நம் வாழ்வின் பொன்விழா ஆண்டுத் தயாரிப்பாக வாரந்தோறும் ஞாயிறு திருப்பலியில் மக்களைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றவும் ‘நம் வாழ்வு’ வார இதழ் பற்றிப் பேசி சந்தாதாரர்களை உருவாக்கவும் மதுரை உயர் மறைமாவட்டப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் பேராதரவு தரும் பங்குத்தந்தையர் ஒவ்வொருவருக்கும் ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிறப்பான நன்றிக்குரியோர்!
தன்
பங்கு மக்களை ‘நம் வாழ்வு’ வார இதழில் வாசகர்களாகவும் சந்தாதாரர்களாகவும் மாற்றும் வண்ணம் வாசிப்பு, வார இதழ் தயாரிப்பின் சிறப்புகள் - சிரமங்கள், ‘நம் வாழ்வு’ இதழின்
தனித்துவம், குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தல், ‘நமது இதழுக்கு நாம்தான் ஆதரவு அளிக்க வேண்டும்’
என விழிப்புணர்வு கொடுத்து 102 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்த மதுரை, அண்ணாநகர் ஆரோக்கிய அன்னை திருத்தலப் பங்குத்தந்தை அருள்
பணி.
எட்வின்
சகாயராஜ்
அவர்களுக்கும், 70 சந்தாக்களைப் பெற்றிட உதவிய கே.புதூர், தூய
லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை அருள்பணி.
ஜார்ஜ்
ச.ச.
அவர்களுக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- முதன்மை ஆசிரியர்