். இந்தப் பக்தி முயற்சி நமது குடும்பங்களை ஒன்றிணைத்து, திரு அவையையும் சமூகத்தையும் புதுப்பிக்கும் ஓர் உன்னத செயல். அக்டோபர் மாதம் என்றாலே செபமாலை செபிக்கும் மாதம் ஆகும். இந்தத் தருணத்தில் கோவை மறைமாவட்டத்தில் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவில் ஆண்டுப் பெருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு அன்று வெகு சிறப்பாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருக்கின்றது. இதைக் காணும் நீங்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறை ஆசிரைப் பெற்றுச் செல்ல அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன். இறையாசிர்!


news
தமிழக செய்திகள்
பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை
பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் ஆதரவளிக்கs வேண்டும். அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும்.”
news
தமிழக செய்திகள்
பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை
பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் ஆதரவளிக்கs வேண்டும். அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும்.”