“மதுவிலக்கு
என்பது நான் கண்டுபிடித்த புதிய கோரிக்கை அல்ல; கௌதம புத்தர் காலத்தில் இருந்தே இந்தக்
கோரிக்கை இருந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தியடிகளின் இரு கொள்கைகளான ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘மதுவிலக்கு’ இரண்டிலும்
நமக்கு உடன்பாடு உண்டு. சுகாதாரமான வாழ்வாதாரத்தை மக்களுக்கு உறுதிசெய்ய வேண்டும் என்று
அரசியலமைப்பு கூறுகிறது. அதனால்தான், இந்திய அளவில் மதுவிலக்கு வேண்டும் என்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ளவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்
என்ற நோக்கத்தில்தான் மதுவிலக்கு கோரப்படுகிறது. மதிப்பிட முடியாத மனிதவளத்தைப் பாதுகாக்க
வேண்டும்.”
- திரு. திருமாவளவன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்