“இந்திய மக்கள் தொகையில் 24 சதவிகிதம் பேர் 14 வயதுக்கு உள்பட்டவர்களாகவும், 50 சதவிகிதம் 25 வயதுக்கு உள்பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் முற்போக்குச் சிந்தனை உள்ள இளைஞர்களால் மட்டுமே முற்போக்குச் சிந்தனைகொண்ட நாட்டை உருவாக்க முடியும். காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த கட்டடம் மற்றும் தொழில்நுட்ப வசதியால் மட்டுமே சிறந்த மாணவர்களை ஒரு பள்ளியால் உருவாக்க முடியாது. திறன்மிக்க ஆசிரியர்களால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.”
- திரு. ராம்நாத் கோவிந்த்,
முன்னாள் குடியரசுத் தலைவர்