“இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் நிலையிலும் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை
என்பது சில மாநிலங்களின் காலிப் பணியிடங்களுக்குக் குவியும் விண்ணப்பங்கள் மூலம் தெரிய
வருகிறது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்கத் தொழிலாளர்கள் தேவை அதிகமுள்ள துறைகள் மற்றும்
தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில்
உள்ள ஒரு தரப்பினர் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், பொருளாதார ரீதியாகப்
பின்தங்கியுள்ள நாட்டின் பெரும் பகுதி மக்கள் வாங்கினால் மட்டும்தான் பொருள்களின் நுகர்வு
அதிகரிக்கும். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த பொருள் நுகர்வு இன்னும் எட்டப்படவில்லை.
இது மிகவும் துரதிருஷ்டவசமானது.”
- திரு. இரகுராம் ராஜன்,
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர்