news-details
தமிழக செய்திகள்
நன்றி!

இந்த இதழ் ‘நம் வாழ்வு’ சிறப்பிதழாக வெளிவர வாழ்த்துரை வழங்கிய கோவை ஆயர் பெருந்தகை அவர்களுக்கும், முதன்மைக்குரு அவர்களுக்கும் மற்றும் உதவி செய்த பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை, விளம்பரங்கள் கொடுத்து உதவிய அன்பு நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவின் 384-ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

‘நம் வாழ்வு’ வாசகர்களாகிய நீங்கள் இங்கு வரும்பொழுது, ‘நம் வாழ்வு’ புத்தக ஸ்டால் இங்கே அமைந்திருக்கும். உங்கள் ஆண்டுச் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் புதிய சந்தாக்களைச் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் திருமண நாள் மற்றும் பிறந்த நாள் பரிசாக ‘நம் வாழ்வு’ வார இதழை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கவும். அனைவருக்கும் திருவிழா வாழ்த்துகள்!

அன்புடன் முதன்மை ஆசிரியர்

‘நம் வாழ்வு’ மற்றும் எஸ்.ஏ. கிறிஸ்டி (கோவை மண்டலப் பொறுப்பாளர்)